ராமர் பெட்ரோல், மூலிகை பெட்ரோல், “ஶ்ரீராம் ஜெரோஸின்,” “ஶ்ரீராம் ஜெட்ரோல்” என்றெல்லாம் ஆகி, “தமிழ் தேவி மூலிகை எரிபொருள்” என்று மாறிய நிலை!
செப்டம்பர் 2020ல் மறுபடியும் ராமர் பிள்ளை பெட்ரோல் புரளி: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ராமர் பிள்ளை புதன்கிழமை 09-09-2020 வழங்கினார்[1]. ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னர் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை குறித்து செயல் முறை விளக்கம் அளித்தார்[2]. சாக்கடை கழிவு நீரை, சுத்திகரிப்பு செய்து கண்ணாடி குடுவையில் வைத்து, அதனுடன் இவரது கண்டுபிடிப்பான இரு கலவைகளை கலந்து எரிபொருளாக மாறுவதை செய்து காட்டினார். மூலிகை எரிபொருளை கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கியும் காண்பித்தார்[3]. தான் கண்டுபிடித்த இந்த எரிபொருளுக்கு தன்னுடைய தாயின் நினைவாக “தமிழ் தேவி மூலிகை எரிபொருள்” என பெயரிட்டுள்ளதாக தெரிவித்தார்[4]. மூலிகை எரிபொருளை இருசக்கர வாகனத்தில் ஊற்றி இயக்கி காட்டினார். இப்படி செய்திகள் அளந்தன. ஐ.ஐ.டியை விட இவர்கள் பெர்ம் வல்லுனர்கள் போலும். ஏன் ஆளுக்கு வண்டியில் நிரப்பிக் கொண்டு போகலாமே?
20 ஆண்டுகளாக பெட்ரோல் ஏன் விற்பனை செய்யவில்லை?: ஆனால், நடந்தது பற்றி ஒன்றுமே தெரியாதது போல அவர்கள் செய்திகள் வெளியிட்டது, ஏதோ உள்நோக்கம் இருப்பது காட்டுகிறது. பின்னர் ராமர்பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார்[5]. அப்போது அவர் கூறியதாவது: “எனது 21 வருட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. செய்தியாளர்கள் மத்தியில் தயாரிப்பு முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. என்னுடைய கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான முழு உரிமையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளேன். வரும் 18ம் தேதி முதல் வியாபார ரீதியாக மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும்,” என தெரிவித்தார்[6].லிட்டர் 39 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என்றது, திகைப்பாக இருந்தது. உண்மையாகவே அது பெட்ரோல் போன்ற எண்ணை என்றால், இந்தியா ஏன் உலகத்தின் பெட்ரோல் பிரசினையே தீர்ந்து விடுமே.20 ஆண்டுகளாக சொல்லி வரும் பொய்யை எப்படி ஊடகங்கள் ஏற்றுக் கொண்டு, மறுபடி-மறுமடி செய்திகள் வெளியிடுகின்றன என்று தெரியவில்லை.
போலி பெட்ரோல், உரிமம், மாறியது முதலியன (2002ல் நடந்தது): சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே இவரது மோசடி விஞ்ஞானப் பூர்வமாக வெளியானது. அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் சம்பத் குமார், இவருக்கு ஆதரவாக இருந்தார்[7]. “நாங்கள் இதை பெட்ரோலாக ஏற்கொண்டு விட்டோம்,” என்றும் அறிவித்தார்[8]. பெட்ரோல் உரிமத்தை அவருக்குக் கொடுத்து விட்டதாக செய்திகள் வந்தன. “ஶ்ரீராம் ஜெரோஸின்,” “ஶ்ரீராம் ஜெட்ரோல்” என்றெல்லாம் பெயர் வைக்கப் பட்டது[9]. “நான் ஸ்வயம் சேவக்காத்தான் உயிர் விடுவேன்,” என்றெல்லாம் ராமர் பிள்ளை பேசியது, நிறைய பேர் மறந்திருப்பர்[10]. கே.என்.லக்ஷ்மணன், எம்.என்.சுந்தர், சம்பந்த குமார் போன்றோர் முதலியோர் இதைப் பற்றி பெருமையாகப் பேசினர். சுவதேசி நோக்கில் இதைப் பற்றி பிரமாதமாகப் பேசப் பட்டது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்றாகியது. சோதித்த போது, அது டோலூயின் மறும் பென்ஸீன் கலந்த கலவை என்று நிரூபணம் ஆனது. அதாவது மூலிகை எரிவாயு இல்லை.
பிப்ரவரி 2020ல் பேட்டி கொடுத்தது: 2020 பிப்ரவரியிலேயே `ரூ.30-க்கு ஒரு லிட்டர்; 80 கி.மீ. பயணிக்கலாம்!’ என்றெல்லாம் – ராமர் பிள்ளை பேட்டி அளித்தார்[11] என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. “சென்னையில் ஊரப்பாக்கம் பகுதியில் நாள்தோறும் ஒரு லிட்டர் ரூ.30 வீதம் 150 லிட்டர் விநியோகம் செய்து வருகிறோம். இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக மதுரை, தேனி, தென்காசி மறும் விருதுநகர் மாவட்டங்களில் விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்தி வருகிற 27-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்,” என்றெல்லாம் கூறிக் கொண்டார்[12], ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஆக, விளம்பரத்திற்காக இத்தகைய “ஸ்டன்ட்டுகளை” செய்து வருகிறார் என்றாகிறது. ஐ.ஐ.டியில் ஏற்கெனவே சோதனை செய்து, அது பெட்ரோல் இல்லை என்று உறுதி படுத்தியதால், அவர் மோசடி வேலை செய்தது வெளியானது. சிறைத் தண்டனையும் கொடுக்கப் பட்டது.
2018ல் இறந்து விடுவேன் என்று வீடியோ வெளியிட்டது: டிசம்பர் 2018ல், “வரும் பத்தாம் தேதி அன்று இரவே நான் இறந்துபோகலாம். காவல்துறை நண்பர்கள் என்னைக்காப்பாற்ற முயல வேண்டாம்,” என்ற வேண்டுகோளுடன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளார் மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை, என்று செய்திகள் வந்தன[13]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை, 2020லும் அதே பெட்ரோல் என்றெல்லாம் கூறி வருகிறார்[14]. இந்த வீடியோவில் அவர் பேசியதாவது[15]: ”என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். இது என்னுடைய இறுதி காணொளி. இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன். இது என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். ஏனென்றால் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி தந்திருக்கிறேன். பெட்ரோல் பார்முலா என் உயிரை பணயம் வைத்தாவது உங்கள் கையில் சேர்ப்பேன் என்று நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன். அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன். 10ம் தேதிக்குள் நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோல் பார்முலாவை சமர்ப்பிக்க வேண்டும். தூக்கு தண்டனை தாங்கள் ஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து காட்டுகிறேன். அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள். நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். நான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள். இல்லையென்றால் தூக்கு தண்டனை கூட கொடுத்துவிடுங்கள். நான் தயாராக இருக்கிறேன். உயிருடன் இருப்பேனா?
பிஜேபி தலைவர்களை விளித்தது: ராமர் பிள்ளை தொடர்ந்து பேசியது[16], “நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நான் வருகின்ற 11ம் தேதி உயிருடன் இருப்பேனா? இல்லையா? என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் இருக்கிறது. உயிர் பிச்சை மரணத்தின் வாயிலிலிருந்து தமிழிசை அவர்களையும், திரு.பொன்.ராதாகிருஷ்ணனையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், 5 தினங்களுக்குள் நீங்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு, திரு. முரளி மனோகர் ஜோஷியை தொடர்புகொண்டு உண்மையை மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஏழை கண்டுபிடித்தது உண்மைதான் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டும். நான் உயிர் பிச்சை கேட்கிறேன். கண் கலங்குவீர்கள் இந்த வீடியோ பார்த்துவிட்டு காவல்துறை நண்பர்கள் என்னை தடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். 10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணொளி காட்சி ஒன்று வெளியாகும். என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். இது உறுதி” என்று கூறியுள்ளார்.
ராமர் பிள்ளை மீது வழக்குப் போடப்பட்டது: ராமர் பிள்ளை தயாரித்து விற்பனை செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல என்றும், டொலூயீன், பென்சின் மற்றும் நாப்தா என்ற பெட்ரோலிய பொருட்கள் மூலம், ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் மோசடி பெட்ரோல் தயாரித்து விற்பதாக சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்தனர். மேற்கண்ட பெட்ரோலிய பொருட்களில் வாகனம் ஓட்ட முடியாது. அது சட்டப்படி குற்றம் ஆகும். அப்போது, சி.பி.ஐ. தென் மண்டல இணை இயக்குனராக பணியாற்றிய முகர்ஜி உத்தரவின்பேரில் சி.பி.ஐ. போலீசார், ராமர் பிள்ளை மீது, சட்டவிரோதமாக கலப்பட பெட்ரோல் தயாரித்து, அதை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்து ரூ.2.27 கோடி மோசடியாக சம்பாதித்ததாக வழக்கு போட்டனர்[17]. ராமர் பிள்ளை அப்போது கைது செய்யப்பட்டார்.
- ராமர்பிள்ளை,
- அவரது வளர்ப்பு தாயார் வேணுதேவி
- சின்னச்சாமி,
- ராஜசேகரன்,
- எஸ்.கே. பரத்
ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீசார், சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[18]. சுமார் 16 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நேற்று ராமர் பிள்ளை உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[19]. மாஜிஸ்திரேட்டு பாலசுப்பிரமணியம் இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தக்க நேரத்தில் சரியான, நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கு போட உத்தரவிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜி கூறினார்[20]. ஆனால், கடந்த ஆண்டுகளில், இவர் அடிக்கடி தன்னுடைய எரிபொருள் பற்றி, விளம்பர யுக்தியில் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார். ஒருவேளை சிறையிலிருந்து வந்த பிறகு, மறுபடியும், ஆரம்பித்துள்ளார் போலும்/
© வேதபிரகாஷ்
10-09-2020
[1] தினமணி, மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமை: ராமர் பிள்ளை, B DIN | Published on : 09th September 2020 06:57 PM |
[2] https://www.dinamani.com/latest-news/2020/sep/09/herbal-petrol-sale-right-ramer-pillai-3461918.html
[3] நியூஸ்7.செனல், மூலிகை பெட்ரோலை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட ராமர் பிள்ளை!, September 10, 2020, Posted By : Jeba_ns7.
[4] https://www.ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu/10/9/2020/ramar-pillai-has-signed-mou-private-company-sell-his-natural-fuel
[5] தினமலர், ‘செப்.18ல்மூலிகை பெட்ரோல்‘ ராமர் பிள்ளை தகவல், Added : செப் 10, 2020 01:48.
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2610744
[7] Rediff.com, Interview with S. Sampath Kumar, RSS about Rama Petrol, 20-01-2001.
[8]https://www.rediff.com/news/2001/jan/20inter.htm?fbclid=IwAR3ThEhnoH8J1HAybG1DdU2FaU6Ad4VbfYUcR93qVYxZMnxyVMJayjHjPV4
[9] The Outlook,, Prospecting For Swadeshi Oil, By S.Raman, June 10, 2002
[10] Ramar Pillai is back. This time with ‘Sri Ram Jerosene’, which he and his RSS backers are promoting as ‘domestic herbal fuel’. At the launch of ‘jerosene’ on May 24, Ramar swore by the RSS. “At a time when I was depressed and suicidal, and when I was toying with the idea of selling my formula to some US group, the RSS came to my rescue. I will die a swayamsevak,” he declared. On the dais were the BJP MLA from Mylapore, K.N. Lakshmanan, local RSS chief M.N. Sundar, lawyer and sanghchalak S. Sampath Kumar and other BJP functionaries. Why was no scientist present to back this alternative to kerosene? “You have to believe us,” Sampath Kumar thundered. Ramar and Co are threatening to retail jerosene in a week. When the CBI had raided 11 outlets two years ago and seized ‘Ramar petrol’, it was revealed that the fuel was a mixture of toluene and benzene. Jerosene will be sold at Rs 13 per litre. But nobody is as fired up about it this time. What next? ‘Sri Ram Jetrol’, according to Sampath Kumar. But the swadeshi brigade’s new toy may remain just that—a toy. … https://magazine.outlookindia.com/story/prospecting-for-swadeshi-oil/216017?fbclid=IwAR3ThEhnoH8J1HAybG1DdU2FaU6Ad4VbfYUcR93qVYxZMnxyVMJayjHjPV4
[11] விகடன், `ரூ.30-க்கு ஒரு லிட்டர்; 80 கி.மீ. பயணிக்கலாம்!’ – ராமர் பிள்ளை சொல்லும் மூலிகைப் பெட்ரோல் கணக்கு, .கார்த்திகேயன், Published:22 Feb 2020 7 PMUpdated:22 Feb 2020 7 PM,
[12] https://www.vikatan.com/news/environment/ramar-pillai-talks-about-bio-fuel-sales-in-tn
[13] ’தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இன்னும் இரண்டே தினங்களில் இறந்துவிடுவேன்… என்னைக்காப்பாற்ற வேண்டாம்’…மூலிகை ராமர் பிள்ளை, By Vinoth Kumar, Chennai, First Published 8, Dec 2018, 11:20 AM; Last Updated 8, Dec 2018, 11:23 AM
[14] https://tamil.asianetnews.com/politics/ramar-pillai-s-sucide-note-pjelkl
[15] தமிழ்.ஒன்.இந்தியா, இதுதான் என் கடைசி பேட்டி.. எனது மரண வாக்குமூலம்.. இனி பேச மாட்டேன்.. ராமர் பிள்ளை பகீர்!, By Hemavandhana, Updated: Friday, December 7, 2018, 10:11 [IST]
[16] https://tamil.oneindia.com/news/chennai/ramar-pillai-released-video-about-herbal-gasoline-issues-335915.html
[17] தமிழ்.வெப்துனியா, ‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 14th October 2016.
[18] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/herbal-petrol-fraud-3-years-prison-for-ramar-pillai-116101500005_1.html
[19] தினமணி, ‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Last Updated on : 14th October 2016 08:09 PM
[20]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/14/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2581026.html?pm=home