அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?
பெங்களூரு வெடிகுண்டு விசாரணையில் சந்தேகிக்கும்படியாக கைது செய்யப் பட்டுள்ளவர்கள் எல்லோரும் முந்தைய “அல்-உம்மா” என்ற தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார் எடுத்துக் காட்டுகின்றனர்[1]. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் ஏன் மற்படியும் பழைய தொடர்புகளை வைத்திருக்கிறர்கள் என்றும் தெரியவில்லை. முன்பு போல திருநெல்வேலி-கோயம்புத்தூர்-பெங்களூரு இணைப்பும் தெரிகிறது[2]. இதனால், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலையெடுக்கின்றவா – வேறு உருவத்தில் செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் தலைதூக்கியுள்ளது[3]. தடை செய்யப்பட்ட சிமி, வஹதத்-இ-இஸ்லாமி ஹிந்த் (Wahadat-e-Islami Hind) என்ற பெயரில் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது[4]. சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது[5]. இது வெறும் சார்புடைய நிகழ்சியா உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்னர் தான் தெரியும்.
“குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்” என்ற தலைப்பில் எப்படி சட்டங்கள் புரட்டப்படுகின்றன என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்[6]. முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.
இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,குண்டுகள் வெடித்தது உண்மை,
மனித உடல்கள், உருப்புகள், உள்–பகுதிகள் சிதறியது உண்மை; ரத்தம் பீச்சியடித்தது உண்மை; பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை, கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும். அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும். “நாத்திகம்” என்ற போர்வையில் “ஆண்டவனே இல்லை”யென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்து “காஃபிர்”களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது. சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதி–எஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும். |
இப்பொழுது, மறுபடியும் அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவது போலிருக்கிறது. முன்பு அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுதில்லை. தமிழக போலீஸ் இணைதளத்திலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன[7]. கீழ்கண்ட வாசகங்கள் தாம் வருகின்றன[8].
404 – File or directory not found.The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable |
அமெரிக்காவில், சந்தேகிக்கப் படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளிப்படையாக பிரசுரிக்கிறார்கள். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆனால், இங்கு அவர்களை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை இல்லை என்று முஸ்லீம்கள் போலீசாரையே குற்றஞ்சாட்டப்படும் போது, பழைய குற்றவாளிகள் என்று அவர்களின் புகைப்படங்கள் இருந்துவிட்டு போகலாமே?
இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்கள்: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பந்தமாக, கீழ்கண்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் செய்திகளில் வெளிவந்தவை, ஆனால், தனித்தனியாக புகைப்படங்கள் இல்லாமல், யார்-யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி உள்ளன. அவற்றிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன:
கிச்சான் புகாரி (38)[9] – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான் – நெல்லை மேலப்பாளையம் – மேலப்பாளையத்தில், மாட்டுச் சந்தை நடத்தி வந்தவன், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவன் எட்டு கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன். புழல் ஜெயிலில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானான். அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் சிறுபான்மையின நல அறக் கட்டளை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தான். இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவி வந்தான்.
சதாம் உசேன்: கிச்சான் புகாரியின் உறவினர் சதாம் உசேன், கடந்த மாதம், போத்தனூர் திருமண மண்டபத்தில் நடந்த, ரகளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய பைக்கை, இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
பீர் முகைதீன் (39) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்,
பஷீர் அகமது (30) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – கட்டட தளவாட பொருட்கள் புரோக்கர், சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்
பீர் முகமது – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – இவர்கள் அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – பெங்களூரில் டீ தூள் விற்பவன்-
முகமது ஷாலி – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான். இவர், “சாரிட்டபிள் டிரஸ்ட் பார் மைனாரிட்டீஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். நாகர்கோவில் பகுதியில் சிலருடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகி எம்.ஆர்.காந்தி, 62, தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.
பஷீர் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் – திருநெல்வேலியில் ஒரு ரியல் எஸ்டேடில் ஆபீஸ் பையனாக வேலை செய்பவன்.
ரசூல்மைதீன் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்
சலீம் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்
முன்பே குறிப்பிட்டபடி, இவர்களின் பெயர்கள் கூட வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் உள்ளன. ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படும் விவரங்கள் தமிழ் நாளிதழ்களில் கொடுக்கப்படுவதில்லை. அல்லது குறைத்துப் போடுகிறார்கள்.
© வேதபிரகாஷ்
24-04-2013
[4] Further, Tamil Nadu has also banned the All India Jihad Committee and Students Islamic Movement of India (SIMI). But SIMI, is regrouping under the banner of Wahadat-e-Islami Hind, Jayalalitha said.
[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/former-alumma-activists-allegedly-involved-in-advani-bomb-case/article2598325.ece
[6] வேதபிரகாஷ், குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும், 1-6, மே.2010,
[9] Kichan Buhari, a prominent member of the All India Jehad Committee (AIJC) and a close associate of its founder – Ahmad Ali alias Palani Baba, People’s Democratic Party Chairman, Abdul Nasser Madani, and Kunnangudi Hanifa of Tamil Muslim Munnetra Kazhagam (TMMK)