Posts Tagged ‘சிபிஐ’

மூலிகை பெட்ரோல் மோசடியில் ராமர் பிள்ளை மற்றும் நான்கு பேருக்கு சிறை தண்டனை, பெனால்டி!

ஒக்ரோபர் 15, 2016

மூலிகை பெட்ரோல் மோசடியில் ராமர் பிள்ளை மற்றும் நான்கு பேருக்கு சிறை தண்டனை, பெனால்டி!

ramar-pillai-gets-three-years-ri-for-fake-herbal-petrol-15-10-2016

மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் கலப்பட பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு சிறைதண்டனை: மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் கலப்பட பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக சி.பி.ஐ. போலீசார் தொடர்ந்த வழக்கில் ராமர்பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[1]. கடந்த 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்துள்ளதாக ராமர் பிள்ளை என்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்[2]. அவர் கண்டுபிடித்ததாக கூறிய மூலிகை பெட்ரோல் மூலம் வாகனங்களையும் ஓட்டி காட்டினார். தன் மனைவியை பின்னால் உட்கார வைத்து, ஓட்டிக் காட்டினார். ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள் என்ற பெயரில் அவர் குறிப்பிட்ட பெட்ரோலை குறைந்த விலைக்கு விற்று ரூ.2.27 கோடி வரை சம்பாதித்ததாக தெரியவந்தது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்காரர்கள் என்று அவர் பேச்சை நம்பி, பணம் மற்றும் இதர உதவிகளை செய்ய முன்வந்தனர். “தமிழன் கண்டுபிடிப்பு” என்று உணர்ச்சிகரமான பிரச்சாரங்களும் செய்யப்பட்டன.

ramar-pillai-lab-2

மூலிகை பெட்ரோல் அல்ல என்று சோனை மூலம் தெரிய வந்தது: இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றனர். சோதனை கூடத்தில் பரிசோதனை செய்தபோது, ரசாயன கலவைதான் அது, மூலிகை அல்ல என்று தெரியவந்தது. அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை “மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி, ‘ராமர் பெட்ரோல்’ ‘ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள்’ என்ற பெயர்களில் விற்பனையில் இறங்கினார்[3]. இதுவும் சட்டநுணுக்கங்களிலிருந்து தப்பிக்கத் தான் என்று தெரிகிறது, ஏனெனில், பெட்ரோல் தயாரிப்பு, சுத்தகரிப்பு, சேகரிப்பு, வைப்பு, விற்பன முதலியவை மத்திய மற்றும் மாநில சட்டதிட்டங்களுக்குட்பட்டவையாகும்.

ramar-pillai-lab-1

ராமர் பையோ பியூயல் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி ஆரம்பித்தது (1998): நவம்பர் 5, 1998 அன்று, ரூ.2 கோடி மூலதனத்துடன் ராமர் பையோ பியூயல் பிரைவேட் லிமிடெட் [Ramar Bio Fuel Private Limited] என்ற கம்பெனி, L-5, கிண்டி தொழிற்பேட்டையில்  ஆரம்பிக்கப் பட்டது[4]. அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார்[5]. ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருள் ஐஎஸ்ஐ தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின[6]. குறிப்பாக இஞ்சின் பழுதாகின. சோதனையிட்டதில் கலப்பட பெட்ரோல், எரிபொருள் உபயோகப்படுத்தப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், பலர் அவர் மீது புகார் செய்தனர். புகார்கள் அதிகமானதால், சிபிஐ விசாரணையும் கோரப்பட்டது. பின்னர், தவறான தகவல்களை கூறி எரிபொருளை விற்பனை செய்து ரூ.2.27 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது[7].

ramar-pillai-gets-3-years-ri-for-fake-herbal-petrol-15-10-2016

ராமர் பிள்ளை மீது வழக்குப் போடப்பட்டது: ராமர் பிள்ளை தயாரித்து விற்பனை செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல என்றும், டொலூயீன், பென்சின் மற்றும் நாப்தா என்ற பெட்ரோலிய பொருட்கள் மூலம், ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் மோசடி பெட்ரோல் தயாரித்து விற்பதாக சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்தனர். மேற்கண்ட பெட்ரோலிய பொருட்களில் வாகனம் ஓட்ட முடியாது. அது சட்டப்படி குற்றம் ஆகும். அப்போது, சி.பி.ஐ. தென் மண்டல இணை இயக்குனராக பணியாற்றிய முகர்ஜி உத்தரவின்பேரில் சி.பி.ஐ. போலீசார், ராமர் பிள்ளை மீது, சட்டவிரோதமாக கலப்பட பெட்ரோல் தயாரித்து, அதை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்து ரூ.2.27 கோடி மோசடியாக சம்பாதித்ததாக வழக்கு போட்டனர்[8]. ராமர் பிள்ளை அப்போது கைது செய்யப்பட்டார்.

  1. ராமர்பிள்ளை,
  2. அவரது வளர்ப்பு தாயார் வேணுதேவி
  3. சின்னச்சாமி,
  4. ராஜசேகரன்,
  5. எஸ்.கே. பரத்

ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீசார், சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[9]. சுமார் 16 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நேற்று ராமர் பிள்ளை உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[10]. மாஜிஸ்திரேட்டு பாலசுப்பிரமணியம் இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தக்க நேரத்தில் சரியான, நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கு போட உத்தரவிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜி கூறினார்[11]. ஆனால், கடந்த ஆண்டுகளில், இவர் அடிக்கடி தன்னுடைய எரிபொருள் பற்றி, விளம்பர யுக்தியில் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார்.

© வேதபிரகாஷ்

15-10-2016

ramar-pillai-gets-3-years-ri-oct-14-2016

[1] தினத்தந்தி, மூலிகை பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 15,2016, 12:25 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 15,2016, 3:45 AM IST

[2] http://www.dailythanthi.com/News/India/2016/10/15002536/Rama-pillai-is-3-years-imprisonment.vpf

[3] தி.இந்து, மூலிகை பெட்ரோல்மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Published: October 15, 2016 08:01 ISTUpdated: October 15, 2016 13:22 IST

[4] RAMAR BIO FUEL PRIVATE LIMITED – Indian Non-Government Company with identification number U23201TN1998PTC041375. It was registered on 05 November 1998 and now is Under Process of Striking off. Directors are . Registered address: INDIA, Tamil Nadu -, CHENNAI-32, CHENNAI-32, L- 5 INDUSTRIAL ESTATEGUINDY. Corporate e-mail address: –  http://informix.in/ramar_bio_fuel_private_limited_chennai/1049178/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம், By: Karthikeyan, Published: Friday, October 14, 2016, 18:49 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/ramar-pillai-gets-3-years-prison-264971.html

[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/article9222812.ece

[8] தமிழ்.வெப்துனியா, மூலிகை பெட்ரோல்மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 14th October 2016.

[9] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/herbal-petrol-fraud-3-years-prison-for-ramar-pillai-116101500005_1.html

[10] தினமணி, மூலிகை பெட்ரோல்மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Last Updated on : 14th October 2016 08:09 PM

[11]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/14/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2581026.html?pm=home

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

மார்ச் 8, 2015

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi - Photo- R.M. Rajarathinam

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi – Photo- R.M. Rajarathinam

சோதனை, விசாரணை முதலியவற்றிற்குப் பிறகு ஐந்து அதிகாரிகள் கைது: அங்கிருந்த ஆவணங்கள், விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்யும் முறை, வசூலிக்கும் பணம் ஆகியவை குறித்து சிபிஐ குழுவினர்  சோதனை செய்தனர். விமான பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள 10 சுங்க இலாகா கவுண்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சுங்க அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று காலை 9 மணிவரை நீடித்தது. பின்னர் சுங்க அதிகாரிகளுக்கு சொந்தமான பைக், கார் போன்ற வாகனங்களில் பணம் எதுவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் சுங்க அதிகாரிகளை அழைத்து கொண்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க துறை அலுவலக வளாக குடியிருப்பில் உள்ளவர்களின் வீடுகளுக்கும் சென்று மதியம் வரை  சோதனை நடத்தினர்[1]. இந்த சோதனையில் முறைகேடாக பெறப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது[2]. அத்துடன் சுங்க இலாகா அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் அவர்களில் அதிகாரிகள் ஐந்து, பிரயாணி ஒன்று – நாகூர் மீரான்[3]:

  1. சிவசாமி – சூப்பிரென்டென்ட்டென்ட்
  2. ரவிகுமார் – சூப்பிரென்டென்ட்டென்ட்
  3. தினேஸ்பிரஜாபதி – இன்ஸ்பெக்டர்.
  4. சுரேஸ்குமார் – இன்ஸ்பெக்டர்.
  5. அவ்ஜித்சக்கரபர்த்தி – இன்ஸ்பெக்டர்.

சி.பி.ஐ. அதிகாரிகள். இச்சோதனையும் கைது நடவடிக்கையும் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4].

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

பணத்தை கையாலும் போது, கையாடல் செய்கிறானா, இல்லையா?: கௌடில்யர் சொன்னது போல, “நீரில் வாழும் மீன் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறதா இல்லையா என்பது போல, கருவூலத்தில் இருக்கும் பாதுகாவலன் பணத்தை கையாடல் செய்கிறானா இல்லையா என்று சொல்லமுடியாது”, என்ற ரீதியில் இன்று பணத்தை கையாலும் எல்லோருமே, ஆசையில் திளைத்துதான் இருக்கின்றனர், பணத்தை கையாலும் போது, கையாடல் செய்யத்தான் செய்கிறான். அதனால் தான், வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமாகக் கொடுக்கப் படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் போதவில்லை என்று அடிக்கடி ஸ்ட்ரைக் செய்து தான் வருகிறார்கள். அதேபோல, வரித்துறைகளில் உள்ளவர்களும் நேரிடையாகவோ, மறைமுகவோ பணத்துடன் செயல்படுவதால், அவர்களுக்கும் சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், வரிதளர்த்தல், வரிவிலக்கு, முறைகளில் வரியேப்ப்பு ஏற்படும். அது ஊழல் ஏற்பட, வளர, அதிகமாக வாய்ப்புகள் உண்டாக்கப் படுகின்றன.

advocates-வழக்கறிஞர்கள்-

advocates-வழக்கறிஞர்கள்-

உள்ளே-வெளியே நீயாயங்கள் – அநியாயங்கள்: எப்படி 100% தங்கக்கடத்தல்காரர்களை பிடிக்க முடியவில்லையோ, அதேபோல, எல்லா ஊழல்காரர்களும் பிடிக்கப்படுவதில்லை. மாட்டிக் கொள்பவர்கள் மட்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டவர்கள், மற்றவர்கள் புனிதர்கள் என்றாகாது. வரித்துறை அலுவலகங்களில், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் வேலைசெய்ய, பதவி / போஸ்டிங் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. இதனால், ஒழுங்காக, நியாயமாக இருக்கும் அதிகாரிகள் 30-40 வருடங்களாக, மாத சம்பளம் வாங்கிக் கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ஆனால், நேற்று வந்தவர்கள் வளமாக, வசதிகளோடு, மேலதிகாரிகளின் ஆதரவோடு இருந்து கொண்டிருப்பதை காணலாம்.  இத்தகைய நடுநிலைமயற்ற போக்கும் வேலைசெய்பவர்களின் மனநிலையை பாதிக்கிறது. யோக்கியமானவனாக இருப்பவன், ஏன் நானும் அதுமாதிரி செய்யக் கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அவன் நினைக்கும் போதே, ஊழல் ஏற்படுவதில்லை, நியாயமே செத்துவிடுகிறது. சட்டங்கள் வளைக்கப்பட்டு விடுகின்றன. நியாயமானவன், அநியாயம் செய்யும் போது சமூகம் தாங்கிக் கொள்ளமுடியாது. இப்பொழுது, சமுதாயம் இக்கட்டான சூழ்நிலைகளில் தான் சென்றுகொண்டிருக்கிறது.

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

நீதி, சட்டம் அமூல் படுத்துவர்கள் நியாயவான்களா, இல்லையா?: நீதித்துறையும் ஊழலில் தான் மலிந்து கிடக்கிறது. நீதிபதிகள் அரசியல், செல்வாக்கு போன்ற காரணிகளைக் கொண்டுதான் பதவிக்கு அமர்த்தப் படுகிறார்கள். இதனால், அவர்கள் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஏனெனில் திறமை, அனுபவம், முதிர்ச்சி முதலியன, தம்மைவிட அதிகமாக இருந்தாலும், நீதிபதி ஆகாத சீனியர் அட்வகேட்டுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். அதேபோலத்தான், சி.பி.ஐ கதையும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதனை காங்கிரஸின் கைப்பாவை என்று விமர்சிக்கப்பட்டது. இன்று ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால், பாரபட்சம் இல்லாமல் செயல்படுமா என்று தெரியாது. இப்பொழுது சித்தாந்தம் வேறு பேசப்படுகிறது, அது ஜாதி, மதம், மொழி என்ற பலவித காரணிகளுடன் சேர்ந்து நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நீதி-சட்டம் அதற்கேற்றாற்போலத்தான் மாறிக்கொண்டும், வளைந்து கொண்டும் இருக்கும். வரியேய்ப்பு என்றால், அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக் கூடாத அளவுக்கு, சட்டங்கள் இருக்க வேண்டும். தங்கத்தைக் கடத்தவே முடியாது என்ற அளவில் இருந்தால், எப்படி தங்கத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வரமுடியும். ஹென்னா பவுடரில், சாக்கிலெட்டில், மனித உறுப்புகளில், மிஷனரி பார்ட்ஸ் என்ற வகைகளில் கொண்டு வருகிறார்கள் என்றால், அதனைக் கண்டுபிடிக்கும் திறமை வேண்டும். வேலைசெய்பவர்களிடத்தில் அந்த அறிவு, ஞானம், நேர்மை போன்ற உணர்வுகள் உள்ளவர்களால் தான் அது முடியும். இப்பொழுதுள்ள சமூக-அமைப்புகளில் உள்ள நேர்மையற்றத் தன்மைகளை மாற்றினால் தான், இந்தியாவை மாற்ற முடியும்.

நீதிமுறை அழுக்குகள்ஐந்திய சமுதாயத்தை சுத்தப்படுத்த வேண்டும்: சுத்தம் வேண்டுமானால், அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். உடல்-மனம் இரண்டையும் சுத்தப் படுத்த வேண்டும் என்பதுப்போல, இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டுமானால், இந்தியர்களை சுத்தப் படுத்த வேண்டும், ஏனெனில், அவர்கள் பற்பலவிதமான அழுக்குகளோடு, நுற்றுக்கணக்கான ஆண்டுகளில் அசுத்தமாக இருந்துகொண்டிருக்கிறார்கள். முகமதியம், ஐரோப்பியம், கிருத்துவம், கம்யூனிஸம் என்ற சித்தாந்தளினால் ஏற்பட்ட கறைகளும், அழுக்குகளும் ஏராளம். சுதந்திரம் வந்தபிறகும் ஆங்கில ஆட்சிமுறையைப் பின்பற்றி வருவதால், அவர்களுடன் கூடிய அசுத்தங்களும் அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அவர்கள் ஏதோ ஆட்சிமுறையினைக் கொடுத்தார்கள் என்று பீழ்த்திக் கொண்டாலும், உள்ள ஆட்சிமுறையினைக் கெடுத்தார்கள் என்றாகியுள்ளது. அவர்கள் காலத்தில் ஆட்சியாளர்களுக்கு, இந்தியர்களுக்கு என்று இரட்டை நீதி-சட்டங்கள் இருந்தன. அதே முறைதான் இப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சட்டங்கள் ஒன்றாக இருப்பதினால், அவைகளில் ஓட்டைகள் போடப்படுகின்றன, வளைக்கப்படுகின்றன, முடியவில்லை என்றால், மாற்றப்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 08-03-2015

[1]  தினகரன், சுங்கவரி வசூலில் முறைகேடு: திருச்சி ஏர்போர்ட்டில் சி.பி. அதிரடி சோதனை, சனிக்கிழமை, 07-03-2015: 01:21:11.

[2] http://m.thehindu.com/news/cities/Tiruchirapalli/cbi-searches-customs-wing-at-tiruchi-airport/article6968065.ece/?secid=12614

[3] Further investigations revealed that five customs officials – two superintendents Sivaswamy and Ravikumar, three inspectors Dinesh Prajapati, Suresh Kumar, Avijit Chakraborthy had been accepting bribes and not levying requisite duty for dutiable goods being brought by passengers from various countries through the airport.

http://timesofindia.indiatimes.com/city/trichy/CBI-arrests-six-including-five-customs-officials-on-graft-charges/articleshow/46489295.cms

[4] தமிழ்.ஒன்.இந்தியா, சுங்கவரியில் முறைகேடு: திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ திடீர் ரெய்டு– 6 பேர் கைது, Posted by: Mathi, Updated: Saturday, March 7, 2015, 12:23 [IST]