சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது – தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?:
தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?: மேற்கு வங்க ஹவாலா கும்பல், பெருமளவு பணத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி உள்ளனர். கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் ஹவாலா பணம் அனுப்பியுள்ளனர். இந்த பணம் கராச்சியில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் ஆட்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.5,000 கோடி அளவுக்கு பணம் கடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1175 செல்போன் மற்றும் போன் நம்பர்களை ஆய்வு செய்தனர். அப்போது 305 எண்கள் இந்தியாவில் இருந்து பேசப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த டெலிபோன் உரையாடல்கள் மூலம் தாவூத் இப்ராகிம் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்[1]. பணத்தை எண்ணுவதற்காக அருகில் இருந்த எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பணம் எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டன. பின்னர் டிரங்க் பெட்டிகள் வாங்கி வரப்பட்டு, அதில் வைத்து பணம் கொண்டு செல்லப்பட்டது. அடுத்த மாதம் பீகார் மாநில தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு விநியோகம் செய்யப்படுவதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது[2]. இந்திய கரன்ஸியாகவா துபாய்க்கு போகும்?
யார் இந்த மார்ட்டின்– மார்டின் புராணம்[3]: திருவல்லிக்கேணியில் லாட்டரி டிக்கெட் விற்றுவந்த சான்டியாகோ மார்டின் இன்றும் லாட்டரி தொழிலில் படு பிசிதான். வடகிழக்கு மாநிலங்களில் மார்டின் சென்றால் அமோக வரவேற்பு தான். ஒரு கவர்னருக்குக் கூட அந்த அளவிற்கு மரியாதை, மதிப்பு இருக்காது என்று மக்கள் சொல்கிறார்கள். “எஸ்.எஸ்” பெயரில் டிவி செனல்[4], ஆன்-லைன் லாட்டரி முதலியவற்றில் கோடிகளை அள்ளி அவற்றை, நிலத்தில் போட்டு, செல்வத்தை வளர்க்கும் வித்தைக்காரர்[5].
* மார்ட்டின், போலி லாட்டரி விற்பனையின் சூத்திரதாரி என, அழைக்கப்படுபவர்.
* தமிழகத்தில், 2003ல், லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதும், பிற மாநிலங்களில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.
* சினிமா பட தயாரிப்பு நிறுவனம் துவங்கி, தி.மு.க., தலைவர் கருணாநிதி வசனத்தில், ‘இளைஞன், பொன்னர் – சங்கர்’ போன்ற, திரைப்படங்களை தயாரித்தார்.
* தி.மு.க., ஆட்சியில், லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் கொண்டு வர பல விதங்களில் முயற்சி செய்தார்.
* ‘ஆன் – லைன்’ வியாபாரம், ‘லாட்டரி இன்சிடர்.காம்’ என்ற இணையதளம் வாயிலாகவும் லாட்டரி விற்பனையை நடத்தி வந்தார்.
* மகாராஷ்டிரா, சிக்கிம், நாகாலாந்து, பஞ்சாப், மேகாலயா மாநிலங்களில், லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் உரிமம் பெற்று இருந்தார்; பூடான் லாட்டரியின் அகில இந்திய ஏஜன்டாகவும் செயல்பட்டார்.
* கோவையில், மனைவி பெயரில் ஒரு துணிக்கடை, செவிலியர் கல்லுாரி மற்றும், ‘மார்ட்டின் புரமோட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தினார்.
* ஆண்டுக்கு, 7,200 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் இவர், 2008ல், 2,112 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தவில்லை என, வருமான வரித்துறை சுட்டிக் காட்டியது.
* கடந்த, 2011ல், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதம் சிறையில் இருந்த பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது அதிகாரத்தில் உள்ள சில, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் தொடர்பில், மார்ட்டின் மற்றும் அவர் குடும்பத்தினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“மார்டின் நிகழ்வு” (Martin phenomenon): அந்நிலையில் லாட்டரி சீட்டு விற்றே மில்லியனரான சாண்டியகோ மார்டின் சென்னையில்தான் உண்டு[6]. கே.ஏ.எஸ். ராமதாஸையும் மறந்திருக்க முடியாது. “மார்டின் நிகழ்வு” (Martin phenomenon) என்பது நிச்சயமாக ஒரு அதிசயமானதுதான். ஆகையால்தான் உதாரணத்திற்காக அது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அதைச் சுற்றி மற்ற விஷயங்களும் வருகின்றன. மார்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பெரிய தாதா, இல்லை அதற்கும் மேலே. இந்திய ஜனாதிபதி-பிரதம மந்திரிக்குக் கூடக் கிடைக்காத மரியாதை மார்ட்டினுக்குத் தான் கிடைக்கும். அதே போல தமிழகத்திலும் மரியாதை, அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. கருணாநிதி ஆட்சியின் ஆரம்பத்தில் மார்ட்டினை விசாரிக்கும் படலம் ஆரம்பித்தது[7].
வரி ஏய்ப்பிலும் மார்டினின் கம்பெனிகள் சம்பந்தப் பட்டுள்ளன[8]. பர்மாவிலிருந்து வந்த மார்டின் சட்டத்திற்கு புரம்பாக லாட்டரி சீட்டு விற்பனை நடத்தி சம்பாதித்துள்ளது ரூ. 7200 கோடிகளாம்! இரண்டு முறை சட்டரீதியில் நடவடிக்கை எடுத்தும், குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டும் சுதந்திரமாக திரிந்து வருவதுதான் மார்டினின் திறமை. அது மட்டுமல்லாது, FICCI எனப்படுகின்ற இந்தியாவின் பிரதம வியாபார நிறுவனத்தின் அங்கமான அனைத்திந்திய லாட்டரி வியாபார மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்துறை கூட்டமைப்பு (All India Federation of Lottery Trade and Allied Industry) என்பதில் அபரீதமான பங்கு வகிப்பதும் தெரிந்த விஷயமே[9].
சான்டியாகோ மார்ட்டினின் அரசியல் பின்னணி: ஆரம்ப காலங்களில் சென்னையில் லாட்டரி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, திராவிட கட்சிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் சான்டியாகோ மார்டின். கருணாநிதி எழுதிய இரண்டு படங்களை இவர் எடுத்துள்ளார். இவரது மனைவி லீமா ரோஸ், பாரி வேந்தரின் ஐ.ஜே.கே.வில் உள்ளார். மகன் பிஜேபியில் சேர்ந்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவில் சேர மார்ட்டின் முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்க்கக் கூடாது என தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் மார்ட்டினின் மகன் சார்லஸ் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் புகைப்படமும் வெளியானது. ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பெரும்பாலானோருக்கே தெளிவான தகவல்கள் தெரியவில்லை. அவர்களும் ஊடகங்கள் வாயிலாகவே இந்த தகவலைப் பெற்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தி நியூஸ் மினிட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், சார்லஸ் மார்ட்டின் பாஜகவில் சேர்ந்ததை உறுதி படுத்தியுள்ளார்[10]. மேலும், ‘சார்லஸ் மீது வழக்குகள் எதுவும் இல்லை. அதோடு அவர் பாஜகவில் இணைந்து சமுதாயப் பணி செய்ய விரும்புகிறார். எனவே, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு?’ எனக் கேள்வி எழுப்பினார்[11].
© வேதபிரகாஷ்
25-09-2015
[1] விகடன்.காம், தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5,000 கோடி ஹவாலா பணம் கடத்தல்: விசாரணையில் தகவல்! Posted Date : 15:17 (26/09/2015); Last updated : 15:17 (26/09/2015)
[2] மாலைமலர், கொல்கத்தாவில் லாட்டரி ஏஜெண்டு மார்ட்டின் வீடுகளில் ரூ.100 கோடி சிக்கியது: பீகார் தேர்தல் செலவுக்கு பதுக்கலா?, மாற்றம் செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 10:41 AM IST;பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 8:20 AM IST.
[3] தினமலர், மூடை மூடையாக பணம் கடத்த திட்டம்: லாட்டரி அதிபர் மார்ட்டினை தேடும் போலீஸ், செப்டம்பர்.25, 2015. 22.42.
[5] https://lawisanass.wordpress.com/2011/08/13/lottery-king-santiago-martin-arrested/
[6] SS-TV, SS-Lottery, Sur-Sangeet, etc., are owned by Santiago Martin. The ultra-modern offices at Chennai have been attraction to everybody, as everyday sleezy girls used come, while away time outside, before and after attending duty. Many sigh heavily when such girls go away in bikes with boys, who either used to come there to pick-up or come-and-go-together!
[7]டெலிவிஷன்–பாயின்ட், SS Music’s Santiago Martin in trouble over lottery business, http://www.televisionpoint.com/news2007/newsfullstory.php?id=1192264947
[8] In a very recent decision in Union of India Vs. Martin Lottery Agencies Ltd. (2009-VIL-01-SC-ST), the Supreme Court had occasion to deal with some fundamental principles relating to taxation of services. http://www.business-standard.com/india/news/service-taxsalelottery-tickets/357677/
[9] http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne130210the_trader.asp
[10] ஒன்.இந்தியா, லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் பாஜகவில் சேர்ந்ததில் என்ன தவறு? – கேட்கிறார் தமிழிசை, Posted by: Jayachitra, Published: Wednesday, June 24, 2015, 13:52 [IST].
[11] http://tamil.oneindia.com/news/india/lottery-martin-s-son-joins-bjp-229502.html