இந்திய நீதி / சட்டத்துறையில் ஒரு ஒழுங்கான அமைப்பு, நியதி மற்றும் வழிமுறைகள் இருந்தன. ஆனால், அரசியல்வாதிகள் சட்டத்தை வளைக்க முற்பட்டபோது, நீதிகளும் வளைய ஆரம்பித்தன. நீதிமன்றங்கள் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாகின. நீதிபதிகளே ஆட்டிவைக்கப்பட்டனர்.
தமிழகஅகழாய்வுகளும், நீதிமன்றதீர்ப்புகளும்அரசியலாகப்படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)
அகழாய்வு, கல்வெட்டுகள்முதலியவைநடக்கின்றவழக்குகள்–தீர்ப்புகள், தொடரும்முறைகள்: தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பற்றி எழுத்தாளர் எஸ்.காமராஜ்[1], மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்[2]. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது[3]. இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு 10-08-2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
1980 ஆம்ஆண்டிலேயேதமிழ்கல்வெட்டியலுக்கானதிராவிடன்கிளைஅலுவலகம்சென்னையில்அமைக்கப்பட்டது: மத்திய அரசுத்தரப்பில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டது[4]. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது[5]. “சென்னையில்சமஸ்கிருதத்திற்கெனகல்வெட்டியலாளர்கள்உள்ளனரா? எத்தனைபேர்நியமிக்கப்பட்டுள்ளனர்? எனகேள்விஎழுப்பினர். மத்தியஅரசுத்தரப்பில் 1 சமஸ்கிருதகல்வெட்டியலாளர்பணியமர்த்தப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளின், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த கேள்விக்கு, மொத்தமாக –
86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும்,
அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள்,
25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை
12,000 கல்வெட்டுக்கள் பெர்ஷியன் மற்றும் அராபிக் மொழிக்கானவை,
9,400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை,
7300 கல்வெட்டுக்கள் தெலுங்கு மொழிக்கானவை,
225 கல்வெட்டுக்கள் மலையாள மொழிக்கானவை என பதிலளிக்கப்பட்டது.
இதிலிருந்தே, தமிழில் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்பது பொய்யாகிறது. 27,000 தமிழ் எனும் போது, 57,000 தமிழ் அல்லாதது என்றாகிறது. எனவே, இத்தகைய வாதம், வழக்கு, செய்திகள் எல்லாமே பொய் என்றாகிறது.
அதிககல்வெட்டுக்களைக்கொண்டதமிழுக்கெனதனியேஏன்அலுவலகத்தைஅமைக்கவில்லை?: அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அப்படியாயினும் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்[6]. தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[7]. அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[8]. அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர்[9]. நீதிபதிகள் இவ்வாறு கேட்டனரா அல்லது செய்திகள் அவ்வாறு வந்துள்ளனவா என்று தெரியவில்லை. இருப்பினும், இத்தகைய கேள்விகள் கேட்டுள்ளதும், விசித்திரமாக உள்ளது. ஏனெனில், நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்கும் முன்பே, அவற்றைப் பற்றி நன்றாகப் படித்து கொண்டு வந்து, வாதாடும், வக்கீல்களை குறுக்கு விசாரணை செய்யும் அளவுக்கு இருபார்கள், இருக்கிறாற்கள். மாறாக, இவ்வாறு, கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது, திகைப்பாக இருக்கிறது.
மைசூருவில்வைத்ததுஏன்?: அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல்துறையைமூடுவதற்கானநடவடிக்கையைமத்தியஅரசுஎடுத்துவருவதுபோல்தெரிகிறது. நாடுமுழுவதும்கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம்கல்வெட்டுகளில்சுமார் 60 ஆயிரம்கல்வெட்டுகள்தமிழ்மொழியில்உள்ளன. அந்தகல்வெட்டுகளைமைசூருவில்ஏன்வைக்கவேண்டும்? கர்நாடகஅரசுக்கும், தமிழகஅரசுக்கும்காவிரிபிரச்சினைஇருக்கும்நிலையில்தமிழகத்திலேயேகல்வெட்டுக்களைவைக்கநடவடிக்கைஎடுக்கலாமே? 60 ஆயிரம்கல்வெட்டுகள்தமிழ்மொழிக்கானவை. அவ்வாறுஇருக்கையில்தமிழகத்தில்சமஸ்கிருதமொழிக்குஎனகல்வெட்டியலாளரைநியமிக்கவேண்டியதேவைஎன்ன? அதைதிராவிடமொழிகல்வெட்டுகள்எனகூறுவதுஏன்?,” எனவும் கேள்வி எழுப்பினர்[10]. அதற்கு மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “இது அரசின் கொள்கை முடிவு’’ என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்” என்றனர்[11].
விளக்கம்அளிக்கஉத்தரவு – விரிவானஅறிக்கைஅளிக்கமத்தியஅரசுக்குஉத்தரவிட்டனர்: மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்[12]. இதுகுறித்து தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்றை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்[13]. “கல்வெட்டியல்துறையைமூடுவதற்கானநடவடிக்கையைமத்தியஅரசுஎடுத்துவருவதுபோல்தெரிகிறது,” என்று நீதிபதிகள் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே அரசின் ஆவணங்கள் எல்லாம் வெளிப்படையாக உள்ளன. அவற்றையெல்லாம் கனம் நீதிபதிகள் படித்திருப்பார்கள். அந்நிலையில், இத்தகைய கேள்விகள் எழுப்பப் படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அரசியல் ஆதரவு நியமன நீதிபதிகள் அவ்வாறு சித்தாந்த ரீதியில் சார்புடையவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.
[1] WP(MD) 1174/2021; KAMARAJ MUTHALAKURICHI KAMARAJ.S VS THE UNION OF INDIA AND 4 OTHERS; M/S.ALAGUMANI.RRAMESHKUMAR. S 8486484817; M/S. VICTORIA GOWRI.L. ASGIMEMO OF APP FILED FOR R1 andAMP; R2 COUNTER AFFIDAVIT-USR-9534/21 FOR R 1 2 4 and AMP; 5 AGP TAKES NOTICE FOR R3, in the COURT NO. 1 before The Honourable Mr Justice N. KIRUBAKARAN and The Honourable Mr Justice M.DURAISWAMY
[4] புதியதலைமுறை, தமிழகத்தில்சமஸ்கிருதமொழிக்கெனகல்வெட்டியலாளரைநியமிக்கவேண்டியதேவைஎன்ன? – நீதிபதிகள், தமிழ்நாடு, Web Team Published :09,Aug 2021 04:04 PM.
[6] புதியதலைமுறை, அதிககல்வெட்டுகள்உள்ளதமிழுக்கெனதனியேஏன்அலுவலகத்தைஅமைக்கவில்லை? – நீதிபதிகள்கேள்வி, தமிழ்நாடு, Web Team Published :10,Aug 2021 05:41 PM
[12] தமிழ்.ஒன்.இந்தியா, அதிககல்வெட்டுகள்கொண்டதமிழ்மொழிக்குஏன்முக்கியத்துவம்இல்லை?.மத்தியஅரசுக்கு, நீதிபதிகள்கேள்வி!, By Rayar A Updated: Wednesday, August 11, 2021, 7:30 [IST]
தமிழகஅகழாய்வுகளும், நீதிமன்றவழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப்படும் வழக்குகள்:நீதிபதிஎப்படிவழக்குகள்பற்றியகருத்தைபொதுஇடத்தில்தெரிவிக்கமுடியும்? (1)
அகழாய்வு, கல்வெட்டுகள்முதலியவைநீதிமன்றங்களில்தீர்மானிக்கும்விவகாரங்கள்அல்ல: மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப் படுகின்ற, விசாரணைக்கு ஏற்று நடத்தப் படுகின்ற, அவற்றைப் பற்றி செய்திகளாக வரும் விவரங்கள் முதலியவற்றை வைத்துப் பார்த்து, படித்து, உன்னிப்பாக கவனிக்கும் போது, அகழாய்வு மற்றும் கல்வெட்டுகள் பற்றிய வழக்குகள் எல்லாம், தமிழ்-சமஸ்கிருதம், திராவிடன்-ஆரியன், தெற்கு-வடக்கு, தமிழ்-தமிழ் அல்லாதது என்று பிரிவினைவாதங்கள் அடிப்படையில் உள்ளதை கவனிக்க நேரிடுகிறது. ஏற்கெனவே கீழடி வழக்குகளில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட தன்னுடை வேலை விவகாரம், இடமாற்றம், அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது, தாமதம் செய்தது, போன்ற விவகாரங்களில் அரசியலை நுழைத்து, மற்றவர்கள் விளம்பரம் பெற்றது தெரிகிறது. ஏனெனில், ஒரு மத்திய அரசு அதிகாரி / ஊழியர் என்ற நிலையில், அவர் இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு கட்டுப் பட்டவராக இருந்தார் / இருக்கிறார். இப்பொழுது, அவர் விவகாரம் அமைதியாகி விட்டது. வெங்கடேசன், கம்யூனிஸ்ட் எம்.பி அவரை வைத்து, நன்றாகவே அரசியல் செய்திருப்பது தெரிந்தது. இப்பொழுது, தேவையே இல்லாமல், அடிப்படை விவரங்களைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், கல்வெட்டுகள் பற்றி வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு நடப்பது, வேடிக்கையாக உள்ளது.
ஜூலை 21 மற்றும் 22, 2018 (சனி, ஞாயிறு)திருவண்ணாமலையில்நடந்தகருத்தரங்கு: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று திருவண்ணாமலையில் கருத்தரங்கு மற்றும் ‘ஆவணம்-29’ இதழ் வெளியிட்டு விழாவை நடத்தின. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது: “தமிழகத்தில்உள்ளபெரும்பாலானோருக்கும்நமதுமாநிலத்தின்பெருமைகள்தெரியாது. தமிழ்மிகவும்பழமையானமொழிஎன்றுகூறும்போதுமுதலில்யாரும்நம்பவில்லை. ஈரோடுமாவட்டம், கொடுமணல்பகுதியில்கிடைத்தகல்வெட்டில்கண்டுபிடிக்கப்பட்டதமிழ்எழுத்துகள், எந்தகாலத்தைசேர்ந்ததுஎன்றுஅமெரிக்காவிற்குஆய்வுசெய்யஅனுப்பிவைக்கப்பட்டது”. பீடா அனேலிடிகல் சோதனையைக் குறிப்பிடுகின்றார் என்றூ தெரிகிறது, ஆனால், மற்ற மாதிரிகளின் தேதிகள் என்னவாயிற்று என்று கேட்காதது வியப்பாக இருக்கிறது.
நீதிபதிகிருபாகரன் – கீழடிஅகழ்வாராய்ச்சியில்உள்ளவிவரங்கள்மறைக்கப்படுகின்றன (10-10-2020)[1]: நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் தொடர்ந்து பேசியதாவது: “அந்தஆய்வில்இந்தஎழுத்துகள்கிறிஸ்துபிறப்பதற்குமுன்புசுமார் 350 முதல் 375 ஆண்டுகளுக்குஇடைப்பட்டதுஎன்றுகண்டறியப்பட்டது[2]. அதன்பிறகுதான்தமிழ்மிகவும்தொன்மையானமொழி, செம்மொழிஎன்றுகூறப்பட்டது. தமிழ்நாட்டில்பழமையானவிஷயங்கள்புதைந்துகிடக்கின்றன. மதுரைகீழடிஅகழ்வாராய்ச்சியில்உள்ளவிவரங்கள்மறைக்கப்படுகின்றன[3]. அதில்தமிழர்களின்பண்பாடுகள்மறைந்துள்ளது[4]. மாவட்டத்தில்பழமையானகோவில்கள், கல்வெட்டுகள், சிலைகள்உள்ளன. அதனைபார்த்துஅதன்வரலாற்றைதங்கள்குழந்தைகளுக்குதெரியப்படுத்தவேண்டும். சிலர்நமதுமாநிலத்தைவிட்டு,விட்டுவெளிமாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும்சென்றுபழமையானவரலாற்றுசின்னங்களைபார்வையிட்டுவருகின்றனர். தஞ்சைபெரியகோவில்போன்றுபல்வேறுவரலாற்றுசின்னங்கள்ஏராளமானவைஉள்ளன. இவற்றினால்முந்தையகாலத்தில்கட்டிடகலைவியக்கவைக்கும்வகையில்உள்ளது”. இங்கு, இவர், “மதுரைகீழடிஅகழ்வாராய்ச்சியில்உள்ளவிவரங்கள்மறைக்கப்படுகின்றன. அதில்தமிழர்களின்பண்பாடுகள்மறைந்துள்ளது,” என்று குறிப்பிடுவது, இவர் ஏற்கெனவே அத்தகைய எண்ணத்தை மனத்தில் உருவாக்கி வைத்து விட்டார் என்று தெரிகிறது. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி, இவ்வாறு கருத்தைத் தெரிவிக்கலாமா என்பது கேள்விக்குறியாகிறது.
அரசியல்ரீதியில்நடக்கும்அகழாய்வுபணிகள், ஆராய்ச்சிகள், ஆதாரங்கள்நிலைமாறும்நிலைகள்: இவ்வாறு அரசியல் செய்து வரும் நிலையில், கொரோனா காரணத்தால் ஊரடங்கு அமூலில் இருக்கும் போது, காமராஜ், ஆனந்தராஜ் என்று சிலர், மதுரை நீதிமன்றத்தில், வழக்குகள் தொடுப்பது[5], அவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது, நடத்துவது, அவற்றைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் போடுவது வாடிக்கையாகி விட்டது ஏதோ இவர்கள் சொல்லித் தான், அகழாய்வு மற்றும் வினினிஆன ரீதியில் ஆராய்ச்சி எல்லாம் நடக்கின்றன என்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்கி வருகின்றனர். உண்மையில், அரசியல்வாதிகள் தான் அங்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் சிலர் பொழுது போக்கவும் வந்து செல்கிறார்கள். இதனால், அங்கிருக்கும் அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் என்று எல்லாமே நிலைமாறிப் போகின்றன. வருபவர்கள், தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துச் செல்கின்றனர். அமைச்சர் முதல் எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் வருபவர்களும், ஏதோ நினைவுப் பொருளாக கொடுக்கப் படுகின்றன, அவர்களும் எடுத்துச் செல்கின்றன. பலமுறை மழை பெய்திருக்கிறது. இதனால், அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் எல்லாம் பாதிக்கப் பட்டிருக்கின்றன.
அக்டோபர் 10, 2020 – நீதிபதிகிருபாகரன்கீழடிக்குவந்துபார்த்தார்[6]: அக்டோபர் 2020ல் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி கிருபாகரனே, கீழடிக்கு வந்து பார்த்தார், மற்றும் அங்குள்ள அகழாய்வு பணிகளை பார்வையிட்டார், களபணியாளரளுடன் உரையாடினார் என்று செய்திகள் உள்ளன. சிவகங்கையின் கலெக்டர் ஜே.ஜெயகாந்தன் உடனிருந்து, ஏழாம்கட்ட பணிகள் நடந்து வருவதைப் பற்றி விளக்கினார்[7]. அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் காண்பித்து, அங்கு கண்டுபிடித்த பொருட்கள் குறித்து நீதிபதி கிருபாகரனுக்கு விளக்கம் அளித்தார். இதைதொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய ஊர்களுக்கும் சென்று அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டதுடன், அங்கு கிடைத்த பொருட்களையும் பார்த்து, அதுகுறித்து கேட்டறிந்தார்[8]. ஒவ்வொரு அகழாய்வு எந்த மாதத்தில் தொடங்கி, எந்த மாதத்தில் நிறைவு பெறும், தொடர்ச்சியாக அகழாய்வு நடத்தாதது ஏன், அதற்கான அனுமதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார்[9]. அப்படி என்றால், நிச்சயமாக, நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய விசாரணையை அங்கு செய்துள்ளார் என்றாகியது. தேவை என்றால், அந்த அதிகாரிகளை நேரிடையாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணை செய்திருக்கலாம்.
10-10-2010 – நீதிபதிஎஸ்.வைத்தியநாதனும்அங்குவந்துபார்த்தார்: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறைகிணறையும், பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணியையும் நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு காட்சிப் படுத்தப் பட்டுள்ள அகழாய்வுப் பொருட்களைக் கண்டு, நீதிபதி மிக்க ஆர்வத்துடன்-ஆசையுடன் பார்த்து மகிழ்ந்தார். மதியம் நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார். அதற்கு அடுத்து சற்று நேரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனும் கீழடி, கொந்தகைக்கு வந்து அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டார். அவருக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவரை கலெக்டர் ஜெயகாந்தன் வரவேற்றார். குறிப்பிட்ட வழக்குகள் அம்பந்தப் பட்ட இடங்களுக்கு நீதிபதிகள் சென்று பார்ப்பது என்பது சாதாரண விசயமாகத் தெரியவில்லை. ஆனானப் பட்ட ராமஜென்பபூமி வழக்குகளில் கூட எந்த நீதிபதியும் சென்று பார்த்தார், விசாரித்தார், அங்கிருப்பவர்களிடம் பேசினார் என்றெல்லாம் செய்திகள் வரவில்லை. ஆனால், தமிழக அகழாய்வு விவகாரங்களில் அத்தகைய செய்திகள் வந்துள்ளன. இவையெல்லாம் ஆச்சரியமாகத் தான் உள்ளன. மேலும் ஜூலை 21, 2018ல் பேசியுள்ளது கவனிக்க வேண்டும்.
[5] Madras High Court – S.Kamaraj @ Muthalankurichi … vs Union Of India on 21 December, 2020; BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT- DATED : 21.12.2020; CORAM; THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN; AND THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI; W.P.(MD)No.21577 of 2019; S.Kamaraj @ Muthalankurichi Kamarj … Petitioner Vs. 1.Union of India and others.
The Writ Petition has been filed to direct the respondent No.3 to grant permission to the Respondent No.5 for carrying out further Archaeological Excavations and Scientific Research in Athichanallur, Keeladi, and Kodumanal Archaeological Sites and to direct the respondent No.3 to grant permission to the Respondent No.5 for carrying out the Archaeological Excavations and Scientific Research in the Archaeological Sites along with the Tamiraparani River, and Sivakalai and Konthagai in accordance with law.
[6] The Hindu, High Court Judges visit Keeladi, STAFF REPORTERMADURAI, OCTOBER 10, 2020
21:19 IST; UPDATED: OCTOBER 11, 2020 04:39 IST.
[7] Madras High Court Judge Justice N. Kirubakaran on Saturday visited the archaeological site in Keeladi, near Madurai.
In his personal visit, the judge interacted with the officials of the Tamil Nadu State Department of Archaeology and Sivaganga Collector J. Jayakanthan on the progress made in the sixth phase of the archaeological excavations.
The judge was enamoured by the findings that were on display at the site. Spending close to an hour at the site, the judge also enquired the officials of the State Archaeological Department on the progress made on the excavations in other sites.
A Division Bench headed by Justice N. Kirubakaran is hearing a batch of public interest litigation petitions with regard to archaeological excavations being carried out across Tamil Nadu. The judge has sought a response on the excavations.
In the afternoon, Justice S. Vaidyanathan of the Madras High Court, in a personal visit, also interacted with the officials at the site.
சட்டங்களின் பெருக்கம், அதனால் உருவாகும் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள்!
வக்கீல்தொழிலுக்குதடைவிதிக்கும்சரத்து[1]: மேற்சொன்ன செயல்களில் ஈடுபடும் வக்கீல்கள், ஐகோர்ட்டு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்ய நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடைவிதிக்கப்படும். இதன்பின்னர், நடவடிக்கைக்கு உள்ளான வக்கீல் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைப்பார். இவ்வாறு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-பி வழிவகை செய்கிறது. அதேபோல, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுகளில், மேற்சொன்ன குற்றச்செயல்களை வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல் தொழில் செய்ய சம்பந்தப்பட்ட வக்கீல்களுக்கு தடை விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம்[2].
குற்றஞ்சாட்டிதண்டிக்கும்முன்புவிளக்கம்கேட்கவேண்டும்[3]: சார்பு நீதிமன்றங்கள், முன்சீப் அல்லது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் மேற்சொன்ன செயல்களில் வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த சம்பவம் குறித்து அறிக்கையை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அந்த வக்கீல் ஆஜராக தற்காலிக தடைவிதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிடவேண்டும். அதன்பின்னர், சம்பந்தப்பட்ட வக்கீலுக்கு, அவர் செய்த குற்றச்செயல் குறித்து அவருக்கு தெரிவித்து, அவரது விளக்கத்தை கேட்டு சம்மன் அனுப்பவேண்டும். நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக தடைவிதித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அவரது கருத்தை கேட்பது அவசியமாகும்.
திருத்தப்பட்டசட்டம்மற்றும்விதிமுறைகள்அமலுக்குவந்தது: அதன்பின்னர், அந்த வக்கீல் செய்ய குற்றச்செயல்களில் தன்மைக்கு ஏற்ப, ஐகோர்ட்டு உட்பட மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராக நிரந்தர தடைவிதித்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடலாம். இந்த புதிய சட்டத்திருத்தம், அறிவிக்கை வெளியிட்ட நாள் முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன. இந்த அறிவிக்கை கடந்த 20-ந் தேதி தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த புதிய சட்டத்திருத்தம் கடந்த 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. மேலும், இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு தன்னுடைய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது[4].
திருத்தப்பட்டஆட்டம்மற்றும்விதிமுறைகள்குறித்துஆதரவு–எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் பரவலாகக் காணப்படுகிறது. இது குறித்து நீதித் துறையைச் சேர்ந்த சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு[5]:
கே.சந்துரு (உயர்நீதிமன்றஓய்வுபெற்றநீதிபதி)[6]: வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34-ன்படி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் நடத்தை விதிகளை வகுக்கலாம் என்று உள்ளது. டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர், சாட்சிகளை பணம் கொடுத்து மாற்ற முற்படுகையில் தெஹெல்கா ஊடகம் அதை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 34-ல் போதுமான விதிகளை வகுக்கவில்லை. எனவே, இரண்டு மாத காலத்துக்குள் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என 2009-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதே, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அப்போது விதிகள் வகுக்கப்படவில்லை. இப்போது தான் விதிமுறைகளை வகுத்துள்ளனர். இந்த விதிமுறைகள் தற்போது தேவையான ஒன்றுதான்.
ஆர்.காந்தி, (உயர்நீதிமன்றமூத்தவழக்கறிஞர்): அனைத்து நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களை தடை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டால், வழக்கறிஞர்களின் தன்னம்பிக்கை, தைரியம் போய்விடும். அவர்களால் ஒருவார்த்தைகூட எதிர்த்துப் பேச முடியாது. மேலும், கீழமை நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படும்போது பார் கவுன்சிலுக்கு வேலையே இல்லாமல் போய்விடும். பார்கவுன்சில்தான் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் இருக்கும்போது, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது வழக்கறிஞர்களை மிரட்டுவது போலாகும். சில நேரங்களில் சில வழக்குகளில் வழக்கறிஞர்கள் கடுமையாக வாதிட வேண்டியிருக்கும். அதற்காக, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், எல்லா நிலையிலும் வழக்கறிஞர்கள் பயப்பட வேண்டிய சூழல் உருவாகும். இது நல்லதுக்கல்ல. வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்துள்ள திருத்தங் கள் வழக்கறிஞர்களை அச்சுறுத்துவதாகவே உள்ளது.
பி.வில்சன் (முன்னாள்கூடுதல்சொலிசிட்டர்ஜெனரல்): வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் திருத்தம் செய்துள்ள விதிகளில் நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரி ஆகியோருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தினாலோ; நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளித்தாலோ உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியும் என்று உள்ளது. இந்த இரண்டு விதிமுறைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற விதிகள் அனைத்தும் தேவையான ஒன்றுதான்.
ஆர்.சி.பால்கனகராஜ், (சென்னைஉயர்நீதிமன்றவழக்கறிஞர்கள்சங்கத்தலைவர்): வழக்கறிஞர் மீதான புகார் மீது உரிய நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு முடிந்தவரை சம்மன் தர வேண்டும். நேரில் ஆஜரான பிறகு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வேண்டும். அதன்பிறகு புகார் நிரூபிக்கப்பட்டால் அந்த வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாக தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடை விதிப்பதா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு நீதிபதி பணம் வாங்கிக் கொண்டுதான் உத்தரவு பிறப்பிக்கிறார் என்று ஆதாரத்துடன்தான் வழக்கறிஞர் புகார் தர வேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. நீதிபதி பணம் வாங்கினால் அதை புகைப்படம் எடுத்தா நாங்கள் அனுப்ப முடியும். அதுதொடர்பாக வழக்கறிஞர் புகார் கொடுத்தால் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரத்துடன்தான் தர வேண்டும். இல்லாவிட்டால் புகார் கொடுத்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்க்கிறோம். அதுபோல நீதிமன்ற வளாகத்திலே போராட்டம் செய்யக்கூடாது என்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
கே.சக்திவேல், உயர்நீதிமன்றவழக்கறிஞர்[7]: புதிய திருத்தங்கள் தேவையற்றது. அரசியலமைப்பு சட்டத்தில், போராடுவதற்கான உரிமை வழங்கப் பட்டுள்ளது. தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தில், அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்கள், பார் கவுன்சிலுக்கு உள்ள அதிகாரங்களை பறிப்பதாக உள்ளன. நீதித் துறையில் இருப்பவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகள் அனுப்பக் கூடாது என்பது, ஊழலுக்கு தான் வழிவகுக்கும்[8].
அதிகசட்டங்கள்மற்றும்விதிமுறைகள்என்றால்நீதித்துறைமோசமாகஉள்ளதுஎன்பதனைக்காட்டுகிறது: சட்டம் என்பது நீதி வல்லுனர்களால் அதிகமாக யோசித்து, தீர அலசிப் பார்த்து, சட்டமுன்னோடிகளைக் கருத்திற் கொண்டு, எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் வரையில் உருவாக்கப்பட்டுகிறது. இதனால், ஆரம்பகால சட்டங்கள் எல்லோருக்கும், எல்லா காலங்களிலும், எல்லா நிலைகளிலும் பொறுந்தியிருந்தது. ஆனால், நவீனகாலங்களில் வந்த சட்டங்கள், அவற்றைத் தயாரித்தர்களின் பாரபட்சம், பட்சதாபம், சுயநலம், ஓரவஞ்சனை, முதலிய மனச்சாதங்களுடன் உருவானதால், அவற்றில் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள், எப்படியும் விளக்கம் கொடுக்கலாம் போன்ற ரீதியில் சட்ட சரத்துகள், பிரிவுகள், உட்பிரிவுகள் முதலியவை அதிகமாக இருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும் குறிபிட்டு இருக்கும், தேவையென்றால், சில வார்த்தைக்களுக்கு அர்த்தம் இதுதான் என்ற வரையறையும் இருக்கும், என்ற நிலையும் வந்துவிட்டது. ஏனெனில், ஒரே செயல் ஒரு சட்டதின் கீழ் செய்தால் குற்றம், இன்னொரு சட்டத்தின் கீழ் செய்தால் குற்றமில்லை என்ற சாத்தியத்தையும் ஏற்படுத்தி விட்டனர். ஆனால், சட்டங்கள் அதிகமாகின்றன எனும்போது, நீதி பகுக்கப்படுகிறது, நீர்க்கப்படுகிறது, அநீதியாகிறது என்றாகிறது மேலும், புதிய சட்டம் அமூலுக்கு வரும்போது, அவை அந்தந்த தேதிகளிலிருந்து செல்லுபடியாகும் என்ற நிலையில், முந்தைய தேதிகளில் செய்த குற்றங்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். சட்டம், நீதித் துறைகளில் அதானால் தான் நியாயமானவர்கள் இருக்க வேண்டும், இல்லையென்றால், முரண்பாடுகளோடு தான் அத்துறைகள் இருக்கும். மக்களுக்கு சமநீதி கிடைக்காது.
அடிதடியில்பெரும்பரபரப்பு, வழக்குகள்பதிவு: இதில், அய்யாத்துரை, பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் ஒரு அணியாகவும், சித்திரைசெல்வன், மணிமாறன் உள்பட பலரும் ஒரு அணியாகவும் பிரிந்து ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்[1]. இதில், பாரதிகண்ணன் என்ற மாணவனை, கல்லூரி வாசலில் வைத்து மாணவர்கள் சிலர் தாக்கிய வீடியோ காட்சி தொலைக்காட்சியில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து எஸ்பிளனேடு போலீசார் இரு வழக்குகளை பதிவு செய்தனர். அதாவது, மாணவன் அய்யாத்துரை கொடுத்த புகாரின் அடிப்படையில், சித்திரைச்செல்வன், மணிமாறன், ரவீந்திரன், குபேந்திரன் உள்பட 41 பேர் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர், விசாரணை நடத்திய போலீசார் 43 பேரை கைது செய்தனர்[2]. ஆனால், ஜாதி பிரச்சினை என்பதினால், அப்படியே கிடப்பில் போட்டு வைத்தனர். இதனால் உச்சநீதி மன்றம் அணுகப்பட்டது. கே. சரவணன் கருப்பசாமி மற்றும் இன்னொருவர் பெருமாள் என்பவர், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று 2000ல் வழக்குத் தொடர்ந்தார்[3]. ஆனால் தேவையில்லை என்று தள்ளுபடி செய்து விட்டது[4].
அய்யாதுரைஎன்பவர்கொடுத்தபுகாரின்படி [Crime No. 1371/2008 of B2 Esplanade Police Station under Sections 147, 148, 341, 324, 307 & 506 (ii) IPC] சித்திரைச்செல்வன்மற்றும் 40 மாணவர்களுக்குஎதிராகவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. 23 பேர்கைதுசெய்யப்பட்டனர், சிலர்சரண்அடைந்தனர். பிறகுபெயிலில்விடப்பட்டனர்.
இதேபோல, சித்திரைச்செல்வன்கொடுத்தபுகாரின்மீது [Crime No. 1372/2008against two students in B2 Esplanade Police Station under Sections 341, 324 and 506 (ii) IPC and the same was subsequently altered into Sections 341, 324, 307 and 506 (ii) IPC.]. இதில்இரண்டுபேர்கைதுசெய்யப்பட்டு, பிறகு 12-01-2009 அன்றுபெயிலில்விடப்பட்டனர்.
13-11-2008 அன்றுகல்லூரிமுதல்வரின்அறைக்குள்சென்றுபொருட்களைசேதப்படுத்தியதற்காக [Crime No.1374/2008 under Sections 147, 148 IPC and Section 3(1) of Tamilnadu Property (Prevention of Damage and Loss) Act, 1992] ஒருவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. இதில்கைதுசெய்யப்பட்ட 14 பேர் 23-11-2008 அன்றுநீதிமன்றஆணைப்படிவிடுவிகப்பட்டனர்.
போலீஸ்அதிகாரிகள்மற்றும்முதல்வர்மீதுநடவடிக்கைஎடுக்கப்பட்டது: இதில் Crime No. 1371/2008 குற்றப்பத்திரிக்கை எட்டாவது மெட்ரோபோலிடின் மேஜிஸ்ட்ரேட் [VIIth Metropolitan Magistrate, George Town] முன்பாக 10-03-2011 அன்று தாக்கல் செய்யப்பட்டது. சில திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுடன் மறுபடியும் 19-05-2011 அன்று தாக்கல் செய்யப்பட, Case No.29/2011 எண்ணிட்ட கோப்பில் 09-09-2014 அன்று விசாரணை வைக்கப்பட்டது. மேலும், முன்னதாக 12-11-2008 அன்று,
(1) திரு. கே.கே. ஶ்ரீதேவ், கல்லூரி முதல்வர் [ Mr. K.K. Sridev, Principal of the Law College]
(2) திரு கே. நாராயணமூர்த்தி, உதவி போலீஸ் கமிஷனர் [Mr. K. Narayanamoorthy, Assistant Commissioner of Police of the Jurisdiction Range]
(3) திரு. எம். சேகர் பாபு, இன்ஸ்பெக்டர், பி.2 எஸ்பலனேட் [Mr.M. Sekar Babu, Inspector of Police of B2 Esplanade Police Station] முதலியோர், வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
அதே போல நான்கு உதவி-இன்ஸ்பெக்டர்களும் இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். நீதிபதி பி. சன்முகம் தலைமையில் நடந்த விசாரணை கமிஷன் அறிக்கைப்படி, இம்மூவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் துறை விசாரணை நிலுவையில் உள்ளது. முக்கியமாக குற்றஞ்சாட்டப்பட்ட கே. ஆம்ஸ்ட்ராங், வக்கீல் மற்றும் வேட்பாளராக இருந்த கைது செய்யப்படவில்லை. இது 08-02-2011 அன்று தான் தெரியவந்தது. 01-05-2011 அன்று கைது செய்யப்பட்டாலும், 04-05-2011 அன்று பெயிலில் விடப்பட்டார். இதே போல மற்றவர்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றன.
உச்சநீதிமன்றம், அக்டோபர் 2015ல், ஆறுமாதங்களில்முடிக்குமாறுஆணையிட்டது: இந்த வழக்கு மற்றும் விசாரணை இழுத்தடிக்கப்படும் நிலை இருந்ததால், உச்சநீதி மன்றம், அக்டோபர் 2015ல், ஆறுமாதங்களில் முடிக்குமாறு ஆணையிட்டது[5]. நீதிபதி கோமதிநாயகம் இந்த வழக்கில் வக்கீல் ரஜினிகாந்த் முதல் குற்றவாளியாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அமைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவரும், சட்டக்கல்லூரி மாணவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தும் விதமாக தூண்டி விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. அதேபோல சித்திரைசெல்வன் கொடுத்த புகாரின் பேரில், பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளும் சென்னை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள 17-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கோமதிநாயகம் நேற்று பிற்பகலில் தீர்ப்பு அளித்தார்[6].
ஆம்ஸ்ட்ராங், ரஜினிகாந்த்விடுதலை: அந்த தீர்ப்பில் நீதிபதி [the XVII Additional Sessions judge Gomathi Nayagam ] கூறியிருப்பதாவது:- பாரதிகண்ணன் உள்ளிட்ட 3 பேரை தாக்கிய வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட ரஜினிகாந்த், ஆம்ஸ்ட்ராங் உள்பட 22 பேரை விடுதலை செய்கிறேன்[7]. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சித்திரைச் செல்வன் உள்பட 19 பேர் மீதான 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன[8]. இவர்களுக்கு, சட்டவிரோதமாக கூடிய குற்றத்துக்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்தியதற்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்[9]. இந்த சிறை தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும்.
அப்பீலுக்காகதண்டனைநிறுத்திவைப்பு: அதேபோல சித்திரைசெல்வனை தாக்கிய வழக்கில், பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக இவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்[10]. இந்த தீர்ப்பை எதிர்த்து 21 பேரும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக இந்த தண்டனையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 21 பேரும் சொந்த ஜாமீன் உத்தரவாதம் வழங்கி வீடு திரும்பினார்கள்[11]. 41 மாணவர்களின் சார்பாக வாதாடிய எஸ். சத்தியசந்திரன் மற்றும் சி. விஜயகுமார் கூறியதாவது[12], “அத்தகைய வன்முறையை மாணவர்கள் செய்திருக்க முடியாது. வெளியாட்களின் மூலம் தான் நடந்தேறியுள்ளது. இதனால், நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம்”.
[5] The trial in the investigation was prolonged to such an extent that the Supreme Court in October 2015, directed the Madras High Court to complete the trial within six months.
[8] தினமணி, சட்டக்கல்லூரிமாணவர்கள்மோதல்: 21 பேருக்குசிறைத்தண்டனை, By dn, சென்னை, First Published : 28 January 2016 04:25 PM IST.
[9] தினத்தந்தி, 2008-ம்ஆண்டுநடந்தமோதல்சம்பவம்: சட்டக்கல்லூரிமாணவர்கள் 21 பேருக்குதலா 3 ஆண்டுசிறைதண்டனை, மாற்றம் செய்த நாள்:வெள்ளி, ஜனவரி 29,2016, 2:15 AM IST; பதிவு செய்த நாள்:வெள்ளி, ஜனவரி 29,2016, 2:12 AM IST.
[12] Advocates S Satyachandran and C Vijaykumar, who represented a group of 41 students, of whom the judge convicted17, said they would appeal in the high court.Speaking to reporters after the verdict, they said “outsiders” caused the clash and it was not possible for students to unleash such severe violence themselves. The authorities released the convicts on bail in the evening.
Ambedkar college – 2008 knife-wielding law srudents
திராவிடஅரசியல்சித்தாந்தத்தில்அம்பேத்கர்இருந்ததில்லை: தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாணவர்களை 1960களில் “இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்” ஈடுபடுத்தின. அரசியல்வாதிகள் “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” போன்ற வாசகங்களினால், வடவிந்தியர்களின் மீது வெறுப்பு, காழ்ப்பு மற்றும் துவேசங்களை உண்டாக்கினர். இதற்கு சரித்திர ஆதரம் இல்லாத “ஆரிய-திராவிட” இனவாதங்களை துணைக்கொண்டனர். திராவிடப் பாரம்பரியம், விக்கிரங்களை எதிர்த்தாலும், தலைவர்களுக்கு சிலைகள் வைக்கும் பழக்கத்தை உண்டாக்கியது. இதனால், அத்தகைய சிலைவைக்கும் போக்கும் ஜாதியத்தில் முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அம்பேத்கர் என்றுமே திராவிட அரசியலில் இருந்ததில்லை. பெரியார் தான் முக்கிய இடத்தில் இருந்தார்[1]. மேலும், பெரியார் மற்றும் அம்பேத்கர் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளால் திராவிட சித்தாந்திகள் மற்றும் பெரியாரிஸவாதிகள் அம்பேத்கரை ஒதுக்கியே வைத்தனர். 1940ல் ஜின்னா-பெரியார்-அம்பேத்கர் சந்திப்பிற்குப் பிறகு, மூவரிடையே பெருத்த வேறுபாடுகள் ஏற்பட்டன. ஜின்னா இஸ்லாமிய மதவாதம் மூலம் பாகிஸ்தான் அடைய செயல்பட ஆரம்பித்தார்[2]. பெரியாருக்கு “திராவிடஸ்தான்” விசயத்தில் உதவ மறுத்தார்[3]. அம்பேத்கர் ஆங்கிலேய அரசில் பதவி வகித்தார். ஆனால், பெரியார் ஓரங்கட்டப்பட்டார். 1950ல் பெரியார் பௌத்தத்தைத் தழுவும் விசயத்திலும் அம்பேத்கருக்கு உடன்பாடில்லை. அம்பேத்கருக்கு “ஆரிய-திராவிட” இனவாதங்களில் நமிக்கையில்லை, குறிப்பாக இனசித்தந்தத்தை மறுத்தார். இதனால், திராவிட சித்தாந்த்தில் அம்பேத்கர் இருக்கவில்லை.
சட்டக்கல்லூரி மாணவிகள் அடித்துக் கொண்டது – நவம்பர் 2008
1990களிலிருந்து அம்பேத்கர் சிலை, சின்னம் முதலியவை தமிழகத்தில் நுழைந்தது: 1990களில் அம்பேத்கர், ஒரு சின்னம் போன்று உபயோகப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுதும், அம்பேதகர் சிலைகள் பிரச்சினையை உண்டாக்கும் என்று தான் கருதப்பட்டது. திராவிட சித்தாந்தத்தில் அம்பேத்கர் இருந்ததில்லை. அதனால், அம்பேத்கர் சிலை என்பது, தலித் மற்றும் தலித்-அல்லாதவர்களிடையே உள்ள பிரச்சினையாக, அடையாளமாக இருக்கும் என்று கருதப்பட்டது என்று ராஜாங்கம்[4] போன்றோர் எடுத்துக் காட்டினர். மண்டல் கமிஷன் 1979ல் ஜனதா ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டாலும், ஆகஸ்ட்.7, 1990 அன்று வி.பி.சிங் ஆட்சியில் அது அறிக்கையைக் கொடுத்தது. பிறகு, 1992ல் மண்டல் தீர்ப்பு [Indira Sawhaney v. Union of India] வெளியானது. முதன் முதலாக “அம்பேத்கர் ஜெயந்தி” என்று அரசு ஏப்ரல்.14க்கு விடுமுறை அறிவித்தது. முன்னர் அத்தகைய வழக்கம் இல்லை. இதனால், ஜாதியத்திற்கு நாடு முழுவதும் ஊக்கம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில், அம்பேத்கர் சிலைகளை வைத்து ஜாதீய அரசியல் ஆரம்பிக்கப்பட்டது. இதனால், தேவர் சிலை வைத்து அரசியலை ஆரம்பித்தனர். 1971லேயே அவரது சமாதி அரசு நினைவகமாக மாற்றப்பட்டது. 1980ல் சட்டசபையில் தேவர் சிலை வைக்கப்பட்டது. 1984ல் “பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம்முண்டாக்கப்பட்டது. முன்னர் அத்தகைய வழக்கம் தமிழக்கத்தில் இல்லை. இந்நிலையில் சில கட்சிகள் அம்பேத்கரை சின்னமாக உபயோகிக்க ஆரம்பித்தன.
சென்னைசட்டக்கல்லூரி, 1990ல்அம்பேத்கர்சட்டக்கல்லூரியாகி, 1997ல்அம்பேத்கர்பல்கலைக்கழகம்ஆனது: 1990ல், அம்பேத்கர் நுற்றாண்டு விழா தருவாயில் “மெட்ராஸ் லா காலேஜ்”, “அம்பேத்கர் சட்டக் கல்லூரி” என்று பெயர் மாற்றப்பட்டது. சென்னைப்பல்கலைக்கழத்தின் கீழிருந்த இது, 1997ல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. ஆன்னால், இது ஜாதிய நோக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மாநில போக்குவரத்துத் துறைகளுக்கு பெயர் வைக்கப்பட்ட போக்கும் அவ்வாறே மாறி, ஒருநிலையில் கைவிடப்பட்டது. மாவட்டங்களுக்கு ஜாதிய தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன. ஆனால், ஜாதிய சங்கங்கள் முதலியன இயங்கிக் கொண்டுதான் இருந்தன. நீதிமன்ற வளாகத்திலேயே, வழக்கறிஞர்கள் சங்கங்கள் கட்சிவாரியாகத்தான் இருந்தன, இருந்து வருகின்றன. ஆகவே, அம்பேத்கர் பெயரில் சங்கம் ஆரம்ப்க்கும் பொழுது அது ஜாதிரீதியில் தான் இருக்கிறது. ஆக, சட்டக் கல்லூரி மாணவர்கள் இத்தகைய அரசியல் மற்றும் ஜாதி அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, ஆதரவாக செயல்படும் போது, பிளவுபடுகின்றனர். 2000களில் சித்தாந்த ரீதியிலான மாணவர் சங்கங்கள், ஜாதிய ரீதியிலும் செயல்பட ஆரம்பித்தன. ஆனால், “அம்பேத்கர்” சங்கம் வரும் போது, அது எஸ்.சி மற்றும் எஸ்.சி-அல்லாதோர் பிரச்சினையாகத்தான் மாறுகின்றன. அதனை, “தலித்” மற்றும் “தலித்”-அல்லாதோர் பிரச்சினை என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
2008 தேவர்ஜெயந்திபோஸ்டர்சமாசாரம்பிரச்சினையைஆரம்பித்துவைத்தது: டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக பதிவான 2 வழக்குகளில் 21 மாணவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது[5]. தாக்குதல் சம்பவம் சற்று விரிவாக… ”பல வருடங்களாகவே சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சாதி பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் விடுதியில் தங்கிப்படித்த மாணவர்களுக்கும், டேஸ்காலர் மாணவர்களுக்கும் தொடர்ந்து சண்டைகள் இருந்தது. அடுத்து தலித் மற்றும் தலித் அல்லாத் மாணவர்களுக்கும் பிரச்னை இருந்து வந்தது[6]. இந்நிலையில் அப்போது சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த மாணவரான பாரதிகண்ணன் தலைமையிலான ஆறுமுகம், பேச்சுமுத்து அய்யாதுரை உள்ளிட்ட மாணவர்கள் ‘முக்குலத்தோர் மாணவர் பேரவை’ என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார்கள். இவர்கள் தேவர் ஜெயந்திக்காக அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையில் கல்லூரியின் பெயரான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனும் பெயரை போடாமல் சட்டக்கல்லூரி என மட்டும் போட்டதுடன், சிங்கங்களே, ஒன்று சேருங்கள்’ என போஸ்டர் ஒட்டினார்கள். இதுதான் பிரச்னைக்கு வித்திட்டது.
12-11-2008 அன்றுமாணவர்கள்மோதல், அடிதடி: இதுதொடர்பாக இரு தரப்பு மாணவர்களும் அடிக்கடி மோதிக்கொண்டனர்[7]. இந்த நிலையில், 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி மாலை கல்லூரியில் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்தபோது மாணவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது[8]. சம்பவத்தன்று பாரதிகண்ணன் தலைமையினான மாணவர்கள் கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் சட்டக்கல்லூரியில் நுழைந்தனர். அதில் பாரதிகண்ணன் கத்தியோடு பாய, சித்திரைச்செல்வன் என்கிற மாணவரின் காது கிழிந்தது. அடுத்து சித்திரச்செல்வன் தரப்பு, உருட்டுகட்டை, குண்டாந்தடிகளால் பாரதிகண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் உள்ளிட்டோரை வெறித்தனமாகப் புரட்டியெடுத்தார்கள். இந்த தாக்குதலில் இருதரப்பு மாணவர்களும் காயமடைய, சென்னை அரசு மருத்துவமனையில் பாரதிகண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் மற்றும் சித்திரைச்செல்வன் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இதன்பிறகு தாக்குதலுக்கு காரணமான மாணவர்கள் ஒரு மாதம் சிறையில் இருந்தார்கள். இந்த தாக்குதல் அப்போது தமிழகத்தையே அதிர வைத்தது. தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளியாக பதற்றத்தில் உறைந்துபோனார்கள் மக்கள்[9].
[1] Ambedkar was never an integral part of the Dravidian rhetoric of anti-Brahmanism or egalitarianism. Periyar [E.V. Ramasamy] was put at the centre, and Ambedkar, where he featured at all, was relegated to the position of a leader of Dalits who fought for the rights of the Scheduled Castes. There were no clear-sighted attempts by political parties and social movements in the State to explicate the fact that Ambedkar’s contribution to non-Dalits was phenomenal. The political parties which thrive on concepts of social justice and democracy have failed to give proper recognition to Ambedkar and his ideology in their rhetoric or interventions despite the fact that Tamil Nadu is a State that has more reservation benefits for the intermediate castes than any other. http://www.frontline.in/static/html/fl2919/stories/20121005291913600.htm
[2] K. V. Ramakrishna Rao, The Historic Meeting of Ambedkar, Jinnah and Periyar, a paper presented during the 21st session of SIHC and published in the proceedings, School of Historical Studies, Madurai Kamaraj University, Maudrai, 2002, pp.128-136.
[4] This failure by the Dravidian parties to take Ambedkar along with them is one of the key reasons why certain intermediate castes see him and his statues as caste-based challenges to the supremacy of their own leaders and icons. The proliferation of Ambedkar statues post-1990 is perceived as a threat which has often become the starting point for contests over public space. His absence from the language of Dravidianism, Rajangam notes, reinforces his image as the symbol of the conflict between Dalits and non-Dalits.
Rajangam, S. 2011. “Rise of Dalit Movements and the Reaction of Dravidian Parties” in K. Satyanarayana and S. Tharu (Eds) No Alphabet in Sight: New Dalit.
[5] நக்கீரன், சென்னைசட்டக்கல்லூரிமாணவர்கள்மோதல்வழக்கில்21 பேருக்குசிறை – 22 பேர்விடுவிப்பு, பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (17:30 IST) ; மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (17:30 IST).
திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)
D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi – Photo- R.M. Rajarathinam
சோதனை, விசாரணை முதலியவற்றிற்குப் பிறகு ஐந்து அதிகாரிகள் கைது: அங்கிருந்த ஆவணங்கள், விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்யும் முறை, வசூலிக்கும் பணம் ஆகியவை குறித்து சிபிஐ குழுவினர் சோதனை செய்தனர். விமான பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள 10 சுங்க இலாகா கவுண்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சுங்க அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று காலை 9 மணிவரை நீடித்தது. பின்னர் சுங்க அதிகாரிகளுக்கு சொந்தமான பைக், கார் போன்ற வாகனங்களில் பணம் எதுவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் சுங்க அதிகாரிகளை அழைத்து கொண்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க துறை அலுவலக வளாக குடியிருப்பில் உள்ளவர்களின் வீடுகளுக்கும் சென்று மதியம் வரை சோதனை நடத்தினர்[1]. இந்த சோதனையில் முறைகேடாக பெறப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது[2]. அத்துடன் சுங்க இலாகா அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் அவர்களில் அதிகாரிகள் ஐந்து, பிரயாணி ஒன்று – நாகூர் மீரான்[3]:
சிவசாமி – சூப்பிரென்டென்ட்டென்ட்
ரவிகுமார் – சூப்பிரென்டென்ட்டென்ட்
தினேஸ்பிரஜாபதி – இன்ஸ்பெக்டர்.
சுரேஸ்குமார் – இன்ஸ்பெக்டர்.
அவ்ஜித்சக்கரபர்த்தி – இன்ஸ்பெக்டர்.
சி.பி.ஐ. அதிகாரிகள். இச்சோதனையும் கைது நடவடிக்கையும் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4].
Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.
பணத்தைகையாலும்போது, கையாடல்செய்கிறானா, இல்லையா?: கௌடில்யர் சொன்னது போல, “நீரில் வாழும் மீன் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறதா இல்லையா என்பது போல, கருவூலத்தில் இருக்கும் பாதுகாவலன் பணத்தை கையாடல் செய்கிறானா இல்லையா என்று சொல்லமுடியாது”, என்ற ரீதியில் இன்று பணத்தை கையாலும் எல்லோருமே, ஆசையில் திளைத்துதான் இருக்கின்றனர், பணத்தை கையாலும் போது, கையாடல் செய்யத்தான் செய்கிறான். அதனால் தான், வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமாகக் கொடுக்கப் படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் போதவில்லை என்று அடிக்கடி ஸ்ட்ரைக் செய்து தான் வருகிறார்கள். அதேபோல, வரித்துறைகளில் உள்ளவர்களும் நேரிடையாகவோ, மறைமுகவோ பணத்துடன் செயல்படுவதால், அவர்களுக்கும் சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், வரிதளர்த்தல், வரிவிலக்கு, முறைகளில் வரியேப்ப்பு ஏற்படும். அது ஊழல் ஏற்பட, வளர, அதிகமாக வாய்ப்புகள் உண்டாக்கப் படுகின்றன.
advocates-வழக்கறிஞர்கள்-
உள்ளே-வெளியே நீயாயங்கள் – அநியாயங்கள்: எப்படி 100% தங்கக்கடத்தல்காரர்களை பிடிக்க முடியவில்லையோ, அதேபோல, எல்லா ஊழல்காரர்களும் பிடிக்கப்படுவதில்லை. மாட்டிக் கொள்பவர்கள் மட்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டவர்கள், மற்றவர்கள் புனிதர்கள் என்றாகாது. வரித்துறை அலுவலகங்களில், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் வேலைசெய்ய, பதவி / போஸ்டிங் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. இதனால், ஒழுங்காக, நியாயமாக இருக்கும் அதிகாரிகள் 30-40 வருடங்களாக, மாத சம்பளம் வாங்கிக் கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ஆனால், நேற்று வந்தவர்கள் வளமாக, வசதிகளோடு, மேலதிகாரிகளின் ஆதரவோடு இருந்து கொண்டிருப்பதை காணலாம். இத்தகைய நடுநிலைமயற்ற போக்கும் வேலைசெய்பவர்களின் மனநிலையை பாதிக்கிறது. யோக்கியமானவனாக இருப்பவன், ஏன் நானும் அதுமாதிரி செய்யக் கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அவன் நினைக்கும் போதே, ஊழல் ஏற்படுவதில்லை, நியாயமே செத்துவிடுகிறது. சட்டங்கள் வளைக்கப்பட்டு விடுகின்றன. நியாயமானவன், அநியாயம் செய்யும் போது சமூகம் தாங்கிக் கொள்ளமுடியாது. இப்பொழுது, சமுதாயம் இக்கட்டான சூழ்நிலைகளில் தான் சென்றுகொண்டிருக்கிறது.
modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா
நீதி, சட்டம் அமூல் படுத்துவர்கள் நியாயவான்களா, இல்லையா?: நீதித்துறையும் ஊழலில் தான் மலிந்து கிடக்கிறது. நீதிபதிகள் அரசியல், செல்வாக்கு போன்ற காரணிகளைக் கொண்டுதான் பதவிக்கு அமர்த்தப் படுகிறார்கள். இதனால், அவர்கள் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஏனெனில் திறமை, அனுபவம், முதிர்ச்சி முதலியன, தம்மைவிட அதிகமாக இருந்தாலும், நீதிபதி ஆகாத சீனியர் அட்வகேட்டுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். அதேபோலத்தான், சி.பி.ஐ கதையும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதனை காங்கிரஸின் கைப்பாவை என்று விமர்சிக்கப்பட்டது. இன்று ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால், பாரபட்சம் இல்லாமல் செயல்படுமா என்று தெரியாது. இப்பொழுது சித்தாந்தம் வேறு பேசப்படுகிறது, அது ஜாதி, மதம், மொழி என்ற பலவித காரணிகளுடன் சேர்ந்து நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நீதி-சட்டம் அதற்கேற்றாற்போலத்தான் மாறிக்கொண்டும், வளைந்து கொண்டும் இருக்கும். வரியேய்ப்பு என்றால், அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக் கூடாத அளவுக்கு, சட்டங்கள் இருக்க வேண்டும். தங்கத்தைக் கடத்தவே முடியாது என்ற அளவில் இருந்தால், எப்படி தங்கத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வரமுடியும். ஹென்னா பவுடரில், சாக்கிலெட்டில், மனித உறுப்புகளில், மிஷனரி பார்ட்ஸ் என்ற வகைகளில் கொண்டு வருகிறார்கள் என்றால், அதனைக் கண்டுபிடிக்கும் திறமை வேண்டும். வேலைசெய்பவர்களிடத்தில் அந்த அறிவு, ஞானம், நேர்மை போன்ற உணர்வுகள் உள்ளவர்களால் தான் அது முடியும். இப்பொழுதுள்ள சமூக-அமைப்புகளில் உள்ள நேர்மையற்றத் தன்மைகளை மாற்றினால் தான், இந்தியாவை மாற்ற முடியும்.
ஐந்திய சமுதாயத்தை சுத்தப்படுத்த வேண்டும்: சுத்தம் வேண்டுமானால், அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். உடல்-மனம் இரண்டையும் சுத்தப் படுத்த வேண்டும் என்பதுப்போல, இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டுமானால், இந்தியர்களை சுத்தப் படுத்த வேண்டும், ஏனெனில், அவர்கள் பற்பலவிதமான அழுக்குகளோடு, நுற்றுக்கணக்கான ஆண்டுகளில் அசுத்தமாக இருந்துகொண்டிருக்கிறார்கள். முகமதியம், ஐரோப்பியம், கிருத்துவம், கம்யூனிஸம் என்ற சித்தாந்தளினால் ஏற்பட்ட கறைகளும், அழுக்குகளும் ஏராளம். சுதந்திரம் வந்தபிறகும் ஆங்கில ஆட்சிமுறையைப் பின்பற்றி வருவதால், அவர்களுடன் கூடிய அசுத்தங்களும் அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அவர்கள் ஏதோ ஆட்சிமுறையினைக் கொடுத்தார்கள் என்று பீழ்த்திக் கொண்டாலும், உள்ள ஆட்சிமுறையினைக் கெடுத்தார்கள் என்றாகியுள்ளது. அவர்கள் காலத்தில் ஆட்சியாளர்களுக்கு, இந்தியர்களுக்கு என்று இரட்டை நீதி-சட்டங்கள் இருந்தன. அதே முறைதான் இப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சட்டங்கள் ஒன்றாக இருப்பதினால், அவைகளில் ஓட்டைகள் போடப்படுகின்றன, வளைக்கப்படுகின்றன, முடியவில்லை என்றால், மாற்றப்படுகின்றன.
[3] Further investigations revealed that five customs officials – two superintendents Sivaswamy and Ravikumar, three inspectors Dinesh Prajapati, Suresh Kumar, Avijit Chakraborthy had been accepting bribes and not levying requisite duty for dutiable goods being brought by passengers from various countries through the airport.
சென்னை சட்டக்கல்லூரி மாணவி-மாணவர் போராட்டம், தெருக்களில் தர்ணா, பொது மக்கள் அவதிக்குள்ளானது (3)
சட்டக்கல்லூரி மாணவிகள் அடித்துக் கொண்டது – நவம்பர் 2008
வாகனங்கள்நிறுத்தம், பொதுமக்கள்அவதி: பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி மாணவர்கள் சாலை மறியலால் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிவரை பாரிமுனையிலிருந்து கடற்கரை சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எந்த வாகனங்களும் அந்த சாலையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால், வாகனங்கள் கொடிமர இல்ல சாலையில் திருப்பி விடப்பட்டன. ஆனால், குறளகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த சாலையிலும் வாகனங்கள் போக முடியாமல் திணறின. வாகனங்களில் சென்றுகொண்டிருந்த பயணிகளும், பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், போலீசாருக்கு எப்படி போக்குவரத்தை சரிக்கட்டுவது என்று குழப்பம் ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்குமுறை பின்பற்ற வேண்டிய மாணவ-மாணவியர், அதிலும் குறிப்பாக சட்டம் பட்ப்பவர்கள் இவ்வாறு தெருக்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைறாதிக அளவில் பாதிக்கும் அளவில் நடந்து கொண்டது வருத்தமாகவே இருந்தது.
Law college students- baton charged to disburse by the police- தி ஹிந்து போட்டோ
பொதுமக்களின்அதிருப்தியைசம்பாதித்தசட்டக்கல்லூரிமாணவர்களின்போராட்டம்: சட்டக்கல்லூரி மாணவி-மாணவியர் பீச் ரோடு – பாரி முனை தெருக்களில் உட்கார்ந்து கொண்டு, ஆர்பாட்டம் நடத்தினர். சுமார் மதியம் ஒரு மணி அளவில் பேருந்துகள், மற்ற வாகனங்கள் செல்லாதவாறு சாலைகளில் உட்கார்ந்து கொண்டு மறியல் செய்தனர். இதனால், பொது மக்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்தனர். முதியவர், பெண்கள், குழந்தைகள், மற்றவர்கள் விசயம் புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். சென்ட்ரலுக்கு ரெயில் பிடிக்க பேருந்தில் வந்தவர்கள் தவித்தனர். பொது மருத்துவமனை (சென்ட்ரலுக்கு எதிரில்) மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனைகளுக்கு மதிய உணவை எடுத்துச் சென்ற பெண்களும் பரிதவித்தனர். பொதுமக்களில் சிலர் வெளிப்படையாகவே, அவர்களைத் தட்டிக் கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அவர்கள் அதனைக் கேட்பதாக இல்லை. மூன்று வாரங்களாக நாங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடுகிறோம் என்று வாதிட்டனர். ஒருவர், பீச் ரோட்டில் இருந்து வரும் வண்டிகளை போகவிடுங்கள் என்று கெஞ்சினார். வக்கீல் போல கோட்டு போட்டுக் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி அவரிடம் கேளுங்கள் என்றனர். சென்று அவரிடம் கேட்டால், அவர் மசியவில்லை.
Ambedkar college – 2008 knife-wielding law srudents
மாணவிகள்தெருக்களில்உட்கார்ந்துநடத்தியதர்ணா: மாணவிகளை ரோட்டில் / தெருவில் உட்காரவைத்து, இந்த மறியல் போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத் தக்கது! இப்படி மாணவிகளை முன்னிலைப் படுத்தி சாலை மறியல் நடத்தியது விசித்திரமாக இருந்தது. மேலும் அம்மாணவியர் சிறிது கூட இரக்கம் இல்லாத விதத்தில் பேசியது, வாதம் புரிந்தது முதலியன பொது மக்களுக்குத் திகைப்பாக இருந்தது. பொது மக்களின் கஷ்டம், அவதி, தொந்தரவு படும் நிலை முதலியவற்றை அந்த மாணவிகளுக்கு விளக்கினார் அவர்! கையெடுத்து கும்பிடவும் செய்தார்! ஆனால், அந்த மாணவிகள் மசியவில்லை, இரக்கம் காட்டவில்லை! நாளைக்கு ஒருவேளை அவர்களது பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், உற்றோர், மற்றோர் அவ்வாறு சிக்கிக் கொண்டால் என்ன செய்வார்கள் என்று அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை! பெண் என்றால் பேயும் இரங்கும் என்பர், ஆனால், இந்த இளம் பெண்கள் யாருக்கும் இரங்கவில்லை! ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வந்து ஒரு பெண் தலைவியிடம், “டி.எல்.எஸ்.டம் பேசியாகி விட்டதா?”, என்று கேட்டார். “அவர் வந்து கொண்டிருக்கிறார், நீங்கள் வழி விட்டால் தான் இங்கு வரமுடியும்”, என்று அவர் சொன்னார். ஆனால், அந்த இளம்பெண், அலட்சியமாகவே இருந்தார்! போலீஸார் இவர்களிடம் ஏன் இந்த அளவிற்கு மெத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்று தெரியவில்லை! அவர்கள் நடந்த கொண்ட விதம், யாரோ தூண்டி விட்டு, இவ்வாறு ஆர்பாட்டம் செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது! இதற்குப் பிறகு தான், கல்வீச்சு, தடியடி முதலியன நிகழ்ந்தன.
ம.க.இ.க- சித்தாந்த மோதல்-சட்டக்கல்லூரி
அரசியல்பின்னணி, சித்தாந்தவாதிகட்சிகளின்தூண்டுதல்முதலியன: திராவிட அரசியலில் மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்துவது, நடத்தி வைப்பது என்பது சகஜமான விசயம் தான். இத்தகைய விசயத்தில் “பேருந்து ஸ்ட்ரைக்” போன்ற விவகாரங்களும் அடங்கும். மேலும், சட்டக் கல்லூரியில், திராவிட கட்சிகளின் தாக்கம் மட்டும் இல்லாமல் சித்தாந்த கட்சிகள், இயக்கங்களின் தாக்கங்களும் இருந்து கொண்டு செயல்பட்டு வருகின்றன. மகஇக, “புரட்சிகர” அமைப்புகள், கம்யூனிஸ்ட் தீவிரவாத கோஷ்டிகளும் (சிபிஎம்எல் போன்றவை), தனித்தமிழ்நாடு கேட்கும் பிரிவினை கும்பல்கள் (தன்னுரிமை, தமிழ்-தேசிய பிரிவுகள்) இதில் அடக்கம். மாணவ-மாணவியர்களை ஜாதி, மதம், மொழி, கட்சி முதலியவற்றின் மூலம் பிரிப்பது, துவேசத்தை வளர்ப்பது முதலியவை இவற்றின் வேலையாகும். நோட்டீசுகள், குறும்புத்தகங்கள் முதலியவற்றை மாணவ-மாணவியர்களிடம் சுற்றுக்கு விடுவர். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் சுவரொட்டிகளையும் கல்லூரி வளாகங்களில் ஒட்டுவர். அவற்றை அப்புறப்படுத்தும் விசயத்திலும் கலாட்டா செய்வர்.
CPI-ML Candidate Lawyer K. Bharathi seen addressing students and members of AISA, the students wing of CPI-ML (Liberation) as they hold a demonstration
மாணவ–மாணவியர்களைப்பிரிக்கும்சித்தாந்தகும்பல்கள்: அடிக்கடி கூட்டம், மாநாடு போன்றவற்றை நடத்தி அதில் மாணவ-மாணவியர்களை கலந்து கொள்ள செய்கின்றனர். இதனால், அவர்களின் மனங்களில் அத்தகைய எண்ணங்கள் உருவாகி, சந்தர்ப்பம் கிடைத்தால் வன்முறையில் ஈடுபடவேண்டும் என்ற மனப்பாங்குடன் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். படிக்கும் மற்ற மாணவ-மாணவியர்களை சீண்டுவது, தொந்தரவு செய்வது, வலுக்கட்டாயமாக கூட்டம்-மாநாடுகளில் பங்கு கொள்ள செய்வது, சந்தா கட்ட செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாணவ-மாணவியர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், வெளியே சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர். ஆளும் கட்சிக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்ற விதத்தில் உள்ள மற்ற கட்சிகள் இத்தகைய போராட்டங்களைத் தூண்டு விடுகின்றன. மகஇக, “புரட்சிகர” அமைப்புகள் (மக்கள்கலைஇலக்கியக்கழகம், புரட்சிகரமாணவர்இளைஞர்முன்னணி, புதியஜனநாயகத்தொழிலாளர்முன்ன, பெண்கள்விடுதலைமுன்னணி), கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் அதில் குளிர் காய்கின்றன.
CPIML- splinter groups
இத்தகைய மாணவ-மாணவியர்கள் நாளைக்கு வக்கிலாக தொழிலுக்கு வரும்போதும், அதே மனப்பாங்குடன் இருக்கின்றனர், செயல்பட்டு வருகின்றனர், நீதிபதி ஆனாலும், அத்தகைய மனப்பாங்கு மாறுவதில்லை, மாறாக இருகிப் போகின்றது. இதனால், பல தீர்ப்புகளும் பாரபட்சமாக இருந்து, சமூகத்தைப் பாதிக்கின்றன. இவ்வாறு 60-100 வருடங்களாக தமிழக மக்களைப் பிரிந்து, சித்தாந்த ரீதியிலேயே உழன்று, மாநிலத்தை பின் தங்க வைத்துள்ளது தான் இவர்களது சாதனையாக உள்ளது.
சென்னை சட்டக்கல்லூரி மாணவி-மாணவர் போராட்டம், தெருக்களில் தர்ணா, பொது மக்கள் அவதிக்குள்ளானது (1)
என்.எஸ்.சி. போஸ் சாலை, ராஜாஜி சாலை சந்திப்பில் புதன்கிழமை சாலை மறியல் – தினமணி போட்டோ
காஞ்சிபுரம், திருவள்ளூர்மாவட்டங்களில் 2 புதியசட்டக்கல்லூரிகளைதொடங்கதமிழகஅரசுமுடிவு[1]: சென்னையில் 124 ஆண்டு பழமை வாய்ந்த சென்னை அரசு சட்டக் கல்லூரியை மூடிவிட்டு அதற்குப் பதிலாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2 புதிய சட்டக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் 3 ஆண்டு, 5 ஆண்டு பி.எல். படிப்பும், எம்எல் படிப்பும் கற்றுத்தரப்படுகின்றன. அரசு சட்டக் கல்லூரிகளில் மிகவும் பழமை வாய்ந்தது சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிதான். 1891-ல் நிறுவப்பட்ட இக்கல்லூரி 124 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது. மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் உட்பட ஏராளமான உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை உருவாக்கிய பெருமை சென்னை அரசு சட்டக் கல்லூரிக்கு உண்டு. தற்போதைய சட்டம் படித்த அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் இக்கல்லூரி முன்னாள் மாணவர்களாகத்தான் இருப்பார்கள்.
என்.எஸ்.சி. போஸ் சாலை, ராஜாஜி சாலை சந்திப்பில் புதன்கிழமை சாலை மறியல் -தினமணி
டாக்டர்அம்பேத்கர்அரசுசட்டக்கல்லூரிஎன்றபெயர்மாற்றமும், மாணவர்கள்மோதலும்: கடந்த 1990 முதல் இக்கல்லூரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. சட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வின்போது தேர்வுசெய்யும் முதல் கல்லூரியாக இருப்பதும் சென்னை சட்டக் கல்லூரிதான். இந்த நிலையில், நவம்பர் 2008-ம் ஆண்டு சென்னை அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய வன்முறை சம்பவமாக வெடித்தது. அம்மோதல்களில் ஜாதி காழ்ப்பு, அரசியல் தலையீடு-பின்னணி, ஆட்பலம் என்று பற்பல விவகாரங்கள் இருந்தன. இதுகுறித்து விசாரிப்பதற்காக நீதிபதி சண்முகம் தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது[2]. அந்த கமிஷன் அரசுக்கு அளித்த பல்வேறு பரிந்துரைகளில் ஒன்று சென்னை சட்டக் கல்லூரியை 3 கல்லூரிகளாக பிரிக்க வேண்டும் என்பது.
Law college students- lathi charged
2008 மாணவர்மோதலும், நீதிபதிசண்முகம்விசாரணைகமிஷனும், பரிந்துரைகளும்: இதுகுறித்து மாநில சட்டக் கல்வி இயக்ககத்தின் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது: “சென்னை அரசு சட்டக் கல்லூரியை 2 புதிய கல்லூரிகளாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கல்லூரி காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் நிறுவப்படும். இதற்காக 21 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு கல்லூரி திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் அமைக்கப்படும். இதற்கு 12 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் கட்டிடப் பணிக்காக தலா ரூ.60 கோடி வீதம் மொத்தம் ரூ.120 கோடி தேவை என்று பொதுப்பணித்துறை தலைமை கட்டிடக்கலை நிபுணர் மதிப்பீடு செய்துள்ளார். தேவையான நிலமும், நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இந்த 2 புதிய சட்டக் கல்லூரிகளை தொடங்குவதற்கு எப்படியும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். 2018-19-ம் கல்வி ஆண்டில் அவை செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது”, இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Law college students- lathi charged to disburse by the police. Dinakaran
நீதிபதிசண்முகம்தலைமையில்விசாரணைகமிஷன், அறிக்கை[3]: சென்னை சட்டக் கல்லூரி அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் என்று 1990ல் பெயரிடப்பட்டது[4]. பிறகு, கல்லூரியில் ஒரு பிரிவினர் தேவர் ஜெயந்தி 2008ல் கொண்டாடினர். அவ்விசத்தில் தான் மோதல் ஏற்பட்டது. நீதிபதி சண்முகம் விசாரணையின் போது ஜே. ஜெயமணி என்ற முந்தைய சட்டல் படிப்பு இயக்ககம் தலைவர் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றது[5]. ஆனால், ஜெயமணி அதனை மறுத்தார். சென்னையிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் நீதிபதி சண்முகம் ஜூன்.2 2009 அன்று அளித்தார். நவம்பர் மாதம் 12ஆம் தேதி 2008ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்களில் இரு பிரிவினரிடையே மோதல் நடைபெற்றது. இதில் பாரதிகண்ணன், ஆறுமுகம் உள்பட ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விசாரணை கமிஷன், காவல்துறை அதிகாரிகள், சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது. வன்முறை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கமிஷன் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதன் அடிப்படையில் கமிட்டி தனது அறிக்கையை தயார் செய்தது. சட்டக்கல்லூரியில் ஏற்கனவே இதுபோன்று பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. மோதல் சம்பவம் தொடர்பாக போடப்பட்ட 4-வது கமிஷன் இது. எதிர்காலத்தில் சட்டக்கல்லூரிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையில் கூறியுள்ளோம். அந்த பரிந்துரைகளை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன் என்று நீதிபதி சண்முகம் கூறினார். கடந்த 30 ஆண்டுகளில் சட்டக்கல்லூரி மற்றும் புரசவாக்கத்தில் இருக்கும் விடுதி இவ்விடங்களில் எப்பொழுதும் கலாட்டா, அடிதடி, ஆர்பாட்டம் என்று நடப்பது வழக்கமாக இருந்துள்ளது.
Law college students- baton charged to disburse by the police- தி ஹிந்து போட்டோ
02-02-2015 திங்கட்கிழமைஅன்றுநிகழ்ந்தது[6]: நீதிபதி சண்முகம் கமிஷன் அமைக்கப்பட்டது, பரிந்துரைகள் கொடுத்தது போன்ற விவரங்கள் கல்லூரி வளாளகத்தில் தெரிந்த விசயங்கள் தாம். இருப்பினும், இப்பொழுது, திடீரென்று கல்லூரி இடம் மாற்றுவதை எதிர்த்து போராட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் திங்கட்கிழமை 02-02-2015 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பழமை வாய்ந்த சட்டக் கல்லூரியை இடம் மாற்றக் கூடாது என்று கோஷங்களை எழுப்பியபடி, என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை பாரிமுனை அருகே தடுத்து நிறுத்தினார்கள். அங்கு கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தினால், பாரிமுனை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது[7]. அன்று போராட்டம் முடிந்தாலும், அவர்கள், கல்லூரிக்குள் உட்கார்ந்து கொண்டு தர்ணா செய்து வந்தனர்.
Law college students- disrupt train service at beach station- தி ஹிந்து போட்டோ
04-02-2015 புதன்கிழமைஅன்றுநிகழ்ந்தது: 04-02-2015 புதன்கிழமை அன்று சென்னை மெட்ரோ ரயில் பணிகளை தடுத்து நிறுத்தி குறளகம் சந்திப்பில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்டபாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரியை ஸ்ரீபெரும்புதூருக்கு இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் பாரிமுனையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது[8]. இதில் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் 152 ஆண்டுகள் பழமையானது. இந்த வளாகத்தில், அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி 113 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கட்டிடமும் மிகவும் பழமையானது. தற்போது இதன் அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், பழையக்கட்டிடம் என்று வேண்டுமானாலும், குலைந்து விழ வாய்ப்புள்ளது. எனவே, கட்டடத்தின் பாதுகாப்பற்ற தன்மையை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டக்கல்லூரியை உடனே காலி செய்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை (Public Works Department) கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது[9]. அதை அறிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் திங்கட்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதே மாதிரியான நிகழ்ச்சி 04-02-2015 அன்றும் ஏற்பட்டது.
[4] The formerMadras Law College, located in Broadway, Chennai, was renamed the Dr.Ambedkar Government Law College a long while ago. Only the Law University is named the Tamil Nadu Dr. Ambedkar Law University.
[5] The counsel for the backward community students who were injured in the incident grilled the director of legal studies J Jayamani, who is also a former principal of the Dr Ambedkar Law College for more than two hours. The counsel through a series of questions sought to hold Jayamani responsible for the violence saying that the latter had acted in a grossly negligent manner while dealing with the student affairs of the institution. He said that Jayamani, as the de-facto chief hostel warden, had failed to periodically inspect the hostel and weed out outsiders from the hostel premises.
[6] மாலைமலர், சட்டகல்லூரியைஇடம்மாற்றக்கூடாது: மாணவர்கள்போராட்டத்தினால்போக்குவரத்துநெரிசல், பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, பெப்ரவரி 02, 3:40 PM IST; மாற்றம் செய்த நாள் : திங்கட்கிழமை, பெப்ரவரி 02, 3:39 PM IST
[8] ஒன் – இந்தியா-தமிள், பாரிமுனையை 4 மணிநேரம்ஸ்தம்பிக்கவைத்தசட்டமாணவர்கள்.. தடியடிநடத்திவிரட்டியபோலீஸ்!, Wednesday, February 4, 2015, 17:37 [IST]
[9] Public Works Department report which termed the structure housing the college premises as “unsafe”. Interestingly, the report by the PWD over the safety of the structure housing the college premises has also been referred to the government, an official source said, adding that government is contemplating on shifting the college premises. Public works Department said the structure is unsafe following Chennai Metro Rail’s underground work.
தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?
லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்
Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.
Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)
3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned
RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th
ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?
திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –
நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.
இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!
வேதபிரகாஷ்
16-03-2012
[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.
இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.
சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.
அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;
அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,
குண்டுகள் வெடித்தது உண்மை,
மனித உடல்கள், உருப்புகள், உள்-பகுதிகள் சிதறியது உண்மை;
ரத்தம் பீச்சியடித்தது உண்மை;
பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,
கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.
அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.
“நாத்திகம்” என்ற போர்வையில் “ஆண்டவனே இல்லை”யென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்து “காஃபிர்”களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.
சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதி-எஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.
சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள், சமீபத்தில் நீதிமன்றங்களில் வழங்கப் பட்டுள்ள மற்றும் வழங்கப்படும் தீர்ப்புகள் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளன, ஏனெனில், குண்டு வெடிப்புகள், பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வழக்கின் முக்கியத்துவம், அதன் சட்ட நுணுக்கங்கள், சட்டரீதியாக செல்லுமா இல்லையா என்ற விவரங்களை நீர்த்துவிட்டு, ஏதோ ஒன்றை ஏடுத்துக் கொண்டு, சாட்சிகள் சரியில்லை, ஆதாரங்கள் சரியாக நிரூபிக்கப் படவில்லை,….என்றெல்லாம் தீர்ப்புகள் கொடுக்கப் படுகின்றன. கோர்ட் நடவடிக்கைகள், காலந்தாழ்த்தும் போக்கு, சாட்சிகளை மிரட்டும் போக்கு, மாற்றும் நிலை,…………………………………….., அரசியல் சார்பான நீதிபதிகள் வரும்வரை இழுத்தடிப்பது………………..முதலியன அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணத்திற்கு பல வழக்குகளைச் சொல்லலாம், இருப்பினும் சில குறிப்பிடப்படுகின்றன.
வில் ஹியூம், சென்னை நீதிமன்றக்கள், நீதிபதிகள்: வில் ஹியூம் ஒரு அனைத்துலக குற்றவாளி, ஆனால், சென்ன்னையில் ஜாலியாக பல அரசியல், திரைப்பட ஆதிக்கக்காரர்கள், போலீஸார் முதலியோர் ஆதரவுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து, இரு தடவை கைது செய்யப்பட்டாலும், விடுவிக்கப் பட்டுள்ளான். சைதாப்பேட்டை மேஜிஸ்ட்ரேட் அப்படித்தான் விடுவித்து, பிறகு, சென்னை உயர்நீதி மன்றம், அவர் தவறுதலாக விடிவித்துவிட்டார் என்று தீர்ப்பளித்தது.
ஆர்ச்பிஷப், போலி ஆரய்ச்சி, முந்தைய வழக்கு, மறுபடியும் அதே குற்றங்களைச் செய்வது: ஆர்ச் பிஷப் அருளப்பா ஆச்சார்ய பால் என்ற கிருத்துவருக்கு பல கோடிகள் கொடுத்து பல போலியான ஆவணங்களைத் தயாரித்து, திருவள்ளுவர் தாமஸை சந்தித்தார், அந்த இல்லாத ஆளிடம் கற்றுதான் திருக்குறள் எழுதினார், மீனாட்சி கோவிலே ஒரு சர்ச்…………….என பல பேத்த்கல்களான மோசடி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கிருத்துவர்களுக்கே பொறுக்காமல், அழுத்தம்-தர, பணம் கொடுத்த அருளாப்பாவே, வழக்குப் போட்டு, பிறகு ஆச்சார்யா பால் “எல்லாவற்றையும் உலகத்திற்கு சொல்லிவிடுவேன்” என்று மிரட்டியதும், பயந்து கொண்டு 1987களில் சமாதானமாகி, “கோர்ட்டிற்கு வெளியே” என்ற முறையில் எல்லா விஷயங்களையும் அமுக்கி விட்டனர். ஆனால், இப்பொழுது, மறுபடியும், அதே பிஷப், அதாவது அந்த ஸ்தானத்திலுள்ள சின்னப்பா, அதே மாதிரி அந்த மோசடி ஆரய்ய்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து வேலைகளை ஆரம்பித்துள்ளார். அதாவது செய்த குற்றங்களையே மறுபடியும் செய்தால், நடவடிக்கை எடுப்பதில்லை போலும் தமிழ்நாட்டில்!
சீமான் மீதான வழக்குகள்: எல்.டி.டி.ஈ தடை செய்யப் பட்டுள்ள இயக்கம். இப்பொழுதுகூட அதன் மீதான தடை நீட்டிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த சீமான் தொடர்ந்து அத்தகைய சட்டமீறல் காரியங்களைச் செய்து வந்தாலும், கைது செய்யப் பட்டாலும், வெளிவந்து கொண்டேயிருப்பதும், அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்வதும், காங்கிரஸ்காரர்கள் “புகார் கொடுப்பதும்”. கருணாநிதி அமைதியாக இருப்பதும், வெட்கம், மானம், சூடு, சொரணை…………………… இல்லாமல் கூட்டணிக் கொள்ளை தொடர்வதும் சகஜமாகத்தான் உள்ளது.
கருணாநிதியின் மீதுள்ள வழக்குகள்: சென்ற தேர்தல்லின்போது, தன்னுடைய சுய-ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில் கருணாநிதி தன்மீது 9 கிரிமினல் குற்றா வழக்குகள் பதிவு செய்யப் பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக, கையெழுத்திட்டு தேர்தலில் நின்று முதல்வராகி, அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்திருந்தாலும், நீதிமன்றங்கள், நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள்………………….நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். யாரும் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. “வழக்கு போட்டால் சந்திக்கத் தயார்”, இன்று அப்பொழுதுகூட ஜெயலலிதாவிற்கு சவால் விட்டபோது, பாவம், அப்பொழுது கூட யார்க்கும் நினைவிற்கு வரவில்லை போலும்!
இனி இந்த குணங்குடி மஸ்தான், மன்னிக்கவும், குணங்குடி ஹனீபா வழக்கைப் பார்ப்போம்!
சென்னை, மே 21, 2010: ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதாகக் கூறி இவர்கள் விடுவிக்கப்படுவதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மூன்று ரயில்களில் குண்டுகள் வெடித்து பத்துக்கும்மேற்பட்டோர்உயிரிழந்தனர். 72 பேர்காயமடைந்தனர்: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1997 டிசம்பர் 6-ல் திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், ஈரோடு அருகே சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ரயில் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 72 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜிகாத் கமிட்டி தலைவர் குணங்குடி ஹனீபா, ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஏர்வாடி காசிம், அலி அப்துல்லா, அப்துல் ரஹீம், முபாரக் அலி, முகமது அலிகான், சம்ஜித் அகமது, ரியாதுர் ரஹ்மான், குணங்குடி ஆர்.எம்.ஹனீபா, முகமது தஸ்தகீர் ஆகியோர் அடுத்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டனர். இதில், முகமது தஸ்தகீர் 12-3-2000-ல் இறந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அஷ்ரப் அலி தலைமறைவாக உள்ளார். அவர் மீது திருச்சி நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேர் சிறையிலேயே 13 ஆண்டுகளாக இருந்து வந்தனர்.
420ல் 269 சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை, 151ல் 10 பேர்பிறழ்சாட்சியம், தீர்ப்புத் தள்ளிவைப்பு, 139 ஆதாரங்கள் போதுமானதாக இல்லை: இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் துரைராஜும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் புகழேந்தி, சிவபெருமாள் ஆகியோரும் ஆஜராயினர். 10 பேர் பிறழ் சாட்சியம்: கூட்டுச் சதி, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 420 சாட்சிகள் குறிப்பிடப்பட்டன. இதில் 151 சாட்சிகளை விசாரித்தாலே போதுமானது என அரசு தரப்பு பின்னர் முடிவெடுத்தது. இதில் முக்கிய சாட்சிகள் 10 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். பின்பு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறியதன் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆர்.பிரேம்குமார் வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து, குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 6 பேர் சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனர். ஏர்வாடி காசிம், அலி அப்துல்லா ஆகியோர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
1997லிருந்து 2010 வரை தூங்கும் நீதிமன்றங்கள்: 1997ல் குண்டுவெடிப்பு, கொலை, சாவு, ரத்தம்…………………….2001ல் குற்றாப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப் பட்டது, 2004ல்தான் கோர்ட் – விசாரணையே ஆரம்பித்தது. இப்பொழுது விடிவிக்கப் படுகிறார்கள் என்றால், செத்தவர்கள் நிலை என்ன? அநியாயமாக செத்தவர்களின் உரிமைகள் என்ன?
வேதபிரகாஷ்
24-05-2010
[1] தினமணி, ரயில்குண்டுவெடிப்புவழக்கில்குணங்குடிஹனீபாஉள்பட 8 பேர்விடுதலை, First Published : 22 May 2010 12:00:00 AM IST