Archive for the ‘கருணை மனு’ Category

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

செப்ரெம்பர் 23, 2015

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

Law-graduates bar council enrollment

Law-graduates bar council enrollment

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது (22-09-2015): தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் 22-09-2015 அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது[1]: 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக்கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன[2]. 2010ல் முதலில் நுழைவு தேர்வு அறிமுகப்பப்படுத்தியபோதே சிலர் எதிர்த்தனர், ஆனல், அது கட்டாயமாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டுவ்முதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது[3].

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

20-03-2015 அன்று பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கிய வழக்கறிஞர்கள்[4] சஸ்பென்ட்: 20-3-2015 அன்று சில வழக்கறிஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[5]. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி. மணிகண்டன் வதன் செட்டியார் [Manikandan Vathan Chettiar], ஆர். மதன்குமார் [R Madhan Kumar ] ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன[6]. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[7]. சென்ற வருடம் பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்துபோது, நீதிபதிகள் பேசியது, இப்பொழுது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

வழக்கறிஞர்கள், தொழில் தர்மத்தை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது,” என, கூறினார்[8]: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று, பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பேசியதாவது: வழக்கறிஞர்கள் பணி, நீதிபதிகள் பணியை விட முக்கியமானது. சமூகத்தில், இவர்களது பணி மிகவும் பொறுப்பு வாய்ந்தது.வழக்காடிகளுடன், வழக்கறிஞர்களின் உறவு பெரும் நம்பிக்கைக்கு உரியது. எனவே, வழக்கறிஞர்கள், நேர்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.சமூகத்திலும், நீதித் துறையிலும், முக்கிய பங்காற்றும் வழக்கறிஞர்கள் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும். சமூக நீதிக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர்கள் பணி, சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்நிலையில், தொழில் தர்மத்தை மீறி, வழக்கறிஞர்கள் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது; அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நம்பிக்கை குறைவான எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது.சமூக சேவையின் ஒரு பகுதியாக, வழக்கறிஞர் பணியை கருத வேண்டும். வழக்கறிஞர்களுக்கு, பார் கவுன்சில் வகுத்துள்ள விதிகளுக்கு தலை வணங்கி, பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை[9]:  விழாவில் வாழ்த்துரை வழங்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பேசியதாவது: நீதிபதி நாகப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றிய போது, சென்னை சட்டக் கல்லூரியில், பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றினேன். தற்போதுள்ள சட்டக் கல்வியுடன், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பார் கவுன்சில் உறுப்பினர்கள் முன்வர வேண்டும். வழக்காடிகளை எப்படி அணுகுவது, நீதிமன்றத்தில் எப்படி பேசுவது போன்ற, அடிப்படை பயிற்சிகளை, சட்டம் பயிலும்போதே, மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இப்பணியை, சமூக சேவையாகக் கருதி, பார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர்கள், திறமையான இளம் வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது, பணம் சம்பாதிக்கும் வியாபாரம் அல்ல. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், பணம் தேவை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை.

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்: நீதிபதி பானுமதி: இளம் வழக்கறிஞர்களுக்காக, பார் கவுன்சில், தொடர் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இதற்காக, சட்ட கமிஷன் நிதி அளிக்கிறது. இதைப் பயன்படுத்தி, இளம் வழக்கறிஞர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், கருத்தரங்குகளை பார் கவுன்சில் நடத்த வேண்டும். சென்னை பார் கவுன்சில் மூலம், வழக்கறிஞர்களுக்கு அளிக்கப்படும், குடும்ப நல நிதி, விபத்து காப்பீடு போன்றவை, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்: கடந்த, 1928ல் துவங்கப்பட்ட சென்னை பார் கவுன்சில், பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது. நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள். மென்பொருள், சிறப்பாக இருந்தால் தான், நீதிமன்றம் என்ற கணினியும் நன்றாகச் செயல்படும்.சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அவர்களால், பெருந்தொகையை கட்டணமாகக் கொடுத்து, வழக்காட முடியாது. எனவே, சாதாரண மக்களை மனதில் கொண்டு, வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும். நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

நீதிபதிகளுக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷம் [செப்டம்பர்.17, 2015][10]: வக்கீல்கள் இப்பொழுதெல்லாம் போலீஸாருடன் சண்டை போடுவது, பொது இடங்களில் கலாட்டா செய்வது, போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கருப்புக் கோட்டு போடாலே, ஏதோ அவர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்து விடுகின்றன, யாரும் அவர்களை ஒன்றும் கேட்க முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு அந்து விடுகிறது. செப்டம்பர்.13, 2015 அன்று சென்னை உயர் நீதிமன்ற அரங்குக்குள், வழக்கறிஞர்களை அனுமதிக்காததால், நீதித்துறை மற்றும் போலீசாருக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். இதனால், உயர் நீதிமன்றத்தில், பரபரப்பு ஏற்பட்டது. கட்டாய, ‘ஹெல்மெட்’ உத்தரவைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள், ஊர்வலம் சென்று, நீதிபதிகளுக்கு எதிராக, கோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாது, கோர்ட்டு அறையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையின் பாதுகாப்பு பணியை மத்திய போலீசாரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது[11].  மதுரையிலும் வக்கில்கள் கலாட்டா செய்து வருகிறார்கள்[12]. வக்கீல்கள் ஏற்கெனவே கட்சி, ஜாதி என்ற முறைகளில் பிரிந்து கிடக்கிறார்கள். இதனால், பரபட்சமற்ற முறையில் வழக்காடுவது, வழக்குகளை நடத்துவது, தம்மை வந்தவர்களுக்கு உதவுவது போன்ற குணங்கள் எல்லாம் மறைந்து விட்டன. அதாவது, சட்டத்தைக் காக்க வேண்டிய வக்கில்களே, இவ்வாறு சட்டங்களை மீறி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

23-09-2015

[1]  தினமணி, 2,495 வழக்குரைஞர்களாக செயல்படத் தடை: தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை, By சென்னை, First Published : 23 September 2015 02:35 AM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/2495-law-graduates-lose-permission-to-practise-in-Tamil-Nadu/articleshow/49059294.cms

[3]  தி.இந்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 2,495 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தற்காலிக தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்,Published: September 23, 2015 08:24 ISTUpdated: September 23, 2015 08:25 IST.

[4] The tussle between between two groups of Madras High Court lawyers over the recognition accorded to the Tamil Nadu Advocates Association (TNAA) reached the doorsteps of the Bar Council. Advocates affiliated to the Madras High Court Association (MHAA) barged into the council building protesting the grant of recognition and vandalised a portion of it on Friday (20-03-2015).

http://www.newindianexpress.com/cities/chennai/Bar-Council-Bldg-Vandalised-During-Protest-by-Lawyers/2015/03/21/article2723454.ece

[5] http://www.dinamani.com/tamilnadu/2015/09/23/2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/article3042677.ece

[6] http://tamil.chennaionline.com/news/chennai/newsitem.aspx?NEWSID=ce2a7e8f-571c-44af-8374-ca8fd40f82a9&CATEGORYNAME=TCHN

[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article7680134.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1110457

[9]  தினமலர், வழக்கறிஞர்கள் தொழில் தர்மத்தை மீறுவதை ஏற்க முடியாது! சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டம், நவம்பர்.9, 2014,02.00.

[10]  தினமலர், நீதிபதிகள், போலீசாருக்கு எதிராக கோஷம் : உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் முற்றுகை, செப்டம்பர்.17, 2015.00.49.

[11] http://www.dailythanthi.com/News/State/2015/09/15010329/In-the-court-room-the-lawyers-movement.vpf

[12] http://www.deccanchronicle.com/150917/nation-current-affairs/article/lawyers-create-ruckus-madras-high-court

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

ஏப்ரல் 24, 2013

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

பெங்களூரு வெடிகுண்டு விசாரணையில் சந்தேகிக்கும்படியாக கைது செய்யப் பட்டுள்ளவர்கள் எல்லோரும் முந்தைய “அல்-உம்மா” என்ற தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார்  எடுத்துக் காட்டுகின்றனர்[1]. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் ஏன் மற்படியும் பழைய தொடர்புகளை வைத்திருக்கிறர்கள் என்றும் தெரியவில்லை. முன்பு போல திருநெல்வேலி-கோயம்புத்தூர்-பெங்களூரு இணைப்பும் தெரிகிறது[2]. இதனால், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலையெடுக்கின்றவா – வேறு உருவத்தில் செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் தலைதூக்கியுள்ளது[3]. தடை செய்யப்பட்ட சிமி, வஹதத்-இ-இஸ்லாமி ஹிந்த் (Wahadat-e-Islami Hind) என்ற பெயரில் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது[4]. சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது[5]. இது வெறும் சார்புடைய நிகழ்சியா உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்னர் தான் தெரியும்.

Eight fugitive Terrorists arrested - 2011
“குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்” என்ற தலைப்பில் எப்படி சட்டங்கள் புரட்டப்படுகின்றன என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்[6]. முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

நாத்திகம்என்ற போர்வையில்ஆண்டவனே இல்லையென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்துகாஃபிர்களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதிஎஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

இப்பொழுது, மறுபடியும் அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவது போலிருக்கிறது. முன்பு அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுதில்லை. தமிழக போலீஸ் இணைதளத்திலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன[7]. கீழ்கண்ட வாசகங்கள் தாம் வருகின்றன[8].

404 – File or directory not found.

The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable

அமெரிக்காவில், சந்தேகிக்கப் படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளிப்படையாக பிரசுரிக்கிறார்கள். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆனால், இங்கு அவர்களை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை இல்லை என்று முஸ்லீம்கள் போலீசாரையே குற்றஞ்சாட்டப்படும் போது, பழைய குற்றவாளிகள் என்று அவர்களின் புகைப்படங்கள் இருந்துவிட்டு போகலாமே?

இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்கள்: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பந்தமாக, கீழ்கண்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் செய்திகளில் வெளிவந்தவை, ஆனால், தனித்தனியாக புகைப்படங்கள் இல்லாமல், யார்-யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி உள்ளன. அவற்றிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன:

Kichan Buhari and Mohammed Sali arrested BB

கிச்சான் புகாரி (38)[9] – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான் – நெல்லை மேலப்பாளையம் – மேலப்பாளையத்தில், மாட்டுச் சந்தை நடத்தி வந்தவன், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவன் எட்டு கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன். புழல் ஜெயிலில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானான். அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் சிறுபான்மையின நல அறக் கட்டளை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தான்.  இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவி வந்தான்.

Kichan Buhari arrested Bangalore blast 2013

சதாம் உசேன்: கிச்சான் புகாரியின் உறவினர் சதாம் உசேன், கடந்த மாதம், போத்தனூர் திருமண மண்டபத்தில் நடந்த, ரகளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய பைக்கை, இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

பீர் முகைதீன் (39) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்,

பஷீர் அகமது (30) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – கட்டட தளவாட பொருட்கள் புரோக்கர், சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்

பீர் முகமது – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – இவர்கள் அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – பெங்களூரில் டீ தூள் விற்பவன்-

முகமது ஷாலி – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான். இவர், “சாரிட்டபிள் டிரஸ்ட் பார் மைனாரிட்டீஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். நாகர்கோவில் பகுதியில் சிலருடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகி எம்.ஆர்.காந்தி, 62, தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.

Mohammed Sali arrested BJP attack Nagerkoil

பஷீர் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் – திருநெல்வேலியில் ஒரு ரியல் எஸ்டேடில் ஆபீஸ் பையனாக வேலை செய்பவன்.

ரசூல்மைதீன் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

சலீம் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

முன்பே குறிப்பிட்டபடி, இவர்களின் பெயர்கள் கூட வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் உள்ளன. ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படும் விவரங்கள் தமிழ் நாளிதழ்களில் கொடுக்கப்படுவதில்லை. அல்லது குறைத்துப் போடுகிறார்கள்.

Bangalore blast - suspect arrested

© வேதபிரகாஷ்

24-04-2013


[4] Further, Tamil Nadu has also banned the All India Jihad Committee and Students Islamic Movement of India (SIMI). But SIMI, is regrouping under the banner of Wahadat-e-Islami Hind, Jayalalitha said.

[6] வேதபிரகாஷ், குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும், 1-6, மே.2010,

https://lawisanass.wordpress.com/2010/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-2/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-3/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-4/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-5/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-6/

[9] Kic­han Buhari, a prominent member of the All India Jehad Committee (AIJC) and a close associate of its founder – Ahmad Ali alias Palani Baba, People’s Democratic Party Chairman, Abdul Nasser Madani, and Kun­nangudi Hanifa of Tamil Muslim Munnetra Kazhagam (TMMK)

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

மார்ச் 17, 2012

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?


லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்

Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.

Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani) 

3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th 

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

  • ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
  • அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
  • அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
  • முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
  • கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
  • ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
  • இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?

திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –

  1. நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
  2. முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
  3. தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
  4. உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
  5. அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.

இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!

வேதபிரகாஷ்

16-03-2012


 


[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.

குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!

ஜூலை 15, 2010

குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!

கடந்த ஆண்டுகளில் தெரிந்தோ, தெரியாமலோ நீதிபதிகள் பிச்சினைகள் பலவாக இருந்தாலும், தனிநபர் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக, ஒன்று சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது இல்லை, அந்த தனிநபரின் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது என்றநிலயில் செய்பட்டுவருகிறார்கள். இது எல்லாநிலைகளிலும் சரிவருமா என்று தெரியவில்லை. இந்நிலையில், நித்யானந்தாவே அத்தகைய நிலையை சாதகமாக குறிப்பிட்டு, தனக்கு சட்டத்தீர்வு தீரவேண்டும் என்று கோரியிருப்பது, ப்றுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகிறது.

சென்னை : நடிகைகள் குஷ்பு, சுகாசினி தொடர்பான வழக்குகளை சுட்டிக்காட்டி, சென் னை ஐகோர்ட்டில் சுவாமி நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்: “கடந்த மார்ச் 2ம் தேதி தனியார், “டிவி’ ஒன்றில் என்னையும் என் பக்தையையும் (நடிகை ரஞ்சிதா) இணைத்து, வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதைத் தொ டர்ந்து மலிவான விளம்பர நோக்கில் பல்வேறு தரப்பினரும், என் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர். “ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தக் கூடாது’ என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை குஷ்பு மீது ஒரே பிரச்னைக்காக பல்வேறு வழக்குகள் தொடர்ந்த போது, இது சுட்டிக்காட்டப்பட்டது. நடிகை சுகாசினி மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது, சுப்ரீம் கோர்ட் உத்தரவைக் காட்டி, சென்னை ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்தது. அதேபோல், என் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது: கடந்த மார்ச் மாதம் கார்த்திகேயன் என்பவர், என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் மீது சி.பி.ஐ., உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மனு, நடைமுறைக்கு சரியானது அல்ல. குஷ்பு, சுகாசினி வழக்கில் கூறியது போல், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. எந்த முடிவை எடுத்தாலும், என்னையும் சேர்த்துக் கொண்டு, என் கருத்தை கேட்க வேண்டும்”, இவ்வாறு நித்யானந்தா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்: இம்மனு மீதான விசாரணை, ஐகோர்ட் நீதிபதி வாசுகி முன்னிலையில் வந்தது. நித்யானந்தாவின் மனுவை அவர் ஏற்றுக் கொண்டு, “இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்‘ என, உத்தரவிட்டார். நித்யானந்தா தொடர்பான அனைத்து வழக்குகளும் கர்நாடக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு தவிர, புதுச்சேரி உருளையன்பேட்டையில் ஒரு வழக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை!

மே 7, 2010

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை: கசாப்புக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு தயாராக இருந்தாலும் கூட அவரை தூக்கிலிடுவதற்கு ஆள்தான் இல்லையாம். மிகுந்த அனுபவம் உடையவர்களைத்தான் தூக்குத் தண்டனைக் கைதிகளை தூக்கிலிடுவதற்கு அழைப்பார்கள். ஆனால் நமதுநாட்டில் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு கயிறு மாட்டி விடுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்துதான் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் சிறைத் துறையினர். இப்போது கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக தோன்றவில்லை. காரணம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறையிலும் தூக்கு கயிறை மாட்டும் நபர் யாரும் இல்லையாம். மும்பையிலும் கூட யாரும் இல்லையாம்.

தூக்குப் போட யார் வேண்டுமானாலும் வரலாம்: இங்கு மட்டுமில்லை, டெல்லி திகார் சிறையிலும் கூட தூக்கு மாட்ட ஆள் கிடையாது. கடைசியாக திகாரில் 1989ம் ஆண்டுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இங்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களை வரவழைத்துதான் நிறைவேற்றினார்களாம். ஒருவேளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆளே கிடைக்காவிட்டால், காவல்துறையைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், இதைச் செய்ய முன் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என விதிமுறையில் உள்ளதாம்.

“கசாபை தூக்கிலிட தயார்!” – இதோ வந்தாகிவிட்டது, ஒரு பரம்பரை தூக்குப் போடும் ஆசாமி! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர்களில் ஒருவரை தூக்கிலிட்ட கல்லு சிங்கின் மகன் மம்மு ஜலாத் (65), மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட விருப்பம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் இரண்டே நபர்கள் உள்ளனர். இவர்களில் பிரபலமாக மம்மு ஜலாத் என்று அழைக்கப்படும் மம்மு சிங் ஒருவர். அஜ்மல் கசாபுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை யார் தூக்கிலிடுவது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.இந்நிலையில் பயங்கரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை உடனடியாக நிறைவேற்ற தான் தயாராகவுள்ளதாக மம்மு ஜலாத் தெரிவித்துள்ளார். கசாபை தூக்கிலிடுவதை தான் பெருமையாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.கசாபை தூக்கிலிட தனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் தனது மகனான பவன்கூட இந்த பணியை செய்ய தயாராகவுள்ளான் என்றும் அவர் கூறியுள்ளார். மம்மு ஜலாத்தின் தாத்தா, இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் தூக்குத் தண்டனை கைதிகளை தூக்கிலிடும் பணியை செய்தார். இதையடுத்து மம்மு ஜலாத்தின் தந்தை கல்லு சிங்கும் இப்பணியை செய்தார். இப்போது தூக்கிலிடும் பணியை செய்து வரும் மம்மு ஜலாத், தனது மகன் பவனுக்கும் இப்பயிற்சியை அளித்து வருகிறார்.

குஷ்புவும், கசாப்பும்: இந்தியர்களின் நோக்கு!

மே 7, 2010

குஷ்புவும், கசாப்பும்: இந்தியர்களின் நோக்கு!

குஷ்புவின் கற்புப் பற்றிய வழக்குகளைத் தள்ளூபடி செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட குஷ்புவிற்கு சாதகமாக உச்சநீதி மன்றம் தீர்ப்ப்பு வழங்கியது.

ஓரளவிற்கு இந்தியர்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவித்து, தீர்ப்பு சரியில்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது, மக்கள் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்ப்பு தவறு என்றுதான் பொதுவாகச் சொல்கின்றனர்.

என்னசெய்வது தனக்கு என்று வரும்போதுதான், பிரச்சினையைப் பற்றி கவலைப் படுகின்றனர். ஆமாம், உச்சநீதி மன்ற நீதிபதியும் ஒரு மனிதர் தானே? இல்லை மகள், சகோதரி………..மற்ற பெண்குலத்துடன் பிறந்துள்ளவர் தானே? நாளைக்கு அவர்கள் எல்லோரும் அத்தகைய உரிமையோடு கிளம்பி விட்டால் என்னாவது?

சில தினங்களில், கசாப் என்ற குரூரக்கொலைக்காரன் 166 அப்பாவி மக்களைக் கொன்றதற்கானக் குற்றத்திற்காக மரணதண்டனை அளித்துத் தீர்ப்பு அளிக்கப் படுகிறது.

ஆனால், பொதுவாக இந்திய மக்கள் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை!

இன்னும் சொல்லப்போனால், ஊடகங்களைத் தவிர மற்றவர்கள் அமைதியாக இருந்ததுபோலத் தோன்றியது. அவரவர் தங்களது வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்; டிவி பார்க்கிறார்கள்; கிரிக்கெட் பார்க்கிறார்கள்;………………..அவ்வளவே தான்!

ஆனால், ஊடகங்கள் ஊளையிட ஆரம்பித்துவிட்டன:

கசாப்புக்கு தூக்குத் தண்டனை- நிறைவேற்றத்தான் ஆள் இல்லை!
வெள்ளிக்கிழமை, மே 7, 2010, 10:59[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/07/kasab-death-sentence-hangaman.html

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை: கசாப்புக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு தயாராக இருந்தாலும் கூட அவரை தூக்கிலிடுவதற்கு ஆள்தான் இல்லையாம். மிகுந்த அனுபவம் உடையவர்களைத்தான் தூக்குத் தண்டனைக் கைதிகளை தூக்கிலிடுவதற்கு அழைப்பார்கள். ஆனால் நமதுநாட்டில் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு கயிறு மாட்டி விடுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்துதான் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் சிறைத் துறையினர். இப்போது கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக தோன்றவில்லை. காரணம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறையிலும் தூக்கு கயிறை மாட்டும் நபர் யாரும் இல்லையாம். மும்பையிலும் கூட யாரும் இல்லையாம்.

தூக்குப் போட யார் வேண்டுமானாலும் வரலாம்: இங்கு மட்டுமில்லை, டெல்லி திகார் சிறையிலும் கூட தூக்கு மாட்ட ஆள் கிடையாது. கடைசியாக திகாரில் 1989ம் ஆண்டுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இங்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களை வரவழைத்துதான் நிறைவேற்றினார்களாம். ஒருவேளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆளே கிடைக்காவிட்டால், காவல்துறையைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், இதைச் செய்ய முன் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என விதிமுறையில் உள்ளதாம்.

தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-வைஷாலி: இந்நிலையில் அஜ்மல் கசாபுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் தாமதிக்காமல் உடனே நிறைவேற்ற வேண்டும் என அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட போலீஸ் எஸ்ஐ துக்காராம் ஓம்பலேயின் மகள் வைஷாலி ஓம்பலே கூறியுள்ளார். தெற்கு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று அஜ்மல் கசாபை பிடிக்க முயன்ற போது, கசாப் துப்பாக்கியால் சுட்டதில் துக்காராம் உயிரிழந்தார். ஆனாலும் அவரால் தான் அஜ்மல் கசாப் பிடிபட்டான்.

இந் நிலையில் ஓம்பலேவின் மகள் வைஷாலி கூறுகையில், கசாபுக்கு தூக்கு என்ற தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பின் மூலம் என் தந்தையின் தியாகத்திற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பலர் இன்னமும் பாகிஸ்தானில் உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு வேகமாக செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாது. உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும். 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் அல்லாமல் கசாபுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றார் வைஷாலி.

தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-பாஜக: இந் நிலையில் பாஜக தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகளால் மட்டும் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. இந்தியாவிலிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவாளர்கள் துணையுடன்தான் இதை பயங்கரவாதிகள் செய்திருப்பார்கள். எனவே, இந்த தாக்குதலுக்கு காரணமான அனைத்துக் குற்றவாளிகளையும், இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு முடிவு கட்ட முடியும். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நடந்துள்ள முழு சதியையும் முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அப்சல் குரு தூக்கு தண்டனை பெற்றும், இன்னும் அத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் கசாபும் நடத்தப்பட்டால், சட்டம், நீதித்துறை, அரசு ஆகியவை கேலிக்குரியதாகிவிடும். எனவே, மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். இதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிம்மதியைத் தரும். அதேநேரத்தில் இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழும் நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான எம்.பிக்களை கொல்ல முயன்ற அப்சல் குருவின் தூக்கு தண்டனையையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மரண தண்டனை-காத்திருப்போர் பட்டியலில் 30வது இடத்தில் கசாப்
வியாழக்கிழமை, மே 6, 2010, 15:16[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/06/kasab-afsal-guru-mumbai-attack-parliament.html

சாவிலும் சீனியாரிடி பார்க்கும் நீதிமான்கள்: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கசாப்புக்கு முன்னதாக 29 பேர் மரண தண்டனை விதித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பிற நாடுகளை எடுத்துக் கொண்டால், மரண தண்டனை விதிக்கப்பட்டால் உடனே அதை நிறைவேற்றி விடுவார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. மிக மிக அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன் பிறகும் கூட குடியரசுத் தலைவரிடம் கருணை காட்டுமாறு கோரி விண்ணப்பிக்கலாம். அந்த மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுத்து அறிவித்த பிறகுதான் இந்த தண்டனையில் ஒரு முடிவுக்கு வர முடியும்.

பிரதிமா பாட்டில் ஒரு பொம்மை, அதெப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறது? தற்போது குடியரசுத் தலைவர் முன்பு 29 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவராக பார்த்து எப்போது முடிவெடுக்கிறாரோ அப்போதுதான் அதற்கு விடிவு காலம் பிறக்கும். கடந்த 2001ம் ஆண்டு 33 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2006ல் 40 பேருக்கும், 2007ம் ஆண்டு 100 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் அப்சல் குரு, சுஷில் சர்மா, அனந்த் மோகன், சந்தோஷ் குமார் சிங் ஆகியோர். 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சிக்கி அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவி பிரியதர்ஷினி மட்டூவை கற்பழித்துக் கொன்றதற்காக சந்தோஷ்குமார் சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல பீகாரில் முன்னாள் எம்.பி. அனந்த் மோகன் ஐஏஎஸ் அதிகாரியைக் கொலை செய்த வழக்கிலும், நைனா சஹானியைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மாவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொலை செய்யலாம், ஆனால், கொலைகாரர்களுக்கு மட்டும் தண்டனை தாமதப் படுத்தப் படும்! கடந்த 2001ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரே ஒருவர்தான் தூக்கில் போடப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கிய தனஞ்செய் சாட்டர்ஜி என்பவர் 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி தூக்கில் போடப்பட்டார். அப்சல் குருவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி பாஜக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்குவோரின் பட்டியலில் கசாப் சேர்ந்துள்ளான்.