Posts Tagged ‘பிஜேபி’

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ஒக்ரோபர் 15, 2016

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ramar-herbal-petrol-bjp-support-aug-2016

ஆகஸ்ட் 2016ல் வெளியிட்ட அறிக்கை[1]: தனது மூலிகைப் பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும் என ராமர்பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, சிறிய அளவில் தொழிற்சாலை அமைத்து வெற்றிகரமாக டீசலுக்கு மாற்றாக மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆகஸ்ட் 14ம் தேதி மூலிகை பெட்ரோலை ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருவதாக ராமர்பிள்ளை தெரிவித்தார். தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால் அது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கே என்றும் ராமர் பிள்ளை தெரிவித்தார். தாம் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்சனை ஆக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு தான் அளித்த விலை என்பது தனது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது தான் என்று ராமர்பிள்ளை கூறினார். டிசம்பர் மாதத்திற்குள்ளாக பெட்ரோல் விலை ரூ.10-ஆக குறையும் வகையில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்[2].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-1

தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாக கூறியது (ஆகஸ்ட் 2016):  வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இவ்வாறு கூறியதை பலர் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இருக்கும் நிலையில் மோடி நேரிடையாக பார்வையிட்டு ஆதரவு அளித்தார் என்பது, எவ்வளவு பெரிய பொய் என்பது தெரிகிறது. கூட ராணுவ அமைச்சர் பாரிகரையும் சேர்த்தது, மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டது எல்லாம் கொடுமைதான்! நிச்சயமாக தனது செயல்களில் குற்றம் இருக்கிறது எனும்போது, உண்மையினை ஒப்புக் கொள்ளாமல், மேன்மேலும், இவ்வாறு, பொய்களை சொல்லி பேட்டி கொடுப்பது முதகிய செயல்கள் விளம்பரத்திற்காக மற்றும் தனது தொடர்புகளைக் காட்டிக் கொள்ள முயன்றதாகத் தான் தெரிந்தது.

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-2

1996-2000 ஆண்டுகளில் அரசியல் ஆதரவுடன் கம்பெனி ஆரம்பிக்கப் பட்டது: ராமர் பிள்ளை ஏமாற்று விற்பனை திட்டத்திற்கு பல பணாக்காரர்கள் மற்றும் அதிகாரம் கொண்ட நபர்களின் உதவி பின்னணியில் இருந்தது. 1999-2000 காலக்கட்டத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. 1996லேயே, சென்னை ஐ.ஐ.டியில் சோதனையின் போது, அது பெட்ரோல் அல்ல, ரசாயனங்கள் கலந்த கலவை, போலி என்று தெரிய வந்தது[3].  ஏப்ரல் 2000ல், சிபிஐ விசாரணை மேற்கொண்டபோது, தனுஷ்கோடி ஆதித்தனே [former Union Minister and Tamil Maanila Congress leader, Mr. Dhanushkodi Adityan] ரூ.15 லட்சம் கொடுத்ததாக தெரிய வந்தது[4]. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், முன்பு மத்திய அமைச்சராக இருந்தவர். அதுமட்டுமல்லாது, இவரது கண்டுபிடிப்பிற்கு, பதிவு எண்ணை வாங்கிக் கொடுக்கவும் [a patent application (2274/MAS/97) on October 14 1997 ] உதவியுள்ளார்[5]. மார்ச் 1999 அன்று சென்னை ஓட்டலில் பாராட்டு விழா ஏற்பாடு செய்தபோது, அப்பொழுதைய முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்[6]. போதாகுறைக்கு, “சுவதேசி” ரீதியில், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் ஆதரவும் இருந்தது[7].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-3

மே.2010ல் ராமர் பிள்ளைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன[8]: மோசடியில் கைதான ராமர் பிள்ளையை, லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் “ஓபன் மாகஸைன்” நிருபர் பேட்டி கண்டு, விவரங்களை வெளியிட்டார். இவரது கண்டுபிடிப்பை மெச்சி, தமிழக முதல்வர் கருணாநிதி, தொழிற்சாலை தொடங்கள் இலவசமாக இடம், ஆராய்ச்சி செய்ய நிதியுதவி எல்லாம் கொடுப்பதாக அறிவித்தார். 2000ல் இவரது மூலிகை பெட்ரோல் ஊற்றி ஓடிய வண்டிகள் பழுதடைந்தன, குறிப்பாக இஞ்சின்கள் பாழாகின. ஆனால், தான் கண்டுபிடித்ததை, மற்றவர்கள் அபகரிக்கவே இவ்வாறு செய்கிறார்கள் என்றார். 2008ல் ஐவான் கிரிஸ்டியன்சென் என்பவர் தன்னுடைய கண்டுபிடிப்பை பாராட்டினார் என்றார். ஆனால், “ஓபன் மாகஸைன்” அவரை தொடர்பு கொண்டபோது, தப்பாகி விட்டது, என்று ஒப்புக் கொண்டார், தனது வாழ்க்கையில் அவ்வாறு தவறாகி விட்டதற்காக வருத்தமும் தெரிவித்தார்[9].

toi-23-09-2010-herbal-fuel-inventor-back-with-a-new-claim

செப்டம்பர் 2010ல் மறுபடியும் அறிக்கை விட்ட ராமர் பிள்ளை[10]: ஒரு ஊடக சந்திப்பின் போது, மறுபடியும் ரூ.5/- க்கு பெட்ரோல் கிடைக்கும் என்று அறிவித்தார். “15 கிராம்ஆம்மோனியம் குளோரைட், 15 கிராம் மரத்தூள், 15 கிராம் யீஸ்ட் இவற்றை சேர்த்து வைத்தால், நுண்ணியுர்களால், பொங்கி வரும். இதனை 78 டிகிரிக்கு சூடேற்றி, பிறகு, அதனை வடிகட்டினால், வரும் திரவத்தை, ஒரு லிட்டர் நீரைச் சேர்த்து குளுக்கி வைத்தால், துகள்கள் கீழே சென்று, மேலே திரவம் நிற்கும். அதுதான் வேலார் ஹைட்ரோ கார்பன் எரிபொருள் ஆகும்”, என்று விளக்கினார்[11]. மார்ச் 2000ல் வெளி மார்க்கெட்டில் ரசாயன பொருட்களை வாங்கி, “மூலிகை பெட்ரோல்” என்று ஏமாற்றுகிறார் என்று கைது செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இவ்வாறு அறிக்கைகள் விட்டதும் வியப்புதான். பெட்ரோல் என்றாலே பாறையெண்ணை அதாவது, இயற்கையில்லேயே பூமிக்கடியில் உருவான எண்ணையாகும். ஆனால், அதனையே, நேரிடையாக உபயோகப்படுத்த முடியாது. அதனை பல அடுக்குகளில் சுத்தப்படுத்தி, பெட்ரோல் டீசல், என்று தயாரிக்கிறார்கள். அதற்கு பெரிய எண்ணை ஆலை தேவைப்படுகிறது. எனவே, சாதாரணமாக இப்படி கலந்து தயாரிக்கலாம் என்பதே விஞ்ஞான பூர்வமாக இல்லை என்பது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

15-10-2016

ramar-pillai-gets-3-years-ri-15-10-2016

[1] நியூஸ்.7.டிவி, இந்தியாவில் விரைவில் ரூ.10-க்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்” : ராமர்பிள்ளை நம்பிக்கை, August 02, 2016.

[2] http://ns7.tv/ta/herb-petrol-will-come-soon-says-ramar-pillai.html

[3]  In September 1996, during a validation experiment organised by the Department of Science and Technology (DST) at IIT, Chennai.

[4] The Hindu, Ramar Pillai had powerful patrons, By Mukund Padmanabhan, Tuesday, April 25, 2000. http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[5] Among other things, Mr. Adityan had arranged a house in Chennai’s Alwarthirunagar for Pillai and helped the now disgraced “scientist” register a patent application (2274/MAS/97) on October 14 1997 at the Patent Branch Office, Chennai.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[6] http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[7] In March 1999, at a function to celebrate the commercial launch of “Ramar Fuel” in a Chennai hotel, the guest of honour was no less than Chief Minister, Mr. M. Karunanidhi’s wife, Ms. Rajathiammal. As for Pillai’s powerful friendships within the RSS – some of whose members obviously regarded him as a swadeshi scientist – they are much too well-documented to bother elucidating.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[8] The Open Magazine, The Herbal Fuel Druid, 29 May 2010

http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[9]  In a 2008 letter, Christensen wrote: ‘Ramar has demonstrated several quick methods for producing bio-fuel. The fuel burned readily, and there is no doubt that plenty of fuel can be produced at low price. For this reason, his discovery is unique, and Ramar deserves some worldwide reputation, eg. By Nobel Prize.’ Contacted by Open, Christensen acknowledges the letter, but adds that he got carried away when he saw the experiments first hand. “We all make mistakes,” he says, “I think it was one of them. I’m afraid it is a blot on my scientific career.” http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[10] Times of India, Herbal fuel inventor’ back with a new claim, TNN | Sep 23, 2010, 12.25 AM IST

[11] He says his concoction when mixed with water and heated to 78 degrees Celsius turns into an inflammable bio-fuel that gives a smokeless blue flame. “The mixture is 15 gm ammonium chloride, 15 gm sawdust and 15 gm yeast. It is fermented and distilled. Then I mix it with a litre of water and shake it a bit. See how the water settles at the bottom. I call it Velar Bio Hydrocarbon Fuel,” he says.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Herbal-fuel-inventor-back-with-a-new-claim/articleshow/6609627.cms

 

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது – தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?:

செப்ரெம்பர் 26, 2015

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?:

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?: மேற்கு வங்க ஹவாலா கும்பல், பெருமளவு பணத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி உள்ளனர். கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் ஹவாலா பணம் அனுப்பியுள்ளனர். இந்த பணம் கராச்சியில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் ஆட்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.5,000 கோடி அளவுக்கு பணம் கடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1175 செல்போன் மற்றும் போன் நம்பர்களை ஆய்வு செய்தனர். அப்போது 305 எண்கள் இந்தியாவில் இருந்து பேசப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த டெலிபோன் உரையாடல்கள் மூலம் தாவூத் இப்ராகிம் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்[1]. பணத்தை எண்ணுவதற்காக அருகில் இருந்த எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பணம் எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டன. பின்னர் டிரங்க் பெட்டிகள் வாங்கி வரப்பட்டு, அதில் வைத்து பணம் கொண்டு செல்லப்பட்டது. அடுத்த மாதம் பீகார் மாநில தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு விநியோகம் செய்யப்படுவதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது[2]. இந்திய கரன்ஸியாகவா துபாய்க்கு போகும்?

Santiago martin - DMK clout

Santiago martin – DMK clout

யார் இந்த மார்ட்டின்மார்டின் புராணம்[3]: திருவல்லிக்கேணியில் லாட்டரி டிக்கெட் விற்றுவந்த சான்டியாகோ மார்டின் இன்றும் லாட்டரி தொழிலில் படு பிசிதான். வடகிழக்கு மாநிலங்களில் மார்டின் சென்றால் அமோக வரவேற்பு தான். ஒரு கவர்னருக்குக் கூட அந்த அளவிற்கு மரியாதை, மதிப்பு இருக்காது என்று மக்கள் சொல்கிறார்கள். “எஸ்.எஸ்” பெயரில் டிவி செனல்[4], ஆன்-லைன் லாட்டரி முதலியவற்றில் கோடிகளை அள்ளி அவற்றை, நிலத்தில் போட்டு, செல்வத்தை வளர்க்கும் வித்தைக்காரர்[5].

* மார்ட்டின், போலி லாட்டரி விற்பனையின் சூத்திரதாரி என, அழைக்கப்படுபவர்.

* தமிழகத்தில், 2003ல், லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதும், பிற மாநிலங்களில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

* சினிமா பட தயாரிப்பு நிறுவனம் துவங்கி, தி.மு.க., தலைவர் கருணாநிதி வசனத்தில், ‘இளைஞன், பொன்னர் – சங்கர்’ போன்ற, திரைப்படங்களை தயாரித்தார்.

* தி.மு.க., ஆட்சியில், லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் கொண்டு வர பல விதங்களில் முயற்சி செய்தார்.

* ‘ஆன் – லைன்’ வியாபாரம், ‘லாட்டரி இன்சிடர்.காம்’ என்ற இணையதளம் வாயிலாகவும் லாட்டரி விற்பனையை நடத்தி வந்தார்.

* மகாராஷ்டிரா, சிக்கிம், நாகாலாந்து, பஞ்சாப், மேகாலயா மாநிலங்களில், லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் உரிமம் பெற்று இருந்தார்; பூடான் லாட்டரியின் அகில இந்திய ஏஜன்டாகவும் செயல்பட்டார்.

* கோவையில், மனைவி பெயரில் ஒரு துணிக்கடை, செவிலியர் கல்லுாரி மற்றும், ‘மார்ட்டின் புரமோட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தினார்.

* ஆண்டுக்கு, 7,200 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் இவர், 2008ல், 2,112 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தவில்லை என, வருமான வரித்துறை சுட்டிக் காட்டியது.

* கடந்த, 2011ல், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதம் சிறையில் இருந்த பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது அதிகாரத்தில் உள்ள சில, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் தொடர்பில், மார்ட்டின் மற்றும் அவர் குடும்பத்தினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

August 2011 - Santiago arrested in Salem for land grabbing case.3 DM

August 2011 – Santiago arrested in Salem for land grabbing case.3 DM

மார்டின் நிகழ்வு” (Martin phenomenon): அந்நிலையில் லாட்டரி சீட்டு விற்றே மில்லியனரான சாண்டியகோ மார்டின் சென்னையில்தான் உண்டு[6]. கே.ஏ.எஸ். ராமதாஸையும் மறந்திருக்க முடியாது. “மார்டின் நிகழ்வு” (Martin phenomenon) என்பது நிச்சயமாக ஒரு அதிசயமானதுதான். ஆகையால்தான் உதாரணத்திற்காக அது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அதைச் சுற்றி மற்ற விஷயங்களும் வருகின்றன. மார்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பெரிய தாதா, இல்லை அதற்கும் மேலே. இந்திய ஜனாதிபதி-பிரதம மந்திரிக்குக் கூடக் கிடைக்காத மரியாதை மார்ட்டினுக்குத் தான் கிடைக்கும். அதே போல தமிழகத்திலும் மரியாதை, அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. கருணாநிதி ஆட்சியின் ஆரம்பத்தில் மார்ட்டினை விசாரிக்கும் படலம் ஆரம்பித்தது[7].

Santiago Martin, his son etc with Karunanidhi

Santiago Martin, his son etc with Karunanidhi

வரி ஏய்ப்பிலும் மார்டினின் கம்பெனிகள் சம்பந்தப் பட்டுள்ளன[8]. பர்மாவிலிருந்து வந்த மார்டின் சட்டத்திற்கு புரம்பாக லாட்டரி சீட்டு விற்பனை நடத்தி சம்பாதித்துள்ளது ரூ. 7200 கோடிகளாம்! இரண்டு  முறை சட்டரீதியில் நடவடிக்கை எடுத்தும், குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டும் சுதந்திரமாக திரிந்து வருவதுதான் மார்டினின் திறமை. அது மட்டுமல்லாது, FICCI எனப்படுகின்ற இந்தியாவின் பிரதம வியாபார நிறுவனத்தின் அங்கமான அனைத்திந்திய லாட்டரி வியாபார மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்துறை கூட்டமைப்பு (All India Federation of Lottery Trade and Allied Industry) என்பதில் அபரீதமான பங்கு வகிப்பதும் தெரிந்த விஷயமே[9].

Ram Madhava, Santiago Martin son and Singh

Ram Madhava, Santiago Martin son and Singh

சான்டியாகோ மார்ட்டினின் அரசியல் பின்னணி: ஆரம்ப காலங்களில் சென்னையில் லாட்டரி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, திராவிட கட்சிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் சான்டியாகோ மார்டின். கருணாநிதி எழுதிய இரண்டு படங்களை இவர் எடுத்துள்ளார். இவரது மனைவி லீமா ரோஸ், பாரி வேந்தரின் ஐ.ஜே.கே.வில் உள்ளார். மகன் பிஜேபியில் சேர்ந்துள்ளார்.

leema-rose- wife of Santiago Martin

leema-rose- wife of Santiago Martin

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவில் சேர மார்ட்டின் முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்க்கக் கூடாது என தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் மார்ட்டினின் மகன் சார்லஸ் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் புகைப்படமும் வெளியானது. ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பெரும்பாலானோருக்கே தெளிவான தகவல்கள் தெரியவில்லை. அவர்களும் ஊடகங்கள் வாயிலாகவே இந்த தகவலைப் பெற்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தி நியூஸ் மினிட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், சார்லஸ் மார்ட்டின் பாஜகவில் சேர்ந்ததை உறுதி படுத்தியுள்ளார்[10]. மேலும், ‘சார்லஸ் மீது வழக்குகள் எதுவும் இல்லை. அதோடு அவர் பாஜகவில் இணைந்து சமுதாயப் பணி செய்ய விரும்புகிறார். எனவே, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு?’ எனக் கேள்வி எழுப்பினார்[11].

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] விகடன்.காம், தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5,000 கோடி ஹவாலா பணம் கடத்தல்: விசாரணையில் தகவல்! Posted Date : 15:17 (26/09/2015); Last updated : 15:17 (26/09/2015)

[2] மாலைமலர், கொல்கத்தாவில் லாட்டரி ஏஜெண்டு மார்ட்டின் வீடுகளில் ரூ.100 கோடி சிக்கியது: பீகார் தேர்தல் செலவுக்கு பதுக்கலா?, மாற்றம் செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 10:41 AM IST;பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 8:20 AM IST.

[3] தினமலர், மூடை மூடையாக பணம் கடத்த திட்டம்: லாட்டரி அதிபர் மார்ட்டினை தேடும் போலீஸ், செப்டம்பர்.25, 2015. 22.42.

[4] http://www.ssmusic.tv/

[5] https://lawisanass.wordpress.com/2011/08/13/lottery-king-santiago-martin-arrested/

[6] SS-TV, SS-Lottery, Sur-Sangeet, etc., are owned by Santiago Martin. The ultra-modern offices at Chennai have been attraction to everybody, as everyday sleezy girls used come, while away time outside, before and after attending duty. Many sigh heavily when such girls go away in bikes with boys, who either used to come there to pick-up or come-and-go-together!

[7]டெலிவிஷன்–பாயின்ட், SS Music’s Santiago Martin in trouble over lottery business, http://www.televisionpoint.com/news2007/newsfullstory.php?id=1192264947

[8]  In a very recent decision in Union of India Vs. Martin Lottery Agencies Ltd. (2009-VIL-01-SC-ST), the Supreme Court had occasion to deal with some fundamental principles relating to taxation of services. http://www.business-standard.com/india/news/service-taxsalelottery-tickets/357677/

[9] http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne130210the_trader.asp

[10]  ஒன்.இந்தியா, லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் பாஜகவில் சேர்ந்ததில் என்ன தவறு? – கேட்கிறார் தமிழிசை, Posted by: Jayachitra, Published: Wednesday, June 24, 2015, 13:52 [IST].

[11] http://tamil.oneindia.com/news/india/lottery-martin-s-son-joins-bjp-229502.html

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது?

செப்ரெம்பர் 26, 2015

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது?

August 2011 - Santiago arrested in Salem for land grabbing case

August 2011 – Santiago arrested in Salem for land grabbing case

பில்லியனர் சான்டியாகோ மார்டின்: கோவையை சேர்ந்த சான்டியாகோ மார்ட்டின், பல ஆண்டு காலமாக லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  இவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் லாட்டரி விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான உரிமம் பெற்றுள்ளார். தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கேரளா, மேற்கு வங்கம் மற்றும்  மேகலாயா, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களை மையமாக வைத்து இவரது லாட்டரி தொழில் நடைபெற்று வருகிறது. கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி நடத்துதல், விற்பனை மற்றும் விநியோகத்தில் முறைகேடு செய்ததாக மார்ட்டின் மீது 32 வழக்குகள் உள்ளன. இது பற்றி 7 வழக்குகளில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணை நடத்தி வருகிறது தமிழ்நாட்டில் மார்ட்டின் மீது பல நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவர் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு லாட்டரி சாம்ராஜ்யம்  நடத்தும் மார்ட்டின்,  கடந்த 2011ஆம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை எழுதிய இரு படங்களை  தயாரித்தார். லாட்டரி தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாக  8 மாதங்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்[1].

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

வருமானவரி துறை சான்டியாகோ கம்பெனிகளில் சோதனை: மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும் மற்றும் சில இடங்களிலும் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழ்நாடு வரை இது பரவி இருப்பதாகவும், இதில் கோடிக்கணக்கான பணம் புழங்குவதாகவும் மத்திய புலனாய்வு துறையினர் மூலம் வருமான வரி துறையினருக்கு தகவல் கிடைத்தது[2]. வருமானவரி துறையினர் கீழ்கண்ட இடங்களில் சோதனையிட்டனர்[3]:

  1. ஜெனெரெல் சிஸ்டெம் [General System]
  2. பியூச்சர் பிலேன் என்டர்பிரைசஸ் [Future Plan Enterprisestwo South Kolkata based companies],
  3. எஸ். நாகார்ஜுனா [S Nagaarjuna] வீடு மற்றும்
  4. சான்டியாகோ மார்டீன் [Santiago Martin] வீடு
  5. ஜி. சிஸ்டம்ஸ் [G . Systems]
  6. எப். பி. என்டர்பிரசஸ் [ F. P. Enterprises]

மார்டின் காணவில்லை என்றும்,  எக்ஸ். அலெக்ஸ்சாந்தர் [X Alexander] என்பவரிடம் விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிகிறது[4]. மேற்கு வங்கத்தில் தமிழக லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. 25-09-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் மார்ட்டினுக்கு சொந்தமான இடத்தில் வருவாய்த்துறையும், அமலாக்கத் துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்[5].

Crores seized from Martins house - but he was missing DM Sep.2015

Crores seized from Martins house – but he was missing DM Sep.2015

கொல்கொத்தாவிலிருந்து கோடிகள் பறிமுதல்: கொல்கத்தாவில் பல வீடுகளை வாடகைக்கு எடுத்து, மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனம் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. அப்படி மேற்கு கொல்கத்தா பகுதியில், முன்னாள் நீதிபதி ஒருவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். அந்த வீட்டில் இருந்து நேற்று 54 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதுபோல் தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 21 கோடியும், சிலிகுரியில் மார்ட்டின் நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் இருந்து 29 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் 104  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது[6]. சிலிகுரி என்ற இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், ரசீதுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின[7].

the curios case of Santiago Martin

the curios case of Santiago Martin

தமிழகத்தைச் சேர்ந்த எஸ். நாகராஜன் என்பவர் கைது: இதில், சாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.1,000 கோடி பணம் சிக்கியது. இது தொடர்பாக மார்ட்டினுக்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்ந்த எஸ். நாகராஜன் என்பவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், நாகராஜன் லாட்டரி விற்பனையுடன் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகராஜனின் பாஸ்போர்ட்டை கைப்பற்றிய அதிகாரிகள், அவர் எந்தெந்த வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகராஜன் பல வருடங்களாக போலி லாட்டரி நடத்தி, பொது மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி மோசடி செய்து இருக்கலாம். இந்த மோசடி பணத்தின் மூலம் ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்[8]. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர், மேற்கு வங்காளத்தில் அலுவலகங்கள் நடத்தி வருவதை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்[9]. மத்தியபிரதேச மாநிலத்தில் சிலரது வங்கி கணக்குகளில் திடீர் என்று லட்சக்கணக்கில் பணம் போடப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்த போது, அவர்கள் லாட்டரியில் விழுந்த பரிசு பணம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஹவாலா பணத்தை லாட்டரி பரிசு பணம் என்று சொல்லி வங்கியில் டெபாசிட் செய்து இருப்பது தெரிய வந்திருக்கிறது[10].

SS TV channel - Santiago Martin

SS TV channel – Santiago Martin

தமிழ்நாட்டில் இருந்து மே.வங்கத்திற்கு ஹவாலா பணம் போவது ஏன்? வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது எப்படி?: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, வங்கதேச நாட்டுக்கு எளிதில் பணத்தை கடத்த முடிகிறது. அங்கிருந்து அரபு நாடுகளுக்கு பணம் எளிதில் பரிமாறப்படுகிறது[11]. துபாயிலுள்ள தாவூத் கும்பல் இந்த பணத்தை பெற்று ஐபிஎல் போன்ற விளையாட்டுகளின்போது சூதாட்டத்திற்கு பயன்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது. மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது[12]. தமிழகத்தில் பதுக்கி வைத்துள்ள, ரூபாய் நோட்டு மூட்டைகளை அவர், கன்டெய்னர் மூலம், பிற மாநிலங்களுக்கு கடத்த இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது[13]. இதுபற்றிய தகவலை தமிழக போலீசாருக்கு தெரிவித்து, அவர்களை உஷார்படுத்தி உள்ளோம், இவ்வாறு மத்திய உளவு போலீஸ் வட்டாரங்கள் கூறின[14].

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] http://www.maalaimalar.com/2015/09/25082004/Raid-of-lottery-companies-Rs-1.html

[2] http://www.dailythanthi.com/News/India/2015/09/25045505/Rs-45-crore-seized-in-a-raid-on-the-lottery-companies.vpf

[3] The CBDT officials with the help of Special Task Force of Kolkata Police carried out raids at two South Kolkata based companies, General System and Future Plan Enterprises, and at S Nagaarjuna and Santiago Martin. The operation was carried out in early hours based on inputs provided by IB about an alleged fake lottery racket which has its tentacles spread upto Tamil Nadu. A highly-placed Kolkata police officer said various teams, consisting of members of STF and its anti-bank fraud section, helped the tax department sleuths conduct the raids at five places in the city. “Raids are being conducted at four places in New Alipore police station limits and one on Sarat Bose Road area today,” the officer said. They said the teams, comprising about 100 members including local police, had to deploy about a dozen counting machines to estimate the cash recovered from two firms identified as G Systems and F P Enterprises.

http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA4NzEzNA%3D%3D

[4] http://indianexpress.com/article/cities/kolkata/hawala-crackdown-rs-80-crore-recovered-dawood-link-under-lens/

[5] விகடன்.காம், லாட்டரி மன்னன் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ஒரேநாளில் ரூ. 100 கோடி பறிமுதல்!, Posted Date : 12:23 (25/09/2015) Last updated : 12:23 (25/09/2015).

[6] http://www.vikatan.com/news/article.php?aid=52865

[7]  தினத்தந்தி, 16 சாக்கு மூட்டை, 27 சூட்கேஸ்கள் நிறைய கட்டுக்கட்டாக பணம் லாட்டரி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.45 கோடி சிக்கியது, மாற்றம் செய்த நாள்:வெள்ளி, செப்டம்பர் 25,2015, 4:55 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, செப்டம்பர் 25,2015, 4:55 AM IST.

[8] தமிழ்.இந்து, கொல்கத்தாவில் ஹவாலா மோசடி அம்பலம்: தமிழக தொழிலதிபர் குடோனில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல், Published: September 24, 2015 15:40 ISTUpdated: September 24, 2015 17:37 IST.

[9]http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7684994.ece

[10] http://www.vikatan.com/news/article.php?aid=52930

[11] http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-west-bengal-how-the-hawala-route-was-un-earthed-236511.html

[12] ஒன்.இந்தியா, தமிழ்நாட்டில் இருந்து மே.வங்கத்திற்கு ஹவாலா பணம் போவது ஏன்? வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது எப்படி?, Posted by: Veera Kumar, Published: Saturday, September 26, 2015, 13:56 [IST]

[13]  தினமலர், மூடை மூடையாக பணம் கடத்த திட்டம்: லாட்டரி அதிபர் மார்ட்டினை தேடும் போலீஸ், செப்டம்பர்.25, 2015. 22.42.

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350215