எல்.கே.அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முதலியோர் விடுவிப்பு – 2020ல் எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு 2022ல் தள்ளுபடி!
1992க்கு முன்புமற்றும் பின்பும் நடந்துள்ள சரித்திர-அகழாய்வு போராட்டங்கள்: பாபர் மசூதி-ராமஜன்மபூமி வழக்குகள் நீதிமன்றங்களில் பலமுறை, பல்லாண்டுகளாக நடைபெற்று வந்துள்ளன. “பாபர் மசூதி” மற்றும் “ராமஜன்மபூமி” பற்றியே நீதிமன்றத்திற்குள் நடந்த வாத-விவாதங்களை விட, நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த சர்ச்சைகள், வாத-விவாதங்கள், ஏன் சண்டைகள் அதிகம். அவையெல்லாம் சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு நிபுணர்கள், தொல்துறை வல்லுனர்கள், கல்வெட்டு பண்டிதர்கள் என்று பலவிதமான வித்வான்கள் செய்துள்ளனர். ஏகப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள், செய்திகள் என்று குவிக்கப் பட்டன. உலக அகழாய்வு மாநாடு-3 (World Archaeology Conference, WAC-3), இந்திய வரலாற்றுப் பேரவை (Indian History Congress, IHC) போன்றவையெல்லாம் அதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளன[1]. ஆனால், இவற்றில் குறிப்பிட்ட பாடத்துறையின் பாண்டித்தியம், நிபுணத்துவம் மற்றும் திறமை போன்றவற்றை விட, சித்தாந்தம், அரசியல், சித்தாந்தம் கலந்த சரித்திர வரைவியல் கோட்பாடுகள் முதலியவற்றால் பாதிக்கப் பட்டு, அவர்களைப் பிரித்து விட்டது. பொதுமக்களுக்கு உண்மையினை எடுத்துச் சொல்லத் தவறி விட்டது. அதனால், கடந்த முப்பது ஆண்டுகளில் அப்பிளவை சரிசெய்யவும் முடியாமல் இருக்கிறது எனலாம்.
சரித்திராசிரியர்கள் அரசியல்வாதிகள் ஆனது, சரித்திரம் தடுமாறியது: உச்சநீதி – உயர்நீதி மன்ற தீர்ப்புகள் வந்தபோது, ரோமிலா தாபர், இர்பான் ஹபீப் போன்றோரே மேல்முறையீடு செய்வோம் என்றெல்லாம் வீராப்பாகப் பேசி அமைதியாகி விட்டனர்[2]. இதனால், இந்திய அகழாய்வு, தொல்லியல், கல்வெட்டியல், சரித்திரத் துறைகளே பிளவு பட்டன எனலாம். அத்துறையினர் “மஸ்ஜித்/மசூதி-சரித்திராசிரியர்கள்” (Masjid historians) மற்றும் “மந்திர்/கோவில்- சரித்திராசிரியர்கள்” (Mandir historians) என்றே அடையாளம் காணப் பட்டனர். மேலும், உச்சநீதி மற்றும் உயர்நீதி மன்றங்களில் சரித்திராசிரியர்கள் அவ்வாறே பாரபட்சமாக சாட்சிகளாக வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளார்கள். நீதிபதிகள், “நீங்கள் நேரில் பார்த்தீர்களா, அல்வெட்டுகலைப் படித்தீர்களா, அகழாய்வு செய்தீர்களா,” என்றெல்லாம் குறுக்கு விசாரணையின் போது, கேட்டபோது, தாங்கள் அவ்வாறு செய்யவில்லை, சொல்லவில்லை, இன்னென்ன புத்தகங்களில் இருந்ததை சொன்னோம் என்றெல்லாம் கூறி தப்பித்துக் கொள்ளப் பார்த்தனர். அதாவது அவர்கள் எழுதிவைத்தார்கள்-சொன்னார்கள், நாங்கள் அவற்றைச் சொல்கிறோம் என்றனர். பொறுப்புள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் என்ற நிலைகளில் உள்ள அவர்களே அவ்வாறு பொய் சொன்னது அம்பலமானது. அவையெல்லாம் அவர்களது பாரபட்சத் தன்மையினை தோலுருத்திக் காட்டியுள்ளது. நீதிமன்றங்களும் அவர்களை கடுமையாக சாடியுள்லன, கண்டித்துள்ளன[3].
எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளை 09-11-2022 புதன்கிழமை அன்று தள்ளுபடி செய்தது[4]. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் 1992, டிசம்பர் 6-ஆம் தேதி[5] பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், பிரிஜ் பூஷண் ஷரண் சிங், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேர் மீது கிரிமினல் வழக்கு தனியாக நடைபெற்று வந்தது[6]. 1992லிருந்து, ஊடகங்கள், சித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், ஏன் சரித்திராசிரியர்கள் கூட, இவர்கள் பாபர் மசூதியை இடித்ததில் பங்கு கொண்டார்கள், சந்தோஷப் பட்டார்கள் என்றெல்லாம், புகைப் படங்கள் போட்டு விவரங்களை வெளியிட்டார்கள். அவர்களை மிகப்பெரிய குற்றவாளிகளைப் போலச் சித்தரித்து எழுதினார்கள்.
நேரிடையான ஆதாரங்கள் இல்லை: நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2020, செப். 30-ஆம் தேதி அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பு அளித்தது[7]. அதில், “பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது எடுக்கப்பட்டதாக நம்பப்படும் விடியோ பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றின் அசல்களை நீதிமன்றத்திற்கு முன்பு சமர்ப்பிக்கப் படவில்லை. அவை அசலானவை என்பதை நிரூபிக்கும் வகையில் நீதிமன்றத்தில் உண்மை ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆவணப் படத்தை ஆதாரமாக மட்டும் வைத்து இந்த வழக்கு முழுவதும் கட்டமைக்கப்பட்டுள்ளது. கரசேவகர்களுடன் பாபர் மசூதியை இடிக்கும் நோக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. இதை நீதிமன்றம் நம்புமுடியாது. பாபர் மசூதியை அவர்கள் திட்டமிட்டு இடிக்கவில்லை; தற்செயலாக நடந்துவிட்டது‘ என்று தெரிவித்தது[8].
2020ல் சில முஸ்லிம்கள் செய்த மேல் முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து அயோத்தியில் வசிக்கும் ஹாஜி மஹமூது அகமது, சையத் அக்லாக் அகமது ஆகியோர் அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளையில் 2020ல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில், “பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணையில் சாட்சிகளாக நாங்கள் இருந்தோம். உத்தர பிரதேச அரசும் சிபிஐயும் இந்த வழக்கில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றும், அதனால் நாங்கள் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் கூறுவது முற்றிலும் ஆட்சேபத்துக்குரியது. இவ்வழக்கு தொடர்பாக குற்றவாளிகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருந்தும்கூட விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்காமல் தவறு செய்துவிட்டது. ஆகையால், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தனர்.
09-11-2022 அன்று மேல் முறையீட்டு மனு தள்ளுபடி: இந்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததா என்பதை அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. மேல்முறையீடு செய்த இருவரும் பாபர் மசூதி வழக்கில் புகார்தாரர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ இல்லை என்பதால் இந்த மனுவை ஏற்கக் கூடாது என உத்தர பிரதேச அரசு, சிபிஐ, குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் ஒருவரான சம்பத் ராய் ஆகியோர் தரப்பிலும் வாதிடப்பட்டது[9]. செப்டம்பர் 5-ஆம் தேதி சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக். 31-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளையின் நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, சரோஜ் யாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து 09-11-2022 புதன்கிழமை அன்று உத்தரவிட்டது. அதில், “மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்த இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மனுதாரர்களுக்கு வழக்குடன் தொடர்பு இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட மனோஜ் குமார் சிங் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆடியோ-வீடியோக்கள் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள முடியுமா?: பொதுவாக ஆடியோ-வீடியோ போன்றவற்றை, இந்தியன் இவிடென்ஸ் ஆக்டில் (Indian Evidence Act) ஆதாரங்களாக எடுத்துக் கொள்வதில்லை. அவற்றின் உண்மைத் தன்மை சோதனைக் கூடத்தில் அறியப் பட்டு, அவற்றில் உள்ளவர்கள்-பேசியவர்களின் குரல்களை ஒப்பிட்டு உறுதி செய்யப் பட்டு, மற்ற ஆதாரங்களுடன் ஒப்பிட்டு, தொடர்பு படுத்தி, சரிபார்த்து மெய்ப்பித்தால் தான் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப் படும். வீரப்ப மொயிலி, 2-ஜி நீரா ராடியா டேப்புகள் முதலிய வழக்குகளில் அத்தகைய ஆதாரங்களை நீதி மன்றங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், இங்கு அவற்றில் நகல்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. நீதிமன்றம் எடுத்துக் காட்டியும், கேட்டும் ஒரிஜினல் / அசல் ஆடியோ-வீடியோக்கள் சமர்ப்பிக்கப் படவில்லை. இதனால் தான், நீதிமன்றம் அவற்றை ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளவில்லை.
© வேதபிரகாஷ்
12-11-2022.
[1] இம்மாநாடுகளில் தீர்மானங்கள் (Resolutions) போட, நிறைவேற்ற சண்டைகள், கை-கலப்புகள் எல்லாம் நடந்தது உண்டு. ஆனால், எந்த சரித்திராசிரியனும் வெட்கப் ப்டவில்லை / பட்டதில்லை.
[2] இவற்றைப் பற்றியெல்லாம், தி ஹிந்து (The Hindu), ஃபிரன்ட் லைன் (Frontline), பொருளாதாரம் மற்றும் அரசியல் மற்றிய வார இதழ் (Economic and Political weekly, EPW) போன்ற நாளிதழ்-சஞ்சிகைகளில் அதிகமாகவே காணலாம், படித்திருக்கலாம். அதிரடியாக அவர்களது பேட்டிகள், அறிக்கைகள் வெளிவந்து கொண்டே இருக்கும். ஆனால், அவ்வாறு அவர்கள் மேல் முறையீடு செய்தார்களா-இல்லையா போன்ற தகவல்கள் வராது.
[3] இவற்றைப் பற்றியும் ஊடகங்கள் அவ்வளவாக செய்திகளை வெலியிடவில்லை. செக்யூலரிஸத் தனமாக, விமர்சனங்களை வைத்ததோடு சரி.
[4] தினமணி, அத்வானி, 31 பேர் விடுவிப்பு: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு தள்ளுபடி, By DIN | Published On : 10th November 2022 03:09 AM | Last Updated : 10th November 2022 03:09 AM.
[5] இதை வைத்தும் நடத்திய, நடத்தி வரும் அரசியலை தெரிந்து கொள்ளலாம். சமீபகாலத்தில், இது கொஞ்சம் அடங்கியுள்ளது. முன்பெல்லாம், அதிக அளவில் கலாட்டா செய்யும் நிலையில், அதிகமான பாதுகாப்பு, சோதனை என்றெல்லாம் இருக்கும். முஸ்லிம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்துவர்.
[6] https://www.dinamani.com/india/2022/nov/10/hc-dismisses-plea-against-acquittal-of-advani-and-other-accused-in-babri-mosque-demolition-case-3946962.html
[7] நியூஸ்.7.தமிழ், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உட்பட 31 பேர் விடுவிப்பு, by G SaravanaKumarNovember 10, 2022.
[8] https://news7tamil.live/31-acquitted-including-advani-in-babri-masjid-demolition-case.html
[9] The trial judge had refused to believe newspaper cuttings and video clips as evidence as the originals of the same were not produced, while the entire edifice of the case rested on these pieces of documentary evidence. The trial judge had also held that the CBI could not produce any evidence that the accused had a meeting of mind with karsewaks who demolished the structure.