Archive for the ‘கொலை வழக்கு’ Category

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

ஏப்ரல் 24, 2013

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

பெங்களூரு வெடிகுண்டு விசாரணையில் சந்தேகிக்கும்படியாக கைது செய்யப் பட்டுள்ளவர்கள் எல்லோரும் முந்தைய “அல்-உம்மா” என்ற தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார்  எடுத்துக் காட்டுகின்றனர்[1]. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் ஏன் மற்படியும் பழைய தொடர்புகளை வைத்திருக்கிறர்கள் என்றும் தெரியவில்லை. முன்பு போல திருநெல்வேலி-கோயம்புத்தூர்-பெங்களூரு இணைப்பும் தெரிகிறது[2]. இதனால், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலையெடுக்கின்றவா – வேறு உருவத்தில் செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் தலைதூக்கியுள்ளது[3]. தடை செய்யப்பட்ட சிமி, வஹதத்-இ-இஸ்லாமி ஹிந்த் (Wahadat-e-Islami Hind) என்ற பெயரில் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது[4]. சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது[5]. இது வெறும் சார்புடைய நிகழ்சியா உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்னர் தான் தெரியும்.

Eight fugitive Terrorists arrested - 2011
“குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்” என்ற தலைப்பில் எப்படி சட்டங்கள் புரட்டப்படுகின்றன என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்[6]. முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

நாத்திகம்என்ற போர்வையில்ஆண்டவனே இல்லையென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்துகாஃபிர்களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதிஎஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

இப்பொழுது, மறுபடியும் அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவது போலிருக்கிறது. முன்பு அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுதில்லை. தமிழக போலீஸ் இணைதளத்திலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன[7]. கீழ்கண்ட வாசகங்கள் தாம் வருகின்றன[8].

404 – File or directory not found.

The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable

அமெரிக்காவில், சந்தேகிக்கப் படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளிப்படையாக பிரசுரிக்கிறார்கள். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆனால், இங்கு அவர்களை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை இல்லை என்று முஸ்லீம்கள் போலீசாரையே குற்றஞ்சாட்டப்படும் போது, பழைய குற்றவாளிகள் என்று அவர்களின் புகைப்படங்கள் இருந்துவிட்டு போகலாமே?

இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்கள்: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பந்தமாக, கீழ்கண்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் செய்திகளில் வெளிவந்தவை, ஆனால், தனித்தனியாக புகைப்படங்கள் இல்லாமல், யார்-யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி உள்ளன. அவற்றிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன:

Kichan Buhari and Mohammed Sali arrested BB

கிச்சான் புகாரி (38)[9] – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான் – நெல்லை மேலப்பாளையம் – மேலப்பாளையத்தில், மாட்டுச் சந்தை நடத்தி வந்தவன், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவன் எட்டு கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன். புழல் ஜெயிலில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானான். அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் சிறுபான்மையின நல அறக் கட்டளை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தான்.  இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவி வந்தான்.

Kichan Buhari arrested Bangalore blast 2013

சதாம் உசேன்: கிச்சான் புகாரியின் உறவினர் சதாம் உசேன், கடந்த மாதம், போத்தனூர் திருமண மண்டபத்தில் நடந்த, ரகளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய பைக்கை, இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

பீர் முகைதீன் (39) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்,

பஷீர் அகமது (30) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – கட்டட தளவாட பொருட்கள் புரோக்கர், சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்

பீர் முகமது – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – இவர்கள் அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – பெங்களூரில் டீ தூள் விற்பவன்-

முகமது ஷாலி – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான். இவர், “சாரிட்டபிள் டிரஸ்ட் பார் மைனாரிட்டீஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். நாகர்கோவில் பகுதியில் சிலருடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகி எம்.ஆர்.காந்தி, 62, தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.

Mohammed Sali arrested BJP attack Nagerkoil

பஷீர் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் – திருநெல்வேலியில் ஒரு ரியல் எஸ்டேடில் ஆபீஸ் பையனாக வேலை செய்பவன்.

ரசூல்மைதீன் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

சலீம் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

முன்பே குறிப்பிட்டபடி, இவர்களின் பெயர்கள் கூட வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் உள்ளன. ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படும் விவரங்கள் தமிழ் நாளிதழ்களில் கொடுக்கப்படுவதில்லை. அல்லது குறைத்துப் போடுகிறார்கள்.

Bangalore blast - suspect arrested

© வேதபிரகாஷ்

24-04-2013


[4] Further, Tamil Nadu has also banned the All India Jihad Committee and Students Islamic Movement of India (SIMI). But SIMI, is regrouping under the banner of Wahadat-e-Islami Hind, Jayalalitha said.

[6] வேதபிரகாஷ், குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும், 1-6, மே.2010,

https://lawisanass.wordpress.com/2010/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-2/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-3/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-4/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-5/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-6/

[9] Kic­han Buhari, a prominent member of the All India Jehad Committee (AIJC) and a close associate of its founder – Ahmad Ali alias Palani Baba, People’s Democratic Party Chairman, Abdul Nasser Madani, and Kun­nangudi Hanifa of Tamil Muslim Munnetra Kazhagam (TMMK)

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

மே 3, 2012

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

நல்லவர்களாக, தூயவர்களாக, புனிதர்களாக இருந்தால் எம்.பி.க்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஊடகக்காரர்கள் ஒரு மொழியிலிருந்து, மற்ற மொழிக்கு மாற்றம் செய்யும் போது, அம்மொழிக்கே உரித்தான சில சொல்லாற்றங்கள், வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் அர்த்தங்கள், அம்மொழியின் தன்மையில் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அல்லது சாதாரணமாக மொழிபெயர்த்தால், சரியான பொருள் கிடைக்காது. இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் ஏற்படுகிறது. वे इनसान की शक्ल में शैतान हैं। “மனித உருவில் உள்ள சாத்தான்களின் வடிவங்கள்” அல்லது சைத்தான் மனித உருவில் உள்ளன என்று மொழிபெயத்தால், உண்மையிலேயே எம்.பிக்கள் “சைத்தான்” என்று சொல்லப்படவில்லை. அம்மொழிப்பிரயோகத்தில் அவர்கள் அத்தகைய கெட்டவர்கள் என்றுதான் பொருள்வரும். இந்தியிலேயே, இரு நாளிதழ்கள் அச்செய்தியை இருவிதமாக வெளியிட்டிருப்பதை கீழே காணலாம்:

क्या बोले थे बाबा[1]छत्तीसगढ़ के दुर्ग से मंगलवार को अपनी यात्रा शुरू करते हुए रामदेव ने कहा था कि सांसदों में अच्छे लोग भी हैं और वह उनका सम्मान करते हैं। लेकिन वहां डकैत, हत्यारे और जाहिल भी हैं। वे वह लोग हैं, जिन्हें किसानों, मजदूरों और देश की लोगों की कोई चिंता नहीं है। वे सिर्फ पैसे के गुलाम हैं। वे इनसान की शक्ल में शैतान हैं। जिन्हें उस पद के लिए चुना गया है, जिसके कि वे काबिल ही नहीं हैं। हमें संसद को बचाना है। हमें भ्रष्ट लोगों को हटाना है। संसद में लुटेरे, हत्यारे व जाहिल बैठे हैं[2]। सत्ता की कुर्सी पर इंसान की शक्ल में हैवान हैं। हमने उन्हें कुर्सी पर बैठाया है। लेकिन वो सत्ता चलाने की पात्रता नहीं रखते। वे लोग किसानों और मजदूरों से हमदर्दी नहीं रखते। वे देश इसलिए चला रहे, क्योंकि हमने ऐसा ही सिस्टम बनाया है। हमने मान लिया है कि 543 रोगी हिंदुस्तान चलाएंगे[3]। हालांकि उनमें कुछ अच्छे भी हैं। हमें संसद को बचाना होगा।

பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று எம்.பி.க்களை பாபா ராம்தேவ் சரமாரி தாக்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்[4].எம்.பி.க்களை திருடர்கள், கொலைகாரர்கள் என்று யோக குரு ராம்தேவ் விமர்சித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை (02-05-2012) கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்று வெளிப்படும் ரோஷம்: ராம்தேவின் பேச்சுக்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்’ என்று மீரா குமார் தெரிவித்தார்.  “நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்’ என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இது போன்ற கருத்துகளை ராம்தேவிடமிருந்து தாம் எதிர்பார்க்கவில்லை. 144 சட்டம் அமூலில் இருக்கும் போது மின்சாரம் இல்லை என்று போரடினால் நானும் சட்டப்படி “கிரிமினல்” ஆகிவிடுவேன்[5], என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

உரிமை மீறல் நோட்டீஸ்: “”எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். “பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீûஸக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்[6]. இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.க்கள் மீது ராம்தேவ் தாக்கு: முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள். விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்‘ என்று கடுமையாக குற்றம்சாட்டினார்[7].

அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.  நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ். Addressing the media while launching his month-long yatra in Chhattisgarh’s Durg on Tuesday, Baba Ramdev said there were good people among the parliamentarians and he respected them[8]. “But there are dacoits, murderers, illiterates among them[9]. We have to save Parliament. We have to remove corrupt people.” He accused the MPs of not caring for farmers and labourers. “They are friends and slaves of money. They are illiterate, dacoits and murderers. They are devils in the form of humans, who we have elected to those posts. They are not worth it,” he said.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும், அவரது குழுவினரும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் ராம்தேவும் எம்.பி.க்களை கடுமையாக குறைகூறி பேசியுள்ளார்.

ராம்தேவ் ஒரு மென்டல் கேஸ்: லாலு தாக்கு[10]: யோகாகுரு பாபா ராம்தேவ் பைத்தியக்காரர் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்[11]. சத்திஸ்கரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யோகாகுரு பாபா ராம்தேவ், எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது, ராம்தேவின் பேச்சு பயனற்றது. இது போன்று பேசுபவர்களும் பயனற்றவர்கள். ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

ராம்தேவ் கூறியது சரிதான்: அன்னா ஹசாரே[12]எம்.பி.க்கள் குறித்து ராம்தேவ் பேசியதில் தவறில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.நேற்று முன்தினம், சத்தீஸ்கரில் ராம்தேவ் கூறுகையில், “தற்போதுள்ள எம்.பி.,க் களில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரத்தில், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், படிப்பறிவற்றவர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, பார்லிமென்டை காக்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: ராம்தேவ் கூறியதில் எந்தவிதத்திலும் தவறில்லை. அவர் கூறிவது தவறு என்றால், இன்று ஏராளமான எம்.பி.க்களுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.  இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் கொடுக்கும் போது , மக்கள் ஏன்? நெருக்கடி கொடுக்கக்கூடாது. கட்சிகளுக்கு தேவை ஓட்டு. ஆனால் வேட்பாளர்களாக கிரிமினல்களை ஏன நிறுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் தேர்தலில் நின்றால் ஜனநாயகத்தின் கோயில் என்னவாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் 150ற்கும் மேலான கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்கள்[13]: 543 எம்.பி.க்களில் 150 பேர்களுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று ஏற்கெனவே பல அறிக்கைகள், செய்திகள், விவரங்கள் வந்துள்ளன[14]. அவர்கள் ஒன்றும் வெட்கப்பட்டு தேர்தலில் நிற்காமல் இல்லை, தோல்வியும் அடையவில்லை, பாராளுமன்றத்தில் உட்காரவும் இல்லை ……………………என்றெல்லாம் இல்லை.

“Of these 150 MPs, 72 have serious charges against them. The maximum criminal charges are against Congress MP from Porbandar in Gujarat Vitthalbhai Hansrajbhai Radadiya. He has a total of 16 cases out of which five cases are of serious nature,” the analysis revealed.”Bharatiya Janata Party (BJP) has maximum number of MPs having criminal cases with 42 MPs, of which 17 have serious criminal cases against them. It is closely followed by Congress with 41 MPs having criminal cases against them. Twelve Congress MPs have serious charges against them,” the study said. அந்த 150ல், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிக அளவில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 72 மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி கவலைப் படவில்லை.பி.ஜே.பியில் 42 எம்.பி.க்கள், காங்கிரஸில் 41 என்று உள்ளனர். அதனால்தான், இரு கட்சிக்காரர்களுக்கும் கோபம் வருகிறது போலும். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இவர்களை ஏன் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க்கவைத்தன?

“டாப்-10” என்று கிரிமினல் எம்.பி.க்கள் பட்டியலே கொடுக்கப் பட்டது. அப்பொழுதும், யாருக்கும் பொத்துக் கொண்டு வரவில்லை. அதில் லல்லுவும் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் தான் பாபா ராம்தேவை “மென்டல்” என்று “கமன்ட்” வேறு அடிக்கிறார்.

 Here is a list of top ten MPs with a criminal background, compiled by the National Election Watch[15].

Name: Kameshwar Baitha (56)
Constituency represented: Palamau, Jharkhand
Party: Jharkhand Mukti Morcha
Criminal background: Accused in 35 cases and has 50 serious charges against him under the IPC
Convicted: NeverName: Jagadish Sharma, (58)
Constituency represented: Jahanabad, Bihar
Party: Janata Dal-United
Criminal background: Accused in 6 cases and has 17 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Bal Kumar Patel (48)
Constituency represented: Mirzapur, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 13 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Prabhatsinh Pratapsinh Chauvan (67)
Constituency represented: Panchamahal, Gujarat
Party: Bharatiya Janata Party
Criminal background: Accused in 3 cases and has 10 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kapil Muni Karwariya (42)
Constituency represented: Phulpur, Uttar Pradesh
Party: Bahujan Samaj Party
Criminal background: Accused in 4 cases and has 8 serious charges against him under the IPC
Convicted: Never

Name: P Karunakaran (64)
Constituency represented: Kasargod, Kerala
Party: Communist Party of India-Marxist
Criminal background: Accused in 12 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kunvarji Mohanbhai Bavaliya (54)
Constituency represented: Rajkot, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 2 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Vittalbhai Hansrajbhai Radadiya (51)
Constituency represented: Porbandar, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 16 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Ramkishun (49)
Constituency represented: Chandauli, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Lalu Prasad Yadav (60)
Constituency represented: Saran, Bihar
Party: Rashtriya Janata Dal
Criminal background: Accused in 7 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

நாட்டை ஆள்பவர்களுக்கு தகுதி, யோக்கியதை, தார்மீக பொறுப்பு முதலியவை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை அவ்வாறு கூறுவதே தவறாகும். இப்படி கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், லஞ்சம் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகி, பைளில் வெளிவந்து, பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அரசு செலவில் உலா வந்தால் அது மக்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு லட்சம் வாங்கிய பங்காரு லட்சுமணன் ஜெயிலில் என்றால், 1,73,000 கோடிகள் சுருட்டியவர்கள் எப்படி வெளியில் இருக்கிறார்கள்? பிணையில் வெளிவந்து பாராளுமன்ரத்திலும் உட்கார்ந்து கொள்கிறார்கள்?இதனை எடுத்துக் காட்டும் போது, அவர்கள் கோபம் அடைகிறார்கள், சட்டப்படி, உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுப்போம் என்றால், சட்டப்படி அந்த 150 எம்,பிக்களையும் வீடிற்கு அனுப்ப வேண்டியது தானே? எம்.பி பதவியை பறிக்கவேண்டியது தானே? மந்திரியாக உள்ளவர்களின் பதவியையும் பறிக்க வேண்டியதுதானே? ஆனால், காங்கிரஸ் அல்லது மேலிடம் சோனியா மெய்னோ அவ்வாறு செய்யவில்லையே? தாமஸ் கதையை அதற்குள் மறந்து விட்டார்கள் போல!

வழக்கு முடிந்து, தான் குற்றவாளி இல்லை என்ற பிறகு பதவிக்கு வருவது தானே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.பி ஆட்சி மூன்று மாநிலங்களில் கலைக்கப் பட்டது. ஆனால், தவறில்லை என்று தீர்ப்பு வந்தபோது, அது மறுபடியும் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. அந்த இளைஞர் ராகுல் ஏன் இதைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்வதில்லை? ஒருவேளை தனது அப்பாவே ஊழல் பேர்வழி என்ற பிரச்சினை உள்ளது என்று அமைதியாக உள்ளாரா? இல்லை பிரியங்கா அல்லது வதேராவை வைத்து மோட்டார் பைக்கில் ஊர்வலம் வரச் சொல்லலாமே? பாபா ராம்தேவின் உருவ பொம்மையை எரிப்பவர்கள், அந்த 150 எம்.பிக்களின் உருவ பொம்மைகளை எரிப்பார்களா அல்லது பாலாபிஷேகம் செய்வார்களா?

ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட எ,.கே.அத்வானி ராஜினாமா செய்து, காத்திருந்து, வழக்கு முடிந்து, தான் நிரபராதி என்று முடிவானப் பிறகுதான் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேபோல மற்றவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று பாரம்பரியம் இருக்கும் போது, மக்கள் இனிமேல் அத்தகைய ஆட்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. முதலில் அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் தேர்தல் கமிஷன் அவர்களை நிறுத்தவேண்டும். தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போதே அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், இந்நிலை மாறும். இவ்வாறு சொல்வதே தவறு என்று பாராளுமன்றம் எப்படி சொல்ல முடியும்? அங்கிருக்கும் 150 பேர்கள் எப்படி தமக்கு எதிராக தாமே பேசுவார்கள் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள்? விவாதம் வரும் போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்கள் பேசுவதை கேட்பார்கள் அல்லது தாமே பேச முன்வருவார்கள்?

அது எப்படி சட்டப்படி செல்லுபடியாகும்? இதெல்லாம் அங்குள்ள மெத்தப் படித்த எம்.பிக்களுக்கு, ஐந்து / ஆறு முறை என்று எம்.பிக்களாக இருப்பவர்களுக்கு, சட்டம் படித்த மாமேதைகளுக்கு, லட்சங்களில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்-எம்,பிக்களுக்கு தெரியாமலா இருக்கும்?

வேதபிரகாஷ்

02-05-2012


குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!

ஜூலை 15, 2010

குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!

கடந்த ஆண்டுகளில் தெரிந்தோ, தெரியாமலோ நீதிபதிகள் பிச்சினைகள் பலவாக இருந்தாலும், தனிநபர் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக, ஒன்று சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது இல்லை, அந்த தனிநபரின் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது என்றநிலயில் செய்பட்டுவருகிறார்கள். இது எல்லாநிலைகளிலும் சரிவருமா என்று தெரியவில்லை. இந்நிலையில், நித்யானந்தாவே அத்தகைய நிலையை சாதகமாக குறிப்பிட்டு, தனக்கு சட்டத்தீர்வு தீரவேண்டும் என்று கோரியிருப்பது, ப்றுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகிறது.

சென்னை : நடிகைகள் குஷ்பு, சுகாசினி தொடர்பான வழக்குகளை சுட்டிக்காட்டி, சென் னை ஐகோர்ட்டில் சுவாமி நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்: “கடந்த மார்ச் 2ம் தேதி தனியார், “டிவி’ ஒன்றில் என்னையும் என் பக்தையையும் (நடிகை ரஞ்சிதா) இணைத்து, வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதைத் தொ டர்ந்து மலிவான விளம்பர நோக்கில் பல்வேறு தரப்பினரும், என் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர். “ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தக் கூடாது’ என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை குஷ்பு மீது ஒரே பிரச்னைக்காக பல்வேறு வழக்குகள் தொடர்ந்த போது, இது சுட்டிக்காட்டப்பட்டது. நடிகை சுகாசினி மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது, சுப்ரீம் கோர்ட் உத்தரவைக் காட்டி, சென்னை ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்தது. அதேபோல், என் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது: கடந்த மார்ச் மாதம் கார்த்திகேயன் என்பவர், என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் மீது சி.பி.ஐ., உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மனு, நடைமுறைக்கு சரியானது அல்ல. குஷ்பு, சுகாசினி வழக்கில் கூறியது போல், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. எந்த முடிவை எடுத்தாலும், என்னையும் சேர்த்துக் கொண்டு, என் கருத்தை கேட்க வேண்டும்”, இவ்வாறு நித்யானந்தா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்: இம்மனு மீதான விசாரணை, ஐகோர்ட் நீதிபதி வாசுகி முன்னிலையில் வந்தது. நித்யானந்தாவின் மனுவை அவர் ஏற்றுக் கொண்டு, “இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்‘ என, உத்தரவிட்டார். நித்யானந்தா தொடர்பான அனைத்து வழக்குகளும் கர்நாடக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு தவிர, புதுச்சேரி உருளையன்பேட்டையில் ஒரு வழக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்!

மே 22, 2010

குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும்!

 

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.

சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.

அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;

அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,

குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்-பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

“நாத்திகம்” என்ற போர்வையில் “ஆண்டவனே இல்லை”யென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்து “காஃபிர்”களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதி-எஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள், சமீபத்தில் நீதிமன்றங்களில் வழங்கப் பட்டுள்ள மற்றும் வழங்கப்படும் தீர்ப்புகள் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளன, ஏனெனில், குண்டு வெடிப்புகள், பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வழக்கின் முக்கியத்துவம், அதன் சட்ட நுணுக்கங்கள், சட்டரீதியாக செல்லுமா இல்லையா என்ற விவரங்களை நீர்த்துவிட்டு, ஏதோ ஒன்றை ஏடுத்துக் கொண்டு, சாட்சிகள் சரியில்லை, ஆதாரங்கள் சரியாக நிரூபிக்கப் படவில்லை,….என்றெல்லாம் தீர்ப்புகள் கொடுக்கப் படுகின்றன. கோர்ட் நடவடிக்கைகள், காலந்தாழ்த்தும் போக்கு, சாட்சிகளை மிரட்டும் போக்கு, மாற்றும் நிலை,…………………………………….., அரசியல் சார்பான நீதிபதிகள் வரும்வரை இழுத்தடிப்பது………………..முதலியன அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணத்திற்கு பல வழக்குகளைச் சொல்லலாம், இருப்பினும் சில குறிப்பிடப்படுகின்றன.

வில் ஹியூம், சென்னை நீதிமன்றக்கள், நீதிபதிகள்: வில் ஹியூம் ஒரு அனைத்துலக குற்றவாளி, ஆனால், சென்ன்னையில் ஜாலியாக பல அரசியல், திரைப்பட ஆதிக்கக்காரர்கள், போலீஸார் முதலியோர் ஆதரவுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து, இரு தடவை கைது செய்யப்பட்டாலும், விடுவிக்கப் பட்டுள்ளான். சைதாப்பேட்டை மேஜிஸ்ட்ரேட் அப்படித்தான் விடுவித்து, பிறகு, சென்னை உயர்நீதி மன்றம், அவர் தவறுதலாக விடிவித்துவிட்டார் என்று தீர்ப்பளித்தது.

ஆர்ச்பிஷப், போலி ஆரய்ச்சி, முந்தைய வழக்கு, மறுபடியும் அதே குற்றங்களைச் செய்வது: ஆர்ச் பிஷப் அருளப்பா ஆச்சார்ய பால் என்ற கிருத்துவருக்கு பல கோடிகள் கொடுத்து பல போலியான ஆவணங்களைத் தயாரித்து, திருவள்ளுவர் தாமஸை சந்தித்தார், அந்த இல்லாத ஆளிடம் கற்றுதான் திருக்குறள் எழுதினார், மீனாட்சி கோவிலே ஒரு சர்ச்…………….என பல பேத்த்கல்களான மோசடி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கிருத்துவர்களுக்கே பொறுக்காமல், அழுத்தம்-தர, பணம் கொடுத்த அருளாப்பாவே, வழக்குப் போட்டு, பிறகு ஆச்சார்யா பால் “எல்லாவற்றையும் உலகத்திற்கு சொல்லிவிடுவேன்” என்று மிரட்டியதும், பயந்து கொண்டு 1987களில் சமாதானமாகி, “கோர்ட்டிற்கு வெளியே” என்ற முறையில் எல்லா விஷயங்களையும் அமுக்கி விட்டனர். ஆனால், இப்பொழுது, மறுபடியும், அதே பிஷப், அதாவது அந்த ஸ்தானத்திலுள்ள சின்னப்பா, அதே மாதிரி அந்த மோசடி ஆரய்ய்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து வேலைகளை ஆரம்பித்துள்ளார். அதாவது செய்த குற்றங்களையே மறுபடியும் செய்தால், நடவடிக்கை எடுப்பதில்லை போலும் தமிழ்நாட்டில்!

சீமான் மீதான வழக்குகள்: எல்.டி.டி.ஈ தடை செய்யப் பட்டுள்ள இயக்கம். இப்பொழுதுகூட அதன் மீதான தடை நீட்டிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த சீமான் தொடர்ந்து அத்தகைய சட்டமீறல் காரியங்களைச் செய்து வந்தாலும், கைது செய்யப் பட்டாலும், வெளிவந்து கொண்டேயிருப்பதும், அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்வதும், காங்கிரஸ்காரர்கள் “புகார் கொடுப்பதும்”. கருணாநிதி அமைதியாக இருப்பதும், வெட்கம், மானம், சூடு, சொரணை…………………… இல்லாமல் கூட்டணிக் கொள்ளை தொடர்வதும் சகஜமாகத்தான் உள்ளது.

கருணாநிதியின் மீதுள்ள வழக்குகள்: சென்ற தேர்தல்லின்போது, தன்னுடைய சுய-ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில் கருணாநிதி தன்மீது 9 கிரிமினல் குற்றா வழக்குகள் பதிவு செய்யப் பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக, கையெழுத்திட்டு தேர்தலில் நின்று முதல்வராகி, அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்திருந்தாலும், நீதிமன்றங்கள், நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள்………………….நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். யாரும் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. “வழக்கு போட்டால் சந்திக்கத் தயார்”, இன்று அப்பொழுதுகூட ஜெயலலிதாவிற்கு சவால் விட்டபோது, பாவம், அப்பொழுது கூட யார்க்கும் நினைவிற்கு வரவில்லை போலும்!

இனி இந்த குணங்குடி மஸ்தான், மன்னிக்கவும், குணங்குடி ஹனீபா வழக்கைப் பார்ப்போம்!

Last Updated :

ரயில்குண்டுவெடிப்புவழக்கில்குணங்குடிஹனீபாஉள்பட 8 பேர்விடுதலை[1]:

சென்னை, ​​ மே 21, 2010:​ ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.​ ​ இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதாகக் கூறி இவர்கள் விடுவிக்கப்படுவதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மூன்று ரயில்களில் குண்டுகள் வெடித்து பத்துக்கும்மேற்பட்டோர்உயிரிழந்தனர்.​ 72 பேர்காயமடைந்தனர்: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1997 டிசம்பர் 6-ல் ​ திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்,​​ ஈரோடு அருகே சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்,​​ கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ரயில் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.​ 72 பேர் காயமடைந்தனர்.​ இந்த சம்பவம் தொடர்பாக ஜிகாத் கமிட்டி தலைவர் குணங்குடி ஹனீபா,​​ ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஏர்வாடி காசிம்,​​ அலி அப்துல்லா,​​ அப்துல் ரஹீம்,​​ முபாரக் அலி,​​ முகமது அலிகான்,​​ சம்ஜித் அகமது,​​ ரியாதுர் ரஹ்மான்,​​ குணங்குடி ஆர்.எம்.ஹனீபா,​​ முகமது தஸ்தகீர் ஆகியோர் அடுத்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டனர்.​ இதில்,​​ முகமது தஸ்தகீர் 12-3-2000-ல் இறந்தார்.​ ​மற்றொரு முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அஷ்ரப் அலி தலைமறைவாக உள்ளார்.​ அவர் மீது திருச்சி நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது.​ கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேர் சிறையிலேயே 13 ஆண்டுகளாக இருந்து வந்தனர்.

420ல் 269 சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை, 151ல் 10 பேர்பிறழ்சாட்சியம், தீர்ப்புத் தள்ளிவைப்பு, 139 ஆதாரங்கள் போதுமானதாக இல்லை: இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.​ அரசு தரப்பில் வழக்கறிஞர் துரைராஜும்,​​ குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் புகழேந்தி,​​ சிவபெருமாள் ஆகியோரும் ஆஜராயினர். 10 பேர் பிறழ் சாட்சியம்:​ கூட்டுச் சதி,​​ கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 420 சாட்சிகள் குறிப்பிடப்பட்டன.​ இதில் 151 சாட்சிகளை விசாரித்தாலே போதுமானது என அரசு தரப்பு பின்னர் முடிவெடுத்தது.​ இதில் முக்கிய சாட்சிகள் 10 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.​ பின்பு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறியதன் அடிப்படையில்,​​ குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி​ ஆர்.பிரேம்குமார் வெள்ளிக்கிழமை வழங்கிய​ தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து, ​​ குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 6 பேர் சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனர்.​ ஏர்வாடி காசிம்,​​ அலி அப்துல்லா ஆகியோர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.

1997லிருந்து 2010 வரை தூங்கும் நீதிமன்றங்கள்: 1997ல் குண்டுவெடிப்பு, கொலை, சாவு, ரத்தம்…………………….2001ல் குற்றாப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப் பட்டது, 2004ல்தான் கோர்ட் – விசாரணையே ஆரம்பித்தது. இப்பொழுது விடிவிக்கப் படுகிறார்கள் என்றால், செத்தவர்கள் நிலை என்ன? அநியாயமாக செத்தவர்களின் உரிமைகள் என்ன?

வேதபிரகாஷ்

24-05-2010


[1] தினமணி, ரயில்குண்டுவெடிப்புவழக்கில்குணங்குடிஹனீபாஉள்பட 8 பேர்விடுதலை, First Published : 22 May 2010 12:00:00 AM IST

http://dinamani.com/edition/story.aspx?

குஷ்புவும், கசாப்பும்: இந்தியர்களின் நோக்கு!

மே 7, 2010

குஷ்புவும், கசாப்பும்: இந்தியர்களின் நோக்கு!

குஷ்புவின் கற்புப் பற்றிய வழக்குகளைத் தள்ளூபடி செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட குஷ்புவிற்கு சாதகமாக உச்சநீதி மன்றம் தீர்ப்ப்பு வழங்கியது.

ஓரளவிற்கு இந்தியர்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவித்து, தீர்ப்பு சரியில்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது, மக்கள் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்ப்பு தவறு என்றுதான் பொதுவாகச் சொல்கின்றனர்.

என்னசெய்வது தனக்கு என்று வரும்போதுதான், பிரச்சினையைப் பற்றி கவலைப் படுகின்றனர். ஆமாம், உச்சநீதி மன்ற நீதிபதியும் ஒரு மனிதர் தானே? இல்லை மகள், சகோதரி………..மற்ற பெண்குலத்துடன் பிறந்துள்ளவர் தானே? நாளைக்கு அவர்கள் எல்லோரும் அத்தகைய உரிமையோடு கிளம்பி விட்டால் என்னாவது?

சில தினங்களில், கசாப் என்ற குரூரக்கொலைக்காரன் 166 அப்பாவி மக்களைக் கொன்றதற்கானக் குற்றத்திற்காக மரணதண்டனை அளித்துத் தீர்ப்பு அளிக்கப் படுகிறது.

ஆனால், பொதுவாக இந்திய மக்கள் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை!

இன்னும் சொல்லப்போனால், ஊடகங்களைத் தவிர மற்றவர்கள் அமைதியாக இருந்ததுபோலத் தோன்றியது. அவரவர் தங்களது வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்; டிவி பார்க்கிறார்கள்; கிரிக்கெட் பார்க்கிறார்கள்;………………..அவ்வளவே தான்!

ஆனால், ஊடகங்கள் ஊளையிட ஆரம்பித்துவிட்டன:

கசாப்புக்கு தூக்குத் தண்டனை- நிறைவேற்றத்தான் ஆள் இல்லை!
வெள்ளிக்கிழமை, மே 7, 2010, 10:59[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/07/kasab-death-sentence-hangaman.html

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை: கசாப்புக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு தயாராக இருந்தாலும் கூட அவரை தூக்கிலிடுவதற்கு ஆள்தான் இல்லையாம். மிகுந்த அனுபவம் உடையவர்களைத்தான் தூக்குத் தண்டனைக் கைதிகளை தூக்கிலிடுவதற்கு அழைப்பார்கள். ஆனால் நமதுநாட்டில் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு கயிறு மாட்டி விடுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்துதான் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் சிறைத் துறையினர். இப்போது கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக தோன்றவில்லை. காரணம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறையிலும் தூக்கு கயிறை மாட்டும் நபர் யாரும் இல்லையாம். மும்பையிலும் கூட யாரும் இல்லையாம்.

தூக்குப் போட யார் வேண்டுமானாலும் வரலாம்: இங்கு மட்டுமில்லை, டெல்லி திகார் சிறையிலும் கூட தூக்கு மாட்ட ஆள் கிடையாது. கடைசியாக திகாரில் 1989ம் ஆண்டுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இங்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களை வரவழைத்துதான் நிறைவேற்றினார்களாம். ஒருவேளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆளே கிடைக்காவிட்டால், காவல்துறையைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், இதைச் செய்ய முன் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என விதிமுறையில் உள்ளதாம்.

தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-வைஷாலி: இந்நிலையில் அஜ்மல் கசாபுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் தாமதிக்காமல் உடனே நிறைவேற்ற வேண்டும் என அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட போலீஸ் எஸ்ஐ துக்காராம் ஓம்பலேயின் மகள் வைஷாலி ஓம்பலே கூறியுள்ளார். தெற்கு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று அஜ்மல் கசாபை பிடிக்க முயன்ற போது, கசாப் துப்பாக்கியால் சுட்டதில் துக்காராம் உயிரிழந்தார். ஆனாலும் அவரால் தான் அஜ்மல் கசாப் பிடிபட்டான்.

இந் நிலையில் ஓம்பலேவின் மகள் வைஷாலி கூறுகையில், கசாபுக்கு தூக்கு என்ற தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பின் மூலம் என் தந்தையின் தியாகத்திற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பலர் இன்னமும் பாகிஸ்தானில் உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு வேகமாக செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாது. உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும். 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் அல்லாமல் கசாபுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றார் வைஷாலி.

தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-பாஜக: இந் நிலையில் பாஜக தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகளால் மட்டும் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. இந்தியாவிலிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவாளர்கள் துணையுடன்தான் இதை பயங்கரவாதிகள் செய்திருப்பார்கள். எனவே, இந்த தாக்குதலுக்கு காரணமான அனைத்துக் குற்றவாளிகளையும், இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு முடிவு கட்ட முடியும். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நடந்துள்ள முழு சதியையும் முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அப்சல் குரு தூக்கு தண்டனை பெற்றும், இன்னும் அத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் கசாபும் நடத்தப்பட்டால், சட்டம், நீதித்துறை, அரசு ஆகியவை கேலிக்குரியதாகிவிடும். எனவே, மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். இதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிம்மதியைத் தரும். அதேநேரத்தில் இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழும் நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான எம்.பிக்களை கொல்ல முயன்ற அப்சல் குருவின் தூக்கு தண்டனையையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மரண தண்டனை-காத்திருப்போர் பட்டியலில் 30வது இடத்தில் கசாப்
வியாழக்கிழமை, மே 6, 2010, 15:16[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/06/kasab-afsal-guru-mumbai-attack-parliament.html

சாவிலும் சீனியாரிடி பார்க்கும் நீதிமான்கள்: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கசாப்புக்கு முன்னதாக 29 பேர் மரண தண்டனை விதித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பிற நாடுகளை எடுத்துக் கொண்டால், மரண தண்டனை விதிக்கப்பட்டால் உடனே அதை நிறைவேற்றி விடுவார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. மிக மிக அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன் பிறகும் கூட குடியரசுத் தலைவரிடம் கருணை காட்டுமாறு கோரி விண்ணப்பிக்கலாம். அந்த மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுத்து அறிவித்த பிறகுதான் இந்த தண்டனையில் ஒரு முடிவுக்கு வர முடியும்.

பிரதிமா பாட்டில் ஒரு பொம்மை, அதெப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறது? தற்போது குடியரசுத் தலைவர் முன்பு 29 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவராக பார்த்து எப்போது முடிவெடுக்கிறாரோ அப்போதுதான் அதற்கு விடிவு காலம் பிறக்கும். கடந்த 2001ம் ஆண்டு 33 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2006ல் 40 பேருக்கும், 2007ம் ஆண்டு 100 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் அப்சல் குரு, சுஷில் சர்மா, அனந்த் மோகன், சந்தோஷ் குமார் சிங் ஆகியோர். 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சிக்கி அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவி பிரியதர்ஷினி மட்டூவை கற்பழித்துக் கொன்றதற்காக சந்தோஷ்குமார் சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல பீகாரில் முன்னாள் எம்.பி. அனந்த் மோகன் ஐஏஎஸ் அதிகாரியைக் கொலை செய்த வழக்கிலும், நைனா சஹானியைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மாவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொலை செய்யலாம், ஆனால், கொலைகாரர்களுக்கு மட்டும் தண்டனை தாமதப் படுத்தப் படும்! கடந்த 2001ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரே ஒருவர்தான் தூக்கில் போடப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கிய தனஞ்செய் சாட்டர்ஜி என்பவர் 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி தூக்கில் போடப்பட்டார். அப்சல் குருவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி பாஜக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்குவோரின் பட்டியலில் கசாப் சேர்ந்துள்ளான்.

சங்கரராமன் கொலை வழக்கு: சாட்சியம், சாட்சிகள், பிறழ்ச்சி சாட்சியம்!

ஏப்ரல் 24, 2010
சங்கரராமன் கொலை வழக்கு: நேற்றும் சாட்சிகள் ‘பல்டி’
ஏப்ரல் 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5696

புதுச்சேரி:காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் நேற்று நடந்த விசாரணையில், நான்கு சாட்சிகள், ‘பல்டி’ அடித்தனர். வழக்கு விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் மொத்தம் உள்ள 391 சாட்சிகளில், நேற்று வரை 88 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 பேரில், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உட்பட 10 பேர் மட்டும் ஆஜராகினர்.வழக்கு விசாரணையின் போது திருச்சியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சிதம்பரம், சென்னை வக்கீல் கிருஷ்ணகுமார், வேளச்சேரி சரவணமூர்த்தி, மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ஓட்டல் இயக்குனர் சக்கரவர்த்தி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சுந்தரம் ஆகிய ஐந்து பேர் சாட்சியம் அளித்தனர்.

இதில், சிதம்பரத்தை தவிர மற்ற நான்கு சாட்சிகளும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்புவை பற்றி எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.வழக்கில் ஆஜரான சாட்சிகளிடம், அரசு தரப்பு சிறப்பு வக்கீல் தேவதாசு விசாரணை நடத்தினார். எதிர்தரப்பில் வக்கீல் தினகரன், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 17ம் தேதிக்கு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா ஒத்திவைத்தார்.இந்த வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட 88 சாட்சிகளில், 51 பேர் பல்டி அடித்துள்ளனர்.