நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் நியமனம், அரசியல் தலையீடு, இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம்!
இந்திய நீதித்துறையில் அரசியல் தலையீடு: முன்பெல்லாம் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரபட்சமற்றத் தன்மை, நடுநிலை, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதி முதலிய தார்மீக குணங்களோடு செயல்பட்டு வந்தனர். நீதித்துறையில் இருப்பவர்கள், குறிப்பாக நீதிபதியாக இருப்பவர்களின் குடும்பங்களில் ஏழுதலைமுறைக்கு யாரும் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனைப் பெற்றிருக்கக் கூடாது என்று இந்திய நூல்கள், கல்வெட்டுகள் முதலியவை கூறுகின்றன[1]. அதாவது அத்தகைய பொறுப்புகளுக்கு வருபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முகலாயர்[2] மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் மதம், இனவெறி முதலிய காரணங்களினால் நீதிநெறி, சட்டமுறை மற்றும் நியாயத்தை அமூல் படுத்தும் தன்மை மாறியது. ஊழல் நுழைந்து சீரழிக்க ஆரம்பித்தது[3]. சுதந்திரம் கிடைத்தப் பின்னரும், நீதித்துறை, அரசியல்வாதிகளின் அதிகாரங்களில் கட்டுப்பட்டதால் தீர்ப்புகள் பாரபட்சமாக இருந்தன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட ஆட்சிகளில் நீதித்துறையில் ஊழல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் இதர நீதித்துறை அலுவலகர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்களாக, அவர்களின் பரிந்துரையின் மேல் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் அத்தகைய நியமங்கள் ஜாதி, மதம், மொழி போன்ற காரணிகளால் மாசுப்பட்டுள்ளது. அதனால், நியமனம் செய்யப்பட்டவர்கள், தங்களின் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்கவே விரும்புகின்றனர். இதனால், தங்களது பதவிகளும் உயர்ந்து வருகின்றன என்பதனை அவர்கள் உணர்ந்தே உள்ளார்கள்.
வக்கீல்கள் ஜாதி, மதம், மொழி, சித்தாந்தம் காரணங்களால் பிரிந்திருப்பது: ஒருபக்கம் ரூ.50/-, 100/- என்ற ரீதியில் வக்கீல்கள் வேலை செய்யும் நேரத்தில், இன்னொரு பக்கம் ஆயிரங்கள் மற்றும் லட்சங்கள் என்று அள்ளும் வக்கீல்களும் இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சட்டம், சட்ட-நுணுக்கங்கள், மொழி வல்லுமை, வாதிடும் திறன், முதலியவை இல்லாதவர்கள் மேலே போய் கொண்டிருக்கின்றனர், ஆனால், எல்லாம் இருப்பவர்கள் அப்படியே வக்கீலாக இருந்து ஓய்வு பெற்று விடுகின்றனர் அல்லது விலகியும் விடுகின்றனர். திராவிட கட்சிகளின் ஆட்சியில், நீதித்துறையில் இருப்பவர்கள் சங்கங்களை ஆரம்பித்து, கட்சி ரீதியில் செயல்பட்டு வந்தனர்[4]. அதேபோல கம்யூனிஸ்டுகள், தீவிர திராவிட இனவெறியாளர்கள், தமிழ்-சித்தாந்திகள் போன்றோரும் சித்தாந்த ரீதியில் செயல்பட்டு, தங்களவரை பாதுகாத்து வந்தனர். முந்தைய பிரிவினரால் ஊழல் மலிந்தது என்றால், பிந்தைய கூட்டத்தினரால் தீவிரவாதம், வன்முறை, சமூக சீரழிவுகள் அதிகமாகின.
நீதித்துறை அரசியல் கட்சி, ஜாதி, மதம் போன்ற காரணிகளால் பிரிந்து கிடப்பது: இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசி, வியக்கியானம் கொடுத்து, கூச்சலிட்டு வருவதெல்லாம் விளம்பரமாகிவிட்டது. நீதித்துறை என்றுமே அரசியல் கட்சி, ஜாதி, மதம் போன்ற காரணிகளால் பிரிந்து கிடப்பது வெளிப்படையாக ரகசியமாக இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் – 44 பிரிவின்படி, குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை (Uniform Civil Code) இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச்சிகளை அரசு எடுக்க வேண்டும், என்றுள்ளது. கடந்த 41 வருடங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உச்சநீதி மன்ற கேட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன[5]. ஷா பானு முதல் சர்ளா முத்கல் தீர்ப்பு வரை நீதிபதிகள் எடுத்துக் காட்டி விட்டார்கள்[6]. ஆனால், எந்த அரசியல் கட்சியும் இதனை அமூல் படுத்தவில்லை. பிஜேபி போன்ற கட்சிகள் இதைப் பற்றி பேசினால், அதனை “கம்யூனல்” என்று அடக்கி விடுகின்றனர். இந்திய சட்டங்களும் செக்யூலரிஸமயமாக்கப் படவில்லை (Secularization of Law and Judiciary)[7]. “சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம்” என்பவர்கள் “எல்லோருக்கும் ஒரே சட்டம்” என்றால் கொதித்து போகிறார்கள். மண்டல் தீர்ப்பு வந்தபோது கூட, “கிரீமி லேயர்” பற்றிய சர்ச்சையை பெரிதாக்கி எதிர்த்தனர். சமத்துவம் பேசுபவர்கள் எல்லாம் சமநீதி, பொதுநீதி, ஒரே நீதி என்றால் மறுத்து ஆர்பாட்டம் செய்கிறார்கள். நீதி ஒழிக, நீதிமன்றகள் அழிக….என்றேல்லாம் போராட்டங்களை நடத்துவர். அரசியல் ரீதியில் நீதித்துறைகளில் வழக்கறிஞர் முதல் நீதிபதி வரை, பெஞ்ச் கிளர்க் முதல் ரிஜிஸ்ட்ரர் வரை நியமனங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, எப்படி சட்டங்கள் சமமாகும், நீதி சமன்படும், நியாயங்கள் ஒன்றாக இருக்கும். தான் தினம்-தினம் வேலை செய்யும் போது, வரும் ஆயிரக்கணக்கான மக்களை சமமாக பாவிக்க, நடத்த, நீதி அளிக்க ஒழுங்காக, தார்மீகத்துடன், நியாயமாக நடந்து கொள்வார்கள் என்ற உத்திரவாதம் கொடுக்க முடியுமா?
தமிழகத்தில் முதல் மந்திரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள், நீதி–அமூல்படுத்தப்பட்ட விதம்: இரு தமிழக முதல்வர்கள்[8], ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, வழக்குகளில் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்குட் படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் மறுபடி-மறுபடி முதலமைச்சர் பதவியை ஏற்கும் போது, நீதி-சட்டம், போலீஸ் முதலிய துறைகளுக்கு மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். அந்நிலைகளில் அவருக்கு எதிரான வழக்குகளில், அவர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகும் போது அல்லது அவர்களுக்கு பதிலாக வாத-பிரதிவாதங்கள் செய்யும்போது, வக்கீல்கள், அரசு-வக்கீல்கள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் எப்படி சார்பற்றவர்களாக, பாரபட்சமில்லாதவர்களாக, நடுநிலையாக நடந்து கொள்ள முடிந்திருக்க முடியும் என்று யோசிக்கத்தக்கது. நியாயமாக அந்நிலைகளில் அவர்கள் ராஜினாமா செய்து, வழக்கு முடியும் வரை தனியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சிறைசென்ற நிலையில் தான் விலகியிருந்தார்கள், மறுபடியும் முதலமைச்சார்களாக பதவி வகித்தனர்.
அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள்: மதுரை வழக்கறிஞர் ஏ.கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் இவ்விவகாரங்கள் காணப்படுகின்றன[9]: “சட்ட அறிவு, வாதிடும் திறமை, அனுபவம் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வதில்லை. இவர்களை நியமிக்கும் முன், உயர்நீதிமன்ற ஆலோசனைகளைப் பெற வேண்டும். சில சமயங்களில், அரசு சார்பில் அளிக்கப்படும் தேர்வு செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியலை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களுக்கு சம வாய்ப்பு அளிப்பதில்லை. அரசியல் கட்சிகளின் சிபாரிசில்தான், அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சமூகநலன் சார்ந்த வழக்குகளில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால், அரசுத்துறை வழக்குகள் தோல்வியடைந்து, மேல்முறையீடு செய்கின்றனர். அரசுக்கு பணிச்சுமை அதிகரித்து, பணம் விரையமாகிறது.நீதித்துறை கமிஷன் அமைத்து, தகுதி, திறமை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். 2011 முதல் தற்போதுவரை நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு, கண்ணன் மனு செய்திருந்தார்[10]. நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் கொண்ட அமர்வு பிப்.,25 க்கு ஒத்திவைத்தது. மனுதாரர் ஆஜரானார்.
© வேதபிரகாஷ்
02-06-2016
[1] Calcutta monthly Journal and General Register of Occurrences throughout the British Dominions in the East forming an Epitome of the Indian press for the year 1837, Calcutta, Samuel Smith Co, 1838, p.20.
[2] முகலாயர், அதாவது முகமதியர் தங்களது இஸ்லாமிய சட்டத்தை அமூல் படுத்தி, இந்துக்களை கொடூரமுறையில் வழக்குகளை நடத்தி, குரூர தண்டனைகள் கொடுத்து, அநியயம் செய்தனர். இந்துக்களுக்கும் ஷரீயத் என்கின்ற முஸ்லிம் சட்டத்தை அமூல் படுத்தி, ஜெஸியா போன்ற வரிகளை விதித்து கொடுமைப்படுத்தினர்.
[3] வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் நந்தகுமார் வழக்கு எவ்வாறு இந்தியர் மீது அபாண்டமான குற்றம் சாட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படுவார் என்பதற்கு ஒரு சான்று. உண்மையில் போர்ஜரி செய்தது வாரன் ஹேஸ்டிங்ஸ் தான்! நந்தகுமாருக்கு தூக்கு தண்டனை கொடுத்த நீதிபடி அவரது நண்பர்! இவ்வழக்கு “நீதி கொலை செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டது.
[4] ஒரு கட்சிக்குள்ளேயே பிரச்சினை வந்தபோது, தனியாக இன்னொரு சங்க ஆரம்பித்த போக்கும் உண்டு.
Advocates belonging to the Dravida Munnetra Kazhagam met here on Sunday (March 17, 2009) and decided to form the Vellore Advocates Progressive Association. The new development is a sequel to the expulsion of 11 advocates belonging to the DMK by the Bar Association, Vellore, following their alleged misbehaviour with other members on the premises of the Integrated Courts Complex here on Friday.
[5] It appears that even 41 years thereafter, the Rulers of the day are not in a mood to retrieve Article 44 from the cold storage where it is lying since 1949. The Governments – which have come and gone – have so far failed to make any effort towards “unified personal law for all Indians”.
Supreme Court of India, Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635; Author: Kuldip Singh; Judgment dated 10-05-1995; https://indiankanoon.org/doc/733037/
[6] Coming back to the question “uniform civil code” we may refer to the earlier judgments of this Court on the subject. A Constitution Bench of this Court speaking through Chief Justice Y.V. Chandrachud in Mohd. Ahmed Khan vs. Shah Bano Begum AIR 1985 SC 945 held as under: “It is also a matter of regret that Article 44 of our Constitution has remained a dead letter. …… There is no evidence of any official activity for framing a common civil code for the country.”
[7] Justice Kuldip Singh recorded, “One wonders how long will it take for the Government of the day to implement the mandate of the framers of the Constitution under Article 44 of the Constitution of India………There is no justification whatsoever in delaying indefinitely the introduction of a uniform personal law in the country. …..The Successive Governments till-date have been wholly re-miss in their duty of implementing the constitutional mandate under Article 44 of the Constitution of India. We, therefore, request the Government of India through the Prime Minister of the country to have a fresh look at Article 44 of the Constitution of India and “endeavour to secure for the citizens a uniform civil code throught the territory of India“.https://indiankanoon.org/doc/733037/
[8] கருணாநிதியின் கோதுமை ஊழல் முதலியன், ஜெயலிதாவின் சொத்துக் குவிப்பு முதலியன.
[9] தினமலர், அரசு வழக்கறிஞர்கள் நியமன முறையை எதிர்த்து வழக்கு, ஜனவரி,29, 2016.21.01