Archive for the ‘மூலிகை எரிபொருள்’ Category

ராமர் பெட்ரோல். மூலிகை பெட்ரோல், “ஶ்ரீராம் ஜெரோஸின்,” “ஶ்ரீராம் ஜெட்ரோல்” என்றெல்லாம் ஆகி, “தமிழ் தேவி மூலிகை எரிபொருள்” என்று மாறிய நிலை!

செப்ரெம்பர் 10, 2020

ராமர் பெட்ரோல், மூலிகை பெட்ரோல்,  “ஶ்ரீராம் ஜெரோஸின்,” “ஶ்ரீராம் ஜெட்ரோல்என்றெல்லாம் ஆகி, தமிழ் தேவி மூலிகை எரிபொருள்என்று மாறிய நிலை!

செப்டம்பர் 2020ல் மறுபடியும் ராமர் பிள்ளை பெட்ரோல் புரளி: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ராமர் பிள்ளை புதன்கிழமை 09-09-2020 வழங்கினார்[1]. ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னர் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை குறித்து செயல் முறை விளக்கம் அளித்தார்[2]. சாக்கடை கழிவு நீரை, சுத்திகரிப்பு செய்து கண்ணாடி குடுவையில் வைத்து, அதனுடன் இவரது கண்டுபிடிப்பான இரு கலவைகளை கலந்து எரிபொருளாக மாறுவதை செய்து காட்டினார். மூலிகை எரிபொருளை கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கியும் காண்பித்தார்[3]. தான் கண்டுபிடித்த இந்த எரிபொருளுக்கு தன்னுடைய தாயின் நினைவாக “தமிழ் தேவி மூலிகை எரிபொருள்” என பெயரிட்டுள்ளதாக தெரிவித்தார்[4]. மூலிகை எரிபொருளை இருசக்கர வாகனத்தில் ஊற்றி இயக்கி காட்டினார். இப்படி செய்திகள் அளந்தன. ஐ.ஐ.டியை விட இவர்கள் பெர்ம் வல்லுனர்கள் போலும். ஏன் ஆளுக்கு வண்டியில் நிரப்பிக் கொண்டு போகலாமே?

20 ஆண்டுகளாக பெட்ரோல் ஏன் விற்பனை செய்யவில்லை?: ஆனால், நடந்தது பற்றி ஒன்றுமே தெரியாதது போல அவர்கள் செய்திகள் வெளியிட்டது, ஏதோ உள்நோக்கம் இருப்பது காட்டுகிறது. பின்னர் ராமர்பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார்[5]. அப்போது அவர் கூறியதாவது: “எனது 21 வருட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. செய்தியாளர்கள் மத்தியில் தயாரிப்பு முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. என்னுடைய கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான முழு உரிமையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளேன். வரும் 18ம் தேதி முதல் வியாபார ரீதியாக மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும்,” என தெரிவித்தார்[6].லிட்டர் 39 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என்றது, திகைப்பாக இருந்தது. உண்மையாகவே அது பெட்ரோல் போன்ற எண்ணை என்றால், இந்தியா ஏன் உலகத்தின் பெட்ரோல் பிரசினையே தீர்ந்து விடுமே.20 ஆண்டுகளாக சொல்லி வரும் பொய்யை எப்படி ஊடகங்கள் ஏற்றுக் கொண்டு, மறுபடி-மறுமடி செய்திகள் வெளியிடுகின்றன என்று தெரியவில்லை.

போலி பெட்ரோல், உரிமம், மாறியது முதலியன (2002ல் நடந்தது):  சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே இவரது மோசடி விஞ்ஞானப் பூர்வமாக வெளியானது. அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் சம்பத் குமார், இவருக்கு ஆதரவாக இருந்தார்[7]. “நாங்கள் இதை பெட்ரோலாக ஏற்கொண்டு விட்டோம்,” என்றும் அறிவித்தார்[8]. பெட்ரோல் உரிமத்தை அவருக்குக் கொடுத்து விட்டதாக செய்திகள் வந்தன. “ஶ்ரீராம் ஜெரோஸின்,” “ஶ்ரீராம் ஜெட்ரோல்” என்றெல்லாம் பெயர் வைக்கப் பட்டது[9]. “நான் ஸ்வயம் சேவக்காத்தான் உயிர் விடுவேன்,” என்றெல்லாம் ராமர் பிள்ளை பேசியது, நிறைய பேர் மறந்திருப்பர்[10]. கே.என்.லக்ஷ்மணன், எம்.என்.சுந்தர், சம்பந்த குமார் போன்றோர் முதலியோர் இதைப் பற்றி பெருமையாகப் பேசினர். சுவதேசி நோக்கில் இதைப் பற்றி பிரமாதமாகப் பேசப் பட்டது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்றாகியது. சோதித்த போது, அது டோலூயின் மறும் பென்ஸீன் கலந்த கலவை என்று நிரூபணம் ஆனது. அதாவது மூலிகை எரிவாயு இல்லை.

பிப்ரவரி 2020ல் பேட்டி கொடுத்தது: 2020 பிப்ரவரியிலேயே `ரூ.30-க்கு ஒரு லிட்டர்; 80 கி.மீ. பயணிக்கலாம்!’ என்றெல்லாம் – ராமர் பிள்ளை பேட்டி அளித்தார்[11] என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. “சென்னையில் ஊரப்பாக்கம் பகுதியில் நாள்தோறும் ஒரு லிட்டர் ரூ.30 வீதம் 150 லிட்டர் விநியோகம் செய்து வருகிறோம். இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக மதுரை, தேனி, தென்காசி மறும் விருதுநகர் மாவட்டங்களில் விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்தி வருகிற 27-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்,” என்றெல்லாம் கூறிக் கொண்டார்[12], ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஆக, விளம்பரத்திற்காக இத்தகைய “ஸ்டன்ட்டுகளை” செய்து வருகிறார் என்றாகிறது. ஐ.ஐ.டியில் ஏற்கெனவே சோதனை செய்து, அது பெட்ரோல் இல்லை என்று உறுதி படுத்தியதால், அவர் மோசடி வேலை செய்தது வெளியானது. சிறைத் தண்டனையும் கொடுக்கப் பட்டது.

2018ல் இறந்து விடுவேன் என்று வீடியோ வெளியிட்டது: டிசம்பர் 2018ல், “வரும் பத்தாம் தேதி அன்று இரவே நான் இறந்துபோகலாம். காவல்துறை நண்பர்கள் என்னைக்காப்பாற்ற முயல வேண்டாம்,” என்ற வேண்டுகோளுடன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளார் மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை, என்று செய்திகள் வந்தன[13]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை, 2020லும் அதே பெட்ரோல் என்றெல்லாம் கூறி வருகிறார்[14]. இந்த வீடியோவில் அவர் பேசியதாவது[15]: ”என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். இது என்னுடைய இறுதி காணொளி. இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன். இது என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். ஏனென்றால் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி தந்திருக்கிறேன். பெட்ரோல் பார்முலா என் உயிரை பணயம் வைத்தாவது உங்கள் கையில் சேர்ப்பேன் என்று நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன். அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன். 10ம் தேதிக்குள் நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோல் பார்முலாவை சமர்ப்பிக்க வேண்டும். தூக்கு தண்டனை தாங்கள் ஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து காட்டுகிறேன். அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள். நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். நான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள். இல்லையென்றால் தூக்கு தண்டனை கூட கொடுத்துவிடுங்கள். நான் தயாராக இருக்கிறேன். உயிருடன் இருப்பேனா?

பிஜேபி தலைவர்களை விளித்தது: ராமர் பிள்ளை தொடர்ந்து பேசியது[16], “நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நான் வருகின்ற 11ம் தேதி உயிருடன் இருப்பேனா? இல்லையா? என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் இருக்கிறது. உயிர் பிச்சை மரணத்தின் வாயிலிலிருந்து தமிழிசை அவர்களையும், திரு.பொன்.ராதாகிருஷ்ணனையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், 5 தினங்களுக்குள் நீங்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு, திரு. முரளி மனோகர் ஜோஷியை தொடர்புகொண்டு உண்மையை மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஏழை கண்டுபிடித்தது உண்மைதான் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டும். நான் உயிர் பிச்சை கேட்கிறேன். கண் கலங்குவீர்கள் இந்த வீடியோ பார்த்துவிட்டு காவல்துறை நண்பர்கள் என்னை தடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். 10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணொளி காட்சி ஒன்று வெளியாகும். என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். இது உறுதி” என்று கூறியுள்ளார்.

ராமர் பிள்ளை மீது வழக்குப் போடப்பட்டது: ராமர் பிள்ளை தயாரித்து விற்பனை செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல என்றும், டொலூயீன், பென்சின் மற்றும் நாப்தா என்ற பெட்ரோலிய பொருட்கள் மூலம், ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் மோசடி பெட்ரோல் தயாரித்து விற்பதாக சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்தனர். மேற்கண்ட பெட்ரோலிய பொருட்களில் வாகனம் ஓட்ட முடியாது. அது சட்டப்படி குற்றம் ஆகும். அப்போது, சி.பி.ஐ. தென் மண்டல இணை இயக்குனராக பணியாற்றிய முகர்ஜி உத்தரவின்பேரில் சி.பி.ஐ. போலீசார், ராமர் பிள்ளை மீது, சட்டவிரோதமாக கலப்பட பெட்ரோல் தயாரித்து, அதை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்து ரூ.2.27 கோடி மோசடியாக சம்பாதித்ததாக வழக்கு போட்டனர்[17]. ராமர் பிள்ளை அப்போது கைது செய்யப்பட்டார்.

  1. ராமர்பிள்ளை,
  2. அவரது வளர்ப்பு தாயார் வேணுதேவி
  3. சின்னச்சாமி,
  4. ராஜசேகரன்,
  5. எஸ்.கே. பரத்

ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீசார், சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[18]. சுமார் 16 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நேற்று ராமர் பிள்ளை உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[19]. மாஜிஸ்திரேட்டு பாலசுப்பிரமணியம் இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தக்க நேரத்தில் சரியான, நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கு போட உத்தரவிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜி கூறினார்[20]. ஆனால், கடந்த ஆண்டுகளில், இவர் அடிக்கடி தன்னுடைய எரிபொருள் பற்றி, விளம்பர யுக்தியில் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார். ஒருவேளை சிறையிலிருந்து வந்த பிறகு, மறுபடியும், ஆரம்பித்துள்ளார் போலும்/


© வேதபிரகாஷ்

10-09-2020


[1] தினமணி, மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமை: ராமர் பிள்ளை, B DIN | Published on : 09th September 2020 06:57 PM |

[2] https://www.dinamani.com/latest-news/2020/sep/09/herbal-petrol-sale-right-ramer-pillai-3461918.html

[3] நியூஸ்7.செனல், மூலிகை பெட்ரோலை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட ராமர் பிள்ளை!, September 10, 2020, Posted By : Jeba_ns7.

[4] https://www.ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu/10/9/2020/ramar-pillai-has-signed-mou-private-company-sell-his-natural-fuel

[5] தினமலர், செப்.18ல்மூலிகை பெட்ரோல்ராமர் பிள்ளை தகவல், Added : செப் 10, 2020 01:48.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2610744

[7] Rediff.com, Interview with S. Sampath Kumar, RSS about Rama Petrol, 20-01-2001.

[8]https://www.rediff.com/news/2001/jan/20inter.htm?fbclid=IwAR3ThEhnoH8J1HAybG1DdU2FaU6Ad4VbfYUcR93qVYxZMnxyVMJayjHjPV4

[9] The Outlook,, Prospecting For Swadeshi Oil, By S.Raman, June 10, 2002

[10]  Ramar Pillai is back. This time with ‘Sri Ram Jerosene’, which he and his RSS backers are promoting as ‘domestic herbal fuel’. At the launch of ‘jerosene’ on May 24, Ramar swore by the RSS. “At a time when I was depressed and suicidal, and when I was toying with the idea of selling my formula to some US group, the RSS came to my rescue. I will die a swayamsevak,” he declared. On the dais were the BJP MLA from Mylapore, K.N. Lakshmanan, local RSS chief M.N. Sundar, lawyer and sanghchalak S. Sampath Kumar and other BJP functionaries. Why was no scientist present to back this alternative to kerosene? “You have to believe us,” Sampath Kumar thundered. Ramar and Co are threatening to retail jerosene in a week. When the CBI had raided 11 outlets two years ago and seized ‘Ramar petrol’, it was revealed that the fuel was a mixture of toluene and benzene. Jerosene will be sold at Rs 13 per litre. But nobody is as fired up about it this time. What next? ‘Sri Ram Jetrol’, according to Sampath Kumar. But the swadeshi brigade’s new toy may remain just that—a toy. … https://magazine.outlookindia.com/story/prospecting-for-swadeshi-oil/216017?fbclid=IwAR3ThEhnoH8J1HAybG1DdU2FaU6Ad4VbfYUcR93qVYxZMnxyVMJayjHjPV4

[11] விகடன், `ரூ.30-க்கு ஒரு லிட்டர்; 80 கி.மீ. பயணிக்கலாம்!’ – ராமர் பிள்ளை சொல்லும் மூலிகைப் பெட்ரோல் கணக்கு, .கார்த்திகேயன், Published:22 Feb 2020 7 PMUpdated:22 Feb 2020 7 PM,

[12] https://www.vikatan.com/news/environment/ramar-pillai-talks-about-bio-fuel-sales-in-tn

[13] ’தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இன்னும் இரண்டே தினங்களில் இறந்துவிடுவேன்என்னைக்காப்பாற்ற வேண்டாம்’…மூலிகை ராமர் பிள்ளை, By Vinoth Kumar, Chennai, First Published 8, Dec 2018, 11:20 AM;  Last Updated 8, Dec 2018, 11:23 AM

[14] https://tamil.asianetnews.com/politics/ramar-pillai-s-sucide-note-pjelkl

[15] தமிழ்.ஒன்.இந்தியா, இதுதான் என் கடைசி பேட்டி.. எனது மரண வாக்குமூலம்.. இனி பேச மாட்டேன்.. ராமர் பிள்ளை பகீர்!, By Hemavandhana, Updated: Friday, December 7, 2018, 10:11 [IST]

[16] https://tamil.oneindia.com/news/chennai/ramar-pillai-released-video-about-herbal-gasoline-issues-335915.html

[17] தமிழ்.வெப்துனியா, ‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 14th October 2016.

[18] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/herbal-petrol-fraud-3-years-prison-for-ramar-pillai-116101500005_1.html

[19] தினமணி, ‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Last Updated on : 14th October 2016 08:09 PM

[20]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/14/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2581026.html?pm=home

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ஒக்ரோபர் 15, 2016

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ramar-herbal-petrol-bjp-support-aug-2016

ஆகஸ்ட் 2016ல் வெளியிட்ட அறிக்கை[1]: தனது மூலிகைப் பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும் என ராமர்பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, சிறிய அளவில் தொழிற்சாலை அமைத்து வெற்றிகரமாக டீசலுக்கு மாற்றாக மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆகஸ்ட் 14ம் தேதி மூலிகை பெட்ரோலை ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருவதாக ராமர்பிள்ளை தெரிவித்தார். தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால் அது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கே என்றும் ராமர் பிள்ளை தெரிவித்தார். தாம் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்சனை ஆக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு தான் அளித்த விலை என்பது தனது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது தான் என்று ராமர்பிள்ளை கூறினார். டிசம்பர் மாதத்திற்குள்ளாக பெட்ரோல் விலை ரூ.10-ஆக குறையும் வகையில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்[2].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-1

தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாக கூறியது (ஆகஸ்ட் 2016):  வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இவ்வாறு கூறியதை பலர் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இருக்கும் நிலையில் மோடி நேரிடையாக பார்வையிட்டு ஆதரவு அளித்தார் என்பது, எவ்வளவு பெரிய பொய் என்பது தெரிகிறது. கூட ராணுவ அமைச்சர் பாரிகரையும் சேர்த்தது, மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டது எல்லாம் கொடுமைதான்! நிச்சயமாக தனது செயல்களில் குற்றம் இருக்கிறது எனும்போது, உண்மையினை ஒப்புக் கொள்ளாமல், மேன்மேலும், இவ்வாறு, பொய்களை சொல்லி பேட்டி கொடுப்பது முதகிய செயல்கள் விளம்பரத்திற்காக மற்றும் தனது தொடர்புகளைக் காட்டிக் கொள்ள முயன்றதாகத் தான் தெரிந்தது.

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-2

1996-2000 ஆண்டுகளில் அரசியல் ஆதரவுடன் கம்பெனி ஆரம்பிக்கப் பட்டது: ராமர் பிள்ளை ஏமாற்று விற்பனை திட்டத்திற்கு பல பணாக்காரர்கள் மற்றும் அதிகாரம் கொண்ட நபர்களின் உதவி பின்னணியில் இருந்தது. 1999-2000 காலக்கட்டத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. 1996லேயே, சென்னை ஐ.ஐ.டியில் சோதனையின் போது, அது பெட்ரோல் அல்ல, ரசாயனங்கள் கலந்த கலவை, போலி என்று தெரிய வந்தது[3].  ஏப்ரல் 2000ல், சிபிஐ விசாரணை மேற்கொண்டபோது, தனுஷ்கோடி ஆதித்தனே [former Union Minister and Tamil Maanila Congress leader, Mr. Dhanushkodi Adityan] ரூ.15 லட்சம் கொடுத்ததாக தெரிய வந்தது[4]. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், முன்பு மத்திய அமைச்சராக இருந்தவர். அதுமட்டுமல்லாது, இவரது கண்டுபிடிப்பிற்கு, பதிவு எண்ணை வாங்கிக் கொடுக்கவும் [a patent application (2274/MAS/97) on October 14 1997 ] உதவியுள்ளார்[5]. மார்ச் 1999 அன்று சென்னை ஓட்டலில் பாராட்டு விழா ஏற்பாடு செய்தபோது, அப்பொழுதைய முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்[6]. போதாகுறைக்கு, “சுவதேசி” ரீதியில், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் ஆதரவும் இருந்தது[7].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-3

மே.2010ல் ராமர் பிள்ளைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன[8]: மோசடியில் கைதான ராமர் பிள்ளையை, லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் “ஓபன் மாகஸைன்” நிருபர் பேட்டி கண்டு, விவரங்களை வெளியிட்டார். இவரது கண்டுபிடிப்பை மெச்சி, தமிழக முதல்வர் கருணாநிதி, தொழிற்சாலை தொடங்கள் இலவசமாக இடம், ஆராய்ச்சி செய்ய நிதியுதவி எல்லாம் கொடுப்பதாக அறிவித்தார். 2000ல் இவரது மூலிகை பெட்ரோல் ஊற்றி ஓடிய வண்டிகள் பழுதடைந்தன, குறிப்பாக இஞ்சின்கள் பாழாகின. ஆனால், தான் கண்டுபிடித்ததை, மற்றவர்கள் அபகரிக்கவே இவ்வாறு செய்கிறார்கள் என்றார். 2008ல் ஐவான் கிரிஸ்டியன்சென் என்பவர் தன்னுடைய கண்டுபிடிப்பை பாராட்டினார் என்றார். ஆனால், “ஓபன் மாகஸைன்” அவரை தொடர்பு கொண்டபோது, தப்பாகி விட்டது, என்று ஒப்புக் கொண்டார், தனது வாழ்க்கையில் அவ்வாறு தவறாகி விட்டதற்காக வருத்தமும் தெரிவித்தார்[9].

toi-23-09-2010-herbal-fuel-inventor-back-with-a-new-claim

செப்டம்பர் 2010ல் மறுபடியும் அறிக்கை விட்ட ராமர் பிள்ளை[10]: ஒரு ஊடக சந்திப்பின் போது, மறுபடியும் ரூ.5/- க்கு பெட்ரோல் கிடைக்கும் என்று அறிவித்தார். “15 கிராம்ஆம்மோனியம் குளோரைட், 15 கிராம் மரத்தூள், 15 கிராம் யீஸ்ட் இவற்றை சேர்த்து வைத்தால், நுண்ணியுர்களால், பொங்கி வரும். இதனை 78 டிகிரிக்கு சூடேற்றி, பிறகு, அதனை வடிகட்டினால், வரும் திரவத்தை, ஒரு லிட்டர் நீரைச் சேர்த்து குளுக்கி வைத்தால், துகள்கள் கீழே சென்று, மேலே திரவம் நிற்கும். அதுதான் வேலார் ஹைட்ரோ கார்பன் எரிபொருள் ஆகும்”, என்று விளக்கினார்[11]. மார்ச் 2000ல் வெளி மார்க்கெட்டில் ரசாயன பொருட்களை வாங்கி, “மூலிகை பெட்ரோல்” என்று ஏமாற்றுகிறார் என்று கைது செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இவ்வாறு அறிக்கைகள் விட்டதும் வியப்புதான். பெட்ரோல் என்றாலே பாறையெண்ணை அதாவது, இயற்கையில்லேயே பூமிக்கடியில் உருவான எண்ணையாகும். ஆனால், அதனையே, நேரிடையாக உபயோகப்படுத்த முடியாது. அதனை பல அடுக்குகளில் சுத்தப்படுத்தி, பெட்ரோல் டீசல், என்று தயாரிக்கிறார்கள். அதற்கு பெரிய எண்ணை ஆலை தேவைப்படுகிறது. எனவே, சாதாரணமாக இப்படி கலந்து தயாரிக்கலாம் என்பதே விஞ்ஞான பூர்வமாக இல்லை என்பது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

15-10-2016

ramar-pillai-gets-3-years-ri-15-10-2016

[1] நியூஸ்.7.டிவி, இந்தியாவில் விரைவில் ரூ.10-க்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்” : ராமர்பிள்ளை நம்பிக்கை, August 02, 2016.

[2] http://ns7.tv/ta/herb-petrol-will-come-soon-says-ramar-pillai.html

[3]  In September 1996, during a validation experiment organised by the Department of Science and Technology (DST) at IIT, Chennai.

[4] The Hindu, Ramar Pillai had powerful patrons, By Mukund Padmanabhan, Tuesday, April 25, 2000. http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[5] Among other things, Mr. Adityan had arranged a house in Chennai’s Alwarthirunagar for Pillai and helped the now disgraced “scientist” register a patent application (2274/MAS/97) on October 14 1997 at the Patent Branch Office, Chennai.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[6] http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[7] In March 1999, at a function to celebrate the commercial launch of “Ramar Fuel” in a Chennai hotel, the guest of honour was no less than Chief Minister, Mr. M. Karunanidhi’s wife, Ms. Rajathiammal. As for Pillai’s powerful friendships within the RSS – some of whose members obviously regarded him as a swadeshi scientist – they are much too well-documented to bother elucidating.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[8] The Open Magazine, The Herbal Fuel Druid, 29 May 2010

http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[9]  In a 2008 letter, Christensen wrote: ‘Ramar has demonstrated several quick methods for producing bio-fuel. The fuel burned readily, and there is no doubt that plenty of fuel can be produced at low price. For this reason, his discovery is unique, and Ramar deserves some worldwide reputation, eg. By Nobel Prize.’ Contacted by Open, Christensen acknowledges the letter, but adds that he got carried away when he saw the experiments first hand. “We all make mistakes,” he says, “I think it was one of them. I’m afraid it is a blot on my scientific career.” http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[10] Times of India, Herbal fuel inventor’ back with a new claim, TNN | Sep 23, 2010, 12.25 AM IST

[11] He says his concoction when mixed with water and heated to 78 degrees Celsius turns into an inflammable bio-fuel that gives a smokeless blue flame. “The mixture is 15 gm ammonium chloride, 15 gm sawdust and 15 gm yeast. It is fermented and distilled. Then I mix it with a litre of water and shake it a bit. See how the water settles at the bottom. I call it Velar Bio Hydrocarbon Fuel,” he says.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Herbal-fuel-inventor-back-with-a-new-claim/articleshow/6609627.cms

 

மூலிகை பெட்ரோல் மோசடியில் ராமர் பிள்ளை மற்றும் நான்கு பேருக்கு சிறை தண்டனை, பெனால்டி!

ஒக்ரோபர் 15, 2016

மூலிகை பெட்ரோல் மோசடியில் ராமர் பிள்ளை மற்றும் நான்கு பேருக்கு சிறை தண்டனை, பெனால்டி!

ramar-pillai-gets-three-years-ri-for-fake-herbal-petrol-15-10-2016

மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் கலப்பட பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு சிறைதண்டனை: மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் கலப்பட பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக சி.பி.ஐ. போலீசார் தொடர்ந்த வழக்கில் ராமர்பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[1]. கடந்த 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்துள்ளதாக ராமர் பிள்ளை என்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்[2]. அவர் கண்டுபிடித்ததாக கூறிய மூலிகை பெட்ரோல் மூலம் வாகனங்களையும் ஓட்டி காட்டினார். தன் மனைவியை பின்னால் உட்கார வைத்து, ஓட்டிக் காட்டினார். ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள் என்ற பெயரில் அவர் குறிப்பிட்ட பெட்ரோலை குறைந்த விலைக்கு விற்று ரூ.2.27 கோடி வரை சம்பாதித்ததாக தெரியவந்தது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்காரர்கள் என்று அவர் பேச்சை நம்பி, பணம் மற்றும் இதர உதவிகளை செய்ய முன்வந்தனர். “தமிழன் கண்டுபிடிப்பு” என்று உணர்ச்சிகரமான பிரச்சாரங்களும் செய்யப்பட்டன.

ramar-pillai-lab-2

மூலிகை பெட்ரோல் அல்ல என்று சோனை மூலம் தெரிய வந்தது: இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றனர். சோதனை கூடத்தில் பரிசோதனை செய்தபோது, ரசாயன கலவைதான் அது, மூலிகை அல்ல என்று தெரியவந்தது. அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை “மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி, ‘ராமர் பெட்ரோல்’ ‘ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள்’ என்ற பெயர்களில் விற்பனையில் இறங்கினார்[3]. இதுவும் சட்டநுணுக்கங்களிலிருந்து தப்பிக்கத் தான் என்று தெரிகிறது, ஏனெனில், பெட்ரோல் தயாரிப்பு, சுத்தகரிப்பு, சேகரிப்பு, வைப்பு, விற்பன முதலியவை மத்திய மற்றும் மாநில சட்டதிட்டங்களுக்குட்பட்டவையாகும்.

ramar-pillai-lab-1

ராமர் பையோ பியூயல் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி ஆரம்பித்தது (1998): நவம்பர் 5, 1998 அன்று, ரூ.2 கோடி மூலதனத்துடன் ராமர் பையோ பியூயல் பிரைவேட் லிமிடெட் [Ramar Bio Fuel Private Limited] என்ற கம்பெனி, L-5, கிண்டி தொழிற்பேட்டையில்  ஆரம்பிக்கப் பட்டது[4]. அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார்[5]. ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருள் ஐஎஸ்ஐ தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின[6]. குறிப்பாக இஞ்சின் பழுதாகின. சோதனையிட்டதில் கலப்பட பெட்ரோல், எரிபொருள் உபயோகப்படுத்தப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், பலர் அவர் மீது புகார் செய்தனர். புகார்கள் அதிகமானதால், சிபிஐ விசாரணையும் கோரப்பட்டது. பின்னர், தவறான தகவல்களை கூறி எரிபொருளை விற்பனை செய்து ரூ.2.27 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது[7].

ramar-pillai-gets-3-years-ri-for-fake-herbal-petrol-15-10-2016

ராமர் பிள்ளை மீது வழக்குப் போடப்பட்டது: ராமர் பிள்ளை தயாரித்து விற்பனை செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல என்றும், டொலூயீன், பென்சின் மற்றும் நாப்தா என்ற பெட்ரோலிய பொருட்கள் மூலம், ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் மோசடி பெட்ரோல் தயாரித்து விற்பதாக சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்தனர். மேற்கண்ட பெட்ரோலிய பொருட்களில் வாகனம் ஓட்ட முடியாது. அது சட்டப்படி குற்றம் ஆகும். அப்போது, சி.பி.ஐ. தென் மண்டல இணை இயக்குனராக பணியாற்றிய முகர்ஜி உத்தரவின்பேரில் சி.பி.ஐ. போலீசார், ராமர் பிள்ளை மீது, சட்டவிரோதமாக கலப்பட பெட்ரோல் தயாரித்து, அதை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்து ரூ.2.27 கோடி மோசடியாக சம்பாதித்ததாக வழக்கு போட்டனர்[8]. ராமர் பிள்ளை அப்போது கைது செய்யப்பட்டார்.

  1. ராமர்பிள்ளை,
  2. அவரது வளர்ப்பு தாயார் வேணுதேவி
  3. சின்னச்சாமி,
  4. ராஜசேகரன்,
  5. எஸ்.கே. பரத்

ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீசார், சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[9]. சுமார் 16 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நேற்று ராமர் பிள்ளை உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[10]. மாஜிஸ்திரேட்டு பாலசுப்பிரமணியம் இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தக்க நேரத்தில் சரியான, நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கு போட உத்தரவிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜி கூறினார்[11]. ஆனால், கடந்த ஆண்டுகளில், இவர் அடிக்கடி தன்னுடைய எரிபொருள் பற்றி, விளம்பர யுக்தியில் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார்.

© வேதபிரகாஷ்

15-10-2016

ramar-pillai-gets-3-years-ri-oct-14-2016

[1] தினத்தந்தி, மூலிகை பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 15,2016, 12:25 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 15,2016, 3:45 AM IST

[2] http://www.dailythanthi.com/News/India/2016/10/15002536/Rama-pillai-is-3-years-imprisonment.vpf

[3] தி.இந்து, மூலிகை பெட்ரோல்மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Published: October 15, 2016 08:01 ISTUpdated: October 15, 2016 13:22 IST

[4] RAMAR BIO FUEL PRIVATE LIMITED – Indian Non-Government Company with identification number U23201TN1998PTC041375. It was registered on 05 November 1998 and now is Under Process of Striking off. Directors are . Registered address: INDIA, Tamil Nadu -, CHENNAI-32, CHENNAI-32, L- 5 INDUSTRIAL ESTATEGUINDY. Corporate e-mail address: –  http://informix.in/ramar_bio_fuel_private_limited_chennai/1049178/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம், By: Karthikeyan, Published: Friday, October 14, 2016, 18:49 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/ramar-pillai-gets-3-years-prison-264971.html

[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/article9222812.ece

[8] தமிழ்.வெப்துனியா, மூலிகை பெட்ரோல்மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 14th October 2016.

[9] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/herbal-petrol-fraud-3-years-prison-for-ramar-pillai-116101500005_1.html

[10] தினமணி, மூலிகை பெட்ரோல்மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Last Updated on : 14th October 2016 08:09 PM

[11]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/14/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2581026.html?pm=home