செய்யது பீடி கம்பெனி ரெயிடுக்கும், குட்கா மோசடிக்கும் தொடர்பு உண்டா? அரசியல், சித்தாந்த, தீவிரவாத தொடர்புகள் உள்ளதா?
வாட் வரியேய்ப்பு நடந்துள்ளதா, அப்பணம் துபாய்க்குச் செல்கிறாதா?: இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி, செய்யது பீடி கம்பனி நெல்லூரில் விலைப்பட்டிகளைப் போட்டு, அங்கு விற்கப்பட்டது போல காட்டிவருகிறார்கள். ஆனால், உண்மையில் அவை தமிழகத்தில் தான் விற்கப்படுகின்றன. ஆனால், நேரிடையாக தமிநாட்டில் விற்கவேண்டும் என்றால், 12% வாட் கட்டி விற்கவேண்டும். இதன் மூலம் ரூ 90 கோடி வரியேப்பு செய்துள்ளனர்[1]. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அத்தகைய தொகை சுமார் ரூ.10 கோடிகள் என்று வருமானவரித்துறை எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய கணக்கில் வராத பணம் துபாய்க்குச் சென்றுவிட்டதாக கூறுகிறது[2]. அதாவது, வரி ஏய்ப்பு செய்த பணத்தை செய்யது பீடி குழுமம் துபாயில் முதலீடு செய்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்[3]. நெல்லூற் பெயரில் பில்கள் போடுவதால், அங்கு கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றாகிறது. அங்கு விற்காமல் எப்படி கணக்கை சரிகட்டினார்கள் தெரியவில்லை. ஆனால், விவரங்கள் வெளியிடப் படவில்லை. தமிழ்நாடு தவிர, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலிங்கானா, சத்தீஸ்கர் முதலிய மாநிலங்களிலும் சோதனைகள் நடந்துள்ளன. சத்தீஸ்ரிலிருந்து வாங்கிய மூலப்பொருட்கள் விசயங்களிலும் கணக்கை மறைத்தது தெரிய வந்துள்ளது[4].
குட்கா தயாரிப்பு, விற்பனைக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது, பெற்றவர் விவரங்கள்: மாதவ ராவ் வீடு மற்றும் அவரது கணக்காளர் யோகேஷ்வரியின் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விசாரணையில் மாதவ ராவ் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்[5]. மேலும், தமிழகத்தில் உற்பத்தி செய்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட புகையிலைப் பொருட்களை, நாங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யவே இந்த பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்[6]. அமைச்சருக்கும், காவல்துறை ஆணையருக்கும் ராஜேந்திரன் என்பவர் மூலமாகவும், மத்திய வரித்துறை அதிகாரிகளுக்கு நந்தகுமார் என்பவர் மூலமாகவும் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மத்திய வரித்துறை அதிகாரிக்கு மொத்தமாக ரூ.16 லட்சம் லஞ்ச அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதோடு நின்றுவிடவில்லை. செங்குன்றத்தைச் சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கும் ரூ.30 லட்சமும், சென்னை மாநகராட்சியின் கவுன்சிலருக்கு ரு.14 லட்சமும் லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, புகையிலைப் பொருட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நடைமுறைப்படுத்தும் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் ரூ.35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வியாபாரம் எந்த தடையும் இல்லாமல் நடைபெறுவதற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து வருமான வரித்துறை சொல்லும் தகவல் என்னவென்றால், இது கடந்த ஆண்டு நடந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள், வாக்குமூலங்கள். இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.
அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் தொடர்பு உண்டா?: குட்கா விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், குட்கா தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறதா, செய்பவர்கள் யார் போன்ற கேள்விகளும் எழுகின்றன. குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். இந்த சோதனையில் சிக்கிய டைரி ஒன்றில் ரூ40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமானது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயர்களும் இதில் அடிபட்டன. அண்மையில் வருமான வரித்துறையிடம் இது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு பெற்றிருந்தது. இந்நிலையில்தான் குட்கா விற்பனைக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
புகையிலைப் பொருட்கள் விவகாரங்களில் இரட்டை வேடம் போடும் திராவிடத்துவவாதிகள், சித்தாந்திகள், மனித உரிமை போலிகள்: மக்கள் ஆரோக்கியம் பாதிக்கும் வரையில் புகையிலைப் பொருட்கள் உபயோகிக்கப்படுகின்றன, வரியேப்பு மூலம் கள்ளப்பணம் பெருகுகிறது, அப்பணம் தீவிரவாதத்திற்கு செல்கிறது, பிறகு அவை குண்டுதயாரிப்பில் முடிந்து, அவை இங்கேயே வைத்து வெடிக்கப்படுகின்றன. இதனால், சாதாரண அப்பாவி மக்களுக்கு, இருவிதங்களிலிம் குரூரமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். மனிதத்தன்மை இருப்பவர்கள், இவ்வேலைகளில் ஈடுபட மாட்டார்க்ள். ஆனால், தமிழக்ஜத்தில் திராவிடத்துவம் பேசும் அரசியல்வாதிகள், சித்தாந்த அதிகாரிகள், முகமதியோர் இவற்றில் ஈடுபட்டிருக்கும் போது, அக்கவலை இன்னும் பெரிதாகிறது. ஆக, இவற்றை ஒரு சாதாரணமான நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. திராவிடக் கட்சிகள் நிச்சயமாக நாடகம் போட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. மது எதிர்ப்பு என்று ஆர்பாட்டம் செய்பவர்கள் ஏன் புகையிலைப் பொருட்களை எதிர்ப்பதில்லை? சினிமா, விளம்பரம் போன்றவற்றில் ஆதரவைத்தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மது குடிப்பது போன்ற புகையிலை பொருட்களை உபயோகப்படுத்துவதை, வசனம், பாடல், நடிப்பு, ஆட்டம்-பாட்டம், கூத்து என்று ஆதரித்து வருவதை காணலாம். பீடித்தொழிலைக் கூட ஆதரித்து வருகிறார்கள். மனித உரிமைகள் என்றேல்லாம் சொல்லி ஆதரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
04-07-2017
[1] Income Tax department source told Express that Syed Beedi, which came under the scanner of Income Tax, has allegedly evaded taxes worth `90 crore. The company evaded taxes by manufacturing and selling the product in Tamil Nadu and raising the bills in Nellore, charged officials. In Tamil Nadu, Syed Beedi has to pay 12 per cent VAT on beedi, while in Nellore, the owner need not pay taxes. “They will show that the sale has happened only in Nellore and not in Tamil Nadu, though a majority of sale happens only in Tamil Nadu,” the official said. “The tax evasion during the last four years in Chennai alone is estimated to be worth `10 crore,” the source added. Nearly 63 premises were searched by Income Tax sleuths in Tamil Nadu, Andhra Pradesh, Karnataka, Kerala, Telangana and Chhattisgarh. The searches are continuing.
Indian Express, ‘Beedi maker evaded `90 crore in taxes, moved bucks to Dubai’, By Express News Service | Published: 30th June 2017 08:07 AM, Last Updated: 30th June 2017 08:07 AM
[2] A leading beedi manufacturer in the State is under the scanner of Income Tax department for alleged unaccounted investment in Dubai and evading taxes to the tune of `90 crore.
[3] தினத்தந்தி, வருமான வரி அதிகாரிகள் சோதனையில் செய்யது பீடி குழுமம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு, ஜூன் 30, 2017, 04:30 AM.
[4] http://www.dailythanthi.com/News/TopNews/2017/06/30004423/Prede-group-tax-evasion-of-Rs-90-crore.vpf
[5] தினமணி, புகையிலைப் பொருட்கள் தடைக்குப் பின்னால் இருக்கும் ‘பகீர்‘ தகவல்கள் உண்மையா?, ஜூன்.28, 2017. 02.51 PM.
[6]http://www.dinamani.com/tamilnadu/2017/jun/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-2728464.html