Archive for the ‘எல்எல்பி’ Category

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

ஜனவரி 26, 2014

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

வக்கீல் ஆக வேண்டும் என்ற வெறியோடு பட்டம் வாங்கியவர்கள்: அரசியல், பணக்காரர்கள், வியாபாரிகள், அதிகமாக சொத்துகள் வைத்துள்ளவர்கள் முதலியோருக்கு வக்கீல் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது. இதைத்தவிர மற்றவர்களுக்கும் எப்படியாவது பி.எல் பட்டம் வாங்கிவிட வேண்டும் என்ற வெறியும் உள்ளது. அந்நிலையில் “கரஸ்பான்டென்ஸ்” மற்றும் எல்எல்பி (LLB) செய்து பட்டங்களை வாங்கி பார் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள ஆசைக் கொண்டனர். ஒருநிலையில் எல்எல்பி (LLB) செல்லும் என்றிருந்தது. இதனால், வேகவேகமாக டிகிடரி பெற்றுக் கொண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நுழைவு தேர்வு இல்லாமலேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ளலாம் என்றிருந்தபோது, பலர் அப்படி நுழைந்தனர். பிறகு நுழைவு தேர்வு வைக்கப் பட்டது. எப்படியாவது குறிப்பிட்ட காலத்தை ஓட்டிவிட்டால், சீனியர் அட்வகேட் ஆகிவிடலாம், அரசுதரப்பு கவுன்சில் என்று கட்சி ஆதரவுடன் காலத்தை ஓட்டினால், ஒருவேளை நீதிபதி ஆகும் வாய்ப்புள்ளது என்று கனவோடு உள்ளே நுழைந்தவர்களும் உண்டு.

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

பிரபலங்கள் பி.எல் படித்து பட்டம் வாங்கிய விசித்திரமான முறை: சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் படிக்கும் போது, குறிப்பிட்ட காலகட்டத்தில், உதாரணத்திற்கு 1987-90 வருடங்களில் மாலை வகுப்புகளில் குறிப்பிட்ட பிரபலங்கள் காணப்படாமலேயே இருந்திருப்பர். ஆனால், பிறகு பி.எல் பட்டதோடு “1987-90 வருடங்களில் படித்ததாக” எங்கேயாவது பார்க்க நேர்ந்தால், என்ன இது அப்பொழுது நானும் தானே படித்தேன், இவரை ஒரு முறைக் கூட வகுப்பில், கல்லூரியில், ஏன் பரீட்சை எழுதும்போது கூட பார்த்ததில்லையே, பிறகு எப்படி பட்டம் வாங்கினார் என்று மனதிற்குள் நினைக்கத்தான் செய்வர். ஆனால், வெளியில் சொல்ல முடியாது அல்லது அவரிடத்தில் போய் கேட்கமுடியாது. இது உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது.

Advocates police clashes

Advocates police clashes

எல்எல்பிபடித்தவர்கள்தமிழகபார்கவுன்சிலில்பதிவுசெய்யதடைவிதிக்கவேண்டும்: எல்எல்பி (LLB) பதிவு செய்யத் தடை கோரும் மனுவுக்கு 8 பல்கலைக்கழகங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.   வழக்குரைஞர் வி. ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் இவ்வாறு உத்தரவிட்டார்[1]. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநில கல்லூரிகளில் எல்எல்பி பட்டம் பெற்ற பலரும் தமிழக பார்கவுன்சிலில் (Bar Council) பதிவுசெய்து வழக்குரைஞர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் நேரடியாக வகுப்புகளுக்குச் செல்லாமல் பட்டங்களை பெறுகின்றனர். அதாவது “கரஸ்பான்டென்ஸ்” மற்றும் எல்எல்பி (LLB) செய்து பட்டங்களை வாங்கி பார் கவுன்சிலில் பதிவு செய்து  கொண்டு வக்கீல் ஆகியுள்ளனர். இதைத் தவிர இவர்களில் பலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன[2].  தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் வக்கீல்கள் மீது 1424 வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீஸ் டி.ஜி.பி மதுரை ஐகோர்ட்டில்   அறிக்கை தாக்கல் செய்துள்ளார்[3]. இதே போன்று மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், சட்டப்படிப்பை மேற்கொள்ள கடந்த 2008–ம் ஆண்டு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கடைபிடிக்காமல் வெளிமாநில சட்டக்கல்லூரிகள் செயல்படுவதாகவும், எனவே, வயது வரம்பு நிர்ணய அடிப்படையில் சட்டப்படிப்புக்கு மாணவர்களை சேர்க்க வெளிமாநில கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தார்[4]. எனவே எல்எல்பி படித்தவர்கள் தமிழக பார்கவுன்சிலில் பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வக்கீல்கள் மீது 1424 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன[5]: 189 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில், தமிழகத்தில் வக்கீல்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற அனைத்து வழக்குகளின் விவரங்களளதில் அடங்கியிருந்தன.

  • சென்னையில் 276 வழக்குகளும்,
  • மதுரை மாவட்டத்தில் 100 வழக்குகளும்,
  • நெல்லை மாவட்டத்தில் 121 வழக்குகளும்,
  • கோவையில் 134 வழக்குகளும்,
  • தேனியில் 34 வழக்குகளும்,
  • திண்டுக்கல்லில் 18 வழக்குகளும்,
  • ராமநாதபுரத்தில் 29 வழக்குகளும்,
  • சிவகங்கையில் 6 வழக்குகளும்

வக்கீல்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மொத்தம் 1,424 வழக்குகள் வக்கீல்கள் மீது பதிவாகி உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

வழக்குநிலுவையில்உள்ளபோது, ஒருநபர்குழுஅமைத்துவிசாரிக்கபார்கவுன்சிலுக்குயார்அதிகாரம்வழங்கியது: இந்நிலையில், வியாழக்கிழமை 23-01-2014 இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்குரைஞர்கள் மீதான குற்றவழக்குகள் பட்டியலை தாக்கல் செயய டிஜிபிக்கு ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது.மேலும் இந்திய பார்கவுன்சில், எல்எல்பி கல்லூரிகள் இடம்பெற்றுள்ள கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில தலைமைச்செயலர்கள், அம்மாநிலங்களின் பார்கவுன்சில் தலைவர்கள் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதுஅப்போது, இந்திய பார்கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரம் குறித்து, விசாரிக்க ஒருநபர் குழுவை பார்கவுன்சில் அமைத்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.   எல்எல்பி பதிவு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் குழு விசாரித்து வருகிறது. இங்கும் வழக்கு விசாரிக்கப்படுகிறது. இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள போது, ஒருநபர் குழு அமைத்து விசாரிக்க பார்கவுன்சிலுக்கு யார் அதிகாரம் வழங்கியது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

முறையாகநடத்தப்படாதகல்விநிறுவனங்களுக்குஅங்கீகாரம்வழங்கியதால்இந்தபிரச்னைஎழுந்துள்ளது: முறையாக நடத்தப்படாத கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதால் இந்த பிரச்னை எழுந்துள்ளது என குறிப்பிட்ட நீதிபதி, ஒருநபர் குழு அமைத்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய பார்கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.   பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆந்திரம், கர்நாடகம், சத்தீஷ்கர், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் எல்எல்பி பாட வகுப்புகளை நடத்தும் 8 பல்கலைக்கழகங்களையும் வழக்கில் பிரதிவாதிகளாக சேர்த்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகள் 7ம், தனியார் சட்டக்கல்லூரி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன[6].

சட்டத்தை வளைத்து வக்கீல் ஆகும் முறை: எல்எல்பி நடத்தும் பட்டப் படிப்புகள் பார் கவுன்சிலில் பதிவு செய்யக் கொள்ளமுடியாது, நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தும் தகுதி பெறமுடியாது என்றேல்லாம் அப்பட்டப் படிப்பு படிக்கும்போதே, இவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ளதை பார்த்திருப்பர். இருப்பினும், விடாப்பிடியாக பட்டத்தை வாங்கிக் கொண்டு, பதிவு செய்ய விண்ணப்பிப்பர். விண்ணப்பம் மறுக்கும் போது, அதனை எதிர்த்து வழக்குப் போட்டுவர். பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதி என்றிருக்கும் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்து விடுவர். இதனால், பின்னால் வருகிறவர்கள், மற்றவர்கள் விடாமல் அதே முறையை பின்பற்றுவர். ஆட்சி மாறும் போது சொல்லவே வேண்டாம், இக்கூத்துகள் அதிகமாகவே நடக்கும். அந்நிலையில் தான் இப்படி கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள், மற்றவர்கள் எல்லோரும் நுழைய பார்ப்பர்.

வேதபிரகாஷ்

© 25-01-2014


[2] தினமணி, எல்எல்பிபதிவுவுக்குதடைகோரும்வழக்கு: 8 பல்கலைக்கழகங்கங்களுக்குஉயர்நீதிமன்றம்நோட்டீஸ், ஜனவரி 25, 2014.

[5] தினத்தந்தி, தமிழகம்முழுவதும்போலீஸ்நிலையங்களில்வக்கீல்கள்மீது 1,424 வழக்குகள்பதிவாகியுள்ளனபோலீஸ்டி.ஜி.பி. ஐகோர்ட்டில்அறிக்கைதாக்கல், ஜனவரி 25, 2014.