Archive for the ‘கற்பழித்தவன்’ Category

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

மே 3, 2012

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

நல்லவர்களாக, தூயவர்களாக, புனிதர்களாக இருந்தால் எம்.பி.க்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஊடகக்காரர்கள் ஒரு மொழியிலிருந்து, மற்ற மொழிக்கு மாற்றம் செய்யும் போது, அம்மொழிக்கே உரித்தான சில சொல்லாற்றங்கள், வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் அர்த்தங்கள், அம்மொழியின் தன்மையில் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அல்லது சாதாரணமாக மொழிபெயர்த்தால், சரியான பொருள் கிடைக்காது. இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் ஏற்படுகிறது. वे इनसान की शक्ल में शैतान हैं। “மனித உருவில் உள்ள சாத்தான்களின் வடிவங்கள்” அல்லது சைத்தான் மனித உருவில் உள்ளன என்று மொழிபெயத்தால், உண்மையிலேயே எம்.பிக்கள் “சைத்தான்” என்று சொல்லப்படவில்லை. அம்மொழிப்பிரயோகத்தில் அவர்கள் அத்தகைய கெட்டவர்கள் என்றுதான் பொருள்வரும். இந்தியிலேயே, இரு நாளிதழ்கள் அச்செய்தியை இருவிதமாக வெளியிட்டிருப்பதை கீழே காணலாம்:

क्या बोले थे बाबा[1]छत्तीसगढ़ के दुर्ग से मंगलवार को अपनी यात्रा शुरू करते हुए रामदेव ने कहा था कि सांसदों में अच्छे लोग भी हैं और वह उनका सम्मान करते हैं। लेकिन वहां डकैत, हत्यारे और जाहिल भी हैं। वे वह लोग हैं, जिन्हें किसानों, मजदूरों और देश की लोगों की कोई चिंता नहीं है। वे सिर्फ पैसे के गुलाम हैं। वे इनसान की शक्ल में शैतान हैं। जिन्हें उस पद के लिए चुना गया है, जिसके कि वे काबिल ही नहीं हैं। हमें संसद को बचाना है। हमें भ्रष्ट लोगों को हटाना है। संसद में लुटेरे, हत्यारे व जाहिल बैठे हैं[2]। सत्ता की कुर्सी पर इंसान की शक्ल में हैवान हैं। हमने उन्हें कुर्सी पर बैठाया है। लेकिन वो सत्ता चलाने की पात्रता नहीं रखते। वे लोग किसानों और मजदूरों से हमदर्दी नहीं रखते। वे देश इसलिए चला रहे, क्योंकि हमने ऐसा ही सिस्टम बनाया है। हमने मान लिया है कि 543 रोगी हिंदुस्तान चलाएंगे[3]। हालांकि उनमें कुछ अच्छे भी हैं। हमें संसद को बचाना होगा।

பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று எம்.பி.க்களை பாபா ராம்தேவ் சரமாரி தாக்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்[4].எம்.பி.க்களை திருடர்கள், கொலைகாரர்கள் என்று யோக குரு ராம்தேவ் விமர்சித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை (02-05-2012) கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்று வெளிப்படும் ரோஷம்: ராம்தேவின் பேச்சுக்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்’ என்று மீரா குமார் தெரிவித்தார்.  “நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்’ என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இது போன்ற கருத்துகளை ராம்தேவிடமிருந்து தாம் எதிர்பார்க்கவில்லை. 144 சட்டம் அமூலில் இருக்கும் போது மின்சாரம் இல்லை என்று போரடினால் நானும் சட்டப்படி “கிரிமினல்” ஆகிவிடுவேன்[5], என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

உரிமை மீறல் நோட்டீஸ்: “”எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். “பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீûஸக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்[6]. இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.க்கள் மீது ராம்தேவ் தாக்கு: முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள். விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்‘ என்று கடுமையாக குற்றம்சாட்டினார்[7].

அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.  நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ். Addressing the media while launching his month-long yatra in Chhattisgarh’s Durg on Tuesday, Baba Ramdev said there were good people among the parliamentarians and he respected them[8]. “But there are dacoits, murderers, illiterates among them[9]. We have to save Parliament. We have to remove corrupt people.” He accused the MPs of not caring for farmers and labourers. “They are friends and slaves of money. They are illiterate, dacoits and murderers. They are devils in the form of humans, who we have elected to those posts. They are not worth it,” he said.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும், அவரது குழுவினரும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் ராம்தேவும் எம்.பி.க்களை கடுமையாக குறைகூறி பேசியுள்ளார்.

ராம்தேவ் ஒரு மென்டல் கேஸ்: லாலு தாக்கு[10]: யோகாகுரு பாபா ராம்தேவ் பைத்தியக்காரர் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்[11]. சத்திஸ்கரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யோகாகுரு பாபா ராம்தேவ், எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது, ராம்தேவின் பேச்சு பயனற்றது. இது போன்று பேசுபவர்களும் பயனற்றவர்கள். ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

ராம்தேவ் கூறியது சரிதான்: அன்னா ஹசாரே[12]எம்.பி.க்கள் குறித்து ராம்தேவ் பேசியதில் தவறில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.நேற்று முன்தினம், சத்தீஸ்கரில் ராம்தேவ் கூறுகையில், “தற்போதுள்ள எம்.பி.,க் களில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரத்தில், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், படிப்பறிவற்றவர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, பார்லிமென்டை காக்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: ராம்தேவ் கூறியதில் எந்தவிதத்திலும் தவறில்லை. அவர் கூறிவது தவறு என்றால், இன்று ஏராளமான எம்.பி.க்களுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.  இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் கொடுக்கும் போது , மக்கள் ஏன்? நெருக்கடி கொடுக்கக்கூடாது. கட்சிகளுக்கு தேவை ஓட்டு. ஆனால் வேட்பாளர்களாக கிரிமினல்களை ஏன நிறுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் தேர்தலில் நின்றால் ஜனநாயகத்தின் கோயில் என்னவாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் 150ற்கும் மேலான கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்கள்[13]: 543 எம்.பி.க்களில் 150 பேர்களுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று ஏற்கெனவே பல அறிக்கைகள், செய்திகள், விவரங்கள் வந்துள்ளன[14]. அவர்கள் ஒன்றும் வெட்கப்பட்டு தேர்தலில் நிற்காமல் இல்லை, தோல்வியும் அடையவில்லை, பாராளுமன்றத்தில் உட்காரவும் இல்லை ……………………என்றெல்லாம் இல்லை.

“Of these 150 MPs, 72 have serious charges against them. The maximum criminal charges are against Congress MP from Porbandar in Gujarat Vitthalbhai Hansrajbhai Radadiya. He has a total of 16 cases out of which five cases are of serious nature,” the analysis revealed.”Bharatiya Janata Party (BJP) has maximum number of MPs having criminal cases with 42 MPs, of which 17 have serious criminal cases against them. It is closely followed by Congress with 41 MPs having criminal cases against them. Twelve Congress MPs have serious charges against them,” the study said. அந்த 150ல், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிக அளவில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 72 மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி கவலைப் படவில்லை.பி.ஜே.பியில் 42 எம்.பி.க்கள், காங்கிரஸில் 41 என்று உள்ளனர். அதனால்தான், இரு கட்சிக்காரர்களுக்கும் கோபம் வருகிறது போலும். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இவர்களை ஏன் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க்கவைத்தன?

“டாப்-10” என்று கிரிமினல் எம்.பி.க்கள் பட்டியலே கொடுக்கப் பட்டது. அப்பொழுதும், யாருக்கும் பொத்துக் கொண்டு வரவில்லை. அதில் லல்லுவும் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் தான் பாபா ராம்தேவை “மென்டல்” என்று “கமன்ட்” வேறு அடிக்கிறார்.

 Here is a list of top ten MPs with a criminal background, compiled by the National Election Watch[15].

Name: Kameshwar Baitha (56)
Constituency represented: Palamau, Jharkhand
Party: Jharkhand Mukti Morcha
Criminal background: Accused in 35 cases and has 50 serious charges against him under the IPC
Convicted: NeverName: Jagadish Sharma, (58)
Constituency represented: Jahanabad, Bihar
Party: Janata Dal-United
Criminal background: Accused in 6 cases and has 17 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Bal Kumar Patel (48)
Constituency represented: Mirzapur, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 13 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Prabhatsinh Pratapsinh Chauvan (67)
Constituency represented: Panchamahal, Gujarat
Party: Bharatiya Janata Party
Criminal background: Accused in 3 cases and has 10 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kapil Muni Karwariya (42)
Constituency represented: Phulpur, Uttar Pradesh
Party: Bahujan Samaj Party
Criminal background: Accused in 4 cases and has 8 serious charges against him under the IPC
Convicted: Never

Name: P Karunakaran (64)
Constituency represented: Kasargod, Kerala
Party: Communist Party of India-Marxist
Criminal background: Accused in 12 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kunvarji Mohanbhai Bavaliya (54)
Constituency represented: Rajkot, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 2 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Vittalbhai Hansrajbhai Radadiya (51)
Constituency represented: Porbandar, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 16 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Ramkishun (49)
Constituency represented: Chandauli, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Lalu Prasad Yadav (60)
Constituency represented: Saran, Bihar
Party: Rashtriya Janata Dal
Criminal background: Accused in 7 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

நாட்டை ஆள்பவர்களுக்கு தகுதி, யோக்கியதை, தார்மீக பொறுப்பு முதலியவை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை அவ்வாறு கூறுவதே தவறாகும். இப்படி கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், லஞ்சம் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகி, பைளில் வெளிவந்து, பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அரசு செலவில் உலா வந்தால் அது மக்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு லட்சம் வாங்கிய பங்காரு லட்சுமணன் ஜெயிலில் என்றால், 1,73,000 கோடிகள் சுருட்டியவர்கள் எப்படி வெளியில் இருக்கிறார்கள்? பிணையில் வெளிவந்து பாராளுமன்ரத்திலும் உட்கார்ந்து கொள்கிறார்கள்?இதனை எடுத்துக் காட்டும் போது, அவர்கள் கோபம் அடைகிறார்கள், சட்டப்படி, உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுப்போம் என்றால், சட்டப்படி அந்த 150 எம்,பிக்களையும் வீடிற்கு அனுப்ப வேண்டியது தானே? எம்.பி பதவியை பறிக்கவேண்டியது தானே? மந்திரியாக உள்ளவர்களின் பதவியையும் பறிக்க வேண்டியதுதானே? ஆனால், காங்கிரஸ் அல்லது மேலிடம் சோனியா மெய்னோ அவ்வாறு செய்யவில்லையே? தாமஸ் கதையை அதற்குள் மறந்து விட்டார்கள் போல!

வழக்கு முடிந்து, தான் குற்றவாளி இல்லை என்ற பிறகு பதவிக்கு வருவது தானே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.பி ஆட்சி மூன்று மாநிலங்களில் கலைக்கப் பட்டது. ஆனால், தவறில்லை என்று தீர்ப்பு வந்தபோது, அது மறுபடியும் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. அந்த இளைஞர் ராகுல் ஏன் இதைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்வதில்லை? ஒருவேளை தனது அப்பாவே ஊழல் பேர்வழி என்ற பிரச்சினை உள்ளது என்று அமைதியாக உள்ளாரா? இல்லை பிரியங்கா அல்லது வதேராவை வைத்து மோட்டார் பைக்கில் ஊர்வலம் வரச் சொல்லலாமே? பாபா ராம்தேவின் உருவ பொம்மையை எரிப்பவர்கள், அந்த 150 எம்.பிக்களின் உருவ பொம்மைகளை எரிப்பார்களா அல்லது பாலாபிஷேகம் செய்வார்களா?

ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட எ,.கே.அத்வானி ராஜினாமா செய்து, காத்திருந்து, வழக்கு முடிந்து, தான் நிரபராதி என்று முடிவானப் பிறகுதான் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேபோல மற்றவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று பாரம்பரியம் இருக்கும் போது, மக்கள் இனிமேல் அத்தகைய ஆட்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. முதலில் அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் தேர்தல் கமிஷன் அவர்களை நிறுத்தவேண்டும். தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போதே அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், இந்நிலை மாறும். இவ்வாறு சொல்வதே தவறு என்று பாராளுமன்றம் எப்படி சொல்ல முடியும்? அங்கிருக்கும் 150 பேர்கள் எப்படி தமக்கு எதிராக தாமே பேசுவார்கள் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள்? விவாதம் வரும் போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்கள் பேசுவதை கேட்பார்கள் அல்லது தாமே பேச முன்வருவார்கள்?

அது எப்படி சட்டப்படி செல்லுபடியாகும்? இதெல்லாம் அங்குள்ள மெத்தப் படித்த எம்.பிக்களுக்கு, ஐந்து / ஆறு முறை என்று எம்.பிக்களாக இருப்பவர்களுக்கு, சட்டம் படித்த மாமேதைகளுக்கு, லட்சங்களில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்-எம்,பிக்களுக்கு தெரியாமலா இருக்கும்?

வேதபிரகாஷ்

02-05-2012


விபச்சாரத்தைத் தவிர ஒருமித்த செக்ஸ் குற்றமில்லை: சொல்வது உச்சநீதிமன்ற நீதிபதி!

ஏப்ரல் 30, 2010

விபச்சாரத்தைத் தவிர ஒருமித்த செக்ஸ் குற்றமில்லை: சொல்வது உச்சநீதிமன்ற நீதிபதி!

வயதானவர்களிடம் ஒருமித்த மாற்றுப் புணர்ச்சி, திருமணத்திற்கு முந்தைய செக்ஸ், “விபச்சாரத்தை”த் தவிர, இருவர் ஈடுபட்டால், அது குற்றமாகாது [ Consensual heterosexual relation between adults, including pre-marital sex, is no offence except in cases where the partners are liable to be charged for “adultery”, ruled the Supreme Court].

“விபச்சாரம்” இல்லாத திருமண பந்தத்தில் வராத செக்ஸ் / உடலுறவு எதுவோ? 41-பக்கங்கள் தீர்ப்பு எழுதிய சௌஹான் குறிப்பிட்டுள்ளது, “நமது சமூகத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள்தாம் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அத்தகைய திருமண பந்தத்திற்கு வெளியில் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினால் / வைத்துக் கொண்டால், அது சட்டப்படி குற்றாமாகாது. ஆனால், அச்செயல் – அத்தகைய உடலுறவு இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 497ல் சொல்லியபடி “விபச்சாரம்” என்ற வரையரைக்குள் வரக்கூடாது” [Justice Chauhan, writing the 41-page judgment for the Bench, said, “While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery’ as defined under Section 497 of the Indian Penal Code.”

இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 497 என்ன சொல்கிறது? யாராவது ஒருவரிடம் உடலுறவு வைத்துக் கொண்டால் , அவள் மற்றொருவருடைய மனைவி என்று தெரிந்தால், அவன் அனுமதி அல்லது சதியில்லாமல் இருந்தால், அந்த உடலலுறவு / செக்ஸ் கற்பழிப்பு ஆகாது. ஆனால் விபச்சாரக் குற்றத்தில் தண்டிக்கப் படுவர். அத்தண்டனை ஐந்தாண்டு சிறைவாசம், அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனையாக இருக்கும். அந்நிலையில் மனைவியும் ஒத்துழைத்தாள் என்று தண்டிக்கப் படுவாள் [ Section 497 provides, “Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case, the wife shall be punishable as an abettor.”]

கட்டுப்பாட்டில் இருக்கும் பிரபலமான / [இரபலமில்லாத தனிநபர் கருத்துகள் / கருத்துரிமை என்பதெல்லாம் வரைரைக்க முடியுமா?  “பிரபலமில்லாத கருத்துகளை வெளியிடுவதால் தனிப்பட்ட நபர்களை குற்றவியல் சட்டத்தினால் தண்டிப்பது என்பது (நீதிமன்றத்தின்) செயலாகாது. கருத்து சுதந்திரம், அதன் எல்லைகள், வரையரை-கட்டுப்பாடு முதலியவை உள்ளநிலையில், குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு அனுகூலமாகத் தான் அத்தகைய வரையரை-கட்டுப்பாடு இருக்கின்றது” [“It is not the task of criminal law to punish individuals merely for expressing unpopular views. The threshold for placing reasonable restrictions on the freedom of speech and expression is indeed very high and there should be a presumption in favour of the accused in such cases,” the Bench said.]

தப்பான சட்ட முன்மாதிரியை (bad legal precedence) ஏற்படுத்திருக்கிறாற்கள் நீதிபதிகள்: நீதிபதிகள் நிச்சயமாக அரசியல் ரீதியில் அல்லது தங்களது எஜமானர்களின் உத்தரவு படித்தான் இத்தீர்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது. சட்டத்தை இவ்வாறு வளைத்து, மற்றும் முழுவதுமாக மற்றப் பிரிவுகளைக் கருத்தில் கொள்ளாமல் [அதுவும் தெரிந்திருந்தே] அத்தகைய தீர்ப்புக் கொடுத்துள்ளது, மற்றும் அதற்கான சொதப்பலான விளக்கம் கொடுத்துள்ளது, நிச்சயமாக ஒரு கேடுகெட்ட சட்ட முன்மாதிரியை உண்டாக்கியுள்ளது எனலாம்.

காலம் நிச்சயம் எல்லோருக்கும் பதில் சொல்லும். அந்ந்நாள் சீக்கிரமே அருகில் உள்ளது எனலாம்.

நித்யானந்தாவைக் கெடுத்த-ஜெயித்த வில் ஹியூம்!

ஏப்ரல் 27, 2010

நித்யானந்தாவைக் கெடுத்த-ஜெயித்த வில் ஹியூம்!

சட்டத்தை மதிக்காதவர்கள் இருக்கும் வரை, குற்றவாளிகளுக்குக் கொண்டாட்டம் தான்!

நித்யானந்தாவை வைத்துக் கொண்டு எல்லோருமே – அதாவது சம்பந்தப் பட்டவர்கள், நன்றாகவே வியாபாரம் செய்து சம்பாதிக்கின்றனர்.

ஊடக விற்பன்னர்களைக் கேட்கவே வேண்டாம், கவர்கள் கிடைக்கவில்லையென்றாலும், பங்களூரில் நன்றாகக் கவனிக்கப் படுகிறார்களாம்.

வெயில் வேறு அதிகமாக இருப்பதால், குஜாலைப் பார்க்க ஜாலியாக கிளம்பிவிடுகிறார்கள் நமது உஜாலாக்கள்!

ஆனால், இங்கேயோ அந்த காமக் கொடூரன் – பலரைக் கெடுத்தக் காமுகன் – அசிங்கமான / ஆபாசமான படங்களை இணைத்தலத்தில் ஏற்றியவன் – வில் ஹியூம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் படவில்லை என்று பிணையில் விடுதலையாம்!

வேண்டுமென்றே காலம் தாழ்த்தினராம்!

எப்படியோ ஒரு லட்சத்தைப் பெற்றுவிட்டானாம் வில் ஹியூம்!!

விடுதலை தான்!

கசாப்பைப் போன்று ஜாலியாக நடக்கவேண்டுதும், உலாவ வேண்டும் என்றெல்லாம் கேட்டு சலுகைகளைப் பெற்றுவிட்டான்!

ஆனால், வக்கீல்கள் ஜெயிலுக்குச் சென்று பார்த்தால் காணவில்லையாம்!

ஆமாம், போலீஸ்காரர்களே, நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்களாம்!

11-2009: ஜெர்மனியில் இன்டர்போல் போலீஸார் சென்னையிலிருந்து www.rapidshare.com என்ற இணைதளத்தில் ஆபாசப் படங்களை ஏற்றுவதைக் கண்டு பிடிக்கின்றனர்.

துள்ளியமாக சூளைமேட்டில் ஒரு இடத்திலிருந்துதான் கம்ப்யூட்டரிலிருந்து ஏற்றப்பட்டன என்று தகவல்களை சென்னை போலீஸாருக்குக் கொடுக்கப் படுகிறது.

08-11-2009 (): வில் ஹியூம் சூளைமேட்டில் பிடிக்கப் பட்டான்.

80 நாட்களில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யவேண்டும்.

12-2009: டிசம்பர் மாதம் சென்றுவிட்டது! கவலை இல்லை!

01-2010: ஜனவரி மாதம் சென்றுவிட்டது! கவலை இல்லை!

02-2010: பிப்ரவரி மாதம் வந்துவிட்டது! கவலை இல்லை!

-02-2010: வில்ஹியூம் வக்கீல் பைல் அப்ளிகேஷன் போடுகிறார்.

08-02-2010 (திங்கட்கிழமை): வில் ஹியூம் – ஒரு வழக்கில் பிணையில் விடுதலை.

09-02-2010 (செவ்வாய்கிழமை): சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி வில் ஹியூம் போன்ற குற்றவாளிகளை பிடிக்க / தந்திக்க தனிப்பட்ட சைபர் சட்டங்கள் தேவை என பீய்த்திக் கொண்டார் [ஏதோ கற்பழிப்பெல்லாம் குற்றம் இல்லாதது மாதிரி].

10-02-2010 (புதன்கிழமை): பதினைந்தே நாட்களில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப் படும் என்று டி. ராஜேந்திரன் போலீச் கமிஷனர் அறிவித்தார்.

14-02-2010 (ஞாயிற்றுக்கிழமை): 15 நாட்கள் ஆகிவிட்டன. யாரும் கண்டுகொள்ளவில்லை.

03-2010: மார்ச் மாதம் வந்துவிட்டது! கவலை இல்லை!

19-03-2010: சைபர் குற்றப்பிரிவு தலைவர் டாக்டர் சுதாகர் சொல்கிறர், “இங்கள் குழு தேவையான ஆதாரங்களை சேகரித்துவிட்டது, இன்னிம் ஆறே மாதங்களில் உள்ளே தள்ளிவிடுவோம்”. [Chief of the Chennai Cyber Crime Cell Dr Sudhakar has told NDTV team that his team has “marshalled strong evidence against Heum, enough to get a conviction in about 6 months].

04-2010: ஏப்ரல் மாதம் வந்துவிட்டது! கவலை இல்லை!

-04-2010: வில் ஹியூம் வக்கீல் பைல் அப்ளிகேஷன் தயார் செய்கிறார்.

-04-2010: ஒரு லட்சம் புரட்டவேண்டும், பிணை விடுதலைக்கு.

போலீஸ் காலம் தாழ்த்துகின்றனர்.

16-04-2010 (வெள்ளிக்கிழமை): 80 நாட்கள் ஆகிவிட்டன.

17-04-2010 (சனிக்கிழமை): இன்னுமொரு வழக்கிற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

04-2010: பணம் புரட்டியாகிவிட்டது.

அவனது வீட்டுக்காரனே, அதாவது வாடகைக்கு விட்ட ஆளே பணம் கொடுக்கிறாராம்!

பைல் அப்ளிகேஷன் போட்டாகிவிட்டது.

20-04-2010 (செவ்வாய்கிழமை): வில் ஹியூமிற்கு பிணை விடுதலை!

21-04-2010 (புதன்கிழமை): தமிழ் / தமிழின / வீராப்புப் பத்திரிக்கைகள் மௌனம்!

கற்பழிக்கப் பட்டவள் கற்பழித்தவனையே மணந்து கொள்ள வகைசெய்யுங்கள்!

மார்ச் 7, 2010

கற்பழிக்கப் பட்டவள் கற்பழித்தவனையே மணந்து கொள்ள வகைசெய்யுங்கள்!

கே. ஜி. பாலகிருஷ்ணன், உச்சநீதி மன்ற தலமை நீதிபதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தின் தரப்பில், ” கற்பழிக்கப் பட்ட பெண்கள் நீதி பெறுவது-அடைவது, பயன் பெறுதல் மற்றும் மறுவாழ்வு பெறுதல்” என்ற கருத்தரங்கத்தில் பேசும் போது ( “Access to Justice, Relief and Rehabilitation of Rape Victims” organised by the ministry of women and child development), கற்பழிக்கப் பட்டவள் கற்பழித்தவனையே மணந்து கொள்ள முன்வந்தால், விரும்பினால் அதற்கு மதிப்புக் கொடுங்கள், வகைசெய்யுங்கள், என்று பரிந்துரைத்தார்!

http://timesofindia.indiatimes.com/india/Give-regard-to-rape-victims-wish-to-marry-rapist-CJI/articleshow/5654327.cms