சென்னை சட்டக்கல்லூரி மாணவி-மாணவர் போராட்டம், தெருக்களில் தர்ணா, பொது மக்கள் அவதிக்குள்ளானது (3)
வாகனங்கள் நிறுத்தம், பொது மக்கள் அவதி: பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி மாணவர்கள் சாலை மறியலால் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிவரை பாரிமுனையிலிருந்து கடற்கரை சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எந்த வாகனங்களும் அந்த சாலையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால், வாகனங்கள் கொடிமர இல்ல சாலையில் திருப்பி விடப்பட்டன. ஆனால், குறளகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த சாலையிலும் வாகனங்கள் போக முடியாமல் திணறின. வாகனங்களில் சென்றுகொண்டிருந்த பயணிகளும், பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், போலீசாருக்கு எப்படி போக்குவரத்தை சரிக்கட்டுவது என்று குழப்பம் ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்குமுறை பின்பற்ற வேண்டிய மாணவ-மாணவியர், அதிலும் குறிப்பாக சட்டம் பட்ப்பவர்கள் இவ்வாறு தெருக்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைறாதிக அளவில் பாதிக்கும் அளவில் நடந்து கொண்டது வருத்தமாகவே இருந்தது.
பொது மக்களின் அதிருப்தியை சம்பாதித்த சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம்: சட்டக்கல்லூரி மாணவி-மாணவியர் பீச் ரோடு – பாரி முனை தெருக்களில் உட்கார்ந்து கொண்டு, ஆர்பாட்டம் நடத்தினர். சுமார் மதியம் ஒரு மணி அளவில் பேருந்துகள், மற்ற வாகனங்கள் செல்லாதவாறு சாலைகளில் உட்கார்ந்து கொண்டு மறியல் செய்தனர். இதனால், பொது மக்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்தனர். முதியவர், பெண்கள், குழந்தைகள், மற்றவர்கள் விசயம் புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். சென்ட்ரலுக்கு ரெயில் பிடிக்க பேருந்தில் வந்தவர்கள் தவித்தனர். பொது மருத்துவமனை (சென்ட்ரலுக்கு எதிரில்) மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனைகளுக்கு மதிய உணவை எடுத்துச் சென்ற பெண்களும் பரிதவித்தனர். பொதுமக்களில் சிலர் வெளிப்படையாகவே, அவர்களைத் தட்டிக் கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அவர்கள் அதனைக் கேட்பதாக இல்லை. மூன்று வாரங்களாக நாங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடுகிறோம் என்று வாதிட்டனர். ஒருவர், பீச் ரோட்டில் இருந்து வரும் வண்டிகளை போகவிடுங்கள் என்று கெஞ்சினார். வக்கீல் போல கோட்டு போட்டுக் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி அவரிடம் கேளுங்கள் என்றனர். சென்று அவரிடம் கேட்டால், அவர் மசியவில்லை.
மாணவிகள் தெருக்களில் உட்கார்ந்து நடத்திய தர்ணா: மாணவிகளை ரோட்டில் / தெருவில் உட்காரவைத்து, இந்த மறியல் போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத் தக்கது! இப்படி மாணவிகளை முன்னிலைப் படுத்தி சாலை மறியல் நடத்தியது விசித்திரமாக இருந்தது. மேலும் அம்மாணவியர் சிறிது கூட இரக்கம் இல்லாத விதத்தில் பேசியது, வாதம் புரிந்தது முதலியன பொது மக்களுக்குத் திகைப்பாக இருந்தது. பொது மக்களின் கஷ்டம், அவதி, தொந்தரவு படும் நிலை முதலியவற்றை அந்த மாணவிகளுக்கு விளக்கினார் அவர்! கையெடுத்து கும்பிடவும் செய்தார்! ஆனால், அந்த மாணவிகள் மசியவில்லை, இரக்கம் காட்டவில்லை! நாளைக்கு ஒருவேளை அவர்களது பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், உற்றோர், மற்றோர் அவ்வாறு சிக்கிக் கொண்டால் என்ன செய்வார்கள் என்று அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை! பெண் என்றால் பேயும் இரங்கும் என்பர், ஆனால், இந்த இளம் பெண்கள் யாருக்கும் இரங்கவில்லை! ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வந்து ஒரு பெண் தலைவியிடம், “டி.எல்.எஸ்.டம் பேசியாகி விட்டதா?”, என்று கேட்டார். “அவர் வந்து கொண்டிருக்கிறார், நீங்கள் வழி விட்டால் தான் இங்கு வரமுடியும்”, என்று அவர் சொன்னார். ஆனால், அந்த இளம்பெண், அலட்சியமாகவே இருந்தார்! போலீஸார் இவர்களிடம் ஏன் இந்த அளவிற்கு மெத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்று தெரியவில்லை! அவர்கள் நடந்த கொண்ட விதம், யாரோ தூண்டி விட்டு, இவ்வாறு ஆர்பாட்டம் செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது! இதற்குப் பிறகு தான், கல்வீச்சு, தடியடி முதலியன நிகழ்ந்தன.
அரசியல் பின்னணி, சித்தாந்தவாதி கட்சிகளின் தூண்டுதல் முதலியன: திராவிட அரசியலில் மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்துவது, நடத்தி வைப்பது என்பது சகஜமான விசயம் தான். இத்தகைய விசயத்தில் “பேருந்து ஸ்ட்ரைக்” போன்ற விவகாரங்களும் அடங்கும். மேலும், சட்டக் கல்லூரியில், திராவிட கட்சிகளின் தாக்கம் மட்டும் இல்லாமல் சித்தாந்த கட்சிகள், இயக்கங்களின் தாக்கங்களும் இருந்து கொண்டு செயல்பட்டு வருகின்றன. மகஇக, “புரட்சிகர” அமைப்புகள், கம்யூனிஸ்ட் தீவிரவாத கோஷ்டிகளும் (சிபிஎம்எல் போன்றவை), தனித்தமிழ்நாடு கேட்கும் பிரிவினை கும்பல்கள் (தன்னுரிமை, தமிழ்-தேசிய பிரிவுகள்) இதில் அடக்கம். மாணவ-மாணவியர்களை ஜாதி, மதம், மொழி, கட்சி முதலியவற்றின் மூலம் பிரிப்பது, துவேசத்தை வளர்ப்பது முதலியவை இவற்றின் வேலையாகும். நோட்டீசுகள், குறும்புத்தகங்கள் முதலியவற்றை மாணவ-மாணவியர்களிடம் சுற்றுக்கு விடுவர். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் சுவரொட்டிகளையும் கல்லூரி வளாகங்களில் ஒட்டுவர். அவற்றை அப்புறப்படுத்தும் விசயத்திலும் கலாட்டா செய்வர்.
மாணவ–மாணவியர்களைப் பிரிக்கும் சித்தாந்த கும்பல்கள்: அடிக்கடி கூட்டம், மாநாடு போன்றவற்றை நடத்தி அதில் மாணவ-மாணவியர்களை கலந்து கொள்ள செய்கின்றனர். இதனால், அவர்களின் மனங்களில் அத்தகைய எண்ணங்கள் உருவாகி, சந்தர்ப்பம் கிடைத்தால் வன்முறையில் ஈடுபடவேண்டும் என்ற மனப்பாங்குடன் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். படிக்கும் மற்ற மாணவ-மாணவியர்களை சீண்டுவது, தொந்தரவு செய்வது, வலுக்கட்டாயமாக கூட்டம்-மாநாடுகளில் பங்கு கொள்ள செய்வது, சந்தா கட்ட செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாணவ-மாணவியர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், வெளியே சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர். ஆளும் கட்சிக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்ற விதத்தில் உள்ள மற்ற கட்சிகள் இத்தகைய போராட்டங்களைத் தூண்டு விடுகின்றன. மகஇக, “புரட்சிகர” அமைப்புகள் (மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ன, பெண்கள் விடுதலை முன்னணி), கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் அதில் குளிர் காய்கின்றன.
இத்தகைய மாணவ-மாணவியர்கள் நாளைக்கு வக்கிலாக தொழிலுக்கு வரும்போதும், அதே மனப்பாங்குடன் இருக்கின்றனர், செயல்பட்டு வருகின்றனர், நீதிபதி ஆனாலும், அத்தகைய மனப்பாங்கு மாறுவதில்லை, மாறாக இருகிப் போகின்றது. இதனால், பல தீர்ப்புகளும் பாரபட்சமாக இருந்து, சமூகத்தைப் பாதிக்கின்றன. இவ்வாறு 60-100 வருடங்களாக தமிழக மக்களைப் பிரிந்து, சித்தாந்த ரீதியிலேயே உழன்று, மாநிலத்தை பின் தங்க வைத்துள்ளது தான் இவர்களது சாதனையாக உள்ளது.
© வேதபிரகாஷ்
05-02-2015