Archive for the ‘தேவர் ஜெயந்தி’ Category

அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் சட்ட மாணவர்கள் அடித்துக் கொண்ட தீர்ப்பில் சட்டத்தை மீறியவர்களுக்கு சிறை தண்டனை, தண்டம்!

ஜனவரி 30, 2016

அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் சட்ட மாணவர்கள் அடித்துக் கொண்ட தீர்ப்பில் சட்டத்தை மீறியவர்களுக்கு சிறை தண்டனை, தண்டம்!

சட்டக் கல்லூரி மோதல் வழக்கு தீர்ப்பு 2016

அடிதடியில் பெரும் பரபரப்பு, வழக்குகள் பதிவு: இதில், அய்யாத்துரை, பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் ஒரு அணியாகவும், சித்திரைசெல்வன், மணிமாறன் உள்பட பலரும் ஒரு அணியாகவும் பிரிந்து ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்[1]. இதில், பாரதிகண்ணன் என்ற மாணவனை, கல்லூரி வாசலில் வைத்து மாணவர்கள் சிலர் தாக்கிய வீடியோ காட்சி தொலைக்காட்சியில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து எஸ்பிளனேடு போலீசார் இரு வழக்குகளை பதிவு செய்தனர். அதாவது, மாணவன் அய்யாத்துரை கொடுத்த புகாரின் அடிப்படையில், சித்திரைச்செல்வன், மணிமாறன், ரவீந்திரன், குபேந்திரன் உள்பட 41 பேர் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர், விசாரணை நடத்திய போலீசார் 43 பேரை கைது செய்தனர்[2]. ஆனால், ஜாதி பிரச்சினை என்பதினால், அப்படியே கிடப்பில் போட்டு வைத்தனர். இதனால் உச்சநீதி மன்றம் அணுகப்பட்டது. கே. சரவணன் கருப்பசாமி மற்றும் இன்னொருவர் பெருமாள் என்பவர், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று 2000ல் வழக்குத் தொடர்ந்தார்[3]. ஆனால் தேவையில்லை என்று தள்ளுபடி செய்து விட்டது[4].

சட்டக் கல்லூரி மோதல் வழக்கு தீர்ப்பு 2016.2

பி.2 எஸ்பலனேட் [B2 Esplanade Police Station] போலீஸ் ஷ்டேசனில் கீழ்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன:

  1. அய்யாதுரைஎன்பவர்கொடுத்தபுகாரின்படி [Crime No. 1371/2008 of B2 Esplanade Police Station under Sections 147, 148, 341, 324, 307 & 506 (ii) IPC] சித்திரைச்செல்வன்மற்றும் 40 மாணவர்களுக்குஎதிராகவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. 23 பேர்கைதுசெய்யப்பட்டனர், சிலர்சரண்அடைந்தனர். பிறகுபெயிலில்விடப்பட்டனர்.
  1. இதேபோல, சித்திரைச்செல்வன்கொடுத்தபுகாரின்மீது [Crime No. 1372/2008against two students in B2 Esplanade Police Station under Sections 341, 324 and 506 (ii) IPC and the same was subsequently altered into Sections 341, 324, 307 and 506 (ii) IPC.]. இதில்இரண்டுபேர்கைதுசெய்யப்பட்டு, பிறகு 12-01-2009 அன்றுபெயிலில்விடப்பட்டனர்.
  1. 13-11-2008 அன்றுகல்லூரிமுதல்வரின்அறைக்குள்சென்றுபொருட்களைசேதப்படுத்தியதற்காக [Crime No.1374/2008 under Sections 147, 148 IPC and Section 3(1) of Tamilnadu Property (Prevention of Damage and Loss) Act, 1992] ஒருவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. இதில்கைதுசெய்யப்பட்ட 14 பேர் 23-11-2008 அன்றுநீதிமன்றஆணைப்படிவிடுவிகப்பட்டனர்.

சட்டக் கல்லூரி மோதல் வழக்கு -ஆம்ச்ட்ராங் கைது, விடுதலை

போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது: இதில் Crime No. 1371/2008 குற்றப்பத்திரிக்கை எட்டாவது மெட்ரோபோலிடின் மேஜிஸ்ட்ரேட் [VIIth Metropolitan Magistrate, George Town] முன்பாக 10-03-2011 அன்று தாக்கல் செய்யப்பட்டது. சில திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுடன் மறுபடியும் 19-05-2011 அன்று தாக்கல் செய்யப்பட, Case No.29/2011 எண்ணிட்ட கோப்பில் 09-09-2014 அன்று விசாரணை வைக்கப்பட்டது. மேலும், முன்னதாக 12-11-2008 அன்று,

(1) திரு. கே.கே. ஶ்ரீதேவ், கல்லூரி முதல்வர் [ Mr. K.K. Sridev, Principal of the Law College]

(2) திரு கே. நாராயணமூர்த்தி, உதவி போலீஸ் கமிஷனர் [Mr. K. Narayanamoorthy, Assistant Commissioner of Police of the Jurisdiction Range]

(3) திரு. எம். சேகர் பாபு, இன்ஸ்பெக்டர், பி.2 எஸ்பலனேட் [Mr.M. Sekar Babu, Inspector of Police of B2 Esplanade Police Station] முதலியோர், வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

அதே போல நான்கு உதவி-இன்ஸ்பெக்டர்களும் இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். நீதிபதி பி. சன்முகம் தலைமையில் நடந்த விசாரணை கமிஷன் அறிக்கைப்படி, இம்மூவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் துறை விசாரணை நிலுவையில் உள்ளது. முக்கியமாக குற்றஞ்சாட்டப்பட்ட கே. ஆம்ஸ்ட்ராங், வக்கீல் மற்றும் வேட்பாளராக இருந்த கைது செய்யப்படவில்லை. இது 08-02-2011 அன்று தான் தெரியவந்தது. 01-05-2011 அன்று கைது செய்யப்பட்டாலும், 04-05-2011 அன்று பெயிலில் விடப்பட்டார். இதே போல மற்றவர்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றன.

சட்டக் கல்லூரி மோதல் ஆம்ஸ்ட்ராங் கைது 2008

உச்சநீதி மன்றம், அக்டோபர் 2015ல், ஆறுமாதங்களில் முடிக்குமாறு ஆணையிட்டது: இந்த வழக்கு மற்றும் விசாரணை இழுத்தடிக்கப்படும் நிலை இருந்ததால், உச்சநீதி மன்றம், அக்டோபர் 2015ல், ஆறுமாதங்களில் முடிக்குமாறு ஆணையிட்டது[5]. நீதிபதி கோமதிநாயகம் இந்த வழக்கில் வக்கீல் ரஜினிகாந்த் முதல் குற்றவாளியாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அமைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவரும், சட்டக்கல்லூரி மாணவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தும் விதமாக தூண்டி விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.  அதேபோல சித்திரைசெல்வன் கொடுத்த புகாரின் பேரில், பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளும் சென்னை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள 17-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கோமதிநாயகம் நேற்று பிற்பகலில் தீர்ப்பு அளித்தார்[6].

சட்டக் கல்லூரி மோதல் ஆம்ஸ்ட்ராங் 2008

ஆம்ஸ்ட்ராங், ரஜினிகாந்த் விடுதலை: அந்த தீர்ப்பில் நீதிபதி [the XVII Additional Sessions judge Gomathi Nayagam ] கூறியிருப்பதாவது:- பாரதிகண்ணன் உள்ளிட்ட 3 பேரை தாக்கிய வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட ரஜினிகாந்த், ஆம்ஸ்ட்ராங் உள்பட 22 பேரை விடுதலை செய்கிறேன்[7]. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சித்திரைச் செல்வன் உள்பட 19 பேர் மீதான 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன[8]. இவர்களுக்கு, சட்டவிரோதமாக கூடிய குற்றத்துக்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்தியதற்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்[9]. இந்த சிறை தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும்.

நீதிமுறை அழுக்குகள்

அப்பீலுக்காக தண்டனை நிறுத்தி வைப்பு: அதேபோல சித்திரைசெல்வனை தாக்கிய வழக்கில், பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக இவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்[10]. இந்த தீர்ப்பை எதிர்த்து 21 பேரும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக இந்த தண்டனையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 21 பேரும் சொந்த ஜாமீன் உத்தரவாதம் வழங்கி வீடு திரும்பினார்கள்[11]. 41 மாணவர்களின் சார்பாக வாதாடிய எஸ். சத்தியசந்திரன் மற்றும் சி. விஜயகுமார் கூறியதாவது[12], “அத்தகைய வன்முறையை மாணவர்கள் செய்திருக்க முடியாது. வெளியாட்களின் மூலம் தான் நடந்தேறியுள்ளது. இதனால், நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம்”.

© வேதபிரகாஷ்

30-01-2016

[1] http://www.maalaimalar.com/2016/01/28165443/21-people-gets-three-year-jail.html

[2] மாலைமலர், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறைத்தண்டனை, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஜனவரி 28, 4:54 PM IST.

[3] Writ petition (Civil) no.400 of 2010 filed by K. Saravanan Karuppasamy & Anr vs. State of Tamilnadu & ors.

http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=41917

[4] http://www.livelaw.in/supreme-court-says-cbi-enquiry-chennai-law-college-case/

[5] The trial in the investigation was prolonged to such an extent that the Supreme Court in October 2015, directed the Madras High Court to complete the trial within six months.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Seven-Years-After-21-Lawless-Students-Get-3-year-Jail-Term/2016/01/29/article3250533.ece

[6] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: 21 பேருக்கு 3 ஆண்டு சிறை– 22 பேர் விடுவிப்பு, Posted by: Jayachitra, Updated: Thursday, January 28, 2016, 17:28 [IST].

[7] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=159672

[8] தினமணி, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: 21 பேருக்கு சிறைத் தண்டனை, By dn, சென்னை, First Published : 28 January 2016 04:25 PM IST.

[9] தினத்தந்தி, 2008-ம் ஆண்டு நடந்த மோதல் சம்பவம்: சட்டக்கல்லூரி மாணவர்கள் 21 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, மாற்றம் செய்த நாள்:வெள்ளி, ஜனவரி 29,2016, 2:15 AM IST; பதிவு செய்த நாள்:வெள்ளி, ஜனவரி 29,2016, 2:12 AM IST.

[10]http://www.dinamani.com/tamilnadu/2016/01/28/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/article3249403.ece

[11] http://www.dailythanthi.com/News/State/2016/01/29021231/Chennai-Law-College-Student-group-clash-in-2008-Court.vpf

[12] Advocates S Satyachandran and C Vijaykumar, who represented a group of 41 students, of whom the judge convicted17, said they would appeal in the high court.Speaking to reporters after the verdict, they said “outsiders” caused the clash and it was not possible for students to unleash such severe violence themselves. The authorities released the convicts on bail in the evening.

http://timesofindia.indiatimes.com/city/chennai/21-ex-law-college-students-get-3-years-jail-for-bloody-08-clash/articleshow/50765143.cms