Archive for the ‘நீதிமன்றத்தின் மரியாதை’ Category

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

திசெம்பர் 27, 2021

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

கொரோனா காலமும், காணோலி விசாரணையும், நீதிமன்றங்களும்: காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2021 கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியபோது முதலில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே, ஊரடங்கில் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நீதிமன்றங்கள் தொடங்கி பள்ளிகள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஏராளமாக இருந்தால், விரைந்து முடிக்க காணொளி காட்சி முறை கொண்டு வந்தாக வேண்டிய சூழல் இருந்தது[2].

கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை: கொரோனா தொற்று ஆரம்பித்த சமயத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடியாகவும் விசாரணை நடைபெறுகிறது, அதே நேரத்தில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது. அனைத்து வழக்கு விசாரணையும் இப்படியே நடந்து வருகிறது. சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது.

செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்: இந்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்[3]. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவே வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[4]. நிச்சயமாக, அந்த வீடியோ பார்த்தவர்கள், அந்த வக்கீலின், அட்வகேட்டின், வழக்கறிஞரின் நடவடிக்கை தலைகுனிய வைக்கும். மேலும், அந்த பெண் ஏன் அவ்வாறு அத்தகைய கேவலமான செயலுக்கு உட்படுத்தப் பட்டாள் என்றும் தெரியவில்லை. கருப்பு நிற அங்கி முதலியவற்றைப் பார்க்கும் போது, அப்பெண்ணும் ஒரு வழக்கறிஞரா, ஜூனியரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஒருவேளை, பெண்ணின் அடையாளம் தெரியக் கூடாது என்ற ரீதியில், அவை தெரிவிக்கப் படவில்லை போலும்.

தானாகவே, சொந்தமாகவே, கேட்காமலே (suo moto) வழக்காக எடுத்துக் கொண்டது: இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்[5]. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.டி. சந்தான கிருஷ்ணன் “மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் விர்ச்சுவல் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் போது அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக” அவரை சஸ்பெண்ட் செய்தது[6]. மிகவும் மன வருத்தம் அளிப்பதாக இருக்கிறது[7], இது போன்ற சம்பவங்களைக் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது எனத் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்[8]. சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்[9]. இதனை சூ மோட்டோ வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்[10].

வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது: நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது[11]. முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ், “இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம்” என்றும் “பதவியை ராஜினாமா செய்து விடலாமா?” என்று யோசித்ததாகவும் வேதனை தெரிவித்தார்[12]. நிச்சயமாக, அந்த நீதிபதி அந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பது தெரிகிறது. நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் காக்கக் கூடிய அத்தொழிலை செய்பவர்கள், இவ்வாறு ஈடுபட்டது, மிகக் கேவலமாகும். ஏற்கெனவே வக்கீல்களைப் பற்றி பலவிதமான செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் எப்படி வழக்கறிஞர்கள் ஆனார்கள் என்ற திகைப்பும் ஏற்படுகின்றன. அந்நிலையில், வீடியோவில் சிக்கிக் கொண்ட அந்த “பலான / செக்ஸ் வழக்கறிஞர்” அத்தொழிலுக்கு அவமானம் தான்.

நீதி, நேர்மை, நியாயம் காக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் இத்தகைய குற்றங்கள் ஏன் தொடர்ந்து நடந்து வருகின்றன, நீதி, நேர்மை, நியாயம்….போன்றவை ஏன் மதிக்கப் படுவதில்லை, மாறாக ஏளனப் படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக சினிமா, டிவி சீரியல்களில் இவை கிள்ளுக்கீறையாக மதிக்கப் படுகின்றன. நகைச்சுவை போர்வையில் ஆபாசப் படுத்தப் படுகின்றன. அதுபோலவே, அத்துறையைச் சேர்ந்தவர்களும் இழிவு படுத்தப் படுகின்றனர். சமீபகாலங்களில் நீதிபதிகளின் தீர்ப்புகளும், நீதிபதிகளும் விமர்சிக்கப் படுகின்றனர். நிச்சயமாக, நீதிபதி நியமனங்களில் அரசியல், ஜாதி, மதம் போன்ற காரணிகள் செயல்படுகின்றன. ஏனெனில், அவ்விதமாக நியமனங்கள் நடக்கின்றன. நீதிமன்றங்களிலும் கட்சிக்கு ஒரு சங்கம் செயல்பட்டு வருகின்றது. அதுபோல, ஜாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. பிறகு பாரபட்சம், ஒருதலைப்பட்சம், பாகுபாடு, வித்தியாசம், வேறுபாடு, அரசியல் அழுத்தம் போன்றவையும் இருக்கத்தான் செய்யும். அவற்றையும் மீறி தீர்ப்புகள் கொடுக்கப் படவேண்டும். ஆகவே, நிச்சயமாக அத்தொழிலில் இருப்பவர்கள் சுத்தமாகவும், நேர்மையாகவும், யோக்கியமானவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயம், அவசியம் மற்றும் அத்தியாவசியம் உள்ளது. அப்பொழுது தான், அவர்கள் சட்டமீறல்கள் செய்யாமலும், குற்றங்களில் ஈடுபடாமலும் இருக்க முடியும்.

© வேதபிரகாஷ்

27-12-2021


[1] ஏ.பிபி.லைஃப், நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் சஸ்பெண்ட்சிபிசிஐடி வழக்கு பதிவு!, By: ABP NADU | Updated : 22 Dec 2021 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/chennai/cb-cid-to-probe-lawyer-s-act-on-camera-31615

[3] NEWS18 TAMIL, மிகப்பெரிய அசிங்கம்.. ராஜினாமா செய்ய நினைத்தேன்உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை, First published: December 23, 2021, 22:40 IS; LAST UPDATED : DECEMBER 23, 2021, 22:40 IST.

https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[5] புதியத்தலைமுறை, வழக்கறிஞரின் ஒழுங்கீனத்தால் பதவியை ராஜினாமா செய்ய நினைத்தேன்நீதிபதி வேதனை, kaleelrahman, தமிழ்நாடு, Published :23,Dec 2021 03:38 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/125450/Attorneys-Disorder-Thought-to-resign-Judge-tormented

[7] இடிவி.பாரத், வழக்கறிஞரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினேன்நீதிபதி வேதனை, Published on: Dec 23, 2021, 2:56 PM IST.

[8]  https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/advocate-misbehave-on-video-conference-mhc-judge-has-upset/tamil-nadu20211223145626901

[9] தமிழ்.ஒன்.இந்தியா, கேமரா ஆனில் இருப்பது தெரியாமல்.. பெண்ணிடம் தவறாக நடந்த வக்கீல்.. வாழ்நாள் தடை போட்ட சென்னை ஐகோர்ட், By Vigneshkumar, Updated: Tuesday, December 21, 2021, 20:27 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-ordered-to-ban-a-lawyer-who-misbehaved-with-woman-during-a-video-trial-442879.html

[11] தினத்தந்தி, ஆன்லைன் விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர்..!, பதிவு : டிசம்பர் 23, 2021, 10:06 PM

[12] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/12/23220640/2978084/Lawyer-who-conducted-irregular-in-online-trial.vpf.vpf

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

அகழாய்வு பற்றி நிறைய வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்திய தொல்துறை கட்டிடங்கள், சிற்பங்கள், கோவில்கள் போன்றவை, தூரமான இடங்களில் தனியாக, பாதுகாப்பு இன்றி இருப்பது தெரிந்த விசயமே.
இவர் சென்று பார்க்கும் போது கூட அந்நிலையை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் தான், எப்பொழுதும் குழிகள் அருகிலேயே இருக்கின்றனர்.

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நடக்கின்ற வழக்குகள்தீர்ப்புகள், தொடரும் முறைகள்: தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பற்றி எழுத்தாளர் எஸ்.காமராஜ்[1], மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்[2]. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது[3]. இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு 10-08-2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான திராவிடன் கிளை அலுவலகம் சென்னையில் அமைக்கப்பட்டது: மத்திய அரசுத்தரப்பில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டது[4]. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது[5]. “சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளின், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த கேள்விக்கு, மொத்தமாக –

  • 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும்,
  • அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள்,
  • 25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை
  • 12,000 கல்வெட்டுக்கள் பெர்ஷியன் மற்றும் அராபிக் மொழிக்கானவை,
  • 9,400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை,
  • 7300 கல்வெட்டுக்கள் தெலுங்கு மொழிக்கானவை,
  • 225 கல்வெட்டுக்கள் மலையாள மொழிக்கானவை என பதிலளிக்கப்பட்டது.

இதிலிருந்தே, தமிழில் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்பது பொய்யாகிறது. 27,000 தமிழ் எனும் போது, 57,000 தமிழ் அல்லாதது என்றாகிறது. எனவே, இத்தகைய வாதம், வழக்கு, செய்திகள் எல்லாமே பொய் என்றாகிறது.

அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை?: அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அப்படியாயினும் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்[6]. தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[7]. அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[8]. அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர்[9]. நீதிபதிகள் இவ்வாறு கேட்டனரா அல்லது செய்திகள் அவ்வாறு வந்துள்ளனவா என்று தெரியவில்லை. இருப்பினும், இத்தகைய கேள்விகள் கேட்டுள்ளதும், விசித்திரமாக உள்ளது. ஏனெனில், நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்கும் முன்பே, அவற்றைப் பற்றி நன்றாகப் படித்து கொண்டு வந்து, வாதாடும், வக்கீல்களை குறுக்கு விசாரணை செய்யும் அளவுக்கு இருபார்கள், இருக்கிறாற்கள். மாறாக, இவ்வாறு, கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது, திகைப்பாக இருக்கிறது.

மைசூருவில் வைத்தது ஏன்?: அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது. நாடு முழுவதும் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. அந்த கல்வெட்டுகளை மைசூருவில் ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்கலாமே? 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கு என கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? அதை திராவிட மொழி கல்வெட்டுகள் என கூறுவது ஏன்?,” எனவும் கேள்வி எழுப்பினர்[10]. அதற்கு மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “இது அரசின் கொள்கை முடிவு’’ என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்” என்றனர்[11].

விளக்கம் அளிக்க உத்தரவுவிரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்: மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்[12]. இதுகுறித்து தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்றை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்[13].  “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது,” என்று நீதிபதிகள் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே அரசின் ஆவணங்கள் எல்லாம் வெளிப்படையாக உள்ளன. அவற்றையெல்லாம் கனம் நீதிபதிகள் படித்திருப்பார்கள். அந்நிலையில், இத்தகைய கேள்விகள் எழுப்பப் படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அரசியல் ஆதரவு நியமன நீதிபதிகள் அவ்வாறு சித்தாந்த ரீதியில் சார்புடையவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] WP(MD) 1174/2021; KAMARAJ MUTHALAKURICHI KAMARAJ.S VS THE UNION OF INDIA AND 4 OTHERS; M/S.ALAGUMANI.RRAMESHKUMAR. S 8486484817; M/S. VICTORIA GOWRI.L. ASGIMEMO OF APP FILED FOR R1 andAMP; R2 COUNTER AFFIDAVIT-USR-9534/21 FOR R 1 2 4 and AMP; 5 AGP TAKES NOTICE FOR R3, in the COURT NO. 1 before The Honourable Mr Justice N. KIRUBAKARAN and The Honourable Mr Justice M.DURAISWAMY

[2] தினத்தந்தி, 60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என கூறுவது ஏன்? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி, பதிவு: ஆகஸ்ட் 10,  2021 04:35 AM.

[3] https://www.dailythanthi.com/News/State/2021/08/10043535/Why-is-it-said-that-60000-Tamil-inscriptions-are-Dravidian.vpf

[4] புதியதலைமுறை, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? – நீதிபதிகள், தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 04:04 PM.

[5] https://www.puthiyathalaimurai.com/newsview/112414/What-is-the-need-to-appoint-an-inscription-scholor-for-Sanskrit-language-in-Tamil-Nadu—-Judges

[6] புதியதலைமுறை, அதிக கல்வெட்டுகள் உள்ள தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :10,Aug 2021 05:41 PM

[7] https://www.puthiyathalaimurai.com/newsview/112628/actor-Vijay-Antony-Next-is-Mazhai-Pidikatha-Manidhan-Directed-by-Vijay-Milton.html

[8] புதியதலைமுறை, தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழிக்கானவை என அடையாளப்படுத்துவது ஏன்? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 03:55 PM

[9] https://www.puthiyathalaimurai.com/newsview/112412/Why-identify-60-000-Tamil-inscriptions-as-Dravidian—-Judges

[10] பாலிமர்.செய்தி, தமிழ்க் கல்வெட்டுகளை ஏன் மைசூரில் வைத்திருக்க வேண்டும்? – நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி, August 09, 2021 06:02:59 PM.

[11] https://www.polimernews.com/dnews/152481

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!, By Rayar A Updated: Wednesday, August 11, 2021, 7:30 [IST]

[13] https://tamil.oneindia.com/news/chennai/why-is-the-tamil-language-with-so-many-inscriptions-not-important-tn-hc-to-centre-429576.html

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

ஜூன் 2, 2016

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

indian advocates Act and professional ethics 1961

திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் நீதித்துறை சீரழிந்துள்ள நிலையைக் காட்டுகிறது: நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது[1]. அதாவது அத்தகைய பழக்க-வழக்கங்களை வக்கீல்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதற்கு முன்பாக, இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துவந்தது[2]. ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, சென்னை உயர்நீதிமன்றமோ, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமோ வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்[3]. சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது[4]:

The Adocates Act, 1961 - S-341961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டத்திருத்தம்: வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34(1) [Section 34(1) of the Advocates Act, 1961], அந்த சட்டத்தின் திருத்தம் கொண்டுவர ஐகோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அமைதியாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக வழக்கறிஞர் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கொண்டுவந்துள்ளது[5]. இதற்கேற்றபடி புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன[6]. வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-ஏ-வின் கீழ் [of the Advocates Act] குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கோ வக்கீல் செய்வதில் இருந்து நீக்கப்படுவார்கள்[7]. அதாவது கீழ்கண்ட குற்றங்களை செய்யும் வக்கீல்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்[8].

The Adocates Act, 1961 - S-14குற்றச்செயல் என்ன?[9]: இனி வக்கீல்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் காரியங்களில் எவையெல்லாம் குற்றம் என்று அடையாளம் காணப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது.

* நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிப்பவர். நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது என்று பொய் சொல்பவர்.

* நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்துபவர்கள். சேதப்படுத்தி அழிப்பவர்கள்.

* நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர்.

* நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர்.

* நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[10]. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள்.

* குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.

Judge injured during a clash with policemen, inside Madras High Court in Chennai. PTI Photo by R Senthil Kumarஇத்தகைய திருத்தப் பட்ட சட்டப் பிரிவுகளிலிருந்து அறியப்படுபவை: சட்டங்களை மீறிய வக்கீல்கள் இருந்துள்ளார்கள் இருக்கிறார்கள் என்பது, இந்த திருத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

  1. நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து வக்கீல்கள் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  2. நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது, சாதகமாக தீர்ப்பு வாங்கிக் கொடுக்கிறேன் என்று வக்கீல்கள் பொய் சொல்லியிருக்கின்றனர்.
  3. நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்தப்பட்டுள்ளன, சேதப்படுத்தப்பட்டு அழித்தவர்கள் உள்ளனர். அதாவது, போர்ஜரி / கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  4. நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர் இருந்திருக்கின்றனர். நீதிபதிகளில் கால்களை ஒடிப்பேன் என்றெல்லாம் பேசியிருந்தது……..முதலியவற்றை கவனத்தில் கொள்ளலாம்.
  5. நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர் இருக்கிறார்கள்.
  6. நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[11]. தமிழக நீதிமன்றங்களில், இவை சாதாரணமாக ஏற்பட்டுள்ளன.
  7. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள். இவையும் சகஜமாக இருக்கின்றன
  8. குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.
  9. நீதிமன்ற வளாகங்களில் கொலைகள் நடந்திருக்கின்றன.

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] நியூஸ்.7.டிவி, வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றமே தடைவிதிக்கும் புதிய சட்டதிருத்தம், May 27, 2016; http://ns7.tv/ta/court-bans-advocates-who-diobeys-court.html

[2] பிபிசி, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம், மே.27, 2016.

[3] http://www.bbc.com/tamil/india/2016/05/160527_actiononlawyers

[4] தினத்தந்தி, வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம் ஐகோர்ட்டு அறிவிப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, மே 28,2016, 4:45 AM IST, பதிவு செய்த நாள்: சனி, மே 28,2016, 12:46 AM IST.

http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு, By: Mathi, Published: Saturday, May 28, 2016, 10:33 [IST].

http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[6] According to the new rules, the court has power under 14-A of Advocates Act to debar advocates who indulge in activities such as trying to influence a judge or participates in a procession inside court campus or holds placards inside the court hall, among others. The notification further said the court shall have the power to initiate action against misconduct under Rule 14-A .

http://www.deccanherald.com/content/549028/rules-advocates-act-amended.html

[7] “In exercise of powers conferred by Section 34(1) of Advocates Act, the court makes the following amendments to the existing rules. The amendments shall come into force with effect from the date of publication,” the notification released by the Registrar General of the High Court, said.

[8] http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[10] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

[11] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் நியமனம், அரசியல் தலையீடு, இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம்!

ஜூன் 2, 2016

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் நியமனம், அரசியல் தலையீடு, இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம்!

Indian judicial system, SC, etc

இந்திய நீதித்துறையில் அரசியல் தலையீடு: முன்பெல்லாம் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரபட்சமற்றத் தன்மை, நடுநிலை, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதி முதலிய தார்மீக குணங்களோடு செயல்பட்டு வந்தனர். நீதித்துறையில் இருப்பவர்கள், குறிப்பாக நீதிபதியாக இருப்பவர்களின் குடும்பங்களில் ஏழுதலைமுறைக்கு யாரும் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனைப் பெற்றிருக்கக் கூடாது என்று இந்திய நூல்கள், கல்வெட்டுகள் முதலியவை கூறுகின்றன[1]. அதாவது அத்தகைய பொறுப்புகளுக்கு வருபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முகலாயர்[2] மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் மதம், இனவெறி முதலிய காரணங்களினால் நீதிநெறி, சட்டமுறை மற்றும் நியாயத்தை அமூல் படுத்தும் தன்மை மாறியது. ஊழல் நுழைந்து சீரழிக்க ஆரம்பித்தது[3]. சுதந்திரம் கிடைத்தப் பின்னரும், நீதித்துறை, அரசியல்வாதிகளின் அதிகாரங்களில் கட்டுப்பட்டதால் தீர்ப்புகள் பாரபட்சமாக இருந்தன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட ஆட்சிகளில் நீதித்துறையில் ஊழல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் இதர நீதித்துறை அலுவலகர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்களாக, அவர்களின் பரிந்துரையின் மேல் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் அத்தகைய நியமங்கள் ஜாதி, மதம், மொழி போன்ற காரணிகளால் மாசுப்பட்டுள்ளது. அதனால், நியமனம் செய்யப்பட்டவர்கள், தங்களின் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்கவே விரும்புகின்றனர். இதனால், தங்களது பதவிகளும் உயர்ந்து வருகின்றன என்பதனை அவர்கள் உணர்ந்தே உள்ளார்கள்.

Judges appointment based on caste, religion etc

வக்கீல்கள் ஜாதி, மதம், மொழி, சித்தாந்தம் காரணங்களால் பிரிந்திருப்பது: ஒருபக்கம் ரூ.50/-, 100/- என்ற ரீதியில் வக்கீல்கள் வேலை செய்யும் நேரத்தில், இன்னொரு பக்கம் ஆயிரங்கள் மற்றும் லட்சங்கள் என்று அள்ளும் வக்கீல்களும் இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சட்டம், சட்ட-நுணுக்கங்கள், மொழி வல்லுமை, வாதிடும் திறன், முதலியவை இல்லாதவர்கள் மேலே போய் கொண்டிருக்கின்றனர், ஆனால், எல்லாம் இருப்பவர்கள் அப்படியே வக்கீலாக இருந்து ஓய்வு பெற்று விடுகின்றனர் அல்லது விலகியும் விடுகின்றனர். திராவிட கட்சிகளின் ஆட்சியில், நீதித்துறையில் இருப்பவர்கள் சங்கங்களை ஆரம்பித்து, கட்சி ரீதியில் செயல்பட்டு வந்தனர்[4]. அதேபோல கம்யூனிஸ்டுகள், தீவிர திராவிட இனவெறியாளர்கள், தமிழ்-சித்தாந்திகள் போன்றோரும் சித்தாந்த ரீதியில் செயல்பட்டு, தங்களவரை பாதுகாத்து வந்தனர். முந்தைய பிரிவினரால் ஊழல் மலிந்தது என்றால், பிந்தைய கூட்டத்தினரால் தீவிரவாதம், வன்முறை, சமூக சீரழிவுகள் அதிகமாகின.

Judges appointment based on caste, religion etc-The Hindu

நீதித்துறை அரசியல் கட்சி, ஜாதி, மதம் போன்ற காரணிகளால் பிரிந்து கிடப்பது: இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசி, வியக்கியானம் கொடுத்து, கூச்சலிட்டு வருவதெல்லாம் விளம்பரமாகிவிட்டது. நீதித்துறை என்றுமே அரசியல் கட்சி, ஜாதி, மதம் போன்ற காரணிகளால் பிரிந்து கிடப்பது வெளிப்படையாக ரகசியமாக இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் – 44 பிரிவின்படி,  குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை (Uniform Civil Code) இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச்சிகளை அரசு எடுக்க வேண்டும், என்றுள்ளது. கடந்த 41 வருடங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உச்சநீதி மன்ற கேட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன[5]. ஷா பானு முதல் சர்ளா முத்கல் தீர்ப்பு வரை நீதிபதிகள் எடுத்துக் காட்டி விட்டார்கள்[6]. ஆனால், எந்த அரசியல் கட்சியும் இதனை அமூல் படுத்தவில்லை. பிஜேபி போன்ற கட்சிகள் இதைப் பற்றி பேசினால், அதனை “கம்யூனல்” என்று அடக்கி விடுகின்றனர். இந்திய சட்டங்களும் செக்யூலரிஸமயமாக்கப் படவில்லை (Secularization of Law and Judiciary)[7]. “சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம்” என்பவர்கள் “எல்லோருக்கும் ஒரே சட்டம்” என்றால் கொதித்து போகிறார்கள். மண்டல் தீர்ப்பு வந்தபோது கூட, “கிரீமி லேயர்” பற்றிய சர்ச்சையை பெரிதாக்கி எதிர்த்தனர். சமத்துவம் பேசுபவர்கள் எல்லாம் சமநீதி, பொதுநீதி, ஒரே நீதி என்றால் மறுத்து ஆர்பாட்டம் செய்கிறார்கள். நீதி ஒழிக, நீதிமன்றகள் அழிக….என்றேல்லாம் போராட்டங்களை நடத்துவர். அரசியல் ரீதியில் நீதித்துறைகளில் வழக்கறிஞர் முதல் நீதிபதி வரை, பெஞ்ச் கிளர்க் முதல் ரிஜிஸ்ட்ரர் வரை நியமனங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, எப்படி சட்டங்கள் சமமாகும், நீதி சமன்படும், நியாயங்கள் ஒன்றாக இருக்கும். தான் தினம்-தினம் வேலை செய்யும் போது, வரும் ஆயிரக்கணக்கான மக்களை சமமாக பாவிக்க, நடத்த, நீதி அளிக்க ஒழுங்காக, தார்மீகத்துடன், நியாயமாக நடந்து கொள்வார்கள் என்ற உத்திரவாதம் கொடுக்க முடியுமா?

Karnanidhi-Jayalalita

தமிழகத்தில் முதல் மந்திரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள், நீதிஅமூல்படுத்தப்பட்ட விதம்: இரு தமிழக முதல்வர்கள்[8], ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, வழக்குகளில் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்குட் படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் மறுபடி-மறுபடி முதலமைச்சர் பதவியை ஏற்கும் போது, நீதி-சட்டம், போலீஸ் முதலிய துறைகளுக்கு மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். அந்நிலைகளில் அவருக்கு எதிரான வழக்குகளில், அவர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகும் போது அல்லது அவர்களுக்கு பதிலாக வாத-பிரதிவாதங்கள் செய்யும்போது, வக்கீல்கள், அரசு-வக்கீல்கள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் எப்படி சார்பற்றவர்களாக, பாரபட்சமில்லாதவர்களாக, நடுநிலையாக நடந்து கொள்ள முடிந்திருக்க முடியும் என்று யோசிக்கத்தக்கது. நியாயமாக அந்நிலைகளில் அவர்கள் ராஜினாமா செய்து, வழக்கு முடியும் வரை தனியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சிறைசென்ற நிலையில் தான் விலகியிருந்தார்கள், மறுபடியும் முதலமைச்சார்களாக பதவி வகித்தனர்.

judicial-system-inancientindia1-12-638

அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள்: மதுரை வழக்கறிஞர் ஏ.கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் இவ்விவகாரங்கள் காணப்படுகின்றன[9]: “சட்ட அறிவு, வாதிடும் திறமை, அனுபவம் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வதில்லை. இவர்களை நியமிக்கும் முன், உயர்நீதிமன்ற ஆலோசனைகளைப் பெற வேண்டும். சில சமயங்களில், அரசு சார்பில் அளிக்கப்படும் தேர்வு செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியலை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களுக்கு சம வாய்ப்பு அளிப்பதில்லை. அரசியல் கட்சிகளின் சிபாரிசில்தான், அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சமூகநலன் சார்ந்த வழக்குகளில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால், அரசுத்துறை வழக்குகள் தோல்வியடைந்து, மேல்முறையீடு செய்கின்றனர். அரசுக்கு பணிச்சுமை அதிகரித்து, பணம் விரையமாகிறது.நீதித்துறை கமிஷன் அமைத்து, தகுதி, திறமை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். 2011 முதல் தற்போதுவரை நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு, கண்ணன் மனு செய்திருந்தார்[10]. நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் கொண்ட அமர்வு பிப்.,25 க்கு ஒத்திவைத்தது. மனுதாரர் ஆஜரானார்.

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] Calcutta monthly Journal and General Register of Occurrences throughout the British Dominions in the East forming an Epitome of the Indian press for the year 1837, Calcutta, Samuel Smith Co, 1838, p.20.

[2] முகலாயர், அதாவது முகமதியர் தங்களது இஸ்லாமிய சட்டத்தை அமூல் படுத்தி, இந்துக்களை கொடூரமுறையில் வழக்குகளை நடத்தி, குரூர தண்டனைகள் கொடுத்து, அநியயம் செய்தனர்.  இந்துக்களுக்கும் ஷரீயத் என்கின்ற முஸ்லிம் சட்டத்தை அமூல் படுத்தி, ஜெஸியா போன்ற வரிகளை விதித்து கொடுமைப்படுத்தினர்.

[3] வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் நந்தகுமார் வழக்கு எவ்வாறு இந்தியர் மீது அபாண்டமான குற்றம் சாட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படுவார் என்பதற்கு ஒரு சான்று. உண்மையில் போர்ஜரி செய்தது வாரன் ஹேஸ்டிங்ஸ் தான்! நந்தகுமாருக்கு தூக்கு தண்டனை கொடுத்த நீதிபடி அவரது நண்பர்! இவ்வழக்கு “நீதி கொலை செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டது.

[4] ஒரு கட்சிக்குள்ளேயே பிரச்சினை வந்தபோது, தனியாக இன்னொரு சங்க ஆரம்பித்த போக்கும் உண்டு.

Advocates belonging to the Dravida Munnetra Kazhagam met here on Sunday (March 17, 2009) and decided to form the Vellore Advocates Progressive Association. The new development is a sequel to the expulsion of 11 advocates belonging to the DMK by the Bar Association, Vellore, following their alleged misbehaviour with other members on the premises of the Integrated Courts Complex here on Friday.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dmk-advocates-to-form-new-association/article333605.ece

[5]  It appears that even 41 years thereafter, the Rulers of the day are not in a mood to retrieve Article 44 from the cold storage where it is lying since 1949. The Governments – which have come and gone – have so far failed to make any effort towards “unified personal law for all Indians”.

Supreme Court of India, Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635; Author: Kuldip  Singh; Judgment dated 10-05-1995; https://indiankanoon.org/doc/733037/

[6] Coming back to the question “uniform civil code” we may refer to the earlier judgments of this Court on the subject. A Constitution Bench of this Court speaking through Chief Justice Y.V. Chandrachud in Mohd. Ahmed Khan vs. Shah Bano Begum AIR 1985 SC 945 held as under: “It is also a matter of regret that Article 44 of our Constitution has remained a dead letter. …… There is no evidence of any official activity for framing a common civil code for the country.”

[7] Justice Kuldip Singh recorded, “One wonders how long will it take for the Government of the day to implement the mandate of the framers of the Constitution under Article 44 of the Constitution of India………There is no justification whatsoever in delaying indefinitely the introduction of a uniform personal law in the country. …..The Successive Governments till-date have been wholly re-miss in their duty of implementing the constitutional mandate under Article 44 of the Constitution of India. We, therefore, request the Government of India through the Prime Minister of the country to have a fresh look at Article 44 of the Constitution of India and “endeavour to secure for the citizens a uniform civil code throught the territory of India“.https://indiankanoon.org/doc/733037/

[8] கருணாநிதியின் கோதுமை ஊழல் முதலியன், ஜெயலிதாவின் சொத்துக் குவிப்பு முதலியன.

[9] தினமலர், அரசு வழக்கறிஞர்கள் நியமன முறையை எதிர்த்து வழக்கு, ஜனவரி,29, 2016.21.01

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1444462

சென்னை சட்டக் கல்லூரி, 1990ல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாகி, 1997ல் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆனதும், சட்டக்கல்லூரி மாணர்கள் அடித்துக் கொண்டதும், 2016ல் வந்துள்ள தீர்ப்பும்!

ஜனவரி 30, 2016

சென்னை சட்டக் கல்லூரி, 1990ல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாகி, 1997ல் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆனதும், சட்டக்கல்லூரி மாணர்கள் அடித்துக் கொண்டதும், 2016ல் வந்துள்ள தீர்ப்பும்!

Ambedkar college - 2008 knife-wielding law srudents

Ambedkar college – 2008 knife-wielding law srudents

திராவிட அரசியல் சித்தாந்தத்தில் அம்பேத்கர் இருந்ததில்லை: தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாணவர்களை 1960களில் “இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்” ஈடுபடுத்தின.  அரசியல்வாதிகள் “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” போன்ற வாசகங்களினால், வடவிந்தியர்களின் மீது வெறுப்பு, காழ்ப்பு மற்றும் துவேசங்களை உண்டாக்கினர். இதற்கு சரித்திர ஆதரம் இல்லாத “ஆரிய-திராவிட” இனவாதங்களை துணைக்கொண்டனர். திராவிடப் பாரம்பரியம், விக்கிரங்களை எதிர்த்தாலும், தலைவர்களுக்கு சிலைகள் வைக்கும் பழக்கத்தை உண்டாக்கியது. இதனால், அத்தகைய சிலைவைக்கும் போக்கும் ஜாதியத்தில் முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அம்பேத்கர் என்றுமே திராவிட அரசியலில் இருந்ததில்லை. பெரியார் தான் முக்கிய இடத்தில் இருந்தார்[1]. மேலும், பெரியார் மற்றும் அம்பேத்கர் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளால் திராவிட சித்தாந்திகள் மற்றும் பெரியாரிஸவாதிகள் அம்பேத்கரை ஒதுக்கியே வைத்தனர். 1940ல் ஜின்னா-பெரியார்-அம்பேத்கர் சந்திப்பிற்குப் பிறகு, மூவரிடையே பெருத்த வேறுபாடுகள் ஏற்பட்டன. ஜின்னா இஸ்லாமிய மதவாதம் மூலம் பாகிஸ்தான் அடைய செயல்பட ஆரம்பித்தார்[2]. பெரியாருக்கு “திராவிடஸ்தான்” விசயத்தில் உதவ மறுத்தார்[3]. அம்பேத்கர் ஆங்கிலேய அரசில் பதவி வகித்தார். ஆனால், பெரியார் ஓரங்கட்டப்பட்டார். 1950ல் பெரியார் பௌத்தத்தைத் தழுவும் விசயத்திலும் அம்பேத்கருக்கு உடன்பாடில்லை. அம்பேத்கருக்கு “ஆரிய-திராவிட” இனவாதங்களில் நமிக்கையில்லை, குறிப்பாக இனசித்தந்தத்தை மறுத்தார்.  இதனால், திராவிட சித்தாந்த்தில் அம்பேத்கர் இருக்கவில்லை.

சட்டக்கல்லூரி மாணவிகள் அடித்துக் கொண்டது

சட்டக்கல்லூரி மாணவிகள் அடித்துக் கொண்டது – நவம்பர் 2008

1990களிலிருந்து அம்பேத்கர் சிலை, சின்னம் முதலியவை தமிழகத்தில் நுழைந்தது: 1990களில் அம்பேத்கர், ஒரு சின்னம் போன்று உபயோகப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுதும், அம்பேதகர் சிலைகள் பிரச்சினையை உண்டாக்கும் என்று தான் கருதப்பட்டது. திராவிட சித்தாந்தத்தில் அம்பேத்கர் இருந்ததில்லை. அதனால், அம்பேத்கர் சிலை என்பது, தலித் மற்றும் தலித்-அல்லாதவர்களிடையே உள்ள பிரச்சினையாக, அடையாளமாக இருக்கும் என்று கருதப்பட்டது என்று ராஜாங்கம்[4] போன்றோர் எடுத்துக் காட்டினர். மண்டல் கமிஷன் 1979ல் ஜனதா ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டாலும், ஆகஸ்ட்.7, 1990 அன்று வி.பி.சிங் ஆட்சியில் அது அறிக்கையைக் கொடுத்தது. பிறகு, 1992ல் மண்டல் தீர்ப்பு [Indira Sawhaney v. Union of India] வெளியானது. முதன் முதலாக “அம்பேத்கர் ஜெயந்தி” என்று அரசு ஏப்ரல்.14க்கு விடுமுறை அறிவித்தது. முன்னர் அத்தகைய வழக்கம் இல்லை. இதனால், ஜாதியத்திற்கு நாடு முழுவதும் ஊக்கம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில், அம்பேத்கர் சிலைகளை வைத்து ஜாதீய அரசியல் ஆரம்பிக்கப்பட்டது. இதனால், தேவர் சிலை வைத்து அரசியலை ஆரம்பித்தனர். 1971லேயே அவரது சமாதி அரசு நினைவகமாக மாற்றப்பட்டது. 1980ல் சட்டசபையில் தேவர் சிலை வைக்கப்பட்டது. 1984ல் “பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம்முண்டாக்கப்பட்டது. முன்னர் அத்தகைய வழக்கம் தமிழக்கத்தில் இல்லை. இந்நிலையில் சில கட்சிகள் அம்பேத்கரை சின்னமாக உபயோகிக்க ஆரம்பித்தன.

தேவர் - அம்பேத்கர்

சென்னை சட்டக் கல்லூரி, 1990ல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாகி, 1997ல் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆனது: 1990ல், அம்பேத்கர் நுற்றாண்டு விழா தருவாயில் “மெட்ராஸ் லா காலேஜ்”, “அம்பேத்கர் சட்டக் கல்லூரி” என்று பெயர் மாற்றப்பட்டது. சென்னைப்பல்கலைக்கழத்தின் கீழிருந்த இது, 1997ல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. ஆன்னால், இது ஜாதிய நோக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மாநில போக்குவரத்துத் துறைகளுக்கு பெயர் வைக்கப்பட்ட போக்கும் அவ்வாறே மாறி, ஒருநிலையில் கைவிடப்பட்டது. மாவட்டங்களுக்கு ஜாதிய தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன. ஆனால், ஜாதிய சங்கங்கள் முதலியன இயங்கிக் கொண்டுதான் இருந்தன. நீதிமன்ற வளாகத்திலேயே, வழக்கறிஞர்கள் சங்கங்கள் கட்சிவாரியாகத்தான் இருந்தன, இருந்து வருகின்றன. ஆகவே, அம்பேத்கர் பெயரில் சங்கம் ஆரம்ப்க்கும் பொழுது அது ஜாதிரீதியில் தான் இருக்கிறது. ஆக, சட்டக் கல்லூரி மாணவர்கள் இத்தகைய அரசியல் மற்றும் ஜாதி அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, ஆதரவாக செயல்படும் போது, பிளவுபடுகின்றனர். 2000களில் சித்தாந்த ரீதியிலான மாணவர் சங்கங்கள், ஜாதிய ரீதியிலும் செயல்பட ஆரம்பித்தன. ஆனால், “அம்பேத்கர்” சங்கம் வரும் போது, அது எஸ்.சி மற்றும் எஸ்.சி-அல்லாதோர் பிரச்சினையாகத்தான் மாறுகின்றன. அதனை, “தலித்” மற்றும் “தலித்”-அல்லாதோர் பிரச்சினை என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

lawcollege2

2008 தேவர் ஜெயந்தி போஸ்டர் சமாசாரம் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது: டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக பதிவான 2 வழக்குகளில் 21 மாணவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது[5]. தாக்குதல் சம்பவம் சற்று விரிவாக… ”பல வருடங்களாகவே சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சாதி பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் விடுதியில் தங்கிப்படித்த மாணவர்களுக்கும், டேஸ்காலர் மாணவர்களுக்கும் தொடர்ந்து சண்டைகள் இருந்தது. அடுத்து தலித் மற்றும் தலித் அல்லாத் மாணவர்களுக்கும் பிரச்னை இருந்து வந்தது[6]. இந்நிலையில் அப்போது சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த மாணவரான பாரதிகண்ணன் தலைமையிலான ஆறுமுகம், பேச்சுமுத்து அய்யாதுரை உள்ளிட்ட மாணவர்கள் ‘முக்குலத்தோர் மாணவர் பேரவை’ என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார்கள். இவர்கள் தேவர் ஜெயந்திக்காக அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையில் கல்லூரியின் பெயரான  டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனும் பெயரை போடாமல் சட்டக்கல்லூரி என மட்டும் போட்டதுடன், சிங்கங்களே, ஒன்று சேருங்கள்’ என போஸ்டர் ஒட்டினார்கள். இதுதான் பிரச்னைக்கு வித்திட்டது.

சட்டக் கல்லூரி அடித்துக் கொள்வது 2008

12-11-2008 அன்று மாணவர்கள் மோதல், அடிதடி: இதுதொடர்பாக இரு தரப்பு மாணவர்களும் அடிக்கடி மோதிக்கொண்டனர்[7].  இந்த நிலையில், 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி மாலை கல்லூரியில் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்தபோது மாணவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது[8].  சம்பவத்தன்று பாரதிகண்ணன் தலைமையினான மாணவர்கள் கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் சட்டக்கல்லூரியில் நுழைந்தனர். அதில் பாரதிகண்ணன்  கத்தியோடு பாய, சித்திரைச்செல்வன் என்கிற மாணவரின் காது கிழிந்தது. அடுத்து சித்திரச்செல்வன் தரப்பு, உருட்டுகட்டை, குண்டாந்தடிகளால் பாரதிகண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் உள்ளிட்டோரை வெறித்தனமாகப் புரட்டியெடுத்தார்கள்.  இந்த தாக்குதலில் இருதரப்பு மாணவர்களும் காயமடைய, சென்னை அரசு மருத்துவமனையில் பாரதிகண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் மற்றும் சித்திரைச்செல்வன் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.  இதன்பிறகு தாக்குதலுக்கு காரணமான மாணவர்கள் ஒரு மாதம் சிறையில் இருந்தார்கள். இந்த தாக்குதல் அப்போது தமிழகத்தையே அதிர வைத்தது. தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளியாக பதற்றத்தில் உறைந்துபோனார்கள் மக்கள்[9].

 சட்டக் கல்லூரி கத்தி-கொம்புகளுடன் அடித்துக் கொள்வது 2008

© வேதபிரகாஷ்

30-01-2016

[1] Ambedkar was never an integral part of the Dravidian rhetoric of anti-Brahmanism or egalitarianism. Periyar [E.V. Ramasamy] was put at the centre, and Ambedkar, where he featured at all, was relegated to the position of a leader of Dalits who fought for the rights of the Scheduled Castes. There were no clear-sighted attempts by political parties and social movements in the State to explicate the fact that Ambedkar’s contribution to non-Dalits was phenomenal. The political parties which thrive on concepts of social justice and democracy have failed to give proper recognition to Ambedkar and his ideology in their rhetoric or interventions despite the fact that Tamil Nadu is a State that has more reservation benefits for the intermediate castes than any other. http://www.frontline.in/static/html/fl2919/stories/20121005291913600.htm

  1. Karthikeyan and H. Gorringe, Resuing Ambedkar, Frontline, Volume 29 – Issue 19 :: Sep. 22-Oct. 05, 2012. http://www.frontline.in/static/html/fl2919/stories/20121005291913600.htm

[2] K. V. Ramakrishna Rao, The Historic Meeting of Ambedkar, Jinnah and Periyar, a paper presented during the 21st session of SIHC and published in the proceedings, School of Historical Studies, Madurai Kamaraj University, Maudrai, 2002, pp.128-136.

[3] https://ambedkarstudies.wordpress.com/2015/04/22/why-jinnah-evr-and-ambedkar-met-at-bombay-in-1940-against-congress/

[4] This failure by the Dravidian parties to take Ambedkar along with them is one of the key reasons why certain intermediate castes see him and his statues as caste-based challenges to the supremacy of their own leaders and icons. The proliferation of Ambedkar statues post-1990 is perceived as a threat which has often become the starting point for contests over public space. His absence from the language of Dravidianism, Rajangam notes, reinforces his image as the symbol of the conflict between Dalits and non-Dalits.

Rajangam, S. 2011. “Rise of Dalit Movements and the Reaction of Dravidian Parties” in K. Satyanarayana and S. Tharu (Eds) No Alphabet in Sight: New Dalit.

[5] நக்கீரன், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில்  21 பேருக்கு சிறை – 22 பேர் விடுவிப்பு, பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (17:30 IST) ; மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (17:30 IST).

[6] http://www.vikatan.com/news/tamilnadu/58255-madras-law-college-students-clash.art

[7] விகடன், தமிழகத்தை உலுக்கிய ‘2008 நவம்பர் 12’, Posted Date : 10:45 (29/01/2016).

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/law-college-clash-21-gets-3-year-sentence-245493.html

[9] சி.ஆனந்தகுமார், தமிழகத்தை உலுக்கிய ‘2008 நவம்பர் 12’, விகடன், Posted Date : 10:45 (29/01/2016).

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

ஏப்ரல் 24, 2013

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

பெங்களூரு வெடிகுண்டு விசாரணையில் சந்தேகிக்கும்படியாக கைது செய்யப் பட்டுள்ளவர்கள் எல்லோரும் முந்தைய “அல்-உம்மா” என்ற தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார்  எடுத்துக் காட்டுகின்றனர்[1]. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் ஏன் மற்படியும் பழைய தொடர்புகளை வைத்திருக்கிறர்கள் என்றும் தெரியவில்லை. முன்பு போல திருநெல்வேலி-கோயம்புத்தூர்-பெங்களூரு இணைப்பும் தெரிகிறது[2]. இதனால், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலையெடுக்கின்றவா – வேறு உருவத்தில் செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் தலைதூக்கியுள்ளது[3]. தடை செய்யப்பட்ட சிமி, வஹதத்-இ-இஸ்லாமி ஹிந்த் (Wahadat-e-Islami Hind) என்ற பெயரில் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது[4]. சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது[5]. இது வெறும் சார்புடைய நிகழ்சியா உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்னர் தான் தெரியும்.

Eight fugitive Terrorists arrested - 2011
“குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்” என்ற தலைப்பில் எப்படி சட்டங்கள் புரட்டப்படுகின்றன என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்[6]. முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

நாத்திகம்என்ற போர்வையில்ஆண்டவனே இல்லையென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்துகாஃபிர்களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதிஎஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

இப்பொழுது, மறுபடியும் அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவது போலிருக்கிறது. முன்பு அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுதில்லை. தமிழக போலீஸ் இணைதளத்திலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன[7]. கீழ்கண்ட வாசகங்கள் தாம் வருகின்றன[8].

404 – File or directory not found.

The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable

அமெரிக்காவில், சந்தேகிக்கப் படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளிப்படையாக பிரசுரிக்கிறார்கள். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆனால், இங்கு அவர்களை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை இல்லை என்று முஸ்லீம்கள் போலீசாரையே குற்றஞ்சாட்டப்படும் போது, பழைய குற்றவாளிகள் என்று அவர்களின் புகைப்படங்கள் இருந்துவிட்டு போகலாமே?

இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்கள்: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பந்தமாக, கீழ்கண்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் செய்திகளில் வெளிவந்தவை, ஆனால், தனித்தனியாக புகைப்படங்கள் இல்லாமல், யார்-யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி உள்ளன. அவற்றிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன:

Kichan Buhari and Mohammed Sali arrested BB

கிச்சான் புகாரி (38)[9] – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான் – நெல்லை மேலப்பாளையம் – மேலப்பாளையத்தில், மாட்டுச் சந்தை நடத்தி வந்தவன், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவன் எட்டு கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன். புழல் ஜெயிலில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானான். அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் சிறுபான்மையின நல அறக் கட்டளை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தான்.  இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவி வந்தான்.

Kichan Buhari arrested Bangalore blast 2013

சதாம் உசேன்: கிச்சான் புகாரியின் உறவினர் சதாம் உசேன், கடந்த மாதம், போத்தனூர் திருமண மண்டபத்தில் நடந்த, ரகளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய பைக்கை, இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

பீர் முகைதீன் (39) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்,

பஷீர் அகமது (30) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – கட்டட தளவாட பொருட்கள் புரோக்கர், சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்

பீர் முகமது – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – இவர்கள் அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – பெங்களூரில் டீ தூள் விற்பவன்-

முகமது ஷாலி – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான். இவர், “சாரிட்டபிள் டிரஸ்ட் பார் மைனாரிட்டீஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். நாகர்கோவில் பகுதியில் சிலருடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகி எம்.ஆர்.காந்தி, 62, தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.

Mohammed Sali arrested BJP attack Nagerkoil

பஷீர் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் – திருநெல்வேலியில் ஒரு ரியல் எஸ்டேடில் ஆபீஸ் பையனாக வேலை செய்பவன்.

ரசூல்மைதீன் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

சலீம் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

முன்பே குறிப்பிட்டபடி, இவர்களின் பெயர்கள் கூட வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் உள்ளன. ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படும் விவரங்கள் தமிழ் நாளிதழ்களில் கொடுக்கப்படுவதில்லை. அல்லது குறைத்துப் போடுகிறார்கள்.

Bangalore blast - suspect arrested

© வேதபிரகாஷ்

24-04-2013


[4] Further, Tamil Nadu has also banned the All India Jihad Committee and Students Islamic Movement of India (SIMI). But SIMI, is regrouping under the banner of Wahadat-e-Islami Hind, Jayalalitha said.

[6] வேதபிரகாஷ், குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும், 1-6, மே.2010,

https://lawisanass.wordpress.com/2010/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-2/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-3/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-4/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-5/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-6/

[9] Kic­han Buhari, a prominent member of the All India Jehad Committee (AIJC) and a close associate of its founder – Ahmad Ali alias Palani Baba, People’s Democratic Party Chairman, Abdul Nasser Madani, and Kun­nangudi Hanifa of Tamil Muslim Munnetra Kazhagam (TMMK)

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

மே 3, 2012

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

நல்லவர்களாக, தூயவர்களாக, புனிதர்களாக இருந்தால் எம்.பி.க்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஊடகக்காரர்கள் ஒரு மொழியிலிருந்து, மற்ற மொழிக்கு மாற்றம் செய்யும் போது, அம்மொழிக்கே உரித்தான சில சொல்லாற்றங்கள், வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் அர்த்தங்கள், அம்மொழியின் தன்மையில் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அல்லது சாதாரணமாக மொழிபெயர்த்தால், சரியான பொருள் கிடைக்காது. இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் ஏற்படுகிறது. वे इनसान की शक्ल में शैतान हैं। “மனித உருவில் உள்ள சாத்தான்களின் வடிவங்கள்” அல்லது சைத்தான் மனித உருவில் உள்ளன என்று மொழிபெயத்தால், உண்மையிலேயே எம்.பிக்கள் “சைத்தான்” என்று சொல்லப்படவில்லை. அம்மொழிப்பிரயோகத்தில் அவர்கள் அத்தகைய கெட்டவர்கள் என்றுதான் பொருள்வரும். இந்தியிலேயே, இரு நாளிதழ்கள் அச்செய்தியை இருவிதமாக வெளியிட்டிருப்பதை கீழே காணலாம்:

क्या बोले थे बाबा[1]छत्तीसगढ़ के दुर्ग से मंगलवार को अपनी यात्रा शुरू करते हुए रामदेव ने कहा था कि सांसदों में अच्छे लोग भी हैं और वह उनका सम्मान करते हैं। लेकिन वहां डकैत, हत्यारे और जाहिल भी हैं। वे वह लोग हैं, जिन्हें किसानों, मजदूरों और देश की लोगों की कोई चिंता नहीं है। वे सिर्फ पैसे के गुलाम हैं। वे इनसान की शक्ल में शैतान हैं। जिन्हें उस पद के लिए चुना गया है, जिसके कि वे काबिल ही नहीं हैं। हमें संसद को बचाना है। हमें भ्रष्ट लोगों को हटाना है। संसद में लुटेरे, हत्यारे व जाहिल बैठे हैं[2]। सत्ता की कुर्सी पर इंसान की शक्ल में हैवान हैं। हमने उन्हें कुर्सी पर बैठाया है। लेकिन वो सत्ता चलाने की पात्रता नहीं रखते। वे लोग किसानों और मजदूरों से हमदर्दी नहीं रखते। वे देश इसलिए चला रहे, क्योंकि हमने ऐसा ही सिस्टम बनाया है। हमने मान लिया है कि 543 रोगी हिंदुस्तान चलाएंगे[3]। हालांकि उनमें कुछ अच्छे भी हैं। हमें संसद को बचाना होगा।

பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று எம்.பி.க்களை பாபா ராம்தேவ் சரமாரி தாக்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்[4].எம்.பி.க்களை திருடர்கள், கொலைகாரர்கள் என்று யோக குரு ராம்தேவ் விமர்சித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை (02-05-2012) கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்று வெளிப்படும் ரோஷம்: ராம்தேவின் பேச்சுக்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்’ என்று மீரா குமார் தெரிவித்தார்.  “நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்’ என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இது போன்ற கருத்துகளை ராம்தேவிடமிருந்து தாம் எதிர்பார்க்கவில்லை. 144 சட்டம் அமூலில் இருக்கும் போது மின்சாரம் இல்லை என்று போரடினால் நானும் சட்டப்படி “கிரிமினல்” ஆகிவிடுவேன்[5], என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

உரிமை மீறல் நோட்டீஸ்: “”எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். “பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீûஸக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்[6]. இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.க்கள் மீது ராம்தேவ் தாக்கு: முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள். விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்‘ என்று கடுமையாக குற்றம்சாட்டினார்[7].

அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.  நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ். Addressing the media while launching his month-long yatra in Chhattisgarh’s Durg on Tuesday, Baba Ramdev said there were good people among the parliamentarians and he respected them[8]. “But there are dacoits, murderers, illiterates among them[9]. We have to save Parliament. We have to remove corrupt people.” He accused the MPs of not caring for farmers and labourers. “They are friends and slaves of money. They are illiterate, dacoits and murderers. They are devils in the form of humans, who we have elected to those posts. They are not worth it,” he said.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும், அவரது குழுவினரும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் ராம்தேவும் எம்.பி.க்களை கடுமையாக குறைகூறி பேசியுள்ளார்.

ராம்தேவ் ஒரு மென்டல் கேஸ்: லாலு தாக்கு[10]: யோகாகுரு பாபா ராம்தேவ் பைத்தியக்காரர் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்[11]. சத்திஸ்கரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யோகாகுரு பாபா ராம்தேவ், எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது, ராம்தேவின் பேச்சு பயனற்றது. இது போன்று பேசுபவர்களும் பயனற்றவர்கள். ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

ராம்தேவ் கூறியது சரிதான்: அன்னா ஹசாரே[12]எம்.பி.க்கள் குறித்து ராம்தேவ் பேசியதில் தவறில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.நேற்று முன்தினம், சத்தீஸ்கரில் ராம்தேவ் கூறுகையில், “தற்போதுள்ள எம்.பி.,க் களில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரத்தில், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், படிப்பறிவற்றவர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, பார்லிமென்டை காக்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: ராம்தேவ் கூறியதில் எந்தவிதத்திலும் தவறில்லை. அவர் கூறிவது தவறு என்றால், இன்று ஏராளமான எம்.பி.க்களுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.  இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் கொடுக்கும் போது , மக்கள் ஏன்? நெருக்கடி கொடுக்கக்கூடாது. கட்சிகளுக்கு தேவை ஓட்டு. ஆனால் வேட்பாளர்களாக கிரிமினல்களை ஏன நிறுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் தேர்தலில் நின்றால் ஜனநாயகத்தின் கோயில் என்னவாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் 150ற்கும் மேலான கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்கள்[13]: 543 எம்.பி.க்களில் 150 பேர்களுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று ஏற்கெனவே பல அறிக்கைகள், செய்திகள், விவரங்கள் வந்துள்ளன[14]. அவர்கள் ஒன்றும் வெட்கப்பட்டு தேர்தலில் நிற்காமல் இல்லை, தோல்வியும் அடையவில்லை, பாராளுமன்றத்தில் உட்காரவும் இல்லை ……………………என்றெல்லாம் இல்லை.

“Of these 150 MPs, 72 have serious charges against them. The maximum criminal charges are against Congress MP from Porbandar in Gujarat Vitthalbhai Hansrajbhai Radadiya. He has a total of 16 cases out of which five cases are of serious nature,” the analysis revealed.”Bharatiya Janata Party (BJP) has maximum number of MPs having criminal cases with 42 MPs, of which 17 have serious criminal cases against them. It is closely followed by Congress with 41 MPs having criminal cases against them. Twelve Congress MPs have serious charges against them,” the study said. அந்த 150ல், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிக அளவில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 72 மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி கவலைப் படவில்லை.பி.ஜே.பியில் 42 எம்.பி.க்கள், காங்கிரஸில் 41 என்று உள்ளனர். அதனால்தான், இரு கட்சிக்காரர்களுக்கும் கோபம் வருகிறது போலும். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இவர்களை ஏன் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க்கவைத்தன?

“டாப்-10” என்று கிரிமினல் எம்.பி.க்கள் பட்டியலே கொடுக்கப் பட்டது. அப்பொழுதும், யாருக்கும் பொத்துக் கொண்டு வரவில்லை. அதில் லல்லுவும் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் தான் பாபா ராம்தேவை “மென்டல்” என்று “கமன்ட்” வேறு அடிக்கிறார்.

 Here is a list of top ten MPs with a criminal background, compiled by the National Election Watch[15].

Name: Kameshwar Baitha (56)
Constituency represented: Palamau, Jharkhand
Party: Jharkhand Mukti Morcha
Criminal background: Accused in 35 cases and has 50 serious charges against him under the IPC
Convicted: NeverName: Jagadish Sharma, (58)
Constituency represented: Jahanabad, Bihar
Party: Janata Dal-United
Criminal background: Accused in 6 cases and has 17 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Bal Kumar Patel (48)
Constituency represented: Mirzapur, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 13 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Prabhatsinh Pratapsinh Chauvan (67)
Constituency represented: Panchamahal, Gujarat
Party: Bharatiya Janata Party
Criminal background: Accused in 3 cases and has 10 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kapil Muni Karwariya (42)
Constituency represented: Phulpur, Uttar Pradesh
Party: Bahujan Samaj Party
Criminal background: Accused in 4 cases and has 8 serious charges against him under the IPC
Convicted: Never

Name: P Karunakaran (64)
Constituency represented: Kasargod, Kerala
Party: Communist Party of India-Marxist
Criminal background: Accused in 12 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kunvarji Mohanbhai Bavaliya (54)
Constituency represented: Rajkot, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 2 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Vittalbhai Hansrajbhai Radadiya (51)
Constituency represented: Porbandar, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 16 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Ramkishun (49)
Constituency represented: Chandauli, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Lalu Prasad Yadav (60)
Constituency represented: Saran, Bihar
Party: Rashtriya Janata Dal
Criminal background: Accused in 7 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

நாட்டை ஆள்பவர்களுக்கு தகுதி, யோக்கியதை, தார்மீக பொறுப்பு முதலியவை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை அவ்வாறு கூறுவதே தவறாகும். இப்படி கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், லஞ்சம் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகி, பைளில் வெளிவந்து, பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அரசு செலவில் உலா வந்தால் அது மக்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு லட்சம் வாங்கிய பங்காரு லட்சுமணன் ஜெயிலில் என்றால், 1,73,000 கோடிகள் சுருட்டியவர்கள் எப்படி வெளியில் இருக்கிறார்கள்? பிணையில் வெளிவந்து பாராளுமன்ரத்திலும் உட்கார்ந்து கொள்கிறார்கள்?இதனை எடுத்துக் காட்டும் போது, அவர்கள் கோபம் அடைகிறார்கள், சட்டப்படி, உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுப்போம் என்றால், சட்டப்படி அந்த 150 எம்,பிக்களையும் வீடிற்கு அனுப்ப வேண்டியது தானே? எம்.பி பதவியை பறிக்கவேண்டியது தானே? மந்திரியாக உள்ளவர்களின் பதவியையும் பறிக்க வேண்டியதுதானே? ஆனால், காங்கிரஸ் அல்லது மேலிடம் சோனியா மெய்னோ அவ்வாறு செய்யவில்லையே? தாமஸ் கதையை அதற்குள் மறந்து விட்டார்கள் போல!

வழக்கு முடிந்து, தான் குற்றவாளி இல்லை என்ற பிறகு பதவிக்கு வருவது தானே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.பி ஆட்சி மூன்று மாநிலங்களில் கலைக்கப் பட்டது. ஆனால், தவறில்லை என்று தீர்ப்பு வந்தபோது, அது மறுபடியும் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. அந்த இளைஞர் ராகுல் ஏன் இதைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்வதில்லை? ஒருவேளை தனது அப்பாவே ஊழல் பேர்வழி என்ற பிரச்சினை உள்ளது என்று அமைதியாக உள்ளாரா? இல்லை பிரியங்கா அல்லது வதேராவை வைத்து மோட்டார் பைக்கில் ஊர்வலம் வரச் சொல்லலாமே? பாபா ராம்தேவின் உருவ பொம்மையை எரிப்பவர்கள், அந்த 150 எம்.பிக்களின் உருவ பொம்மைகளை எரிப்பார்களா அல்லது பாலாபிஷேகம் செய்வார்களா?

ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட எ,.கே.அத்வானி ராஜினாமா செய்து, காத்திருந்து, வழக்கு முடிந்து, தான் நிரபராதி என்று முடிவானப் பிறகுதான் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேபோல மற்றவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று பாரம்பரியம் இருக்கும் போது, மக்கள் இனிமேல் அத்தகைய ஆட்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. முதலில் அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் தேர்தல் கமிஷன் அவர்களை நிறுத்தவேண்டும். தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போதே அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், இந்நிலை மாறும். இவ்வாறு சொல்வதே தவறு என்று பாராளுமன்றம் எப்படி சொல்ல முடியும்? அங்கிருக்கும் 150 பேர்கள் எப்படி தமக்கு எதிராக தாமே பேசுவார்கள் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள்? விவாதம் வரும் போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்கள் பேசுவதை கேட்பார்கள் அல்லது தாமே பேச முன்வருவார்கள்?

அது எப்படி சட்டப்படி செல்லுபடியாகும்? இதெல்லாம் அங்குள்ள மெத்தப் படித்த எம்.பிக்களுக்கு, ஐந்து / ஆறு முறை என்று எம்.பிக்களாக இருப்பவர்களுக்கு, சட்டம் படித்த மாமேதைகளுக்கு, லட்சங்களில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்-எம்,பிக்களுக்கு தெரியாமலா இருக்கும்?

வேதபிரகாஷ்

02-05-2012


தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

மார்ச் 17, 2012

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?


லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்

Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.

Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani) 

3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th 

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

  • ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
  • அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
  • அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
  • முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
  • கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
  • ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
  • இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?

திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –

  1. நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
  2. முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
  3. தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
  4. உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
  5. அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.

இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!

வேதபிரகாஷ்

16-03-2012


 


[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.

முத்துப் பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம்-தலையிட விரும்பாத சென்னை உயர் நீதிமன்றம்!

செப்ரெம்பர் 9, 2010

முத்துப் பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம்தலையிட விரும்பாத சென்னை உயர் நீதிமன்றம்!

முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம்: திருவாரூரில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த பிரச்சனை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் வருவது. எனவே, அந்த ஊர்வலம் குறித்து வருவாய்த் துறையினரும், போலீஸ் அதிகாரிகளும் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது[1].

விநாயகர் ஊர்வலம் நடத்துபர்களின் சார்பில் மனு தாக்குதல்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஜாம்பவான் ஓடையைச் சேர்ந்த பி.ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது….. “எங்கள் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாங்கள் பல ஆண்டுகளாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகிறோம். இந்த விநாயகர் சிலை ஊர்வலத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுச் செயலாளராக நான் செயல்படுகிறேன். விநாயகர் சிலை ஊர்வலப் பாதை ஜாம்பவான் ஓடையில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவிலில் தொடங்கி முத்துப்பேட்டை, ஓடைகரை, டி.டி.பி.சாலை, ஆசாத் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பி.கே.டி.சாலை ஆகியவற்றின் வழியாக இறுதியில் பேட்டை சிவன் கோவிலை அடைந்து அங்குள்ள கோரையாற்றி்ல் கரைக்கப்படுகின்றது. இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாக ஊர்வலம் சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 1993-ம் ஆண்டு ஊர்வலத்தின் போது சில சமூக விரோதிகள் கல்வீசித் தாக்கினர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடத்தி வருகின்றோம்.

முஸ்லீம்கள் தொடர்ந்த வழக்கின்படி புதிய ஊர்வலப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது: “கடந்த 2009-ம் ஆண்டு முகமது சிப்லி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை அடுத்து விநாயகர் ஊர்வலத்துக்கு புதிய ஊர்வல பாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய ஊர்வலப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊர்வலப் பாதையில் அங்காள அம்மாள் கோவில், வெள்ளை விநாயகர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், பேட்டை சிவன் கோவில் ஆகியவை இடம் பெறவில்லை. மேலும், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அதிகாரிகள் நிர்ப்பந்திக்கும் பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, நாங்கள் ஏற்கனவே ஊர்வலம் நடத்தி வந்த பழைய ஊர்வலப் பாதையில் செல்ல எங்களை அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்”,  என்று கூறியிருந்தார்.

கலெக்டர் கலந்து ஆலோசித்து ஊர்வலப் பாதையை பற்றி முடிவு செய்யலாம்[2]: இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளதாவது, “இந்த பிரச்சனை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் வரும். எனவே, இந்த விவகாரத்தில் வருவாய்த்துறையினரும், போலீஸ் அதிகாரிகளும் இறுதி முடிவு செய்வது தான் சரியாக இருக்கும். மாவட்ட நிர்வாக விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. விநாயகர் சிலை ஊர்வலப் பாதை தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அனைத்து தரப்பினரையும் அழைத்துக் கூட்டம் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலப் பாதை பற்றி முடிவு செய்ய வேண்டும். மொத்தத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன், கலெக்டர் கலந்து ஆலோசித்து ஊர்வலப் பாதையை பற்றி முடிவு செய்யலாம்[3]. அந்த பகுதியில் மத நல்லிணக்கம் ஏற்படும் வகையில் கலெக்டரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்”, என்று உத்தரவிட்டனர்[4].

விநாயகர் சதுர்த்தி ஊர்வல விஷயத்தில் சென்ற வருட தீர்ப்பு: படிப்பினைகள்: சென்ற வருடம் முத்துப்பேட்டையில், விநாயகச் சதுர்த்தி ஊர்வலம் நடந்தபோது, முஸ்லீம்கள் பல சரத்துகளைப் போட்டதாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு, ஒருவழியாக, மாற்றுப் பாதையில் ஊர்வலம் நடந்துள்ளது. ஆனால், முஸ்லீம்கள் நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளது என்று ஒரு வழக்கைத் தொடுத்தனர். விவரங்களுக்கு, கீழே கட்டத்தில் உள்ளவற்றைப் பார்க்கவும்.

நீதிமன்ற அவமதிப்பு இல்லை[5]: விசாரித்து நீதிபதி, இந்த விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு என்று ஒன்றும் இல்லை. மேலும் நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதத்தை முழுவதுமாகவோ அல்லது சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் முறையிலோ உபயோகப்படுத்தக் கூடாது. நீதிமன்றத்தின் மரியாதை மற்றும் சட்டத்தின் மேன்மை இவற்றைக் காப்பதற்க்காகத்தான், நீதிமன்ற அவமதிப்பு என்பதைத் தண்டிக்க உபயோகப்படுத்தவேண்டும், மேலும் பாதிக்கப்பட்டவருக்கு அவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தியவர் மற்றும் நீதிமன்றத்திற்கு இடையே, நீதிமன்றத்தை தனது அதிகாரத்தை உபயோகப்படுத்துன்படி பிடிவாதம் பிடிக்க உரிமை இல்லை.

B.Mohamad Shibli vs Mr.Sripathy on 25 November, 2009

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

Dated : 25.11.2009

Coram :

THE HONOURABLE MR.JUSTICE K.RAVIRAJA PANDIAN

and

THE HONOURABLE MR.JUSTICE M.M.SUNDRESH

Contempt Petition No.1116 of 2009

B.Mohamad Shibli Petitioner

v.

1. Mr.Sripathy,

The Chief Secretary,

Government of Tamilnadu,

Secretariat, Fort St. George,

Chennai 9.

2. Mr.Chandrasekaran,

The District Collector,

Thiruvarur, Thiruvarur District.

3. Mr.Praveen Kumar Abinav,

The Superintendent of Police,

Thiruvarur, Thiruvarur District. Respondents

Contempt Petition filed under sections 10 and 12 of the Contempt of Courts Act (Act No.70 of 71), praying to punish the respondents for their wilful disobedience of the order dated 26.08.2009 made in Writ Petition No.17277 of 2009.

For petitioner : Mr.V.Kasinatha Bharathi

For respondents : Mr.R.Thirugnanam, Special Government Pleader

JUDGMENT  (Judgment of the Court was delivered by K.RAVIRAJA PANDIAN, J.

6………………………………….The petitioner cannot impose or dictate terms on the district administration, which is well advised than anyone-else. The action of the respondents, in our view, cannot at any stretch of imagination, be regarded as one deliberately and contumaciously flouting the order of the Court in order to haul them up for contempt.

9. The weapon of contempt is not to be used in abundance or misused. Power to punish for contempt of Court is to be exercised for maintenance of the court’s dignity and majesty of law. Further, an aggrieved party has no right to insist that the court should exercise such jurisdiction as contempt is between a contemner and the court. (vide R.N. Dey v. Bhagyabati Pramanik , (2000) 4 SCC 400).

10. For the reasons stated above and in the light of the judgments cited supra, the contempt petition is closed.


[1] http://thatstamil.oneindia.in/news/2010/09/09/vinayakar-idol-procession-affair-hc.html

வியாழக்கிழமை, செப்டம்பர் 9, 2010.

[2] http://www.thehindu.com/news/states/tamil-nadu/article621524.ece

[3] http://www.hindu.com/2010/09/09/stories/2010090953230400.htm

[4] http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=14985&id1=4

[5] http://indiankanoon.org/doc/688785/