Archive for the ‘அமர் சிங்’ Category

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

மே 3, 2012

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

நல்லவர்களாக, தூயவர்களாக, புனிதர்களாக இருந்தால் எம்.பி.க்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஊடகக்காரர்கள் ஒரு மொழியிலிருந்து, மற்ற மொழிக்கு மாற்றம் செய்யும் போது, அம்மொழிக்கே உரித்தான சில சொல்லாற்றங்கள், வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் அர்த்தங்கள், அம்மொழியின் தன்மையில் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அல்லது சாதாரணமாக மொழிபெயர்த்தால், சரியான பொருள் கிடைக்காது. இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் ஏற்படுகிறது. वे इनसान की शक्ल में शैतान हैं। “மனித உருவில் உள்ள சாத்தான்களின் வடிவங்கள்” அல்லது சைத்தான் மனித உருவில் உள்ளன என்று மொழிபெயத்தால், உண்மையிலேயே எம்.பிக்கள் “சைத்தான்” என்று சொல்லப்படவில்லை. அம்மொழிப்பிரயோகத்தில் அவர்கள் அத்தகைய கெட்டவர்கள் என்றுதான் பொருள்வரும். இந்தியிலேயே, இரு நாளிதழ்கள் அச்செய்தியை இருவிதமாக வெளியிட்டிருப்பதை கீழே காணலாம்:

क्या बोले थे बाबा[1]छत्तीसगढ़ के दुर्ग से मंगलवार को अपनी यात्रा शुरू करते हुए रामदेव ने कहा था कि सांसदों में अच्छे लोग भी हैं और वह उनका सम्मान करते हैं। लेकिन वहां डकैत, हत्यारे और जाहिल भी हैं। वे वह लोग हैं, जिन्हें किसानों, मजदूरों और देश की लोगों की कोई चिंता नहीं है। वे सिर्फ पैसे के गुलाम हैं। वे इनसान की शक्ल में शैतान हैं। जिन्हें उस पद के लिए चुना गया है, जिसके कि वे काबिल ही नहीं हैं। हमें संसद को बचाना है। हमें भ्रष्ट लोगों को हटाना है। संसद में लुटेरे, हत्यारे व जाहिल बैठे हैं[2]। सत्ता की कुर्सी पर इंसान की शक्ल में हैवान हैं। हमने उन्हें कुर्सी पर बैठाया है। लेकिन वो सत्ता चलाने की पात्रता नहीं रखते। वे लोग किसानों और मजदूरों से हमदर्दी नहीं रखते। वे देश इसलिए चला रहे, क्योंकि हमने ऐसा ही सिस्टम बनाया है। हमने मान लिया है कि 543 रोगी हिंदुस्तान चलाएंगे[3]। हालांकि उनमें कुछ अच्छे भी हैं। हमें संसद को बचाना होगा।

பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று எம்.பி.க்களை பாபா ராம்தேவ் சரமாரி தாக்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்[4].எம்.பி.க்களை திருடர்கள், கொலைகாரர்கள் என்று யோக குரு ராம்தேவ் விமர்சித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை (02-05-2012) கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்று வெளிப்படும் ரோஷம்: ராம்தேவின் பேச்சுக்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்’ என்று மீரா குமார் தெரிவித்தார்.  “நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்’ என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இது போன்ற கருத்துகளை ராம்தேவிடமிருந்து தாம் எதிர்பார்க்கவில்லை. 144 சட்டம் அமூலில் இருக்கும் போது மின்சாரம் இல்லை என்று போரடினால் நானும் சட்டப்படி “கிரிமினல்” ஆகிவிடுவேன்[5], என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

உரிமை மீறல் நோட்டீஸ்: “”எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். “பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீûஸக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்[6]. இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.க்கள் மீது ராம்தேவ் தாக்கு: முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள். விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்‘ என்று கடுமையாக குற்றம்சாட்டினார்[7].

அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.  நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ். Addressing the media while launching his month-long yatra in Chhattisgarh’s Durg on Tuesday, Baba Ramdev said there were good people among the parliamentarians and he respected them[8]. “But there are dacoits, murderers, illiterates among them[9]. We have to save Parliament. We have to remove corrupt people.” He accused the MPs of not caring for farmers and labourers. “They are friends and slaves of money. They are illiterate, dacoits and murderers. They are devils in the form of humans, who we have elected to those posts. They are not worth it,” he said.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும், அவரது குழுவினரும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் ராம்தேவும் எம்.பி.க்களை கடுமையாக குறைகூறி பேசியுள்ளார்.

ராம்தேவ் ஒரு மென்டல் கேஸ்: லாலு தாக்கு[10]: யோகாகுரு பாபா ராம்தேவ் பைத்தியக்காரர் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்[11]. சத்திஸ்கரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யோகாகுரு பாபா ராம்தேவ், எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது, ராம்தேவின் பேச்சு பயனற்றது. இது போன்று பேசுபவர்களும் பயனற்றவர்கள். ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

ராம்தேவ் கூறியது சரிதான்: அன்னா ஹசாரே[12]எம்.பி.க்கள் குறித்து ராம்தேவ் பேசியதில் தவறில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.நேற்று முன்தினம், சத்தீஸ்கரில் ராம்தேவ் கூறுகையில், “தற்போதுள்ள எம்.பி.,க் களில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரத்தில், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், படிப்பறிவற்றவர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, பார்லிமென்டை காக்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: ராம்தேவ் கூறியதில் எந்தவிதத்திலும் தவறில்லை. அவர் கூறிவது தவறு என்றால், இன்று ஏராளமான எம்.பி.க்களுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.  இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் கொடுக்கும் போது , மக்கள் ஏன்? நெருக்கடி கொடுக்கக்கூடாது. கட்சிகளுக்கு தேவை ஓட்டு. ஆனால் வேட்பாளர்களாக கிரிமினல்களை ஏன நிறுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் தேர்தலில் நின்றால் ஜனநாயகத்தின் கோயில் என்னவாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் 150ற்கும் மேலான கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்கள்[13]: 543 எம்.பி.க்களில் 150 பேர்களுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று ஏற்கெனவே பல அறிக்கைகள், செய்திகள், விவரங்கள் வந்துள்ளன[14]. அவர்கள் ஒன்றும் வெட்கப்பட்டு தேர்தலில் நிற்காமல் இல்லை, தோல்வியும் அடையவில்லை, பாராளுமன்றத்தில் உட்காரவும் இல்லை ……………………என்றெல்லாம் இல்லை.

“Of these 150 MPs, 72 have serious charges against them. The maximum criminal charges are against Congress MP from Porbandar in Gujarat Vitthalbhai Hansrajbhai Radadiya. He has a total of 16 cases out of which five cases are of serious nature,” the analysis revealed.”Bharatiya Janata Party (BJP) has maximum number of MPs having criminal cases with 42 MPs, of which 17 have serious criminal cases against them. It is closely followed by Congress with 41 MPs having criminal cases against them. Twelve Congress MPs have serious charges against them,” the study said. அந்த 150ல், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிக அளவில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 72 மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி கவலைப் படவில்லை.பி.ஜே.பியில் 42 எம்.பி.க்கள், காங்கிரஸில் 41 என்று உள்ளனர். அதனால்தான், இரு கட்சிக்காரர்களுக்கும் கோபம் வருகிறது போலும். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இவர்களை ஏன் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க்கவைத்தன?

“டாப்-10” என்று கிரிமினல் எம்.பி.க்கள் பட்டியலே கொடுக்கப் பட்டது. அப்பொழுதும், யாருக்கும் பொத்துக் கொண்டு வரவில்லை. அதில் லல்லுவும் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் தான் பாபா ராம்தேவை “மென்டல்” என்று “கமன்ட்” வேறு அடிக்கிறார்.

 Here is a list of top ten MPs with a criminal background, compiled by the National Election Watch[15].

Name: Kameshwar Baitha (56)
Constituency represented: Palamau, Jharkhand
Party: Jharkhand Mukti Morcha
Criminal background: Accused in 35 cases and has 50 serious charges against him under the IPC
Convicted: NeverName: Jagadish Sharma, (58)
Constituency represented: Jahanabad, Bihar
Party: Janata Dal-United
Criminal background: Accused in 6 cases and has 17 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Bal Kumar Patel (48)
Constituency represented: Mirzapur, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 13 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Prabhatsinh Pratapsinh Chauvan (67)
Constituency represented: Panchamahal, Gujarat
Party: Bharatiya Janata Party
Criminal background: Accused in 3 cases and has 10 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kapil Muni Karwariya (42)
Constituency represented: Phulpur, Uttar Pradesh
Party: Bahujan Samaj Party
Criminal background: Accused in 4 cases and has 8 serious charges against him under the IPC
Convicted: Never

Name: P Karunakaran (64)
Constituency represented: Kasargod, Kerala
Party: Communist Party of India-Marxist
Criminal background: Accused in 12 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kunvarji Mohanbhai Bavaliya (54)
Constituency represented: Rajkot, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 2 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Vittalbhai Hansrajbhai Radadiya (51)
Constituency represented: Porbandar, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 16 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Ramkishun (49)
Constituency represented: Chandauli, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Lalu Prasad Yadav (60)
Constituency represented: Saran, Bihar
Party: Rashtriya Janata Dal
Criminal background: Accused in 7 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

நாட்டை ஆள்பவர்களுக்கு தகுதி, யோக்கியதை, தார்மீக பொறுப்பு முதலியவை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை அவ்வாறு கூறுவதே தவறாகும். இப்படி கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், லஞ்சம் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகி, பைளில் வெளிவந்து, பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அரசு செலவில் உலா வந்தால் அது மக்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு லட்சம் வாங்கிய பங்காரு லட்சுமணன் ஜெயிலில் என்றால், 1,73,000 கோடிகள் சுருட்டியவர்கள் எப்படி வெளியில் இருக்கிறார்கள்? பிணையில் வெளிவந்து பாராளுமன்ரத்திலும் உட்கார்ந்து கொள்கிறார்கள்?இதனை எடுத்துக் காட்டும் போது, அவர்கள் கோபம் அடைகிறார்கள், சட்டப்படி, உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுப்போம் என்றால், சட்டப்படி அந்த 150 எம்,பிக்களையும் வீடிற்கு அனுப்ப வேண்டியது தானே? எம்.பி பதவியை பறிக்கவேண்டியது தானே? மந்திரியாக உள்ளவர்களின் பதவியையும் பறிக்க வேண்டியதுதானே? ஆனால், காங்கிரஸ் அல்லது மேலிடம் சோனியா மெய்னோ அவ்வாறு செய்யவில்லையே? தாமஸ் கதையை அதற்குள் மறந்து விட்டார்கள் போல!

வழக்கு முடிந்து, தான் குற்றவாளி இல்லை என்ற பிறகு பதவிக்கு வருவது தானே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.பி ஆட்சி மூன்று மாநிலங்களில் கலைக்கப் பட்டது. ஆனால், தவறில்லை என்று தீர்ப்பு வந்தபோது, அது மறுபடியும் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. அந்த இளைஞர் ராகுல் ஏன் இதைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்வதில்லை? ஒருவேளை தனது அப்பாவே ஊழல் பேர்வழி என்ற பிரச்சினை உள்ளது என்று அமைதியாக உள்ளாரா? இல்லை பிரியங்கா அல்லது வதேராவை வைத்து மோட்டார் பைக்கில் ஊர்வலம் வரச் சொல்லலாமே? பாபா ராம்தேவின் உருவ பொம்மையை எரிப்பவர்கள், அந்த 150 எம்.பிக்களின் உருவ பொம்மைகளை எரிப்பார்களா அல்லது பாலாபிஷேகம் செய்வார்களா?

ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட எ,.கே.அத்வானி ராஜினாமா செய்து, காத்திருந்து, வழக்கு முடிந்து, தான் நிரபராதி என்று முடிவானப் பிறகுதான் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேபோல மற்றவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று பாரம்பரியம் இருக்கும் போது, மக்கள் இனிமேல் அத்தகைய ஆட்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. முதலில் அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் தேர்தல் கமிஷன் அவர்களை நிறுத்தவேண்டும். தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போதே அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், இந்நிலை மாறும். இவ்வாறு சொல்வதே தவறு என்று பாராளுமன்றம் எப்படி சொல்ல முடியும்? அங்கிருக்கும் 150 பேர்கள் எப்படி தமக்கு எதிராக தாமே பேசுவார்கள் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள்? விவாதம் வரும் போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்கள் பேசுவதை கேட்பார்கள் அல்லது தாமே பேச முன்வருவார்கள்?

அது எப்படி சட்டப்படி செல்லுபடியாகும்? இதெல்லாம் அங்குள்ள மெத்தப் படித்த எம்.பிக்களுக்கு, ஐந்து / ஆறு முறை என்று எம்.பிக்களாக இருப்பவர்களுக்கு, சட்டம் படித்த மாமேதைகளுக்கு, லட்சங்களில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்-எம்,பிக்களுக்கு தெரியாமலா இருக்கும்?

வேதபிரகாஷ்

02-05-2012


ராபர்டோ ரௌல் கந்தியை அடுத்து, ராபர்ட் வதேரா: இந்தியாவை ஆளப்போவது யார்?

பிப்ரவரி 7, 2012

ராபர்டோ ரௌல் கந்தியை அடுத்து, ராபர்ட் வதேரா: இந்தியாவை ஆளப்போவது யார்?

உபியில் ராபர்‌ட் வதேராவின் வாகன பேரணியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி, கோவாவிற்கு பணியிடமாற்றம்: உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்‌ட் வதேராவின் வாகன பேரணியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி, கோவா மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. அமேதி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராபர்‌ட் வதேரா பிரச்சாரம் செய்தார். அப்போது அனுமதிக்கப்பட்ட 10 வண்டிகள் அளவைவிட அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் பேரணியில் கலந்துகொண்டதால் தேர்தல் பார்வையாளர் பவன் சென், ராப‌ர்‌ட் வதேரா ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினார்[1]. இதையடு‌த்து ஐ.ஏ.எஸ் அதிகாரியான பவன் சென், கோவா மாநிலத்திற்கு தேர்தல் அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரியங்காவின் கணவரை தடுத்து நிறுத்தியதால்தான் ஐஏஎ‌ஸ் அ‌திக‌ா‌ரி பவ‌ன்செ‌ன் மா‌‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ல் எ‌ன்ற சர்ச்சை எழுந்த நிலையில், அந்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மறுத்துள்ளார். பவன் சென்னை பணியிடமாற்றம் செய்ய காலையில் முடிவெடுத்துவிட்டதாகவும் அவர், மாலையில்தான் ராப‌ர்‌ட் வதேராவை தடுத்து நிறுத்தியதாகவும் குரேஷி விளக்கமளித்துள்ளார்[2]. அதாவது, இதற்கும்-அதற்கும் சம்பந்தல் இல்லை என்கிறார்! இருப்பினும், உபி எதிர்கட்சிகள் இதை தட்டிக் கேட்டுள்ளன. ஏனெனில், வதேரா சட்டத்தை மீறியது, மீறியது தான், இருப்பினும் அவர் விஷயத்தில் சட்டம் ஒன்றும் செய்யமுடியாது.

பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை – ராகுல் காந்தி: பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்[3]. உத்தர பிரதேசத்தில் வரும் 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது, எனக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப பாபா ராம்தேவ் குண்டர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். உத்தர பிரதேச அரசு மக்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை. கடந்த 22 ஆண்டு காலமாக அவதிப்படும் இந்த மாநில மக்களுக்கு ஒரு விடிவுகாலம் ஏற்படவே நான் பாடுபடுகிறேன். வெளிப்படையாக கூறுவது என்றால் தேர்தல் முடிவுகள் பற்றி எனக்கு கவலை இல்லை. கடந்த 22 ஆண்டுகளாக உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வருவது பெரும் குற்றமாகும். மோசமான ஆட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நமது கடமையாகும். மாநில மக்கள் மீது ஆட்சியாளர் விளையாட்டு நடத்தி உள்ளனர். மாநிலத்தின் மக்களின் கவுரவத்தை மீட்பதே முக்கிய நோக்கமாகும். இந்த மாநிலத்தில் மக்களின் சக்தியை நான் உணர்ந்து கொண்டுள்ளேன். உத்திரபிரதேசத்தை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். 2012, 14 தேர்தல்களில் இதற்காக முயல்வேன். உத்திரபிரதேசம் மீண்டும் தனது சொந்த காலில் நிற்கும் வரை ஓயமாட்டேன். இதற்கிடையே, ராகுலுக்கு எதிராக தான் யாரையும் ஏவிவிடவில்லை என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். ராகுல் ஏன் கருப்புப் பணத்தை பற்றி பேசவேயில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகன்-மகள்-மறுமகன் கைகளில் இந்தியா: நான் பிரதமராக வர ஆசையில்லை எனும் நேரத்தில், நான் அரசியலுக்கு வருவேன் என்று ராபர்ட் வதேரா கூறியிருப்பது, அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிச்சயமாக, மாமியார் – சோனியா மறுமகனுக்கு ஒரு இடம் உண்டு, என்று ஏற்பாடு செய்துள்ளது போல தெரிகிறது. ரஜினிகாந்த் பாணியில் வதேரா கூறியிருப்பது மற்ற காங்கிரச்காரர்களை கலகத்தில் தள்ளியுள்ளது. நரசிம்ம ராவ் போல ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் என்றமேங்கிக் கொண்டிருந்தவர்களின் கனவுகளும் சிதரியதைப் போன்றாகியது.

எனது கணவர் ஒரு பிசினஸ்மேன், எனவே அரசியலுக்கு வர மாட்டார்[4]: அமேதி: எனது கணவர் ஒரு பிசினஸ்மேன். அதில் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். எனவே அரசியலுக்கு வர மாட்டார் என்று ராபர்ட் வதேராவின் மனைவியான பிரியங்கா கூறியுள்ளார். ஏற்கனவே சோனியா காந்திக்கு அடுத்து ராகுல் காந்தி என்ற ஒரு ஆர்டரை ஏற்படுத்தி காங்கிரஸார் செயல்பட்டு வருகின்றனர். சிலர் பிரியங்காவை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நானும் அரசியலுக்கு வருவேன் என்று கூறி டென்ஷனை கூட்டியுள்ளார் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா[5]. மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வியாபாரத்தை விடுத்து வருவேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் மூலம் அவர் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதுகுறித்து பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ராபர்ட்டின் ட்விட்டர் செய்தியை மீடியாக்கள் தவறாக அர்த்தம் எடுத்துக் கொண்டுள்ளன. அவர் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருந்து வருகிறார். அதில் அவர் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். தனது தொழிலை மாற்றும் எண்ணம் அவருக்கு இல்லை. அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றார் பிரியங்கா. இருப்பினும் தற்போது உ.பியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்திக்கு உதவியாக களம் இறங்கியுள்ளார். மேலும் மனைவி பிரியங்காவுக்குத் துணையாகவும் போய்க் கொண்டிருக்கிறார். இருவருக்கும் உதவுவதற்காக தனது மகள் மிரியாவுடன் உ.பியில் முகாமிட்டுள்ளார் ராபர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராபர்ட் வதேராவின் தொழில், செல்வம், அதிகாரம்[6]: தொழிலதிபராக தம்மை வதேரா காட்டிக் கொண்டாலும் சோனியா குடும்பத்து சொத்து விவகாரங்களை வெளிநாடுகளில் கவனித்துக் கொள்பவராக வலம் வருகிறவர். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான “எக்னாமிக் டைம்ஸ்” நாளிதழில் ராபர்ட் வதேராவின் சொத்துக் கணக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் வதேரா திடீரென உச்சததுக்குச் சென்று விட்டார். ரியல் எஸ்டேட் துறையில் அவர் கொடி கட்டி பறக்கிறார். டி.எல்.எப். நிறுவனத்தில் அவர் பங்குதாரராக உள்ளார். அரியானா முதல் ராஜஸ்தான் வரை அவரது தொழில் சாம்ராஜ்யம் விரிந்து பரந்துள்ளது என அதில் விவரிக்கப்பட்டுள்ளது. அரசியலில் நேரடியாக பங்கேற்காமலேயே அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்வதில் வல்லவர் ராபர்ட் வதேராவை அரசியல் உலகம் ஆச்சரியத்துடன் பார்க்கும் சூழலில் அரசியலுக்கு வருகிறாராம் ராபர்ட்! ராகுல் என்ன நினைக்கிறாரோ? அரசியல் என்பது அரிசிக் கடைக்குப் போவது போலாகி விட்டது. யார் நினைத்தாலும் வரலாம், புகலாம், குதிக்கலாம், குதூகலிக்கலாம் என்றாகி விட்டது. ஆனால், வதேரா அப்படியில்லை. சமயம் பார்த்து அறுவடை என்ன, லாபத்தில் பங்கைப் பெற வல்லவர்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு[7]: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாகக் கூறி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, “சுவிஸ் நாட்டில் ஒரு வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு சொந்தமானது என்ற சந்தேகம் உள்ளது. இந்த கணக்கு மீது இவர்கள் இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதிலும், இந்த சொத்துக்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், இந்த விபரத்தை இருவரும் மறைத்துவிட்டனர். எனவே, சுவிஸ் வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட கணக்கு விபரங்களை பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்களது நிலையை விளக்கவும், அந்த கணக்கில் உள்ள பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்”, என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்திராவும், சோனியாவும்: சோனியா இந்திரா போலவே நடிக்கிறார், மக்களைக் கவர வேஷம் போடுகிறார், பாவனை செய்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் கூறுகின்றன, எடுத்துக் காட்டுகின்றன. அது போல, எதிரிகளை கரம் வைத்து வஞ்சம் தீர்ப்பதில் வல்லவராக இருக்கிறார். வழக்குகள் என்பதும், ஒன்றும் பயந்துவிடவில்லை. சோனியா இதற்கெல்லாம் சளைத்தவர் அல்லர். எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன, ஆனால், எந்த நீதிபதிக்கும் அவற்றை எடுத்து விசாரிக்க தைரியம் இல்லை. நகர்வாலாவிற்கு என்ன நடந்தது என்று அனைவருகும் நினைவஇல் இருக்கும். ஆகையால், தனக்குப் பிறகு யார், இந்தியாவிஒன் அடுத்த பிரதமர் யார் என்பதனை சோனியா தான் தீர்மானிப்பார் என்பதில் எந்த சதேகமுனம் இல்லை. சாகும் வரை தான் காங்கிரஸின் தலைவராக இருந்து கொண்டு, மகன், மகள் மற்றும் மறுமகள் இவர்களுக்கு உரிய பதவிகளைக் கொடுத்து, இந்தியாவை மறைமுகமாக ஆண்டுதான் வருவார்.

வேதபிரகாஷ்

07-02-2012


விவாகரத்தான அனிதா, முத்தமிட்ட ரேணுகா, சோரம் போன சிபு!

திசெம்பர் 24, 2009

விவாகரத்தான அனிதா, முத்தமிட்ட ரேணுகா, சோரம் போன சிபு!

இன்றைய அரசியலில் பிரபலமாக உள்ளவர்கள் இவர்கள்தாம்!

1. அனிதா ராதகிருஷ்ணன் அதிமுகவை விவாகரத்து செய்து விட்டு திமுகவுடன் அரசியலுக்காக ஓடிப்போனவர்.

2. ரேணுகாச்சாரி என்பவரோ முத்தமிட்டு புரட்சி செய்த அரசியல்வாதி!

3. சிபு சோரன் எதைப் பற்றியும் கவலைப்படாத ஆசாமி!

அனிதாவின் விவாகரத்து!

அனிதா ராதாகிருஷ்ணனை துரோகி என கூறும் ஜெயலலிதா தான் எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தார்’ என கருணாநிதியின் மகன்  மு.க.ஸ்டாலின் பேசினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் அனிதா, சுயமரியாதையுடனும், தன்மானத்தோடும் செயல்பட முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். அப்போதுதான் அ.தி.மு.க., தந்த பதவி தமக்கு வேண்டாம் என கூறிவிட்டு தி.மு.க,.,வில் இணைந்தார். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏ.,பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் தெரிவித்தார். இருப்பினும் அவரால் கிடைத்த பதவி தேவையில்லை என கூறி தி.மு.க.,வில் இணைந்தார்.

அனிதாவின் மகனின் திருமணத்தை நடத்திவைக்கும் ஜெயலலிதா!

December 4, 2008

jeya-marid.jpg
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன் ஆனந்தமகேஸ்வரன்-வளர்மதி ஆகியோரது திருமணம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனால் தந்தையோ, ஓடிபோய்விட்டார்!

முத்தமிடும் ரேணுகா!

நர்ஸ் ஜயலட்சுமி போட்டோக்களைக் காண்பிக்கிறார்!

பாருங்களேன், சிரித்துக் கொண்டே போடுகிறார் கும்பிடு சோனியா!

ஓரக்கண்ணால் ஸ்டைலாகப் பார்க்கிறார் சிபு!

ஜார்கண்டில் ஆட்சி அமைக்க சிபு சோரனின் ஆதரவு இருந்தால் தான் முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருடன் பல்வேறு வியூகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தனது உதவியாளரை கொலை செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சிபு சோரனிடம் உதவியாளராக பணிபுரிந்த சசிநாத் ஜா 1994ம் ஆண்டு தில்லியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில் சிபு சோரன் உட்பட 5 பேர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டது. தில்லி உயர்நீதிமன்றமும் இவர்களை சமீபத்தில் குற்றவாளிகளாக அறிவித்தது. இதையடுத்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, இன்று மாலை அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் சிபு சோரனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் கொல்லப்பட்ட சசிநாத் ஜா குடும்பத்தினருக்கு அவர் நஷ்டஈடாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இத்தொகையில், சசிநாத் ஜாவின் தாயாருக்கு ஒரு லட்சம் ரூபாயும், அவரது இரண்டு மகள்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
( செய்தி: தினமணி, கார்ட்டூன் : DC )

வழக்கை முடிக்க ரூ. 5 கோடி: அமர் சிங் கிளப்பிய புகார்!

திசெம்பர் 23, 2009
வழக்கை முடிக்க ரூ. 5 கோடி: அமர் சிங் கிளப்பிய புகார்
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4767

Court news detailபுதுடில்லி: “சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள, முலாயம் சிங் யாதவிற்கு எதிரான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சாதகமான தீர்ப்பு வழங்க, பரூன் குமார் வர்மா ஐந்து கோடி ரூபாய் கேட்டார்’ என, அக்கட்சியைச் சேர்ந்த அமர் சிங், டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் நேற்று தெரிவித்தார்.சமாஜ்வாடி பொதுச் செயலர் அமர் சிங், அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒன்றில், பரூன் குமார் வர்மா என்பவர், தன்னிடம் பணம் பறிக்க முயல்வதாக, 2007ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக, டில்லி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் ஆஜரான அமர் சிங் கூறியதாவது: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு எதிராக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பரூன் குமார் வர்மா என்பவர் என்னை சந்தித்தார். அவர் தான், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மற்றும் அப்போதைய சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் ஆகியோரை தனக்கு நன்கு தெரியும் என்று கூறினார்.தனக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்தால், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மருமகன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள முலாயம் சிங் யாதவிற்கு எதிரான வழக்கில், சாதகமான தீர்ப்பு வழங்க வைப்பதாகவும் தெரிவித்தார். அவரது நம்பகத்தன்மை குறித்து சந்தேகமடைந்த நான், டில்லி போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் பரூன் குமார் வர்மாவை கைது செய்தனர்.இவ்வாறு அமர் சிங் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அமர் சிங்கை, வர்மா சார்பில் ஆஜரான வக்கீல், அனூப் குமார் சர்மா குறுக்கு விசாரணை செய்தார். இந்த குறுக்கு விசாரணையின் போது, அமர் சிங் பலமுறை கோபமடைந்தார்.இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பாக, வாக்குமூலம் அளிக்க, விசாரணை நடந்த போது, அமர் சிங் ஆஜராகாததால், அவருக்கு எதிராக கடந்த மாதம் 3ம் தேதி வழங்கப் பட்ட, வாரன்டை கோர்ட் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.