இந்திய நீதி / சட்டத்துறையில் ஒரு ஒழுங்கான அமைப்பு, நியதி மற்றும் வழிமுறைகள் இருந்தன. ஆனால், அரசியல்வாதிகள் சட்டத்தை வளைக்க முற்பட்டபோது, நீதிகளும் வளைய ஆரம்பித்தன. நீதிமன்றங்கள் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாகின. நீதிபதிகளே ஆட்டிவைக்கப்பட்டனர்.
தமிழகஅகழாய்வுகளும், நீதிமன்றவழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப்படும் வழக்குகள்:நீதிபதிஎப்படிவழக்குகள்பற்றியகருத்தைபொதுஇடத்தில்தெரிவிக்கமுடியும்? (1)
அகழாய்வு, கல்வெட்டுகள்முதலியவைநீதிமன்றங்களில்தீர்மானிக்கும்விவகாரங்கள்அல்ல: மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப் படுகின்ற, விசாரணைக்கு ஏற்று நடத்தப் படுகின்ற, அவற்றைப் பற்றி செய்திகளாக வரும் விவரங்கள் முதலியவற்றை வைத்துப் பார்த்து, படித்து, உன்னிப்பாக கவனிக்கும் போது, அகழாய்வு மற்றும் கல்வெட்டுகள் பற்றிய வழக்குகள் எல்லாம், தமிழ்-சமஸ்கிருதம், திராவிடன்-ஆரியன், தெற்கு-வடக்கு, தமிழ்-தமிழ் அல்லாதது என்று பிரிவினைவாதங்கள் அடிப்படையில் உள்ளதை கவனிக்க நேரிடுகிறது. ஏற்கெனவே கீழடி வழக்குகளில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட தன்னுடை வேலை விவகாரம், இடமாற்றம், அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது, தாமதம் செய்தது, போன்ற விவகாரங்களில் அரசியலை நுழைத்து, மற்றவர்கள் விளம்பரம் பெற்றது தெரிகிறது. ஏனெனில், ஒரு மத்திய அரசு அதிகாரி / ஊழியர் என்ற நிலையில், அவர் இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு கட்டுப் பட்டவராக இருந்தார் / இருக்கிறார். இப்பொழுது, அவர் விவகாரம் அமைதியாகி விட்டது. வெங்கடேசன், கம்யூனிஸ்ட் எம்.பி அவரை வைத்து, நன்றாகவே அரசியல் செய்திருப்பது தெரிந்தது. இப்பொழுது, தேவையே இல்லாமல், அடிப்படை விவரங்களைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், கல்வெட்டுகள் பற்றி வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு நடப்பது, வேடிக்கையாக உள்ளது.
ஜூலை 21 மற்றும் 22, 2018 (சனி, ஞாயிறு)திருவண்ணாமலையில்நடந்தகருத்தரங்கு: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று திருவண்ணாமலையில் கருத்தரங்கு மற்றும் ‘ஆவணம்-29’ இதழ் வெளியிட்டு விழாவை நடத்தின. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது: “தமிழகத்தில்உள்ளபெரும்பாலானோருக்கும்நமதுமாநிலத்தின்பெருமைகள்தெரியாது. தமிழ்மிகவும்பழமையானமொழிஎன்றுகூறும்போதுமுதலில்யாரும்நம்பவில்லை. ஈரோடுமாவட்டம், கொடுமணல்பகுதியில்கிடைத்தகல்வெட்டில்கண்டுபிடிக்கப்பட்டதமிழ்எழுத்துகள், எந்தகாலத்தைசேர்ந்ததுஎன்றுஅமெரிக்காவிற்குஆய்வுசெய்யஅனுப்பிவைக்கப்பட்டது”. பீடா அனேலிடிகல் சோதனையைக் குறிப்பிடுகின்றார் என்றூ தெரிகிறது, ஆனால், மற்ற மாதிரிகளின் தேதிகள் என்னவாயிற்று என்று கேட்காதது வியப்பாக இருக்கிறது.
நீதிபதிகிருபாகரன் – கீழடிஅகழ்வாராய்ச்சியில்உள்ளவிவரங்கள்மறைக்கப்படுகின்றன (10-10-2020)[1]: நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் தொடர்ந்து பேசியதாவது: “அந்தஆய்வில்இந்தஎழுத்துகள்கிறிஸ்துபிறப்பதற்குமுன்புசுமார் 350 முதல் 375 ஆண்டுகளுக்குஇடைப்பட்டதுஎன்றுகண்டறியப்பட்டது[2]. அதன்பிறகுதான்தமிழ்மிகவும்தொன்மையானமொழி, செம்மொழிஎன்றுகூறப்பட்டது. தமிழ்நாட்டில்பழமையானவிஷயங்கள்புதைந்துகிடக்கின்றன. மதுரைகீழடிஅகழ்வாராய்ச்சியில்உள்ளவிவரங்கள்மறைக்கப்படுகின்றன[3]. அதில்தமிழர்களின்பண்பாடுகள்மறைந்துள்ளது[4]. மாவட்டத்தில்பழமையானகோவில்கள், கல்வெட்டுகள், சிலைகள்உள்ளன. அதனைபார்த்துஅதன்வரலாற்றைதங்கள்குழந்தைகளுக்குதெரியப்படுத்தவேண்டும். சிலர்நமதுமாநிலத்தைவிட்டு,விட்டுவெளிமாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும்சென்றுபழமையானவரலாற்றுசின்னங்களைபார்வையிட்டுவருகின்றனர். தஞ்சைபெரியகோவில்போன்றுபல்வேறுவரலாற்றுசின்னங்கள்ஏராளமானவைஉள்ளன. இவற்றினால்முந்தையகாலத்தில்கட்டிடகலைவியக்கவைக்கும்வகையில்உள்ளது”. இங்கு, இவர், “மதுரைகீழடிஅகழ்வாராய்ச்சியில்உள்ளவிவரங்கள்மறைக்கப்படுகின்றன. அதில்தமிழர்களின்பண்பாடுகள்மறைந்துள்ளது,” என்று குறிப்பிடுவது, இவர் ஏற்கெனவே அத்தகைய எண்ணத்தை மனத்தில் உருவாக்கி வைத்து விட்டார் என்று தெரிகிறது. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி, இவ்வாறு கருத்தைத் தெரிவிக்கலாமா என்பது கேள்விக்குறியாகிறது.
அரசியல்ரீதியில்நடக்கும்அகழாய்வுபணிகள், ஆராய்ச்சிகள், ஆதாரங்கள்நிலைமாறும்நிலைகள்: இவ்வாறு அரசியல் செய்து வரும் நிலையில், கொரோனா காரணத்தால் ஊரடங்கு அமூலில் இருக்கும் போது, காமராஜ், ஆனந்தராஜ் என்று சிலர், மதுரை நீதிமன்றத்தில், வழக்குகள் தொடுப்பது[5], அவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது, நடத்துவது, அவற்றைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் போடுவது வாடிக்கையாகி விட்டது ஏதோ இவர்கள் சொல்லித் தான், அகழாய்வு மற்றும் வினினிஆன ரீதியில் ஆராய்ச்சி எல்லாம் நடக்கின்றன என்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்கி வருகின்றனர். உண்மையில், அரசியல்வாதிகள் தான் அங்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் சிலர் பொழுது போக்கவும் வந்து செல்கிறார்கள். இதனால், அங்கிருக்கும் அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் என்று எல்லாமே நிலைமாறிப் போகின்றன. வருபவர்கள், தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துச் செல்கின்றனர். அமைச்சர் முதல் எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் வருபவர்களும், ஏதோ நினைவுப் பொருளாக கொடுக்கப் படுகின்றன, அவர்களும் எடுத்துச் செல்கின்றன. பலமுறை மழை பெய்திருக்கிறது. இதனால், அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் எல்லாம் பாதிக்கப் பட்டிருக்கின்றன.
அக்டோபர் 10, 2020 – நீதிபதிகிருபாகரன்கீழடிக்குவந்துபார்த்தார்[6]: அக்டோபர் 2020ல் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி கிருபாகரனே, கீழடிக்கு வந்து பார்த்தார், மற்றும் அங்குள்ள அகழாய்வு பணிகளை பார்வையிட்டார், களபணியாளரளுடன் உரையாடினார் என்று செய்திகள் உள்ளன. சிவகங்கையின் கலெக்டர் ஜே.ஜெயகாந்தன் உடனிருந்து, ஏழாம்கட்ட பணிகள் நடந்து வருவதைப் பற்றி விளக்கினார்[7]. அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் காண்பித்து, அங்கு கண்டுபிடித்த பொருட்கள் குறித்து நீதிபதி கிருபாகரனுக்கு விளக்கம் அளித்தார். இதைதொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய ஊர்களுக்கும் சென்று அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டதுடன், அங்கு கிடைத்த பொருட்களையும் பார்த்து, அதுகுறித்து கேட்டறிந்தார்[8]. ஒவ்வொரு அகழாய்வு எந்த மாதத்தில் தொடங்கி, எந்த மாதத்தில் நிறைவு பெறும், தொடர்ச்சியாக அகழாய்வு நடத்தாதது ஏன், அதற்கான அனுமதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார்[9]. அப்படி என்றால், நிச்சயமாக, நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய விசாரணையை அங்கு செய்துள்ளார் என்றாகியது. தேவை என்றால், அந்த அதிகாரிகளை நேரிடையாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணை செய்திருக்கலாம்.
10-10-2010 – நீதிபதிஎஸ்.வைத்தியநாதனும்அங்குவந்துபார்த்தார்: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறைகிணறையும், பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணியையும் நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு காட்சிப் படுத்தப் பட்டுள்ள அகழாய்வுப் பொருட்களைக் கண்டு, நீதிபதி மிக்க ஆர்வத்துடன்-ஆசையுடன் பார்த்து மகிழ்ந்தார். மதியம் நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார். அதற்கு அடுத்து சற்று நேரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனும் கீழடி, கொந்தகைக்கு வந்து அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டார். அவருக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவரை கலெக்டர் ஜெயகாந்தன் வரவேற்றார். குறிப்பிட்ட வழக்குகள் அம்பந்தப் பட்ட இடங்களுக்கு நீதிபதிகள் சென்று பார்ப்பது என்பது சாதாரண விசயமாகத் தெரியவில்லை. ஆனானப் பட்ட ராமஜென்பபூமி வழக்குகளில் கூட எந்த நீதிபதியும் சென்று பார்த்தார், விசாரித்தார், அங்கிருப்பவர்களிடம் பேசினார் என்றெல்லாம் செய்திகள் வரவில்லை. ஆனால், தமிழக அகழாய்வு விவகாரங்களில் அத்தகைய செய்திகள் வந்துள்ளன. இவையெல்லாம் ஆச்சரியமாகத் தான் உள்ளன. மேலும் ஜூலை 21, 2018ல் பேசியுள்ளது கவனிக்க வேண்டும்.
[5] Madras High Court – S.Kamaraj @ Muthalankurichi … vs Union Of India on 21 December, 2020; BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT- DATED : 21.12.2020; CORAM; THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN; AND THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI; W.P.(MD)No.21577 of 2019; S.Kamaraj @ Muthalankurichi Kamarj … Petitioner Vs. 1.Union of India and others.
The Writ Petition has been filed to direct the respondent No.3 to grant permission to the Respondent No.5 for carrying out further Archaeological Excavations and Scientific Research in Athichanallur, Keeladi, and Kodumanal Archaeological Sites and to direct the respondent No.3 to grant permission to the Respondent No.5 for carrying out the Archaeological Excavations and Scientific Research in the Archaeological Sites along with the Tamiraparani River, and Sivakalai and Konthagai in accordance with law.
[6] The Hindu, High Court Judges visit Keeladi, STAFF REPORTERMADURAI, OCTOBER 10, 2020
21:19 IST; UPDATED: OCTOBER 11, 2020 04:39 IST.
[7] Madras High Court Judge Justice N. Kirubakaran on Saturday visited the archaeological site in Keeladi, near Madurai.
In his personal visit, the judge interacted with the officials of the Tamil Nadu State Department of Archaeology and Sivaganga Collector J. Jayakanthan on the progress made in the sixth phase of the archaeological excavations.
The judge was enamoured by the findings that were on display at the site. Spending close to an hour at the site, the judge also enquired the officials of the State Archaeological Department on the progress made on the excavations in other sites.
A Division Bench headed by Justice N. Kirubakaran is hearing a batch of public interest litigation petitions with regard to archaeological excavations being carried out across Tamil Nadu. The judge has sought a response on the excavations.
In the afternoon, Justice S. Vaidyanathan of the Madras High Court, in a personal visit, also interacted with the officials at the site.
எஸ்.சிமற்றும்எஸ்.டிமக்களுக்குஎதிராகஇழைக்கப்படும்கொடுமைகளைத்தடுக்கும்சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதிமன்றதீர்ப்பும் (2)
விவகாரத்தில்உச்சநீதிமன்றத்தின்தீர்ப்புக்குஎதிராகமத்தியஅரசுசீராய்வுமனுதாக்கல்செய்தது: ஒரு நிலையில், இப்போராட்டம் பிஜேபிக்கு, மோடிக்கு எதிரானதாக எடுத்துச் செல்லப்பட்டதை கவனிக்க முடிந்தது. எதிர்கட்சிகளும் அத்தகைய போக்கைக் கடைப் பிடித்தன. எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்[1].
அரசிலாக்கப்படும்உச்சநீதிமன்றதீர்ப்புகள்: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எஸ்.சி. எஸ்.டி. சமூக எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதினார். இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். திங்களன்று [02-03-2018] மக்களவையில் இன்று பலத்த அமளிக்கிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவருக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: “எஸ்.சி., எஸ்.டி. சட்டவிவகாரத்தில்உச்சநீதிமன்றத்தின்தீர்ப்புக்குஎதிராகமத்தியஅரசுசீராய்வுமனுதாக்கல்செய்தது. இந்தவிவகாரத்தில்பிரதமர்மோடியின்அரசுமுழுமையாகபட்டியல்வகுப்பினர்பக்கம்தான்இருக்கிறது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[2].
20-03-2018 அன்றுஅளிக்கப்பட்டதீர்ப்புஎன்ன?: எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது யார்மீதும் உடனடியாக கைது நட வடிக்கை எடுக்கக் கூடாது; தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும்; அதேபோல, அரசு ஊழியர்களையும் உடனடியாக கைது செய்யக்கூடாது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும் உன்று உத்தரவு பிறப்பித்தது. அதாவது, அச்சட்டத்தை துர்பிரயோகம் செய்வது தடுக்கப் பட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டியது. உச்சநீதிமன்றம் 02-03-2018 அன்று, “தனது முந்தைய தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், போராடுபவர்கள் தீர்ப்பைக் கூட படித்திருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது”, என்று அறிவித்தது[3]. முன்னர் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது[4].
“தலித்” போர்வையில்எதிர்கட்சியினர்மற்றவர்தூண்டிவிட்ட “பாரத்பந்த்”: தென் மாநிலங்களில் “காவிரி பிரச்சினை” வைத்துக் கொண்டு, அரசியல் நடந்து வருகின்றது, அது கர்நாடக தேர்தலுடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால், எஸ்.சி மற்றும் எஸ்.டி அதிகமாக இருக்கும் மாநிலங்களில் மட்டும் தான், இந்த போராட்டம் நடத்தப் பட்டு, வன்முறையில் முடிந்து, 10 பேர் பலியாகி உள்ளனர், பொது மற்றும் தனியார் சொத்துகள் நாசமாக்கப் பட்டுள்ளன. இதன் பின்னணியில் எதிர் கட்சியினர், கம்யூனிஸ்ட் வகையறாக்கள், முஸ்லிம்-கிருத்துவ ஆதரவு நிறுவனங்கள் என்று தான் உள்ளன. முன்னர் ஜிக்னேஸ் மேவானியின் பேட்டி சனி-ஞாயிறு என்று இரண்டு நாட்களிலும் ஓடியது, அதில், வன்முறை தூண்டும் வகையில் பேச்சு இருந்தது. எஸ்.சி மற்றும் எஸ்.டி நலன், உரிமைகள் என்பதை விட, மோடி எதிர்ப்பு தான் ;பிரதானமாக இருந்தது. இதே பாட்டை மற்றவரும் பாடினர்.
உச்சநீதிமன்றம்தீர்ப்பைமறு–ஆய்வுசெய்யமறுத்துவிட்டது: வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஏ.கே கோயல் மற்றும் யுயு லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது[5]: “‘நாங்கள்அளித்ததீர்ப்பைமுழுமையாகபுரிந்துகொள்ளாமல், சுயநலகாரணங்களுக்காகதவறானவிளக்கம்கொடுத்து, திசைத்திருப்பசிலர்எதிர்க்கின்றனர். எங்கள்உத்தரவுஎஸ்.சி–எஸ்.டிமக்களுக்குஎதிரானதுஅல்ல. இந்தசட்டம்தனிப்பட்டகாரணங்களுக்காகதவறாகப்பயன்படுத்தக்கூடாதுஎன்பதுதான்எங்கள்எண்ணம். வன்கொடுமைதடுப்புச்சட்டத்தைநீர்த்துப்போகச்செய்யும்நோக்கம்நீதிமன்றத்திற்குஇல்லை. புகார்அளித்தஉடனேயேகைதுசெய்யக்கூடாதுஎன்றுதான்கூறியுள்ளோம். விசாரணைக்குப்பிறகுஉரியநடவடிக்கைஎடுக்கலாம். அப்பாவிமக்கள்பாதிக்கப்படக்கூடாதுஎன்பதுதான்எங்கள்எண்ணம். எந்தஒருசட்டமும்,அப்பாவிமக்களைப்பாதித்துவிடக்கூடாதுஎன்பதுதான்நீதிமன்றத்தின்எண்ணம். எனினும்இந்தவிவகாரத்தில்விரிவானவிசாரணைநடத்தநீதிமன்றம்தயாராகஉள்ளது. இதுதொடர்பாகமுறையிட்டுள்ளஅனைத்துதரப்பினரும்இரண்டுநாட்களுக்குள்பதில்மனுதாக்கல்செய்யவேண்டும். 10 நாட்களுக்குபிறகுஉச்சநீதிமன்றம்விரிவானவிசாரணைநடத்தும்,” எனக் கூறினர்[6].
ஊடகங்களின் திரிபு செய்திகளும், உச்சநீதி மன்றத்தின் விளக்கமும்: ஊடகங்களும் தீர்ப்பை ஒழுங்காகப் படிக்காமல்[7], தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு மற்றும் அடுத்தவர் சொன்னதை கேட்டுக் கொண்டு, எஸ்.சி-எஸ்.டியினர் ஏன் “பாரத் பந்த்”தில் ஈடுபட்டனர், அவர்களின் பாதிப்பு என்ன, போராட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[8]. அதாவது, உண்மையான விவரங்களை, செய்தி-விசயமாக போடாமல், தூண்டும், ஆதாரமில்லாத கருத்துகளை, அரைவேக்காட்டுத் தனமான விசயங்களை செய்திகள் போல போட்டு வருகின்றனர். 89-பக்கங்கள் கொண்ட தீர்ப்பளித்த நீதிபதி கோயல் கூறியதாவது[9], “எங்களுடையதீர்ப்புஅரசியல்நிர்ணயசாசனத்தில்உள்ளதைநடைமுறைப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்டவர்களின்உரிமைகளைநாங்கள்நான்றாகவேஉணர்ந்திருக்கிறோம், தான்அவைஉயர்ந்தஇடத்தில்வைக்கப்பட்டுள்ளன…… இருப்பினும்அதேநேரத்தில், அப்பாவிநபர்யாரும்இதில்பொய்யானமுறையில்சிக்கவைக்கப்பட்டு, விசாரணைஇல்லாமல்கைதுசெய்யப்படுவதைத்தடுக்கிறது. நாங்கள்இச்சட்டம் அமூல்படுத்துவதைத்தடுக்கவில்லை. இந்தசட்டம்என்னஅப்பாவிமக்களைகைதுசெய்யப்படவேண்டும்என்றாசொல்கிறது? ஆகவே, எங்களதுதீர்ப்புஅச்சட்டத்திற்குஎதிரானதுஅல்ல,” என்று எடுத்துக் காட்டினார்[10].
[3] ZeeTVnews, Not against SC/ST Act, those agitating may not have read judgement: Supreme Court, By Zee Media Bureau | Updated: Apr 03, 2018, 15:04 PM IST
[7] India Today, Why Dalits called a Bharat Bandh? SC/ST Act and the Supreme Court ruling explained, Anusha Soni, New Delhi, April 2, 2018: UPDATED 15:40 IST
[9] DNA, Relief for SC/ST can’t be at cost of innocent: Supreme Court, WRITTEN BY Ritika Jain, Updated: Apr 4, 2018, 05:05 AM IST.
[10] However, Justice Goel, the author of the 89-page judgement said, the judgment fortified the Act. “Our judgment implements what is said in the Constitution. We are conscious of the rights of the underprivileged and place it at the highest pedestal… but at the same time, an innocent person cannot be falsely implicated and arrested without proper verification. We have not stopped the implementation of the Act. Does the Act mandate the arrest of innocent persons? Our judgment is not against the Act,” Justice Goel said addressing Venugopal.
August 2011 – Santiago arrested in Salem for land grabbing case
பில்லியனர்சான்டியாகோமார்டின்: கோவையை சேர்ந்த சான்டியாகோ மார்ட்டின், பல ஆண்டு காலமாக லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் லாட்டரி விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான உரிமம் பெற்றுள்ளார். தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கேரளா, மேற்கு வங்கம் மற்றும் மேகலாயா, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களை மையமாக வைத்து இவரது லாட்டரி தொழில் நடைபெற்று வருகிறது. கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி நடத்துதல், விற்பனை மற்றும் விநியோகத்தில் முறைகேடு செய்ததாக மார்ட்டின் மீது 32 வழக்குகள் உள்ளன. இது பற்றி 7 வழக்குகளில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணை நடத்தி வருகிறது தமிழ்நாட்டில் மார்ட்டின் மீது பல நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவர் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு லாட்டரி சாம்ராஜ்யம் நடத்தும் மார்ட்டின், கடந்த 2011ஆம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை எழுதிய இரு படங்களை தயாரித்தார். லாட்டரி தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 மாதங்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்[1].
Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo
வருமானவரிதுறைசான்டியாகோகம்பெனிகளில்சோதனை: மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும் மற்றும் சில இடங்களிலும் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழ்நாடு வரை இது பரவி இருப்பதாகவும், இதில் கோடிக்கணக்கான பணம் புழங்குவதாகவும் மத்திய புலனாய்வு துறையினர் மூலம் வருமான வரி துறையினருக்கு தகவல் கிடைத்தது[2]. வருமானவரி துறையினர் கீழ்கண்ட இடங்களில் சோதனையிட்டனர்[3]:
ஜெனெரெல் சிஸ்டெம் [General System]
பியூச்சர் பிலேன் என்டர்பிரைசஸ் [Future Plan Enterprisestwo South Kolkata based companies],
எஸ். நாகார்ஜுனா [S Nagaarjuna] வீடு மற்றும்
சான்டியாகோ மார்டீன் [Santiago Martin] வீடு
ஜி. சிஸ்டம்ஸ் [G . Systems]
எப். பி. என்டர்பிரசஸ் [ F. P. Enterprises]
மார்டின் காணவில்லை என்றும், எக்ஸ். அலெக்ஸ்சாந்தர் [X Alexander] என்பவரிடம் விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிகிறது[4]. மேற்கு வங்கத்தில் தமிழக லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. 25-09-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் மார்ட்டினுக்கு சொந்தமான இடத்தில் வருவாய்த்துறையும், அமலாக்கத் துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்[5].
Crores seized from Martins house – but he was missing DM Sep.2015
கொல்கொத்தாவிலிருந்துகோடிகள்பறிமுதல்: கொல்கத்தாவில் பல வீடுகளை வாடகைக்கு எடுத்து, மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனம் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. அப்படி மேற்கு கொல்கத்தா பகுதியில், முன்னாள் நீதிபதி ஒருவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். அந்த வீட்டில் இருந்து நேற்று 54 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதுபோல் தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 21 கோடியும், சிலிகுரியில் மார்ட்டின் நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் இருந்து 29 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் 104 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது[6]. சிலிகுரி என்ற இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், ரசீதுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின[7].
the curios case of Santiago Martin
தமிழகத்தைச்சேர்ந்தஎஸ். நாகராஜன்என்பவர்கைது: இதில், சாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.1,000 கோடி பணம் சிக்கியது. இது தொடர்பாக மார்ட்டினுக்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்ந்த எஸ். நாகராஜன் என்பவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், நாகராஜன் லாட்டரி விற்பனையுடன் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகராஜனின் பாஸ்போர்ட்டை கைப்பற்றிய அதிகாரிகள், அவர் எந்தெந்த வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகராஜன் பல வருடங்களாக போலி லாட்டரி நடத்தி, பொது மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி மோசடி செய்து இருக்கலாம். இந்த மோசடி பணத்தின் மூலம் ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்[8]. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர், மேற்கு வங்காளத்தில் அலுவலகங்கள் நடத்தி வருவதை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்[9]. மத்தியபிரதேச மாநிலத்தில் சிலரது வங்கி கணக்குகளில் திடீர் என்று லட்சக்கணக்கில் பணம் போடப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்த போது, அவர்கள் லாட்டரியில் விழுந்த பரிசு பணம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஹவாலா பணத்தை லாட்டரி பரிசு பணம் என்று சொல்லி வங்கியில் டெபாசிட் செய்து இருப்பது தெரிய வந்திருக்கிறது[10].
SS TV channel – Santiago Martin
தமிழ்நாட்டில்இருந்துமே.வங்கத்திற்குஹவாலாபணம்போவதுஏன்? வெளிநாட்டுக்குகடத்தப்படுவதுஎப்படி?: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, வங்கதேச நாட்டுக்கு எளிதில் பணத்தை கடத்த முடிகிறது. அங்கிருந்து அரபு நாடுகளுக்கு பணம் எளிதில் பரிமாறப்படுகிறது[11]. துபாயிலுள்ள தாவூத் கும்பல் இந்த பணத்தை பெற்று ஐபிஎல் போன்ற விளையாட்டுகளின்போது சூதாட்டத்திற்கு பயன்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது. மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது[12]. தமிழகத்தில் பதுக்கி வைத்துள்ள, ரூபாய் நோட்டு மூட்டைகளை அவர், கன்டெய்னர் மூலம், பிற மாநிலங்களுக்கு கடத்த இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது[13]. இதுபற்றிய தகவலை தமிழக போலீசாருக்கு தெரிவித்து, அவர்களை உஷார்படுத்தி உள்ளோம், இவ்வாறு மத்திய உளவு போலீஸ் வட்டாரங்கள் கூறின[14].
[3] The CBDT officials with the help of Special Task Force of Kolkata Police carried out raids at two South Kolkata based companies, General System and Future Plan Enterprises, and at S Nagaarjuna and Santiago Martin. The operation was carried out in early hours based on inputs provided by IB about an alleged fake lottery racket which has its tentacles spread upto Tamil Nadu. A highly-placed Kolkata police officer said various teams, consisting of members of STF and its anti-bank fraud section, helped the tax department sleuths conduct the raids at five places in the city. “Raids are being conducted at four places in New Alipore police station limits and one on Sarat Bose Road area today,” the officer said. They said the teams, comprising about 100 members including local police, had to deploy about a dozen counting machines to estimate the cash recovered from two firms identified as G Systems and F P Enterprises.
[7] தினத்தந்தி, 16 சாக்கு மூட்டை, 27 சூட்கேஸ்கள் நிறைய கட்டுக்கட்டாக பணம் லாட்டரி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.45 கோடி சிக்கியது, மாற்றம் செய்த நாள்:வெள்ளி, செப்டம்பர் 25,2015, 4:55 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, செப்டம்பர் 25,2015, 4:55 AM IST.
[8] தமிழ்.இந்து, கொல்கத்தாவில்ஹவாலாமோசடிஅம்பலம்: தமிழகதொழிலதிபர்குடோனில்கத்தைகத்தையாகபணம்பறிமுதல், Published: September 24, 2015 15:40 ISTUpdated: September 24, 2015 17:37 IST.
தகுதித்தேர்வில்தேர்ச்சிபெறாதவர்கள்வழக்கறிஞர்தொழில்செய்வதைதற்காலிகமாகநிறுத்திவைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது (22-09-2015): தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் 22-09-2015 அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது[1]: 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக்கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன[2]. 2010ல் முதலில் நுழைவு தேர்வு அறிமுகப்பப்படுத்தியபோதே சிலர் எதிர்த்தனர், ஆனல், அது கட்டாயமாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டுவ்முதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது[3].
Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday
20-03-2015 அன்றுபார்கவுன்சில்வளாகத்தைத்தாக்கியவழக்கறிஞர்கள்[4]சஸ்பென்ட்: 20-3-2015 அன்று சில வழக்கறிஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[5]. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி. மணிகண்டன் வதன் செட்டியார் [Manikandan Vathan Chettiar], ஆர். மதன்குமார் [R Madhan Kumar ] ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன[6]. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[7]. சென்ற வருடம் பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்துபோது, நீதிபதிகள் பேசியது, இப்பொழுது கவனத்தில் கொள்ளத்தக்கது.
Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest
”வழக்கறிஞர்கள், தொழில்தர்மத்தைமீறிசெயல்படுவதைஏற்கமுடியாது,” என, கூறினார்[8]: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று, பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பேசியதாவது: வழக்கறிஞர்கள் பணி, நீதிபதிகள் பணியை விட முக்கியமானது. சமூகத்தில், இவர்களது பணி மிகவும் பொறுப்பு வாய்ந்தது.வழக்காடிகளுடன், வழக்கறிஞர்களின் உறவு பெரும் நம்பிக்கைக்கு உரியது. எனவே, வழக்கறிஞர்கள், நேர்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.சமூகத்திலும், நீதித் துறையிலும், முக்கிய பங்காற்றும் வழக்கறிஞர்கள் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும். சமூக நீதிக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர்கள் பணி, சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்நிலையில், தொழில் தர்மத்தை மீறி, வழக்கறிஞர்கள் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது; அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நம்பிக்கை குறைவான எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது.சமூக சேவையின் ஒரு பகுதியாக, வழக்கறிஞர் பணியை கருத வேண்டும். வழக்கறிஞர்களுக்கு, பார் கவுன்சில் வகுத்துள்ள விதிகளுக்கு தலை வணங்கி, பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings
சட்டம்பயிலும்மாணவர்களைஉரியதகுதிகளுடன்உருவாக்குவதும், மூத்தவழக்கறிஞர்களின்கடமை[9]: விழாவில் வாழ்த்துரை வழங்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பேசியதாவது: நீதிபதி நாகப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றிய போது, சென்னை சட்டக் கல்லூரியில், பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றினேன். தற்போதுள்ள சட்டக் கல்வியுடன், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பார் கவுன்சில் உறுப்பினர்கள் முன்வர வேண்டும். வழக்காடிகளை எப்படி அணுகுவது, நீதிமன்றத்தில் எப்படி பேசுவது போன்ற, அடிப்படை பயிற்சிகளை, சட்டம் பயிலும்போதே, மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இப்பணியை, சமூக சேவையாகக் கருதி, பார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர்கள், திறமையான இளம் வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது, பணம் சம்பாதிக்கும் வியாபாரம் அல்ல. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், பணம் தேவை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை.
In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen
வழக்கறிஞர்களின்உரிமைகளுக்காகபோராடுவதோடு, சமூகமேம்பாட்டுக்கும், பார்கவுன்சில்உறுப்பினர்கள்தங்கள்பங்களிப்பைசெய்யவேண்டும்: நீதிபதி பானுமதி: இளம் வழக்கறிஞர்களுக்காக, பார் கவுன்சில், தொடர் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இதற்காக, சட்ட கமிஷன் நிதி அளிக்கிறது. இதைப் பயன்படுத்தி, இளம் வழக்கறிஞர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், கருத்தரங்குகளை பார் கவுன்சில் நடத்த வேண்டும். சென்னை பார் கவுன்சில் மூலம், வழக்கறிஞர்களுக்கு அளிக்கப்படும், குடும்ப நல நிதி, விபத்து காப்பீடு போன்றவை, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.
Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015
நீதிமன்றம்கணினிபோன்றதுஎன்றால், அதன்மென்பொருள்போன்றவர்கள்வழக்கறிஞர்கள்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்: கடந்த, 1928ல் துவங்கப்பட்ட சென்னை பார் கவுன்சில், பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது. நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள். மென்பொருள், சிறப்பாக இருந்தால் தான், நீதிமன்றம் என்ற கணினியும் நன்றாகச் செயல்படும்.சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அவர்களால், பெருந்தொகையை கட்டணமாகக் கொடுத்து, வழக்காட முடியாது. எனவே, சாதாரண மக்களை மனதில் கொண்டு, வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும். நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.
A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter
நீதிபதிகளுக்குஎதிராக, வழக்கறிஞர்கள்கோஷம் [செப்டம்பர்.17, 2015][10]: வக்கீல்கள் இப்பொழுதெல்லாம் போலீஸாருடன் சண்டை போடுவது, பொது இடங்களில் கலாட்டா செய்வது, போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கருப்புக் கோட்டு போடாலே, ஏதோ அவர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்து விடுகின்றன, யாரும் அவர்களை ஒன்றும் கேட்க முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு அந்து விடுகிறது. செப்டம்பர்.13, 2015 அன்று சென்னை உயர் நீதிமன்ற அரங்குக்குள், வழக்கறிஞர்களை அனுமதிக்காததால், நீதித்துறை மற்றும் போலீசாருக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். இதனால், உயர் நீதிமன்றத்தில், பரபரப்பு ஏற்பட்டது. கட்டாய, ‘ஹெல்மெட்’ உத்தரவைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள், ஊர்வலம் சென்று, நீதிபதிகளுக்கு எதிராக, கோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாது, கோர்ட்டு அறையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையின் பாதுகாப்பு பணியை மத்திய போலீசாரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது[11]. மதுரையிலும் வக்கில்கள் கலாட்டா செய்து வருகிறார்கள்[12]. வக்கீல்கள் ஏற்கெனவே கட்சி, ஜாதி என்ற முறைகளில் பிரிந்து கிடக்கிறார்கள். இதனால், பரபட்சமற்ற முறையில் வழக்காடுவது, வழக்குகளை நடத்துவது, தம்மை வந்தவர்களுக்கு உதவுவது போன்ற குணங்கள் எல்லாம் மறைந்து விட்டன. அதாவது, சட்டத்தைக் காக்க வேண்டிய வக்கில்களே, இவ்வாறு சட்டங்களை மீறி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
[3] தி.இந்து, தகுதித்தேர்வில்தேர்ச்சிபெறாததால் 2,495 வழக்கறிஞர்கள்தொழில்செய்யதற்காலிகதடை: தமிழ்நாடு, புதுச்சேரிபார்கவுன்சில்தலைவர்தகவல்,Published: September 23, 2015 08:24 ISTUpdated: September 23, 2015 08:25 IST.
[4] The tussle between between two groups of Madras High Court lawyers over the recognition accorded to the Tamil Nadu Advocates Association (TNAA) reached the doorsteps of the Bar Council. Advocates affiliated to the Madras High Court Association (MHAA) barged into the council building protesting the grant of recognition and vandalised a portion of it on Friday (20-03-2015).
அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?
பெங்களூரு வெடிகுண்டு விசாரணையில் சந்தேகிக்கும்படியாக கைது செய்யப் பட்டுள்ளவர்கள் எல்லோரும் முந்தைய “அல்-உம்மா” என்ற தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார் எடுத்துக் காட்டுகின்றனர்[1]. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் ஏன் மற்படியும் பழைய தொடர்புகளை வைத்திருக்கிறர்கள் என்றும் தெரியவில்லை. முன்பு போல திருநெல்வேலி-கோயம்புத்தூர்-பெங்களூரு இணைப்பும் தெரிகிறது[2]. இதனால், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலையெடுக்கின்றவா – வேறு உருவத்தில் செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் தலைதூக்கியுள்ளது[3]. தடை செய்யப்பட்ட சிமி, வஹதத்-இ-இஸ்லாமி ஹிந்த் (Wahadat-e-Islami Hind) என்ற பெயரில் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது[4]. சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது[5]. இது வெறும் சார்புடைய நிகழ்சியா உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்னர் தான் தெரியும்.
“குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்” என்ற தலைப்பில் எப்படி சட்டங்கள் புரட்டப்படுகின்றன என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்[6]. முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.
சட்டங்களைவளைக்கலாம், தவறாகவிளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களைநியமித்தஅரசியல்வாதி–எஜமானர்களுக்கேற்பதீர்ப்புகள்அளித்திருக்கலாம், ஆனால், சாகும்முன்னரேஅவர்கள்தங்களதுமனசாட்சிற்குபதில்சொல்லியாகவேண்டும்.
இப்பொழுது, மறுபடியும் அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவது போலிருக்கிறது. முன்பு அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுதில்லை. தமிழக போலீஸ் இணைதளத்திலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன[7]. கீழ்கண்ட வாசகங்கள் தாம் வருகின்றன[8].
404 – File or directory not found.
The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable
அமெரிக்காவில், சந்தேகிக்கப் படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளிப்படையாக பிரசுரிக்கிறார்கள். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆனால், இங்கு அவர்களை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை இல்லை என்று முஸ்லீம்கள் போலீசாரையே குற்றஞ்சாட்டப்படும் போது, பழைய குற்றவாளிகள் என்று அவர்களின் புகைப்படங்கள் இருந்துவிட்டு போகலாமே?
இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்கள்: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பந்தமாக, கீழ்கண்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் செய்திகளில் வெளிவந்தவை, ஆனால், தனித்தனியாக புகைப்படங்கள் இல்லாமல், யார்-யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி உள்ளன. அவற்றிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன:
கிச்சான் புகாரி (38)[9] – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான் – நெல்லை மேலப்பாளையம் – மேலப்பாளையத்தில், மாட்டுச் சந்தை நடத்தி வந்தவன், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவன் எட்டு கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன். புழல் ஜெயிலில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானான். அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் சிறுபான்மையின நல அறக் கட்டளை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தான். இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவி வந்தான்.
சதாம் உசேன்: கிச்சான் புகாரியின் உறவினர் சதாம் உசேன், கடந்த மாதம், போத்தனூர் திருமண மண்டபத்தில் நடந்த, ரகளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய பைக்கை, இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
பீர் முகைதீன் (39) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்,
பஷீர் அகமது (30) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – கட்டட தளவாட பொருட்கள் புரோக்கர், சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்
பீர் முகமது – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – இவர்கள் அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – பெங்களூரில் டீ தூள் விற்பவன்-
முகமது ஷாலி – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான். இவர், “சாரிட்டபிள் டிரஸ்ட் பார் மைனாரிட்டீஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். நாகர்கோவில் பகுதியில் சிலருடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகி எம்.ஆர்.காந்தி, 62, தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.
பஷீர் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் – திருநெல்வேலியில் ஒரு ரியல் எஸ்டேடில் ஆபீஸ் பையனாக வேலை செய்பவன்.
ரசூல்மைதீன்– அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்
சலீம் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்
முன்பே குறிப்பிட்டபடி, இவர்களின் பெயர்கள் கூட வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் உள்ளன. ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படும் விவரங்கள் தமிழ் நாளிதழ்களில் கொடுக்கப்படுவதில்லை. அல்லது குறைத்துப் போடுகிறார்கள்.
[4] Further, Tamil Nadu has also banned the All India Jihad Committee and Students Islamic Movement of India (SIMI). But SIMI, is regrouping under the banner of Wahadat-e-Islami Hind, Jayalalitha said.
[9] Kichan Buhari, a prominent member of the All India Jehad Committee (AIJC) and a close associate of its founder – Ahmad Ali alias Palani Baba, People’s Democratic Party Chairman, Abdul Nasser Madani, and Kunnangudi Hanifa of Tamil Muslim Munnetra Kazhagam (TMMK)
தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?
லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்
Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.
Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)
3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned
RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th
ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?
திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –
நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.
இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!
வேதபிரகாஷ்
16-03-2012
[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.
மௌதனியை கைது செய்த பெங்களூரு போலீஸ் அதிகாரிக்கு கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன்!
அப்துல் நாசர் மௌதனியை கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, என்று போடப்பட்டு புகார் மனு: அப்துல் நாசர் மௌதனியை கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, ஏனெனில் கைது செய்யப்பட்டவுடன் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில்அழைத்துவராமல், வழியில்-கைது செய்யும்படியான வாரண்டை வைத்துக் கொண்டு பெங்களூரு போலீஸார், மௌதனியை கைது செய்து கொண்டு போய்விட்டனர், என்ற புகார் வழக்கை விசாரித்த நீதிபதி / மாஜிஸ்ட்ரேட் சௌந்தரேஷ், ஓம்காரைய்யா என்ற பெங்களூரு துணை போலீஸ் கமிஷனரை செப்டம்பர் 13ம் தேதி ஆஜராகும்படி பணித்துள்ளார்[1].
ஓம்காரைய்யா வராவிட்டால் என்னாகும்? அப்துல் சலாம் என்ற அப்துல் நாசர் மௌதனியின் சகோதரர் அப்படியான புகார் ஆகஸ்ட் 30ம் தேதி மனு கொடுக்க, நீதி மன்றம் முன்பு கொல்லம் சூப்பிரென்டென்ட் ஆஃப் போலீஸை 01-09-2010 அன்று ஆஜராகும்படி பணித்தது[2]. அவர் தரப்பில் கேரள அரசு வக்கீல் வந்தாராம். ஆனால், ஓம்காரைய்யா தரப்பில் யாரும் வராதலால், இப்படி சம்மன் அனுப்பியுள்ளாராம்[3].
இமாம் மற்றும் மௌலானா விஷயங்களில் கேரள நீதிமன்றங்களின் இரட்டை வேடங்கள்: பெங்களுரு 2008 குண்டு வெடிப்பு வழக்கில் விசாரித்துவரும், கர்நாடக போலீஸ் அதிகாரியை ஆஜராகும்படி கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன் அனுப்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது. முன்பு டில்லி இமாமை கைது செய்யும்படி மூன்றுக்கும் மேலான நீதிமன்றங்களில் வாரண்டுகள் பிறப்பித்தும், எந்த போலீஸாரும் கைது செய்யவில்லை. அதில் கேரள நீதிமன்றமும் ஒன்று[4]. மாறாக, இப்பொழுது கேரள நீதிமன்றம் உஷாராக வேலை செய்கிறது போலும். அதாவது ஒரு முஸ்லீம் அடிப்படைவாதி, நீதிபதிகளின் கால்களை உடைப்பேன்……………… என்ற ரீதியில் இன்னும் ……………………….பேசினாலும், நீதிபதிகள் மறந்து விடுவர். ஆனால், இன்னொரு முஸ்லீம் விஷயத்திலும் இப்படி நேர்மாறாக சம்மன் அனுப்புவார்களாம்! இப்படி சட்டத்தை உபயோகப் படுத்தினால், சட்டம் எப்படி வேலை செய்ய்ம்? அப்படி வேலை செய்யாவிட்டால், எப்படி மக்கள் சட்டத்ட்கை நம்புவார்கள்?
கேரள போலீஸார் நடித்தது அன்றே தெரிந்தது[5]: கேரள போலீஸார் மௌதனியை கைது செய்யாமல் நாடகம் ஆடி காலம் கழித்ததை[6] அப்பொழுது ஊடககங்களில் எல்லோரும் பார்த்துதான் ரசித்துக் கொண்டிருந்தனர். நாளிதழ்கள் கேரள போலீஸார் வ்வாறு வேண்டுமென்றே காலம் கடத்துவதை எடுத்துக் காட்டினர்[7].
[4] கோர்ட் அவமதிப்பு வழக்கில், நீபதிகள் மற்றும் நீதிபதிகளைப் பற்றி கேவலமாக, அவதூறக பேசிய டில்லி இமாமை கைது செய்யும்படிமூன்றுக்கும் மேலான நீதிமன்றங்களில் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த இமாம் கைது செய்யப்படவில்லை. அதாவது நீதி செயல்படவில்லை!
[5] A police team from Karnataka camping in south Kerala town Kollam could not on Wednesday arrest People’s Democratic Party chairman Abdul Naser Madani, an accused in the 2008 Bangalore serial blasts case, with the Kerala Police reportedly going back on its word to provide local support to them.
Indian Express, Kerala ‘delay tactics’ stall Madani arrest, August 12, 2010
குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!
கடந்த ஆண்டுகளில் தெரிந்தோ, தெரியாமலோ நீதிபதிகள் பிச்சினைகள் பலவாக இருந்தாலும், தனிநபர் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக, ஒன்று சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது இல்லை, அந்த தனிநபரின் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது என்றநிலயில் செய்பட்டுவருகிறார்கள். இது எல்லாநிலைகளிலும் சரிவருமா என்று தெரியவில்லை. இந்நிலையில், நித்யானந்தாவே அத்தகைய நிலையை சாதகமாக குறிப்பிட்டு, தனக்கு சட்டத்தீர்வு தீரவேண்டும் என்று கோரியிருப்பது, ப்றுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகிறது.
சென்னை : நடிகைகள் குஷ்பு, சுகாசினி தொடர்பான வழக்குகளை சுட்டிக்காட்டி, சென் னை ஐகோர்ட்டில் சுவாமி நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்: “கடந்த மார்ச் 2ம் தேதி தனியார், “டிவி’ ஒன்றில் என்னையும் என் பக்தையையும் (நடிகை ரஞ்சிதா) இணைத்து, வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதைத் தொ டர்ந்து மலிவான விளம்பர நோக்கில் பல்வேறு தரப்பினரும், என் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர். “ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தக் கூடாது’ என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை குஷ்பு மீது ஒரே பிரச்னைக்காக பல்வேறு வழக்குகள் தொடர்ந்த போது, இது சுட்டிக்காட்டப்பட்டது. நடிகை சுகாசினி மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது, சுப்ரீம் கோர்ட் உத்தரவைக் காட்டி, சென்னை ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்தது. அதேபோல், என் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது: கடந்த மார்ச் மாதம் கார்த்திகேயன் என்பவர், என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் மீது சி.பி.ஐ., உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மனு, நடைமுறைக்கு சரியானது அல்ல. குஷ்பு, சுகாசினி வழக்கில் கூறியது போல், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. எந்த முடிவை எடுத்தாலும், என்னையும் சேர்த்துக் கொண்டு, என் கருத்தை கேட்க வேண்டும்”, இவ்வாறு நித்யானந்தா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
“இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்‘: இம்மனு மீதான விசாரணை, ஐகோர்ட் நீதிபதி வாசுகி முன்னிலையில் வந்தது. நித்யானந்தாவின் மனுவை அவர் ஏற்றுக் கொண்டு, “இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்‘ என, உத்தரவிட்டார். நித்யானந்தா தொடர்பான அனைத்து வழக்குகளும் கர்நாடக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு தவிர, புதுச்சேரி உருளையன்பேட்டையில் ஒரு வழக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்தான அனிதா, முத்தமிட்ட ரேணுகா, சோரம் போன சிபு!
இன்றைய அரசியலில் பிரபலமாக உள்ளவர்கள் இவர்கள்தாம்!
1. அனிதா ராதகிருஷ்ணன் அதிமுகவை விவாகரத்து செய்து விட்டு திமுகவுடன் அரசியலுக்காக ஓடிப்போனவர்.
2. ரேணுகாச்சாரி என்பவரோ முத்தமிட்டு புரட்சி செய்த அரசியல்வாதி!
3. சிபு சோரன் எதைப் பற்றியும் கவலைப்படாத ஆசாமி!
அனிதாவின் விவாகரத்து!
அனிதா ராதாகிருஷ்ணனை துரோகி என கூறும் ஜெயலலிதா தான் எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தார்’ என கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் பேசினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் அனிதா, சுயமரியாதையுடனும், தன்மானத்தோடும் செயல்பட முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். அப்போதுதான் அ.தி.மு.க., தந்த பதவி தமக்கு வேண்டாம் என கூறிவிட்டு தி.மு.க,.,வில் இணைந்தார். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏ.,பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் தெரிவித்தார். இருப்பினும் அவரால் கிடைத்த பதவி தேவையில்லை என கூறி தி.மு.க.,வில் இணைந்தார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன் ஆனந்தமகேஸ்வரன்-வளர்மதி ஆகியோரது திருமணம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனால் தந்தையோ, ஓடிபோய்விட்டார்!
முத்தமிடும் ரேணுகா!
நர்ஸ் ஜயலட்சுமி போட்டோக்களைக் காண்பிக்கிறார்!
பாருங்களேன், சிரித்துக் கொண்டே போடுகிறார் கும்பிடு சோனியா!
ஓரக்கண்ணால் ஸ்டைலாகப் பார்க்கிறார் சிபு!
ஜார்கண்டில் ஆட்சி அமைக்க சிபு சோரனின் ஆதரவு இருந்தால் தான் முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருடன் பல்வேறு வியூகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தனது உதவியாளரை கொலை செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சிபு சோரனிடம் உதவியாளராக பணிபுரிந்த சசிநாத் ஜா 1994ம் ஆண்டு தில்லியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில் சிபு சோரன் உட்பட 5 பேர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டது. தில்லி உயர்நீதிமன்றமும் இவர்களை சமீபத்தில் குற்றவாளிகளாக அறிவித்தது. இதையடுத்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே, இன்று மாலை அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் சிபு சோரனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் கொல்லப்பட்ட சசிநாத் ஜா குடும்பத்தினருக்கு அவர் நஷ்டஈடாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இத்தொகையில், சசிநாத் ஜாவின் தாயாருக்கு ஒரு லட்சம் ரூபாயும், அவரது இரண்டு மகள்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
( செய்தி: தினமணி, கார்ட்டூன் : DC )