Posts Tagged ‘அப்சல் குரு’

குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்!

மே 22, 2010

குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும்!

 

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.

சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.

அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;

அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,

குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்-பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

“நாத்திகம்” என்ற போர்வையில் “ஆண்டவனே இல்லை”யென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்து “காஃபிர்”களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதி-எஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள், சமீபத்தில் நீதிமன்றங்களில் வழங்கப் பட்டுள்ள மற்றும் வழங்கப்படும் தீர்ப்புகள் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளன, ஏனெனில், குண்டு வெடிப்புகள், பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வழக்கின் முக்கியத்துவம், அதன் சட்ட நுணுக்கங்கள், சட்டரீதியாக செல்லுமா இல்லையா என்ற விவரங்களை நீர்த்துவிட்டு, ஏதோ ஒன்றை ஏடுத்துக் கொண்டு, சாட்சிகள் சரியில்லை, ஆதாரங்கள் சரியாக நிரூபிக்கப் படவில்லை,….என்றெல்லாம் தீர்ப்புகள் கொடுக்கப் படுகின்றன. கோர்ட் நடவடிக்கைகள், காலந்தாழ்த்தும் போக்கு, சாட்சிகளை மிரட்டும் போக்கு, மாற்றும் நிலை,…………………………………….., அரசியல் சார்பான நீதிபதிகள் வரும்வரை இழுத்தடிப்பது………………..முதலியன அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணத்திற்கு பல வழக்குகளைச் சொல்லலாம், இருப்பினும் சில குறிப்பிடப்படுகின்றன.

வில் ஹியூம், சென்னை நீதிமன்றக்கள், நீதிபதிகள்: வில் ஹியூம் ஒரு அனைத்துலக குற்றவாளி, ஆனால், சென்ன்னையில் ஜாலியாக பல அரசியல், திரைப்பட ஆதிக்கக்காரர்கள், போலீஸார் முதலியோர் ஆதரவுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து, இரு தடவை கைது செய்யப்பட்டாலும், விடுவிக்கப் பட்டுள்ளான். சைதாப்பேட்டை மேஜிஸ்ட்ரேட் அப்படித்தான் விடுவித்து, பிறகு, சென்னை உயர்நீதி மன்றம், அவர் தவறுதலாக விடிவித்துவிட்டார் என்று தீர்ப்பளித்தது.

ஆர்ச்பிஷப், போலி ஆரய்ச்சி, முந்தைய வழக்கு, மறுபடியும் அதே குற்றங்களைச் செய்வது: ஆர்ச் பிஷப் அருளப்பா ஆச்சார்ய பால் என்ற கிருத்துவருக்கு பல கோடிகள் கொடுத்து பல போலியான ஆவணங்களைத் தயாரித்து, திருவள்ளுவர் தாமஸை சந்தித்தார், அந்த இல்லாத ஆளிடம் கற்றுதான் திருக்குறள் எழுதினார், மீனாட்சி கோவிலே ஒரு சர்ச்…………….என பல பேத்த்கல்களான மோசடி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கிருத்துவர்களுக்கே பொறுக்காமல், அழுத்தம்-தர, பணம் கொடுத்த அருளாப்பாவே, வழக்குப் போட்டு, பிறகு ஆச்சார்யா பால் “எல்லாவற்றையும் உலகத்திற்கு சொல்லிவிடுவேன்” என்று மிரட்டியதும், பயந்து கொண்டு 1987களில் சமாதானமாகி, “கோர்ட்டிற்கு வெளியே” என்ற முறையில் எல்லா விஷயங்களையும் அமுக்கி விட்டனர். ஆனால், இப்பொழுது, மறுபடியும், அதே பிஷப், அதாவது அந்த ஸ்தானத்திலுள்ள சின்னப்பா, அதே மாதிரி அந்த மோசடி ஆரய்ய்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து வேலைகளை ஆரம்பித்துள்ளார். அதாவது செய்த குற்றங்களையே மறுபடியும் செய்தால், நடவடிக்கை எடுப்பதில்லை போலும் தமிழ்நாட்டில்!

சீமான் மீதான வழக்குகள்: எல்.டி.டி.ஈ தடை செய்யப் பட்டுள்ள இயக்கம். இப்பொழுதுகூட அதன் மீதான தடை நீட்டிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த சீமான் தொடர்ந்து அத்தகைய சட்டமீறல் காரியங்களைச் செய்து வந்தாலும், கைது செய்யப் பட்டாலும், வெளிவந்து கொண்டேயிருப்பதும், அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்வதும், காங்கிரஸ்காரர்கள் “புகார் கொடுப்பதும்”. கருணாநிதி அமைதியாக இருப்பதும், வெட்கம், மானம், சூடு, சொரணை…………………… இல்லாமல் கூட்டணிக் கொள்ளை தொடர்வதும் சகஜமாகத்தான் உள்ளது.

கருணாநிதியின் மீதுள்ள வழக்குகள்: சென்ற தேர்தல்லின்போது, தன்னுடைய சுய-ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில் கருணாநிதி தன்மீது 9 கிரிமினல் குற்றா வழக்குகள் பதிவு செய்யப் பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக, கையெழுத்திட்டு தேர்தலில் நின்று முதல்வராகி, அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்திருந்தாலும், நீதிமன்றங்கள், நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள்………………….நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். யாரும் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. “வழக்கு போட்டால் சந்திக்கத் தயார்”, இன்று அப்பொழுதுகூட ஜெயலலிதாவிற்கு சவால் விட்டபோது, பாவம், அப்பொழுது கூட யார்க்கும் நினைவிற்கு வரவில்லை போலும்!

இனி இந்த குணங்குடி மஸ்தான், மன்னிக்கவும், குணங்குடி ஹனீபா வழக்கைப் பார்ப்போம்!

Last Updated :

ரயில்குண்டுவெடிப்புவழக்கில்குணங்குடிஹனீபாஉள்பட 8 பேர்விடுதலை[1]:

சென்னை, ​​ மே 21, 2010:​ ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.​ ​ இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதாகக் கூறி இவர்கள் விடுவிக்கப்படுவதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மூன்று ரயில்களில் குண்டுகள் வெடித்து பத்துக்கும்மேற்பட்டோர்உயிரிழந்தனர்.​ 72 பேர்காயமடைந்தனர்: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1997 டிசம்பர் 6-ல் ​ திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்,​​ ஈரோடு அருகே சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்,​​ கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ரயில் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.​ 72 பேர் காயமடைந்தனர்.​ இந்த சம்பவம் தொடர்பாக ஜிகாத் கமிட்டி தலைவர் குணங்குடி ஹனீபா,​​ ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஏர்வாடி காசிம்,​​ அலி அப்துல்லா,​​ அப்துல் ரஹீம்,​​ முபாரக் அலி,​​ முகமது அலிகான்,​​ சம்ஜித் அகமது,​​ ரியாதுர் ரஹ்மான்,​​ குணங்குடி ஆர்.எம்.ஹனீபா,​​ முகமது தஸ்தகீர் ஆகியோர் அடுத்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டனர்.​ இதில்,​​ முகமது தஸ்தகீர் 12-3-2000-ல் இறந்தார்.​ ​மற்றொரு முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அஷ்ரப் அலி தலைமறைவாக உள்ளார்.​ அவர் மீது திருச்சி நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது.​ கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேர் சிறையிலேயே 13 ஆண்டுகளாக இருந்து வந்தனர்.

420ல் 269 சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை, 151ல் 10 பேர்பிறழ்சாட்சியம், தீர்ப்புத் தள்ளிவைப்பு, 139 ஆதாரங்கள் போதுமானதாக இல்லை: இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.​ அரசு தரப்பில் வழக்கறிஞர் துரைராஜும்,​​ குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் புகழேந்தி,​​ சிவபெருமாள் ஆகியோரும் ஆஜராயினர். 10 பேர் பிறழ் சாட்சியம்:​ கூட்டுச் சதி,​​ கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 420 சாட்சிகள் குறிப்பிடப்பட்டன.​ இதில் 151 சாட்சிகளை விசாரித்தாலே போதுமானது என அரசு தரப்பு பின்னர் முடிவெடுத்தது.​ இதில் முக்கிய சாட்சிகள் 10 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.​ பின்பு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறியதன் அடிப்படையில்,​​ குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி​ ஆர்.பிரேம்குமார் வெள்ளிக்கிழமை வழங்கிய​ தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து, ​​ குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 6 பேர் சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனர்.​ ஏர்வாடி காசிம்,​​ அலி அப்துல்லா ஆகியோர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.

1997லிருந்து 2010 வரை தூங்கும் நீதிமன்றங்கள்: 1997ல் குண்டுவெடிப்பு, கொலை, சாவு, ரத்தம்…………………….2001ல் குற்றாப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப் பட்டது, 2004ல்தான் கோர்ட் – விசாரணையே ஆரம்பித்தது. இப்பொழுது விடிவிக்கப் படுகிறார்கள் என்றால், செத்தவர்கள் நிலை என்ன? அநியாயமாக செத்தவர்களின் உரிமைகள் என்ன?

வேதபிரகாஷ்

24-05-2010


[1] தினமணி, ரயில்குண்டுவெடிப்புவழக்கில்குணங்குடிஹனீபாஉள்பட 8 பேர்விடுதலை, First Published : 22 May 2010 12:00:00 AM IST

http://dinamani.com/edition/story.aspx?

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை!

மே 7, 2010

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை: கசாப்புக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு தயாராக இருந்தாலும் கூட அவரை தூக்கிலிடுவதற்கு ஆள்தான் இல்லையாம். மிகுந்த அனுபவம் உடையவர்களைத்தான் தூக்குத் தண்டனைக் கைதிகளை தூக்கிலிடுவதற்கு அழைப்பார்கள். ஆனால் நமதுநாட்டில் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு கயிறு மாட்டி விடுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்துதான் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் சிறைத் துறையினர். இப்போது கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக தோன்றவில்லை. காரணம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறையிலும் தூக்கு கயிறை மாட்டும் நபர் யாரும் இல்லையாம். மும்பையிலும் கூட யாரும் இல்லையாம்.

தூக்குப் போட யார் வேண்டுமானாலும் வரலாம்: இங்கு மட்டுமில்லை, டெல்லி திகார் சிறையிலும் கூட தூக்கு மாட்ட ஆள் கிடையாது. கடைசியாக திகாரில் 1989ம் ஆண்டுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இங்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களை வரவழைத்துதான் நிறைவேற்றினார்களாம். ஒருவேளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆளே கிடைக்காவிட்டால், காவல்துறையைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், இதைச் செய்ய முன் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என விதிமுறையில் உள்ளதாம்.

“கசாபை தூக்கிலிட தயார்!” – இதோ வந்தாகிவிட்டது, ஒரு பரம்பரை தூக்குப் போடும் ஆசாமி! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர்களில் ஒருவரை தூக்கிலிட்ட கல்லு சிங்கின் மகன் மம்மு ஜலாத் (65), மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட விருப்பம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் இரண்டே நபர்கள் உள்ளனர். இவர்களில் பிரபலமாக மம்மு ஜலாத் என்று அழைக்கப்படும் மம்மு சிங் ஒருவர். அஜ்மல் கசாபுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை யார் தூக்கிலிடுவது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.இந்நிலையில் பயங்கரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை உடனடியாக நிறைவேற்ற தான் தயாராகவுள்ளதாக மம்மு ஜலாத் தெரிவித்துள்ளார். கசாபை தூக்கிலிடுவதை தான் பெருமையாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.கசாபை தூக்கிலிட தனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் தனது மகனான பவன்கூட இந்த பணியை செய்ய தயாராகவுள்ளான் என்றும் அவர் கூறியுள்ளார். மம்மு ஜலாத்தின் தாத்தா, இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் தூக்குத் தண்டனை கைதிகளை தூக்கிலிடும் பணியை செய்தார். இதையடுத்து மம்மு ஜலாத்தின் தந்தை கல்லு சிங்கும் இப்பணியை செய்தார். இப்போது தூக்கிலிடும் பணியை செய்து வரும் மம்மு ஜலாத், தனது மகன் பவனுக்கும் இப்பயிற்சியை அளித்து வருகிறார்.

குஷ்புவும், கசாப்பும்: இந்தியர்களின் நோக்கு!

மே 7, 2010

குஷ்புவும், கசாப்பும்: இந்தியர்களின் நோக்கு!

குஷ்புவின் கற்புப் பற்றிய வழக்குகளைத் தள்ளூபடி செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட குஷ்புவிற்கு சாதகமாக உச்சநீதி மன்றம் தீர்ப்ப்பு வழங்கியது.

ஓரளவிற்கு இந்தியர்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவித்து, தீர்ப்பு சரியில்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது, மக்கள் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்ப்பு தவறு என்றுதான் பொதுவாகச் சொல்கின்றனர்.

என்னசெய்வது தனக்கு என்று வரும்போதுதான், பிரச்சினையைப் பற்றி கவலைப் படுகின்றனர். ஆமாம், உச்சநீதி மன்ற நீதிபதியும் ஒரு மனிதர் தானே? இல்லை மகள், சகோதரி………..மற்ற பெண்குலத்துடன் பிறந்துள்ளவர் தானே? நாளைக்கு அவர்கள் எல்லோரும் அத்தகைய உரிமையோடு கிளம்பி விட்டால் என்னாவது?

சில தினங்களில், கசாப் என்ற குரூரக்கொலைக்காரன் 166 அப்பாவி மக்களைக் கொன்றதற்கானக் குற்றத்திற்காக மரணதண்டனை அளித்துத் தீர்ப்பு அளிக்கப் படுகிறது.

ஆனால், பொதுவாக இந்திய மக்கள் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை!

இன்னும் சொல்லப்போனால், ஊடகங்களைத் தவிர மற்றவர்கள் அமைதியாக இருந்ததுபோலத் தோன்றியது. அவரவர் தங்களது வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்; டிவி பார்க்கிறார்கள்; கிரிக்கெட் பார்க்கிறார்கள்;………………..அவ்வளவே தான்!

ஆனால், ஊடகங்கள் ஊளையிட ஆரம்பித்துவிட்டன:

கசாப்புக்கு தூக்குத் தண்டனை- நிறைவேற்றத்தான் ஆள் இல்லை!
வெள்ளிக்கிழமை, மே 7, 2010, 10:59[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/07/kasab-death-sentence-hangaman.html

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை: கசாப்புக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு தயாராக இருந்தாலும் கூட அவரை தூக்கிலிடுவதற்கு ஆள்தான் இல்லையாம். மிகுந்த அனுபவம் உடையவர்களைத்தான் தூக்குத் தண்டனைக் கைதிகளை தூக்கிலிடுவதற்கு அழைப்பார்கள். ஆனால் நமதுநாட்டில் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு கயிறு மாட்டி விடுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்துதான் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் சிறைத் துறையினர். இப்போது கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக தோன்றவில்லை. காரணம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறையிலும் தூக்கு கயிறை மாட்டும் நபர் யாரும் இல்லையாம். மும்பையிலும் கூட யாரும் இல்லையாம்.

தூக்குப் போட யார் வேண்டுமானாலும் வரலாம்: இங்கு மட்டுமில்லை, டெல்லி திகார் சிறையிலும் கூட தூக்கு மாட்ட ஆள் கிடையாது. கடைசியாக திகாரில் 1989ம் ஆண்டுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இங்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களை வரவழைத்துதான் நிறைவேற்றினார்களாம். ஒருவேளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆளே கிடைக்காவிட்டால், காவல்துறையைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், இதைச் செய்ய முன் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என விதிமுறையில் உள்ளதாம்.

தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-வைஷாலி: இந்நிலையில் அஜ்மல் கசாபுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் தாமதிக்காமல் உடனே நிறைவேற்ற வேண்டும் என அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட போலீஸ் எஸ்ஐ துக்காராம் ஓம்பலேயின் மகள் வைஷாலி ஓம்பலே கூறியுள்ளார். தெற்கு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று அஜ்மல் கசாபை பிடிக்க முயன்ற போது, கசாப் துப்பாக்கியால் சுட்டதில் துக்காராம் உயிரிழந்தார். ஆனாலும் அவரால் தான் அஜ்மல் கசாப் பிடிபட்டான்.

இந் நிலையில் ஓம்பலேவின் மகள் வைஷாலி கூறுகையில், கசாபுக்கு தூக்கு என்ற தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பின் மூலம் என் தந்தையின் தியாகத்திற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பலர் இன்னமும் பாகிஸ்தானில் உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு வேகமாக செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாது. உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும். 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் அல்லாமல் கசாபுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றார் வைஷாலி.

தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-பாஜக: இந் நிலையில் பாஜக தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகளால் மட்டும் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. இந்தியாவிலிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவாளர்கள் துணையுடன்தான் இதை பயங்கரவாதிகள் செய்திருப்பார்கள். எனவே, இந்த தாக்குதலுக்கு காரணமான அனைத்துக் குற்றவாளிகளையும், இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு முடிவு கட்ட முடியும். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நடந்துள்ள முழு சதியையும் முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அப்சல் குரு தூக்கு தண்டனை பெற்றும், இன்னும் அத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் கசாபும் நடத்தப்பட்டால், சட்டம், நீதித்துறை, அரசு ஆகியவை கேலிக்குரியதாகிவிடும். எனவே, மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். இதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிம்மதியைத் தரும். அதேநேரத்தில் இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழும் நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான எம்.பிக்களை கொல்ல முயன்ற அப்சல் குருவின் தூக்கு தண்டனையையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மரண தண்டனை-காத்திருப்போர் பட்டியலில் 30வது இடத்தில் கசாப்
வியாழக்கிழமை, மே 6, 2010, 15:16[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/06/kasab-afsal-guru-mumbai-attack-parliament.html

சாவிலும் சீனியாரிடி பார்க்கும் நீதிமான்கள்: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கசாப்புக்கு முன்னதாக 29 பேர் மரண தண்டனை விதித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பிற நாடுகளை எடுத்துக் கொண்டால், மரண தண்டனை விதிக்கப்பட்டால் உடனே அதை நிறைவேற்றி விடுவார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. மிக மிக அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன் பிறகும் கூட குடியரசுத் தலைவரிடம் கருணை காட்டுமாறு கோரி விண்ணப்பிக்கலாம். அந்த மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுத்து அறிவித்த பிறகுதான் இந்த தண்டனையில் ஒரு முடிவுக்கு வர முடியும்.

பிரதிமா பாட்டில் ஒரு பொம்மை, அதெப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறது? தற்போது குடியரசுத் தலைவர் முன்பு 29 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவராக பார்த்து எப்போது முடிவெடுக்கிறாரோ அப்போதுதான் அதற்கு விடிவு காலம் பிறக்கும். கடந்த 2001ம் ஆண்டு 33 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2006ல் 40 பேருக்கும், 2007ம் ஆண்டு 100 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் அப்சல் குரு, சுஷில் சர்மா, அனந்த் மோகன், சந்தோஷ் குமார் சிங் ஆகியோர். 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சிக்கி அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவி பிரியதர்ஷினி மட்டூவை கற்பழித்துக் கொன்றதற்காக சந்தோஷ்குமார் சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல பீகாரில் முன்னாள் எம்.பி. அனந்த் மோகன் ஐஏஎஸ் அதிகாரியைக் கொலை செய்த வழக்கிலும், நைனா சஹானியைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மாவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொலை செய்யலாம், ஆனால், கொலைகாரர்களுக்கு மட்டும் தண்டனை தாமதப் படுத்தப் படும்! கடந்த 2001ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரே ஒருவர்தான் தூக்கில் போடப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கிய தனஞ்செய் சாட்டர்ஜி என்பவர் 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி தூக்கில் போடப்பட்டார். அப்சல் குருவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி பாஜக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்குவோரின் பட்டியலில் கசாப் சேர்ந்துள்ளான்.