Posts Tagged ‘வக்கீல்’

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் நியமனம், அரசியல் தலையீடு, இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம்!

ஜூன் 2, 2016

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் நியமனம், அரசியல் தலையீடு, இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம்!

Indian judicial system, SC, etc

இந்திய நீதித்துறையில் அரசியல் தலையீடு: முன்பெல்லாம் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரபட்சமற்றத் தன்மை, நடுநிலை, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதி முதலிய தார்மீக குணங்களோடு செயல்பட்டு வந்தனர். நீதித்துறையில் இருப்பவர்கள், குறிப்பாக நீதிபதியாக இருப்பவர்களின் குடும்பங்களில் ஏழுதலைமுறைக்கு யாரும் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனைப் பெற்றிருக்கக் கூடாது என்று இந்திய நூல்கள், கல்வெட்டுகள் முதலியவை கூறுகின்றன[1]. அதாவது அத்தகைய பொறுப்புகளுக்கு வருபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முகலாயர்[2] மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் மதம், இனவெறி முதலிய காரணங்களினால் நீதிநெறி, சட்டமுறை மற்றும் நியாயத்தை அமூல் படுத்தும் தன்மை மாறியது. ஊழல் நுழைந்து சீரழிக்க ஆரம்பித்தது[3]. சுதந்திரம் கிடைத்தப் பின்னரும், நீதித்துறை, அரசியல்வாதிகளின் அதிகாரங்களில் கட்டுப்பட்டதால் தீர்ப்புகள் பாரபட்சமாக இருந்தன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட ஆட்சிகளில் நீதித்துறையில் ஊழல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் இதர நீதித்துறை அலுவலகர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்களாக, அவர்களின் பரிந்துரையின் மேல் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் அத்தகைய நியமங்கள் ஜாதி, மதம், மொழி போன்ற காரணிகளால் மாசுப்பட்டுள்ளது. அதனால், நியமனம் செய்யப்பட்டவர்கள், தங்களின் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்கவே விரும்புகின்றனர். இதனால், தங்களது பதவிகளும் உயர்ந்து வருகின்றன என்பதனை அவர்கள் உணர்ந்தே உள்ளார்கள்.

Judges appointment based on caste, religion etc

வக்கீல்கள் ஜாதி, மதம், மொழி, சித்தாந்தம் காரணங்களால் பிரிந்திருப்பது: ஒருபக்கம் ரூ.50/-, 100/- என்ற ரீதியில் வக்கீல்கள் வேலை செய்யும் நேரத்தில், இன்னொரு பக்கம் ஆயிரங்கள் மற்றும் லட்சங்கள் என்று அள்ளும் வக்கீல்களும் இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சட்டம், சட்ட-நுணுக்கங்கள், மொழி வல்லுமை, வாதிடும் திறன், முதலியவை இல்லாதவர்கள் மேலே போய் கொண்டிருக்கின்றனர், ஆனால், எல்லாம் இருப்பவர்கள் அப்படியே வக்கீலாக இருந்து ஓய்வு பெற்று விடுகின்றனர் அல்லது விலகியும் விடுகின்றனர். திராவிட கட்சிகளின் ஆட்சியில், நீதித்துறையில் இருப்பவர்கள் சங்கங்களை ஆரம்பித்து, கட்சி ரீதியில் செயல்பட்டு வந்தனர்[4]. அதேபோல கம்யூனிஸ்டுகள், தீவிர திராவிட இனவெறியாளர்கள், தமிழ்-சித்தாந்திகள் போன்றோரும் சித்தாந்த ரீதியில் செயல்பட்டு, தங்களவரை பாதுகாத்து வந்தனர். முந்தைய பிரிவினரால் ஊழல் மலிந்தது என்றால், பிந்தைய கூட்டத்தினரால் தீவிரவாதம், வன்முறை, சமூக சீரழிவுகள் அதிகமாகின.

Judges appointment based on caste, religion etc-The Hindu

நீதித்துறை அரசியல் கட்சி, ஜாதி, மதம் போன்ற காரணிகளால் பிரிந்து கிடப்பது: இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசி, வியக்கியானம் கொடுத்து, கூச்சலிட்டு வருவதெல்லாம் விளம்பரமாகிவிட்டது. நீதித்துறை என்றுமே அரசியல் கட்சி, ஜாதி, மதம் போன்ற காரணிகளால் பிரிந்து கிடப்பது வெளிப்படையாக ரகசியமாக இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் – 44 பிரிவின்படி,  குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை (Uniform Civil Code) இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச்சிகளை அரசு எடுக்க வேண்டும், என்றுள்ளது. கடந்த 41 வருடங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உச்சநீதி மன்ற கேட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன[5]. ஷா பானு முதல் சர்ளா முத்கல் தீர்ப்பு வரை நீதிபதிகள் எடுத்துக் காட்டி விட்டார்கள்[6]. ஆனால், எந்த அரசியல் கட்சியும் இதனை அமூல் படுத்தவில்லை. பிஜேபி போன்ற கட்சிகள் இதைப் பற்றி பேசினால், அதனை “கம்யூனல்” என்று அடக்கி விடுகின்றனர். இந்திய சட்டங்களும் செக்யூலரிஸமயமாக்கப் படவில்லை (Secularization of Law and Judiciary)[7]. “சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம்” என்பவர்கள் “எல்லோருக்கும் ஒரே சட்டம்” என்றால் கொதித்து போகிறார்கள். மண்டல் தீர்ப்பு வந்தபோது கூட, “கிரீமி லேயர்” பற்றிய சர்ச்சையை பெரிதாக்கி எதிர்த்தனர். சமத்துவம் பேசுபவர்கள் எல்லாம் சமநீதி, பொதுநீதி, ஒரே நீதி என்றால் மறுத்து ஆர்பாட்டம் செய்கிறார்கள். நீதி ஒழிக, நீதிமன்றகள் அழிக….என்றேல்லாம் போராட்டங்களை நடத்துவர். அரசியல் ரீதியில் நீதித்துறைகளில் வழக்கறிஞர் முதல் நீதிபதி வரை, பெஞ்ச் கிளர்க் முதல் ரிஜிஸ்ட்ரர் வரை நியமனங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, எப்படி சட்டங்கள் சமமாகும், நீதி சமன்படும், நியாயங்கள் ஒன்றாக இருக்கும். தான் தினம்-தினம் வேலை செய்யும் போது, வரும் ஆயிரக்கணக்கான மக்களை சமமாக பாவிக்க, நடத்த, நீதி அளிக்க ஒழுங்காக, தார்மீகத்துடன், நியாயமாக நடந்து கொள்வார்கள் என்ற உத்திரவாதம் கொடுக்க முடியுமா?

Karnanidhi-Jayalalita

தமிழகத்தில் முதல் மந்திரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள், நீதிஅமூல்படுத்தப்பட்ட விதம்: இரு தமிழக முதல்வர்கள்[8], ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, வழக்குகளில் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்குட் படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் மறுபடி-மறுபடி முதலமைச்சர் பதவியை ஏற்கும் போது, நீதி-சட்டம், போலீஸ் முதலிய துறைகளுக்கு மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். அந்நிலைகளில் அவருக்கு எதிரான வழக்குகளில், அவர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகும் போது அல்லது அவர்களுக்கு பதிலாக வாத-பிரதிவாதங்கள் செய்யும்போது, வக்கீல்கள், அரசு-வக்கீல்கள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் எப்படி சார்பற்றவர்களாக, பாரபட்சமில்லாதவர்களாக, நடுநிலையாக நடந்து கொள்ள முடிந்திருக்க முடியும் என்று யோசிக்கத்தக்கது. நியாயமாக அந்நிலைகளில் அவர்கள் ராஜினாமா செய்து, வழக்கு முடியும் வரை தனியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சிறைசென்ற நிலையில் தான் விலகியிருந்தார்கள், மறுபடியும் முதலமைச்சார்களாக பதவி வகித்தனர்.

judicial-system-inancientindia1-12-638

அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள்: மதுரை வழக்கறிஞர் ஏ.கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் இவ்விவகாரங்கள் காணப்படுகின்றன[9]: “சட்ட அறிவு, வாதிடும் திறமை, அனுபவம் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வதில்லை. இவர்களை நியமிக்கும் முன், உயர்நீதிமன்ற ஆலோசனைகளைப் பெற வேண்டும். சில சமயங்களில், அரசு சார்பில் அளிக்கப்படும் தேர்வு செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியலை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களுக்கு சம வாய்ப்பு அளிப்பதில்லை. அரசியல் கட்சிகளின் சிபாரிசில்தான், அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சமூகநலன் சார்ந்த வழக்குகளில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால், அரசுத்துறை வழக்குகள் தோல்வியடைந்து, மேல்முறையீடு செய்கின்றனர். அரசுக்கு பணிச்சுமை அதிகரித்து, பணம் விரையமாகிறது.நீதித்துறை கமிஷன் அமைத்து, தகுதி, திறமை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். 2011 முதல் தற்போதுவரை நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு, கண்ணன் மனு செய்திருந்தார்[10]. நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் கொண்ட அமர்வு பிப்.,25 க்கு ஒத்திவைத்தது. மனுதாரர் ஆஜரானார்.

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] Calcutta monthly Journal and General Register of Occurrences throughout the British Dominions in the East forming an Epitome of the Indian press for the year 1837, Calcutta, Samuel Smith Co, 1838, p.20.

[2] முகலாயர், அதாவது முகமதியர் தங்களது இஸ்லாமிய சட்டத்தை அமூல் படுத்தி, இந்துக்களை கொடூரமுறையில் வழக்குகளை நடத்தி, குரூர தண்டனைகள் கொடுத்து, அநியயம் செய்தனர்.  இந்துக்களுக்கும் ஷரீயத் என்கின்ற முஸ்லிம் சட்டத்தை அமூல் படுத்தி, ஜெஸியா போன்ற வரிகளை விதித்து கொடுமைப்படுத்தினர்.

[3] வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் நந்தகுமார் வழக்கு எவ்வாறு இந்தியர் மீது அபாண்டமான குற்றம் சாட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படுவார் என்பதற்கு ஒரு சான்று. உண்மையில் போர்ஜரி செய்தது வாரன் ஹேஸ்டிங்ஸ் தான்! நந்தகுமாருக்கு தூக்கு தண்டனை கொடுத்த நீதிபடி அவரது நண்பர்! இவ்வழக்கு “நீதி கொலை செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டது.

[4] ஒரு கட்சிக்குள்ளேயே பிரச்சினை வந்தபோது, தனியாக இன்னொரு சங்க ஆரம்பித்த போக்கும் உண்டு.

Advocates belonging to the Dravida Munnetra Kazhagam met here on Sunday (March 17, 2009) and decided to form the Vellore Advocates Progressive Association. The new development is a sequel to the expulsion of 11 advocates belonging to the DMK by the Bar Association, Vellore, following their alleged misbehaviour with other members on the premises of the Integrated Courts Complex here on Friday.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dmk-advocates-to-form-new-association/article333605.ece

[5]  It appears that even 41 years thereafter, the Rulers of the day are not in a mood to retrieve Article 44 from the cold storage where it is lying since 1949. The Governments – which have come and gone – have so far failed to make any effort towards “unified personal law for all Indians”.

Supreme Court of India, Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635; Author: Kuldip  Singh; Judgment dated 10-05-1995; https://indiankanoon.org/doc/733037/

[6] Coming back to the question “uniform civil code” we may refer to the earlier judgments of this Court on the subject. A Constitution Bench of this Court speaking through Chief Justice Y.V. Chandrachud in Mohd. Ahmed Khan vs. Shah Bano Begum AIR 1985 SC 945 held as under: “It is also a matter of regret that Article 44 of our Constitution has remained a dead letter. …… There is no evidence of any official activity for framing a common civil code for the country.”

[7] Justice Kuldip Singh recorded, “One wonders how long will it take for the Government of the day to implement the mandate of the framers of the Constitution under Article 44 of the Constitution of India………There is no justification whatsoever in delaying indefinitely the introduction of a uniform personal law in the country. …..The Successive Governments till-date have been wholly re-miss in their duty of implementing the constitutional mandate under Article 44 of the Constitution of India. We, therefore, request the Government of India through the Prime Minister of the country to have a fresh look at Article 44 of the Constitution of India and “endeavour to secure for the citizens a uniform civil code throught the territory of India“.https://indiankanoon.org/doc/733037/

[8] கருணாநிதியின் கோதுமை ஊழல் முதலியன், ஜெயலிதாவின் சொத்துக் குவிப்பு முதலியன.

[9] தினமலர், அரசு வழக்கறிஞர்கள் நியமன முறையை எதிர்த்து வழக்கு, ஜனவரி,29, 2016.21.01

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1444462

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

செப்ரெம்பர் 23, 2015

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

Law-graduates bar council enrollment

Law-graduates bar council enrollment

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது (22-09-2015): தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் 22-09-2015 அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது[1]: 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக்கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன[2]. 2010ல் முதலில் நுழைவு தேர்வு அறிமுகப்பப்படுத்தியபோதே சிலர் எதிர்த்தனர், ஆனல், அது கட்டாயமாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டுவ்முதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது[3].

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

20-03-2015 அன்று பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கிய வழக்கறிஞர்கள்[4] சஸ்பென்ட்: 20-3-2015 அன்று சில வழக்கறிஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[5]. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி. மணிகண்டன் வதன் செட்டியார் [Manikandan Vathan Chettiar], ஆர். மதன்குமார் [R Madhan Kumar ] ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன[6]. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[7]. சென்ற வருடம் பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்துபோது, நீதிபதிகள் பேசியது, இப்பொழுது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

வழக்கறிஞர்கள், தொழில் தர்மத்தை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது,” என, கூறினார்[8]: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று, பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பேசியதாவது: வழக்கறிஞர்கள் பணி, நீதிபதிகள் பணியை விட முக்கியமானது. சமூகத்தில், இவர்களது பணி மிகவும் பொறுப்பு வாய்ந்தது.வழக்காடிகளுடன், வழக்கறிஞர்களின் உறவு பெரும் நம்பிக்கைக்கு உரியது. எனவே, வழக்கறிஞர்கள், நேர்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.சமூகத்திலும், நீதித் துறையிலும், முக்கிய பங்காற்றும் வழக்கறிஞர்கள் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும். சமூக நீதிக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர்கள் பணி, சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்நிலையில், தொழில் தர்மத்தை மீறி, வழக்கறிஞர்கள் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது; அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நம்பிக்கை குறைவான எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது.சமூக சேவையின் ஒரு பகுதியாக, வழக்கறிஞர் பணியை கருத வேண்டும். வழக்கறிஞர்களுக்கு, பார் கவுன்சில் வகுத்துள்ள விதிகளுக்கு தலை வணங்கி, பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை[9]:  விழாவில் வாழ்த்துரை வழங்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பேசியதாவது: நீதிபதி நாகப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றிய போது, சென்னை சட்டக் கல்லூரியில், பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றினேன். தற்போதுள்ள சட்டக் கல்வியுடன், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பார் கவுன்சில் உறுப்பினர்கள் முன்வர வேண்டும். வழக்காடிகளை எப்படி அணுகுவது, நீதிமன்றத்தில் எப்படி பேசுவது போன்ற, அடிப்படை பயிற்சிகளை, சட்டம் பயிலும்போதே, மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இப்பணியை, சமூக சேவையாகக் கருதி, பார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர்கள், திறமையான இளம் வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது, பணம் சம்பாதிக்கும் வியாபாரம் அல்ல. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், பணம் தேவை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை.

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்: நீதிபதி பானுமதி: இளம் வழக்கறிஞர்களுக்காக, பார் கவுன்சில், தொடர் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இதற்காக, சட்ட கமிஷன் நிதி அளிக்கிறது. இதைப் பயன்படுத்தி, இளம் வழக்கறிஞர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், கருத்தரங்குகளை பார் கவுன்சில் நடத்த வேண்டும். சென்னை பார் கவுன்சில் மூலம், வழக்கறிஞர்களுக்கு அளிக்கப்படும், குடும்ப நல நிதி, விபத்து காப்பீடு போன்றவை, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்: கடந்த, 1928ல் துவங்கப்பட்ட சென்னை பார் கவுன்சில், பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது. நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள். மென்பொருள், சிறப்பாக இருந்தால் தான், நீதிமன்றம் என்ற கணினியும் நன்றாகச் செயல்படும்.சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அவர்களால், பெருந்தொகையை கட்டணமாகக் கொடுத்து, வழக்காட முடியாது. எனவே, சாதாரண மக்களை மனதில் கொண்டு, வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும். நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

நீதிபதிகளுக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷம் [செப்டம்பர்.17, 2015][10]: வக்கீல்கள் இப்பொழுதெல்லாம் போலீஸாருடன் சண்டை போடுவது, பொது இடங்களில் கலாட்டா செய்வது, போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கருப்புக் கோட்டு போடாலே, ஏதோ அவர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்து விடுகின்றன, யாரும் அவர்களை ஒன்றும் கேட்க முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு அந்து விடுகிறது. செப்டம்பர்.13, 2015 அன்று சென்னை உயர் நீதிமன்ற அரங்குக்குள், வழக்கறிஞர்களை அனுமதிக்காததால், நீதித்துறை மற்றும் போலீசாருக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். இதனால், உயர் நீதிமன்றத்தில், பரபரப்பு ஏற்பட்டது. கட்டாய, ‘ஹெல்மெட்’ உத்தரவைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள், ஊர்வலம் சென்று, நீதிபதிகளுக்கு எதிராக, கோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாது, கோர்ட்டு அறையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையின் பாதுகாப்பு பணியை மத்திய போலீசாரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது[11].  மதுரையிலும் வக்கில்கள் கலாட்டா செய்து வருகிறார்கள்[12]. வக்கீல்கள் ஏற்கெனவே கட்சி, ஜாதி என்ற முறைகளில் பிரிந்து கிடக்கிறார்கள். இதனால், பரபட்சமற்ற முறையில் வழக்காடுவது, வழக்குகளை நடத்துவது, தம்மை வந்தவர்களுக்கு உதவுவது போன்ற குணங்கள் எல்லாம் மறைந்து விட்டன. அதாவது, சட்டத்தைக் காக்க வேண்டிய வக்கில்களே, இவ்வாறு சட்டங்களை மீறி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

23-09-2015

[1]  தினமணி, 2,495 வழக்குரைஞர்களாக செயல்படத் தடை: தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை, By சென்னை, First Published : 23 September 2015 02:35 AM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/2495-law-graduates-lose-permission-to-practise-in-Tamil-Nadu/articleshow/49059294.cms

[3]  தி.இந்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 2,495 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தற்காலிக தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்,Published: September 23, 2015 08:24 ISTUpdated: September 23, 2015 08:25 IST.

[4] The tussle between between two groups of Madras High Court lawyers over the recognition accorded to the Tamil Nadu Advocates Association (TNAA) reached the doorsteps of the Bar Council. Advocates affiliated to the Madras High Court Association (MHAA) barged into the council building protesting the grant of recognition and vandalised a portion of it on Friday (20-03-2015).

http://www.newindianexpress.com/cities/chennai/Bar-Council-Bldg-Vandalised-During-Protest-by-Lawyers/2015/03/21/article2723454.ece

[5] http://www.dinamani.com/tamilnadu/2015/09/23/2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/article3042677.ece

[6] http://tamil.chennaionline.com/news/chennai/newsitem.aspx?NEWSID=ce2a7e8f-571c-44af-8374-ca8fd40f82a9&CATEGORYNAME=TCHN

[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article7680134.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1110457

[9]  தினமலர், வழக்கறிஞர்கள் தொழில் தர்மத்தை மீறுவதை ஏற்க முடியாது! சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டம், நவம்பர்.9, 2014,02.00.

[10]  தினமலர், நீதிபதிகள், போலீசாருக்கு எதிராக கோஷம் : உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் முற்றுகை, செப்டம்பர்.17, 2015.00.49.

[11] http://www.dailythanthi.com/News/State/2015/09/15010329/In-the-court-room-the-lawyers-movement.vpf

[12] http://www.deccanchronicle.com/150917/nation-current-affairs/article/lawyers-create-ruckus-madras-high-court

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

ஜனவரி 26, 2014

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

வக்கீல் ஆக வேண்டும் என்ற வெறியோடு பட்டம் வாங்கியவர்கள்: அரசியல், பணக்காரர்கள், வியாபாரிகள், அதிகமாக சொத்துகள் வைத்துள்ளவர்கள் முதலியோருக்கு வக்கீல் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது. இதைத்தவிர மற்றவர்களுக்கும் எப்படியாவது பி.எல் பட்டம் வாங்கிவிட வேண்டும் என்ற வெறியும் உள்ளது. அந்நிலையில் “கரஸ்பான்டென்ஸ்” மற்றும் எல்எல்பி (LLB) செய்து பட்டங்களை வாங்கி பார் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள ஆசைக் கொண்டனர். ஒருநிலையில் எல்எல்பி (LLB) செல்லும் என்றிருந்தது. இதனால், வேகவேகமாக டிகிடரி பெற்றுக் கொண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நுழைவு தேர்வு இல்லாமலேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ளலாம் என்றிருந்தபோது, பலர் அப்படி நுழைந்தனர். பிறகு நுழைவு தேர்வு வைக்கப் பட்டது. எப்படியாவது குறிப்பிட்ட காலத்தை ஓட்டிவிட்டால், சீனியர் அட்வகேட் ஆகிவிடலாம், அரசுதரப்பு கவுன்சில் என்று கட்சி ஆதரவுடன் காலத்தை ஓட்டினால், ஒருவேளை நீதிபதி ஆகும் வாய்ப்புள்ளது என்று கனவோடு உள்ளே நுழைந்தவர்களும் உண்டு.

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

பிரபலங்கள் பி.எல் படித்து பட்டம் வாங்கிய விசித்திரமான முறை: சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் படிக்கும் போது, குறிப்பிட்ட காலகட்டத்தில், உதாரணத்திற்கு 1987-90 வருடங்களில் மாலை வகுப்புகளில் குறிப்பிட்ட பிரபலங்கள் காணப்படாமலேயே இருந்திருப்பர். ஆனால், பிறகு பி.எல் பட்டதோடு “1987-90 வருடங்களில் படித்ததாக” எங்கேயாவது பார்க்க நேர்ந்தால், என்ன இது அப்பொழுது நானும் தானே படித்தேன், இவரை ஒரு முறைக் கூட வகுப்பில், கல்லூரியில், ஏன் பரீட்சை எழுதும்போது கூட பார்த்ததில்லையே, பிறகு எப்படி பட்டம் வாங்கினார் என்று மனதிற்குள் நினைக்கத்தான் செய்வர். ஆனால், வெளியில் சொல்ல முடியாது அல்லது அவரிடத்தில் போய் கேட்கமுடியாது. இது உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது.

Advocates police clashes

Advocates police clashes

எல்எல்பிபடித்தவர்கள்தமிழகபார்கவுன்சிலில்பதிவுசெய்யதடைவிதிக்கவேண்டும்: எல்எல்பி (LLB) பதிவு செய்யத் தடை கோரும் மனுவுக்கு 8 பல்கலைக்கழகங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.   வழக்குரைஞர் வி. ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் இவ்வாறு உத்தரவிட்டார்[1]. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநில கல்லூரிகளில் எல்எல்பி பட்டம் பெற்ற பலரும் தமிழக பார்கவுன்சிலில் (Bar Council) பதிவுசெய்து வழக்குரைஞர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் நேரடியாக வகுப்புகளுக்குச் செல்லாமல் பட்டங்களை பெறுகின்றனர். அதாவது “கரஸ்பான்டென்ஸ்” மற்றும் எல்எல்பி (LLB) செய்து பட்டங்களை வாங்கி பார் கவுன்சிலில் பதிவு செய்து  கொண்டு வக்கீல் ஆகியுள்ளனர். இதைத் தவிர இவர்களில் பலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன[2].  தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் வக்கீல்கள் மீது 1424 வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீஸ் டி.ஜி.பி மதுரை ஐகோர்ட்டில்   அறிக்கை தாக்கல் செய்துள்ளார்[3]. இதே போன்று மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், சட்டப்படிப்பை மேற்கொள்ள கடந்த 2008–ம் ஆண்டு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கடைபிடிக்காமல் வெளிமாநில சட்டக்கல்லூரிகள் செயல்படுவதாகவும், எனவே, வயது வரம்பு நிர்ணய அடிப்படையில் சட்டப்படிப்புக்கு மாணவர்களை சேர்க்க வெளிமாநில கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தார்[4]. எனவே எல்எல்பி படித்தவர்கள் தமிழக பார்கவுன்சிலில் பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வக்கீல்கள் மீது 1424 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன[5]: 189 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில், தமிழகத்தில் வக்கீல்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற அனைத்து வழக்குகளின் விவரங்களளதில் அடங்கியிருந்தன.

  • சென்னையில் 276 வழக்குகளும்,
  • மதுரை மாவட்டத்தில் 100 வழக்குகளும்,
  • நெல்லை மாவட்டத்தில் 121 வழக்குகளும்,
  • கோவையில் 134 வழக்குகளும்,
  • தேனியில் 34 வழக்குகளும்,
  • திண்டுக்கல்லில் 18 வழக்குகளும்,
  • ராமநாதபுரத்தில் 29 வழக்குகளும்,
  • சிவகங்கையில் 6 வழக்குகளும்

வக்கீல்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மொத்தம் 1,424 வழக்குகள் வக்கீல்கள் மீது பதிவாகி உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

வழக்குநிலுவையில்உள்ளபோது, ஒருநபர்குழுஅமைத்துவிசாரிக்கபார்கவுன்சிலுக்குயார்அதிகாரம்வழங்கியது: இந்நிலையில், வியாழக்கிழமை 23-01-2014 இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்குரைஞர்கள் மீதான குற்றவழக்குகள் பட்டியலை தாக்கல் செயய டிஜிபிக்கு ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது.மேலும் இந்திய பார்கவுன்சில், எல்எல்பி கல்லூரிகள் இடம்பெற்றுள்ள கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில தலைமைச்செயலர்கள், அம்மாநிலங்களின் பார்கவுன்சில் தலைவர்கள் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதுஅப்போது, இந்திய பார்கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரம் குறித்து, விசாரிக்க ஒருநபர் குழுவை பார்கவுன்சில் அமைத்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.   எல்எல்பி பதிவு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் குழு விசாரித்து வருகிறது. இங்கும் வழக்கு விசாரிக்கப்படுகிறது. இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள போது, ஒருநபர் குழு அமைத்து விசாரிக்க பார்கவுன்சிலுக்கு யார் அதிகாரம் வழங்கியது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

முறையாகநடத்தப்படாதகல்விநிறுவனங்களுக்குஅங்கீகாரம்வழங்கியதால்இந்தபிரச்னைஎழுந்துள்ளது: முறையாக நடத்தப்படாத கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதால் இந்த பிரச்னை எழுந்துள்ளது என குறிப்பிட்ட நீதிபதி, ஒருநபர் குழு அமைத்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய பார்கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.   பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆந்திரம், கர்நாடகம், சத்தீஷ்கர், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் எல்எல்பி பாட வகுப்புகளை நடத்தும் 8 பல்கலைக்கழகங்களையும் வழக்கில் பிரதிவாதிகளாக சேர்த்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகள் 7ம், தனியார் சட்டக்கல்லூரி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன[6].

சட்டத்தை வளைத்து வக்கீல் ஆகும் முறை: எல்எல்பி நடத்தும் பட்டப் படிப்புகள் பார் கவுன்சிலில் பதிவு செய்யக் கொள்ளமுடியாது, நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தும் தகுதி பெறமுடியாது என்றேல்லாம் அப்பட்டப் படிப்பு படிக்கும்போதே, இவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ளதை பார்த்திருப்பர். இருப்பினும், விடாப்பிடியாக பட்டத்தை வாங்கிக் கொண்டு, பதிவு செய்ய விண்ணப்பிப்பர். விண்ணப்பம் மறுக்கும் போது, அதனை எதிர்த்து வழக்குப் போட்டுவர். பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதி என்றிருக்கும் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்து விடுவர். இதனால், பின்னால் வருகிறவர்கள், மற்றவர்கள் விடாமல் அதே முறையை பின்பற்றுவர். ஆட்சி மாறும் போது சொல்லவே வேண்டாம், இக்கூத்துகள் அதிகமாகவே நடக்கும். அந்நிலையில் தான் இப்படி கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள், மற்றவர்கள் எல்லோரும் நுழைய பார்ப்பர்.

வேதபிரகாஷ்

© 25-01-2014


[2] தினமணி, எல்எல்பிபதிவுவுக்குதடைகோரும்வழக்கு: 8 பல்கலைக்கழகங்கங்களுக்குஉயர்நீதிமன்றம்நோட்டீஸ், ஜனவரி 25, 2014.

[5] தினத்தந்தி, தமிழகம்முழுவதும்போலீஸ்நிலையங்களில்வக்கீல்கள்மீது 1,424 வழக்குகள்பதிவாகியுள்ளனபோலீஸ்டி.ஜி.பி. ஐகோர்ட்டில்அறிக்கைதாக்கல், ஜனவரி 25, 2014.