Archive for the ‘அழகிரி’ Category

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது – தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?:

செப்ரெம்பர் 26, 2015

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?:

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?: மேற்கு வங்க ஹவாலா கும்பல், பெருமளவு பணத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி உள்ளனர். கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் ஹவாலா பணம் அனுப்பியுள்ளனர். இந்த பணம் கராச்சியில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் ஆட்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.5,000 கோடி அளவுக்கு பணம் கடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1175 செல்போன் மற்றும் போன் நம்பர்களை ஆய்வு செய்தனர். அப்போது 305 எண்கள் இந்தியாவில் இருந்து பேசப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த டெலிபோன் உரையாடல்கள் மூலம் தாவூத் இப்ராகிம் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்[1]. பணத்தை எண்ணுவதற்காக அருகில் இருந்த எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பணம் எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டன. பின்னர் டிரங்க் பெட்டிகள் வாங்கி வரப்பட்டு, அதில் வைத்து பணம் கொண்டு செல்லப்பட்டது. அடுத்த மாதம் பீகார் மாநில தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு விநியோகம் செய்யப்படுவதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது[2]. இந்திய கரன்ஸியாகவா துபாய்க்கு போகும்?

Santiago martin - DMK clout

Santiago martin – DMK clout

யார் இந்த மார்ட்டின்மார்டின் புராணம்[3]: திருவல்லிக்கேணியில் லாட்டரி டிக்கெட் விற்றுவந்த சான்டியாகோ மார்டின் இன்றும் லாட்டரி தொழிலில் படு பிசிதான். வடகிழக்கு மாநிலங்களில் மார்டின் சென்றால் அமோக வரவேற்பு தான். ஒரு கவர்னருக்குக் கூட அந்த அளவிற்கு மரியாதை, மதிப்பு இருக்காது என்று மக்கள் சொல்கிறார்கள். “எஸ்.எஸ்” பெயரில் டிவி செனல்[4], ஆன்-லைன் லாட்டரி முதலியவற்றில் கோடிகளை அள்ளி அவற்றை, நிலத்தில் போட்டு, செல்வத்தை வளர்க்கும் வித்தைக்காரர்[5].

* மார்ட்டின், போலி லாட்டரி விற்பனையின் சூத்திரதாரி என, அழைக்கப்படுபவர்.

* தமிழகத்தில், 2003ல், லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதும், பிற மாநிலங்களில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

* சினிமா பட தயாரிப்பு நிறுவனம் துவங்கி, தி.மு.க., தலைவர் கருணாநிதி வசனத்தில், ‘இளைஞன், பொன்னர் – சங்கர்’ போன்ற, திரைப்படங்களை தயாரித்தார்.

* தி.மு.க., ஆட்சியில், லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் கொண்டு வர பல விதங்களில் முயற்சி செய்தார்.

* ‘ஆன் – லைன்’ வியாபாரம், ‘லாட்டரி இன்சிடர்.காம்’ என்ற இணையதளம் வாயிலாகவும் லாட்டரி விற்பனையை நடத்தி வந்தார்.

* மகாராஷ்டிரா, சிக்கிம், நாகாலாந்து, பஞ்சாப், மேகாலயா மாநிலங்களில், லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் உரிமம் பெற்று இருந்தார்; பூடான் லாட்டரியின் அகில இந்திய ஏஜன்டாகவும் செயல்பட்டார்.

* கோவையில், மனைவி பெயரில் ஒரு துணிக்கடை, செவிலியர் கல்லுாரி மற்றும், ‘மார்ட்டின் புரமோட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தினார்.

* ஆண்டுக்கு, 7,200 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் இவர், 2008ல், 2,112 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தவில்லை என, வருமான வரித்துறை சுட்டிக் காட்டியது.

* கடந்த, 2011ல், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதம் சிறையில் இருந்த பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது அதிகாரத்தில் உள்ள சில, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் தொடர்பில், மார்ட்டின் மற்றும் அவர் குடும்பத்தினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

August 2011 - Santiago arrested in Salem for land grabbing case.3 DM

August 2011 – Santiago arrested in Salem for land grabbing case.3 DM

மார்டின் நிகழ்வு” (Martin phenomenon): அந்நிலையில் லாட்டரி சீட்டு விற்றே மில்லியனரான சாண்டியகோ மார்டின் சென்னையில்தான் உண்டு[6]. கே.ஏ.எஸ். ராமதாஸையும் மறந்திருக்க முடியாது. “மார்டின் நிகழ்வு” (Martin phenomenon) என்பது நிச்சயமாக ஒரு அதிசயமானதுதான். ஆகையால்தான் உதாரணத்திற்காக அது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அதைச் சுற்றி மற்ற விஷயங்களும் வருகின்றன. மார்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பெரிய தாதா, இல்லை அதற்கும் மேலே. இந்திய ஜனாதிபதி-பிரதம மந்திரிக்குக் கூடக் கிடைக்காத மரியாதை மார்ட்டினுக்குத் தான் கிடைக்கும். அதே போல தமிழகத்திலும் மரியாதை, அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. கருணாநிதி ஆட்சியின் ஆரம்பத்தில் மார்ட்டினை விசாரிக்கும் படலம் ஆரம்பித்தது[7].

Santiago Martin, his son etc with Karunanidhi

Santiago Martin, his son etc with Karunanidhi

வரி ஏய்ப்பிலும் மார்டினின் கம்பெனிகள் சம்பந்தப் பட்டுள்ளன[8]. பர்மாவிலிருந்து வந்த மார்டின் சட்டத்திற்கு புரம்பாக லாட்டரி சீட்டு விற்பனை நடத்தி சம்பாதித்துள்ளது ரூ. 7200 கோடிகளாம்! இரண்டு  முறை சட்டரீதியில் நடவடிக்கை எடுத்தும், குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டும் சுதந்திரமாக திரிந்து வருவதுதான் மார்டினின் திறமை. அது மட்டுமல்லாது, FICCI எனப்படுகின்ற இந்தியாவின் பிரதம வியாபார நிறுவனத்தின் அங்கமான அனைத்திந்திய லாட்டரி வியாபார மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்துறை கூட்டமைப்பு (All India Federation of Lottery Trade and Allied Industry) என்பதில் அபரீதமான பங்கு வகிப்பதும் தெரிந்த விஷயமே[9].

Ram Madhava, Santiago Martin son and Singh

Ram Madhava, Santiago Martin son and Singh

சான்டியாகோ மார்ட்டினின் அரசியல் பின்னணி: ஆரம்ப காலங்களில் சென்னையில் லாட்டரி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, திராவிட கட்சிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் சான்டியாகோ மார்டின். கருணாநிதி எழுதிய இரண்டு படங்களை இவர் எடுத்துள்ளார். இவரது மனைவி லீமா ரோஸ், பாரி வேந்தரின் ஐ.ஜே.கே.வில் உள்ளார். மகன் பிஜேபியில் சேர்ந்துள்ளார்.

leema-rose- wife of Santiago Martin

leema-rose- wife of Santiago Martin

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவில் சேர மார்ட்டின் முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்க்கக் கூடாது என தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் மார்ட்டினின் மகன் சார்லஸ் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் புகைப்படமும் வெளியானது. ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பெரும்பாலானோருக்கே தெளிவான தகவல்கள் தெரியவில்லை. அவர்களும் ஊடகங்கள் வாயிலாகவே இந்த தகவலைப் பெற்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தி நியூஸ் மினிட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், சார்லஸ் மார்ட்டின் பாஜகவில் சேர்ந்ததை உறுதி படுத்தியுள்ளார்[10]. மேலும், ‘சார்லஸ் மீது வழக்குகள் எதுவும் இல்லை. அதோடு அவர் பாஜகவில் இணைந்து சமுதாயப் பணி செய்ய விரும்புகிறார். எனவே, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு?’ எனக் கேள்வி எழுப்பினார்[11].

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] விகடன்.காம், தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5,000 கோடி ஹவாலா பணம் கடத்தல்: விசாரணையில் தகவல்! Posted Date : 15:17 (26/09/2015); Last updated : 15:17 (26/09/2015)

[2] மாலைமலர், கொல்கத்தாவில் லாட்டரி ஏஜெண்டு மார்ட்டின் வீடுகளில் ரூ.100 கோடி சிக்கியது: பீகார் தேர்தல் செலவுக்கு பதுக்கலா?, மாற்றம் செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 10:41 AM IST;பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 8:20 AM IST.

[3] தினமலர், மூடை மூடையாக பணம் கடத்த திட்டம்: லாட்டரி அதிபர் மார்ட்டினை தேடும் போலீஸ், செப்டம்பர்.25, 2015. 22.42.

[4] http://www.ssmusic.tv/

[5] https://lawisanass.wordpress.com/2011/08/13/lottery-king-santiago-martin-arrested/

[6] SS-TV, SS-Lottery, Sur-Sangeet, etc., are owned by Santiago Martin. The ultra-modern offices at Chennai have been attraction to everybody, as everyday sleezy girls used come, while away time outside, before and after attending duty. Many sigh heavily when such girls go away in bikes with boys, who either used to come there to pick-up or come-and-go-together!

[7]டெலிவிஷன்–பாயின்ட், SS Music’s Santiago Martin in trouble over lottery business, http://www.televisionpoint.com/news2007/newsfullstory.php?id=1192264947

[8]  In a very recent decision in Union of India Vs. Martin Lottery Agencies Ltd. (2009-VIL-01-SC-ST), the Supreme Court had occasion to deal with some fundamental principles relating to taxation of services. http://www.business-standard.com/india/news/service-taxsalelottery-tickets/357677/

[9] http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne130210the_trader.asp

[10]  ஒன்.இந்தியா, லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் பாஜகவில் சேர்ந்ததில் என்ன தவறு? – கேட்கிறார் தமிழிசை, Posted by: Jayachitra, Published: Wednesday, June 24, 2015, 13:52 [IST].

[11] http://tamil.oneindia.com/news/india/lottery-martin-s-son-joins-bjp-229502.html

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது?

செப்ரெம்பர் 26, 2015

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது?

August 2011 - Santiago arrested in Salem for land grabbing case

August 2011 – Santiago arrested in Salem for land grabbing case

பில்லியனர் சான்டியாகோ மார்டின்: கோவையை சேர்ந்த சான்டியாகோ மார்ட்டின், பல ஆண்டு காலமாக லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  இவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் லாட்டரி விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான உரிமம் பெற்றுள்ளார். தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கேரளா, மேற்கு வங்கம் மற்றும்  மேகலாயா, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களை மையமாக வைத்து இவரது லாட்டரி தொழில் நடைபெற்று வருகிறது. கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி நடத்துதல், விற்பனை மற்றும் விநியோகத்தில் முறைகேடு செய்ததாக மார்ட்டின் மீது 32 வழக்குகள் உள்ளன. இது பற்றி 7 வழக்குகளில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணை நடத்தி வருகிறது தமிழ்நாட்டில் மார்ட்டின் மீது பல நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவர் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு லாட்டரி சாம்ராஜ்யம்  நடத்தும் மார்ட்டின்,  கடந்த 2011ஆம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை எழுதிய இரு படங்களை  தயாரித்தார். லாட்டரி தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாக  8 மாதங்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்[1].

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

வருமானவரி துறை சான்டியாகோ கம்பெனிகளில் சோதனை: மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும் மற்றும் சில இடங்களிலும் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழ்நாடு வரை இது பரவி இருப்பதாகவும், இதில் கோடிக்கணக்கான பணம் புழங்குவதாகவும் மத்திய புலனாய்வு துறையினர் மூலம் வருமான வரி துறையினருக்கு தகவல் கிடைத்தது[2]. வருமானவரி துறையினர் கீழ்கண்ட இடங்களில் சோதனையிட்டனர்[3]:

  1. ஜெனெரெல் சிஸ்டெம் [General System]
  2. பியூச்சர் பிலேன் என்டர்பிரைசஸ் [Future Plan Enterprisestwo South Kolkata based companies],
  3. எஸ். நாகார்ஜுனா [S Nagaarjuna] வீடு மற்றும்
  4. சான்டியாகோ மார்டீன் [Santiago Martin] வீடு
  5. ஜி. சிஸ்டம்ஸ் [G . Systems]
  6. எப். பி. என்டர்பிரசஸ் [ F. P. Enterprises]

மார்டின் காணவில்லை என்றும்,  எக்ஸ். அலெக்ஸ்சாந்தர் [X Alexander] என்பவரிடம் விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிகிறது[4]. மேற்கு வங்கத்தில் தமிழக லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. 25-09-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் மார்ட்டினுக்கு சொந்தமான இடத்தில் வருவாய்த்துறையும், அமலாக்கத் துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்[5].

Crores seized from Martins house - but he was missing DM Sep.2015

Crores seized from Martins house – but he was missing DM Sep.2015

கொல்கொத்தாவிலிருந்து கோடிகள் பறிமுதல்: கொல்கத்தாவில் பல வீடுகளை வாடகைக்கு எடுத்து, மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனம் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. அப்படி மேற்கு கொல்கத்தா பகுதியில், முன்னாள் நீதிபதி ஒருவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். அந்த வீட்டில் இருந்து நேற்று 54 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதுபோல் தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 21 கோடியும், சிலிகுரியில் மார்ட்டின் நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் இருந்து 29 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் 104  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது[6]. சிலிகுரி என்ற இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், ரசீதுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின[7].

the curios case of Santiago Martin

the curios case of Santiago Martin

தமிழகத்தைச் சேர்ந்த எஸ். நாகராஜன் என்பவர் கைது: இதில், சாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.1,000 கோடி பணம் சிக்கியது. இது தொடர்பாக மார்ட்டினுக்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்ந்த எஸ். நாகராஜன் என்பவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், நாகராஜன் லாட்டரி விற்பனையுடன் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகராஜனின் பாஸ்போர்ட்டை கைப்பற்றிய அதிகாரிகள், அவர் எந்தெந்த வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகராஜன் பல வருடங்களாக போலி லாட்டரி நடத்தி, பொது மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி மோசடி செய்து இருக்கலாம். இந்த மோசடி பணத்தின் மூலம் ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்[8]. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர், மேற்கு வங்காளத்தில் அலுவலகங்கள் நடத்தி வருவதை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்[9]. மத்தியபிரதேச மாநிலத்தில் சிலரது வங்கி கணக்குகளில் திடீர் என்று லட்சக்கணக்கில் பணம் போடப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்த போது, அவர்கள் லாட்டரியில் விழுந்த பரிசு பணம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஹவாலா பணத்தை லாட்டரி பரிசு பணம் என்று சொல்லி வங்கியில் டெபாசிட் செய்து இருப்பது தெரிய வந்திருக்கிறது[10].

SS TV channel - Santiago Martin

SS TV channel – Santiago Martin

தமிழ்நாட்டில் இருந்து மே.வங்கத்திற்கு ஹவாலா பணம் போவது ஏன்? வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது எப்படி?: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, வங்கதேச நாட்டுக்கு எளிதில் பணத்தை கடத்த முடிகிறது. அங்கிருந்து அரபு நாடுகளுக்கு பணம் எளிதில் பரிமாறப்படுகிறது[11]. துபாயிலுள்ள தாவூத் கும்பல் இந்த பணத்தை பெற்று ஐபிஎல் போன்ற விளையாட்டுகளின்போது சூதாட்டத்திற்கு பயன்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது. மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது[12]. தமிழகத்தில் பதுக்கி வைத்துள்ள, ரூபாய் நோட்டு மூட்டைகளை அவர், கன்டெய்னர் மூலம், பிற மாநிலங்களுக்கு கடத்த இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது[13]. இதுபற்றிய தகவலை தமிழக போலீசாருக்கு தெரிவித்து, அவர்களை உஷார்படுத்தி உள்ளோம், இவ்வாறு மத்திய உளவு போலீஸ் வட்டாரங்கள் கூறின[14].

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] http://www.maalaimalar.com/2015/09/25082004/Raid-of-lottery-companies-Rs-1.html

[2] http://www.dailythanthi.com/News/India/2015/09/25045505/Rs-45-crore-seized-in-a-raid-on-the-lottery-companies.vpf

[3] The CBDT officials with the help of Special Task Force of Kolkata Police carried out raids at two South Kolkata based companies, General System and Future Plan Enterprises, and at S Nagaarjuna and Santiago Martin. The operation was carried out in early hours based on inputs provided by IB about an alleged fake lottery racket which has its tentacles spread upto Tamil Nadu. A highly-placed Kolkata police officer said various teams, consisting of members of STF and its anti-bank fraud section, helped the tax department sleuths conduct the raids at five places in the city. “Raids are being conducted at four places in New Alipore police station limits and one on Sarat Bose Road area today,” the officer said. They said the teams, comprising about 100 members including local police, had to deploy about a dozen counting machines to estimate the cash recovered from two firms identified as G Systems and F P Enterprises.

http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA4NzEzNA%3D%3D

[4] http://indianexpress.com/article/cities/kolkata/hawala-crackdown-rs-80-crore-recovered-dawood-link-under-lens/

[5] விகடன்.காம், லாட்டரி மன்னன் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ஒரேநாளில் ரூ. 100 கோடி பறிமுதல்!, Posted Date : 12:23 (25/09/2015) Last updated : 12:23 (25/09/2015).

[6] http://www.vikatan.com/news/article.php?aid=52865

[7]  தினத்தந்தி, 16 சாக்கு மூட்டை, 27 சூட்கேஸ்கள் நிறைய கட்டுக்கட்டாக பணம் லாட்டரி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.45 கோடி சிக்கியது, மாற்றம் செய்த நாள்:வெள்ளி, செப்டம்பர் 25,2015, 4:55 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, செப்டம்பர் 25,2015, 4:55 AM IST.

[8] தமிழ்.இந்து, கொல்கத்தாவில் ஹவாலா மோசடி அம்பலம்: தமிழக தொழிலதிபர் குடோனில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல், Published: September 24, 2015 15:40 ISTUpdated: September 24, 2015 17:37 IST.

[9]http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7684994.ece

[10] http://www.vikatan.com/news/article.php?aid=52930

[11] http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-west-bengal-how-the-hawala-route-was-un-earthed-236511.html

[12] ஒன்.இந்தியா, தமிழ்நாட்டில் இருந்து மே.வங்கத்திற்கு ஹவாலா பணம் போவது ஏன்? வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது எப்படி?, Posted by: Veera Kumar, Published: Saturday, September 26, 2015, 13:56 [IST]

[13]  தினமலர், மூடை மூடையாக பணம் கடத்த திட்டம்: லாட்டரி அதிபர் மார்ட்டினை தேடும் போலீஸ், செப்டம்பர்.25, 2015. 22.42.

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350215

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

மே 3, 2012

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

நல்லவர்களாக, தூயவர்களாக, புனிதர்களாக இருந்தால் எம்.பி.க்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஊடகக்காரர்கள் ஒரு மொழியிலிருந்து, மற்ற மொழிக்கு மாற்றம் செய்யும் போது, அம்மொழிக்கே உரித்தான சில சொல்லாற்றங்கள், வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் அர்த்தங்கள், அம்மொழியின் தன்மையில் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அல்லது சாதாரணமாக மொழிபெயர்த்தால், சரியான பொருள் கிடைக்காது. இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் ஏற்படுகிறது. वे इनसान की शक्ल में शैतान हैं। “மனித உருவில் உள்ள சாத்தான்களின் வடிவங்கள்” அல்லது சைத்தான் மனித உருவில் உள்ளன என்று மொழிபெயத்தால், உண்மையிலேயே எம்.பிக்கள் “சைத்தான்” என்று சொல்லப்படவில்லை. அம்மொழிப்பிரயோகத்தில் அவர்கள் அத்தகைய கெட்டவர்கள் என்றுதான் பொருள்வரும். இந்தியிலேயே, இரு நாளிதழ்கள் அச்செய்தியை இருவிதமாக வெளியிட்டிருப்பதை கீழே காணலாம்:

क्या बोले थे बाबा[1]छत्तीसगढ़ के दुर्ग से मंगलवार को अपनी यात्रा शुरू करते हुए रामदेव ने कहा था कि सांसदों में अच्छे लोग भी हैं और वह उनका सम्मान करते हैं। लेकिन वहां डकैत, हत्यारे और जाहिल भी हैं। वे वह लोग हैं, जिन्हें किसानों, मजदूरों और देश की लोगों की कोई चिंता नहीं है। वे सिर्फ पैसे के गुलाम हैं। वे इनसान की शक्ल में शैतान हैं। जिन्हें उस पद के लिए चुना गया है, जिसके कि वे काबिल ही नहीं हैं। हमें संसद को बचाना है। हमें भ्रष्ट लोगों को हटाना है। संसद में लुटेरे, हत्यारे व जाहिल बैठे हैं[2]। सत्ता की कुर्सी पर इंसान की शक्ल में हैवान हैं। हमने उन्हें कुर्सी पर बैठाया है। लेकिन वो सत्ता चलाने की पात्रता नहीं रखते। वे लोग किसानों और मजदूरों से हमदर्दी नहीं रखते। वे देश इसलिए चला रहे, क्योंकि हमने ऐसा ही सिस्टम बनाया है। हमने मान लिया है कि 543 रोगी हिंदुस्तान चलाएंगे[3]। हालांकि उनमें कुछ अच्छे भी हैं। हमें संसद को बचाना होगा।

பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று எம்.பி.க்களை பாபா ராம்தேவ் சரமாரி தாக்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்[4].எம்.பி.க்களை திருடர்கள், கொலைகாரர்கள் என்று யோக குரு ராம்தேவ் விமர்சித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை (02-05-2012) கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்று வெளிப்படும் ரோஷம்: ராம்தேவின் பேச்சுக்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்’ என்று மீரா குமார் தெரிவித்தார்.  “நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்’ என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இது போன்ற கருத்துகளை ராம்தேவிடமிருந்து தாம் எதிர்பார்க்கவில்லை. 144 சட்டம் அமூலில் இருக்கும் போது மின்சாரம் இல்லை என்று போரடினால் நானும் சட்டப்படி “கிரிமினல்” ஆகிவிடுவேன்[5], என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

உரிமை மீறல் நோட்டீஸ்: “”எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். “பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீûஸக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்[6]. இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.க்கள் மீது ராம்தேவ் தாக்கு: முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள். விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்‘ என்று கடுமையாக குற்றம்சாட்டினார்[7].

அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.  நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ். Addressing the media while launching his month-long yatra in Chhattisgarh’s Durg on Tuesday, Baba Ramdev said there were good people among the parliamentarians and he respected them[8]. “But there are dacoits, murderers, illiterates among them[9]. We have to save Parliament. We have to remove corrupt people.” He accused the MPs of not caring for farmers and labourers. “They are friends and slaves of money. They are illiterate, dacoits and murderers. They are devils in the form of humans, who we have elected to those posts. They are not worth it,” he said.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும், அவரது குழுவினரும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் ராம்தேவும் எம்.பி.க்களை கடுமையாக குறைகூறி பேசியுள்ளார்.

ராம்தேவ் ஒரு மென்டல் கேஸ்: லாலு தாக்கு[10]: யோகாகுரு பாபா ராம்தேவ் பைத்தியக்காரர் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்[11]. சத்திஸ்கரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யோகாகுரு பாபா ராம்தேவ், எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது, ராம்தேவின் பேச்சு பயனற்றது. இது போன்று பேசுபவர்களும் பயனற்றவர்கள். ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

ராம்தேவ் கூறியது சரிதான்: அன்னா ஹசாரே[12]எம்.பி.க்கள் குறித்து ராம்தேவ் பேசியதில் தவறில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.நேற்று முன்தினம், சத்தீஸ்கரில் ராம்தேவ் கூறுகையில், “தற்போதுள்ள எம்.பி.,க் களில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரத்தில், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், படிப்பறிவற்றவர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, பார்லிமென்டை காக்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: ராம்தேவ் கூறியதில் எந்தவிதத்திலும் தவறில்லை. அவர் கூறிவது தவறு என்றால், இன்று ஏராளமான எம்.பி.க்களுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.  இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் கொடுக்கும் போது , மக்கள் ஏன்? நெருக்கடி கொடுக்கக்கூடாது. கட்சிகளுக்கு தேவை ஓட்டு. ஆனால் வேட்பாளர்களாக கிரிமினல்களை ஏன நிறுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் தேர்தலில் நின்றால் ஜனநாயகத்தின் கோயில் என்னவாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் 150ற்கும் மேலான கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்கள்[13]: 543 எம்.பி.க்களில் 150 பேர்களுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று ஏற்கெனவே பல அறிக்கைகள், செய்திகள், விவரங்கள் வந்துள்ளன[14]. அவர்கள் ஒன்றும் வெட்கப்பட்டு தேர்தலில் நிற்காமல் இல்லை, தோல்வியும் அடையவில்லை, பாராளுமன்றத்தில் உட்காரவும் இல்லை ……………………என்றெல்லாம் இல்லை.

“Of these 150 MPs, 72 have serious charges against them. The maximum criminal charges are against Congress MP from Porbandar in Gujarat Vitthalbhai Hansrajbhai Radadiya. He has a total of 16 cases out of which five cases are of serious nature,” the analysis revealed.”Bharatiya Janata Party (BJP) has maximum number of MPs having criminal cases with 42 MPs, of which 17 have serious criminal cases against them. It is closely followed by Congress with 41 MPs having criminal cases against them. Twelve Congress MPs have serious charges against them,” the study said. அந்த 150ல், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிக அளவில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 72 மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி கவலைப் படவில்லை.பி.ஜே.பியில் 42 எம்.பி.க்கள், காங்கிரஸில் 41 என்று உள்ளனர். அதனால்தான், இரு கட்சிக்காரர்களுக்கும் கோபம் வருகிறது போலும். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இவர்களை ஏன் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க்கவைத்தன?

“டாப்-10” என்று கிரிமினல் எம்.பி.க்கள் பட்டியலே கொடுக்கப் பட்டது. அப்பொழுதும், யாருக்கும் பொத்துக் கொண்டு வரவில்லை. அதில் லல்லுவும் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் தான் பாபா ராம்தேவை “மென்டல்” என்று “கமன்ட்” வேறு அடிக்கிறார்.

 Here is a list of top ten MPs with a criminal background, compiled by the National Election Watch[15].

Name: Kameshwar Baitha (56)
Constituency represented: Palamau, Jharkhand
Party: Jharkhand Mukti Morcha
Criminal background: Accused in 35 cases and has 50 serious charges against him under the IPC
Convicted: NeverName: Jagadish Sharma, (58)
Constituency represented: Jahanabad, Bihar
Party: Janata Dal-United
Criminal background: Accused in 6 cases and has 17 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Bal Kumar Patel (48)
Constituency represented: Mirzapur, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 13 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Prabhatsinh Pratapsinh Chauvan (67)
Constituency represented: Panchamahal, Gujarat
Party: Bharatiya Janata Party
Criminal background: Accused in 3 cases and has 10 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kapil Muni Karwariya (42)
Constituency represented: Phulpur, Uttar Pradesh
Party: Bahujan Samaj Party
Criminal background: Accused in 4 cases and has 8 serious charges against him under the IPC
Convicted: Never

Name: P Karunakaran (64)
Constituency represented: Kasargod, Kerala
Party: Communist Party of India-Marxist
Criminal background: Accused in 12 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kunvarji Mohanbhai Bavaliya (54)
Constituency represented: Rajkot, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 2 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Vittalbhai Hansrajbhai Radadiya (51)
Constituency represented: Porbandar, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 16 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Ramkishun (49)
Constituency represented: Chandauli, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Lalu Prasad Yadav (60)
Constituency represented: Saran, Bihar
Party: Rashtriya Janata Dal
Criminal background: Accused in 7 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

நாட்டை ஆள்பவர்களுக்கு தகுதி, யோக்கியதை, தார்மீக பொறுப்பு முதலியவை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை அவ்வாறு கூறுவதே தவறாகும். இப்படி கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், லஞ்சம் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகி, பைளில் வெளிவந்து, பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அரசு செலவில் உலா வந்தால் அது மக்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு லட்சம் வாங்கிய பங்காரு லட்சுமணன் ஜெயிலில் என்றால், 1,73,000 கோடிகள் சுருட்டியவர்கள் எப்படி வெளியில் இருக்கிறார்கள்? பிணையில் வெளிவந்து பாராளுமன்ரத்திலும் உட்கார்ந்து கொள்கிறார்கள்?இதனை எடுத்துக் காட்டும் போது, அவர்கள் கோபம் அடைகிறார்கள், சட்டப்படி, உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுப்போம் என்றால், சட்டப்படி அந்த 150 எம்,பிக்களையும் வீடிற்கு அனுப்ப வேண்டியது தானே? எம்.பி பதவியை பறிக்கவேண்டியது தானே? மந்திரியாக உள்ளவர்களின் பதவியையும் பறிக்க வேண்டியதுதானே? ஆனால், காங்கிரஸ் அல்லது மேலிடம் சோனியா மெய்னோ அவ்வாறு செய்யவில்லையே? தாமஸ் கதையை அதற்குள் மறந்து விட்டார்கள் போல!

வழக்கு முடிந்து, தான் குற்றவாளி இல்லை என்ற பிறகு பதவிக்கு வருவது தானே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.பி ஆட்சி மூன்று மாநிலங்களில் கலைக்கப் பட்டது. ஆனால், தவறில்லை என்று தீர்ப்பு வந்தபோது, அது மறுபடியும் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. அந்த இளைஞர் ராகுல் ஏன் இதைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்வதில்லை? ஒருவேளை தனது அப்பாவே ஊழல் பேர்வழி என்ற பிரச்சினை உள்ளது என்று அமைதியாக உள்ளாரா? இல்லை பிரியங்கா அல்லது வதேராவை வைத்து மோட்டார் பைக்கில் ஊர்வலம் வரச் சொல்லலாமே? பாபா ராம்தேவின் உருவ பொம்மையை எரிப்பவர்கள், அந்த 150 எம்.பிக்களின் உருவ பொம்மைகளை எரிப்பார்களா அல்லது பாலாபிஷேகம் செய்வார்களா?

ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட எ,.கே.அத்வானி ராஜினாமா செய்து, காத்திருந்து, வழக்கு முடிந்து, தான் நிரபராதி என்று முடிவானப் பிறகுதான் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேபோல மற்றவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று பாரம்பரியம் இருக்கும் போது, மக்கள் இனிமேல் அத்தகைய ஆட்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. முதலில் அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் தேர்தல் கமிஷன் அவர்களை நிறுத்தவேண்டும். தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போதே அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், இந்நிலை மாறும். இவ்வாறு சொல்வதே தவறு என்று பாராளுமன்றம் எப்படி சொல்ல முடியும்? அங்கிருக்கும் 150 பேர்கள் எப்படி தமக்கு எதிராக தாமே பேசுவார்கள் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள்? விவாதம் வரும் போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்கள் பேசுவதை கேட்பார்கள் அல்லது தாமே பேச முன்வருவார்கள்?

அது எப்படி சட்டப்படி செல்லுபடியாகும்? இதெல்லாம் அங்குள்ள மெத்தப் படித்த எம்.பிக்களுக்கு, ஐந்து / ஆறு முறை என்று எம்.பிக்களாக இருப்பவர்களுக்கு, சட்டம் படித்த மாமேதைகளுக்கு, லட்சங்களில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்-எம்,பிக்களுக்கு தெரியாமலா இருக்கும்?

வேதபிரகாஷ்

02-05-2012


சான்டியாகோ மார்டின் கைது: மதுரை கோவில் நிலத்தை அழகிரி மனைவிக்கு விற்றதாக குற்றச்சாட்டு!

ஓகஸ்ட் 13, 2011

சான்டியாகோ மார்டின் கைது: மதுரை கோவில் நிலத்தை அழகிரி மனைவிக்கு விற்றதாக குற்றச்சாட்டு!

லாட்டரி மன்னன் மார்டின்: திருவல்லிக்கேணியில் லாட்டரி டிக்கெட் விற்றுவந்த சான்டியாகோ மார்டின் இன்றும் லாட்டரி தொழிலில் படு பிசிதான்[1]. வடகிழக்கு மாநிலங்களில் மார்டின் சென்றால் அமோக வரவேற்பு தான். ஒரு கவர்னருக்குக் கூட அந்த அளவிற்கு மரியாதை, மதிப்பு இருக்காது என்று மக்கள் சொல்கிறார்கள். “எஸ்.எஸ்” பெயரில் டிவி செனல், ஆன்-லைன் லாட்டரி முதலியவற்றில் கோடிகளை அள்ளி அவற்றை, நிலத்தில் போட்டு, செல்வத்தை வளர்க்கும் வித்தைக்காரர். இப்பொழுது மதுரை கோவில் நிலத்தை அபகரித்து, அழகரியின் மனைவிக்கு விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன[2]. முன்பே சென்னை உயர்நீதி மன்றம் ஆணையிட்டபோதிருந்தும், கருணாநிதி அரசாங்கம், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டது[3]. மார்டின் மீது 50ற்கும் மேலான குற்றச்சாட்டுகள் உள்ளன. ரூ. 20 கோடி நிலத்தை காந்தி அழகிரிக்கு ரூ.80 லட்சங்களுக்கு விற்றதாக தெரிகிறது[4]. இதனால், கோவில் நிலத்தை அபகரித்தக் குற்றத்திற்கு, இவரும் கைதாவாரா என்ற கேல்வி எழுந்துள்ளது[5]. ஸ்டாலின் சிறையில் இருக்கும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சிலரை நேரில் சென்று பார்த்துள்ளதையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[6].

 

மார்டின், அழகிரி, காந்தி தொடர்பு:  மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல அமைப்பாளருமான முக அழகிரிக்கு பினாமி பெயர்களில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெகல்கா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  புலனாய்வு இதழான தெகல்கா மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. மதுரையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் அழகிரி தனது நெருங்கிய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளார். அவரது மனைவி காந்திக்கும் நில மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெகல்கா அழகிரியின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

டெஹெல்கா அழகிரி சொத்துக்களைப் பற்றி கூறியிருப்பது[7]: அழகிரி கடந்த 2009-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார். அப்போது தன்னிடம் ரூ. 133.65 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பினாமி பெயரில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருக்கிறது. நிலம், சினிமா தயாரிப்பு மற்றும் வினியோகம், ரியல் எஸ்டேட், சுகாதாரம், சுரங்கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளார்.

அழகிரி குடும்பத்தினரின் சொத்து: அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள்கள் கயல்விழி, அஞ்சுக செல்வி, மருமகள் அனுஷ்கா, மருமகன்கள் ஒய்.கே. வெங்கடேஷ், விவேக் ரத்தினவேல் ஆகியோர் பெயர்களில் ஏராளமான சொத்துக்களும், வியாபாரங்களும் உள்ளன. இது தவிர அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மொரீஷியஸ், வெர்ஜின் தீவுகள், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொழில் நடத்தி வருகின்றனர் என்று உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அழகிரி வெளியிட்ட சொத்து விவரத்தின்படி அவரிடம் 18 ஏக்கர், 63 சென்ட் விவசாய நிலம்,
  • 1 ஏக்கர், 82 சென்ட், 23 ஆயிரத்து 278 சதுர அடி நிலம்,
  • 20 சென்ட் பிளாட், சென்னை, மதுரையில் வீடுகள்,
  • ரூ. 4 கோடி வைப்பு நிதி மற்றும்
  • வங்கி சேமிப்பு கணக்கில் ரூ. 1.39 கோடி,
  • 85 கிராம் தங்கம்,
  • ரூ. 1. 40 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி,
  • ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர் எஸ்யூவி, தயா டயாக்னோஸ்டிக்ஸில் ரூ. 96 லட்சம் முதலீடு உள்ளது.

சிவரக்கோட்டையில் உள்ள தயா பொறியியல் கல்லூரியை நடத்தி வரும் முக அழகிரி அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரத்தை அவர் வெளியிடவில்லை.  விதிமுறைகளை மீறி 4 ஏக்கர் விவசாய நிலத்தில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் தனது சொத்துக்களின் மதி்ப்பை குறைத்தே வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.  உதாரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆயிரத்து 100 சதுர அடி வீட்டின் மதிப்பு ரூ. 22 லட்சம் என்று வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு ரூ. 2. 5 கோடி.  அழகிரியின் மனைவி காந்திக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன. அவர் தான் தயா சைபர் பார்க்கின் தலைவர். மேலும், முக அழகிரி கல்வி அறக்கட்டளை உறுப்பினராகவும் இருக்கிறார்.

அழகிரி வெளியிட்ட காந்தியின் சொத்துக்கள் விவரம். மனைவியின் சொத்து விவரங்கள்:

  • 48. 42 ஏக்கர் விவசாய நிலம்,
  • கொடைக்கானலில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள 82.3 சென்ட் பிளாட்,
  • சென்னையில் ரூ. 4.30 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 376 சதுர அடி பிளாட்,
  • சேமியர்ஸ் ரோட்டில் ரூ. 4. 39 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 488 சதுர அடி பிளாட்,
  • மதுரை பாப்பாக்குடியில் 3 ஆயித்து 60 சதுர அடி பிளாட்,
  • மதுரையில் 4 ஆயிரத்து 378 சதுர அடியில் தயா கல்யாண மண்டபம்,
  • கொட்டிவாக்கத்தில் ஆயிரத்து 845 சதுர அடி வியாபார நிலம்,
  • மாதவரம் மேடாஸ் கிரீன் பார்க்கில் ஆயிரத்து 320 சதுர அடி வீடு.

அழகிரி தனது மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்களை வெளியிட்டபோது தயா சைபர் பார்க்கில் காந்தி செய்திருக்கும் முதலீடு குறித்து தெரிவிக்க மறந்துவிட்டார்.

மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை வாங்கிய திருமதி அழகிரி: கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி நடந்த நிறுவனக் கூட்டத்தில் தயா சைபர் பார்க் பங்கு மூலதனம் ரூ. 10 லட்சத்தில் ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்டியாக இருக்கும் காந்தி தனக்கு வெறும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பங்குகள் தான் இருப்பதாக தெரிவித்தார். அவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை பற்றி தெரிவிக்க மறந்துவிட்டார். அந்த நிலம் தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக காந்தி மற்றும் லாட்டரி மாபியா மன்னன் சான்டியாகோ மார்டின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிடைத்துள்ள ஆவணங்களின்படி மார்டின் கோவில் நிலத்தை காந்திக்கு ரூ. 85 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 24 கோடி.

கருப்புப் பணத்தை மாற்ற ரியல் எஸ்டேட் முதலியவையா?அழகிரி தனது மகன் தயாநிதி பெயரில் இருக்கும் சில சொத்துக்கள் பற்றியும் தெரிவிக்க மறந்துவிட்டார். தயாநிதி அழகிரி தான் தயா பொறியியல் கல்லூரி, தயா பல்மருத்துவக் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர், ஜேஏகே கம்யூனிகேஷன்ஸ், கிளவுட் நைன் மூவிஸ் எம்டி, ராயல் கேபிள் விஷன் மற்றும் மகேஷ் எலாஸ்டோமர்ஸின் தலைவர். ஆனால் இத்தனை சொத்துக்களையும் தெரிவிக்க மறந்துவிட்டார் அழகிரி. சென்னை, திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கேபிள் ஆபரேட்டரான ஜேஏகே கம்யூனிகேஷன்ஸில் தாயநிதிக்கு தற்போது 50 சதவீத பங்குகள் உள்ளது.  கருணாநிதி குடும்பத்தினர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றவே சினிமாத்துறையில் நுழைந்ததாக சினிமாத் துறையில் உள்ள சிலர் தெரிவித்தனர். அழகிரியின் பணம் மற்றும் பதவி மோகத்தால் தான் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக ஸ்டாலினை தோற்கடிக்கவே அழகிரி இத்தனை விரிந்த சாம்பிராஜ்ஜியத்தை நிறுவியுள்ளார். கருணாநிதிக்கு அடுத்து திமுகவின் தலைவராக அழகிரி விரும்புகிறார். அதற்கு பண பலமும், ஆள் பலமும் சேர்த்து வைத்துள்ளார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு தெகல்கா செய்தி வெளியிட்டுள்ளது.


[3] Tamil Nadu lottery kingpin — Santiago Martin and his brother-in-law Benjamin were on Saturday (August 13) arrested by the Salem city police on charges of land grabbing.  Earlier, the Madras High Court had ordered action against Martin in the case but the previous DMK government sat on the order. Martin is known to be close to Karunanidhi. Santiago Martin had allegedly claimed ownership of the Madurai temple land. He also had allegedly transferred the ownership of the temple land worth Rs 20 crore for just Rs 85 lakhs to Union Minister MK Alagiri’s wife. Land worth over rs 20 crore was sold to Kanthi Alagiri for Rs 85 lakh in 2010. The deal took place after Alagiri became union minister. Martin has over 50 criminal cases against him and several cases of land grabbing against him.

[6]  DMK Treasurer MK Stlain visited his party functionaries, including Union Minister M K Alagiri’s closest aide ‘Attack’ Pandi, who has been detained under the Goondas Act, in the Central prison here on Tuesday (09-08-2011). Stalin was accompanied by ex-ministers KN Nehru, N Selvaraj and MRK Panneer Selvam. Sources said that Stalin spent more time with ‘Attack’ Pandi than other functionaries.http://ibnlive.in.com/news/stalin-meets-alagiris-man-in-prison/174497-60-118.html