மூலிகை பெட்ரோல் மோசடியில் ராமர் பிள்ளை மற்றும் நான்கு பேருக்கு சிறை தண்டனை, பெனால்டி!
மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் கலப்பட பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு சிறைதண்டனை: மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் கலப்பட பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக சி.பி.ஐ. போலீசார் தொடர்ந்த வழக்கில் ராமர்பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[1]. கடந்த 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்துள்ளதாக ராமர் பிள்ளை என்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்[2]. அவர் கண்டுபிடித்ததாக கூறிய மூலிகை பெட்ரோல் மூலம் வாகனங்களையும் ஓட்டி காட்டினார். தன் மனைவியை பின்னால் உட்கார வைத்து, ஓட்டிக் காட்டினார். ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள் என்ற பெயரில் அவர் குறிப்பிட்ட பெட்ரோலை குறைந்த விலைக்கு விற்று ரூ.2.27 கோடி வரை சம்பாதித்ததாக தெரியவந்தது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்காரர்கள் என்று அவர் பேச்சை நம்பி, பணம் மற்றும் இதர உதவிகளை செய்ய முன்வந்தனர். “தமிழன் கண்டுபிடிப்பு” என்று உணர்ச்சிகரமான பிரச்சாரங்களும் செய்யப்பட்டன.
மூலிகை பெட்ரோல் அல்ல என்று சோனை மூலம் தெரிய வந்தது: இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றனர். சோதனை கூடத்தில் பரிசோதனை செய்தபோது, ரசாயன கலவைதான் அது, மூலிகை அல்ல என்று தெரியவந்தது. அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை “மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி, ‘ராமர் பெட்ரோல்’ ‘ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள்’ என்ற பெயர்களில் விற்பனையில் இறங்கினார்[3]. இதுவும் சட்டநுணுக்கங்களிலிருந்து தப்பிக்கத் தான் என்று தெரிகிறது, ஏனெனில், பெட்ரோல் தயாரிப்பு, சுத்தகரிப்பு, சேகரிப்பு, வைப்பு, விற்பன முதலியவை மத்திய மற்றும் மாநில சட்டதிட்டங்களுக்குட்பட்டவையாகும்.
ராமர் பையோ பியூயல் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி ஆரம்பித்தது (1998): நவம்பர் 5, 1998 அன்று, ரூ.2 கோடி மூலதனத்துடன் ராமர் பையோ பியூயல் பிரைவேட் லிமிடெட் [Ramar Bio Fuel Private Limited] என்ற கம்பெனி, L-5, கிண்டி தொழிற்பேட்டையில் ஆரம்பிக்கப் பட்டது[4]. அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார்[5]. ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருள் ஐஎஸ்ஐ தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின[6]. குறிப்பாக இஞ்சின் பழுதாகின. சோதனையிட்டதில் கலப்பட பெட்ரோல், எரிபொருள் உபயோகப்படுத்தப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், பலர் அவர் மீது புகார் செய்தனர். புகார்கள் அதிகமானதால், சிபிஐ விசாரணையும் கோரப்பட்டது. பின்னர், தவறான தகவல்களை கூறி எரிபொருளை விற்பனை செய்து ரூ.2.27 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது[7].
ராமர் பிள்ளை மீது வழக்குப் போடப்பட்டது: ராமர் பிள்ளை தயாரித்து விற்பனை செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல என்றும், டொலூயீன், பென்சின் மற்றும் நாப்தா என்ற பெட்ரோலிய பொருட்கள் மூலம், ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் மோசடி பெட்ரோல் தயாரித்து விற்பதாக சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்தனர். மேற்கண்ட பெட்ரோலிய பொருட்களில் வாகனம் ஓட்ட முடியாது. அது சட்டப்படி குற்றம் ஆகும். அப்போது, சி.பி.ஐ. தென் மண்டல இணை இயக்குனராக பணியாற்றிய முகர்ஜி உத்தரவின்பேரில் சி.பி.ஐ. போலீசார், ராமர் பிள்ளை மீது, சட்டவிரோதமாக கலப்பட பெட்ரோல் தயாரித்து, அதை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்து ரூ.2.27 கோடி மோசடியாக சம்பாதித்ததாக வழக்கு போட்டனர்[8]. ராமர் பிள்ளை அப்போது கைது செய்யப்பட்டார்.
- ராமர்பிள்ளை,
- அவரது வளர்ப்பு தாயார் வேணுதேவி
- சின்னச்சாமி,
- ராஜசேகரன்,
- எஸ்.கே. பரத்
ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீசார், சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[9]. சுமார் 16 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நேற்று ராமர் பிள்ளை உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[10]. மாஜிஸ்திரேட்டு பாலசுப்பிரமணியம் இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தக்க நேரத்தில் சரியான, நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கு போட உத்தரவிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜி கூறினார்[11]. ஆனால், கடந்த ஆண்டுகளில், இவர் அடிக்கடி தன்னுடைய எரிபொருள் பற்றி, விளம்பர யுக்தியில் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார்.
© வேதபிரகாஷ்
15-10-2016
[1] தினத்தந்தி, மூலிகை பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 15,2016, 12:25 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 15,2016, 3:45 AM IST
[2] http://www.dailythanthi.com/News/India/2016/10/15002536/Rama-pillai-is-3-years-imprisonment.vpf
[3] தி.இந்து, ‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Published: October 15, 2016 08:01 ISTUpdated: October 15, 2016 13:22 IST
[4] RAMAR BIO FUEL PRIVATE LIMITED – Indian Non-Government Company with identification number U23201TN1998PTC041375. It was registered on 05 November 1998 and now is Under Process of Striking off. Directors are . Registered address: INDIA, Tamil Nadu -, CHENNAI-32, CHENNAI-32, L- 5 INDUSTRIAL ESTATEGUINDY. Corporate e-mail address: – http://informix.in/ramar_bio_fuel_private_limited_chennai/1049178/
[5] தமிழ்.ஒன்.இந்தியா, மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம், By: Karthikeyan, Published: Friday, October 14, 2016, 18:49 [IST].
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/ramar-pillai-gets-3-years-prison-264971.html
[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/article9222812.ece
[8] தமிழ்.வெப்துனியா, ‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 14th October 2016.
[9] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/herbal-petrol-fraud-3-years-prison-for-ramar-pillai-116101500005_1.html
[10] தினமணி, ‘மூலிகை பெட்ரோல்’ மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Last Updated on : 14th October 2016 08:09 PM
[11]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/14/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2581026.html?pm=home