மகளிர் விடுதியில் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நான்கு போலீஸார் பணி நீக்கம்– சட்டத்தை மீறுபவர்களுக்கு ஒரு பாடம்!
அரசியல், அதிகாரம்–பணபலம் முதலிய அழுத்தங்களில் வேலை செய்து வரும் போலீஸ்காரர்கள்: வேலியே பயிரை மேய்க்கும் போக்கு சட்டம் அமூல் படுத்துபவர்களிடம் இருந்தால், பாதிப்பு அதிகமாகவே இருக்கும். சமிப காலங்களில் தார்மீக உணர்வுகளுக்கு, எண்ணங்களுக்கு, நம்பிக்கைகளுக்கு, அவற்றைச் சார்ந்த (கடந்த 60 ஆண்டுகளாக) நடவடிக்கைக்களுக்கு எதிராக வெவேறு வகையான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. இதனால், நியாயம் தர்மம், சட்டம், ஒழுங்கு என்று யாராவது பேசினாலே கிண்டலுக்கு, நக்கலுக்கு, ஏளனத்திற்குட்படுகிறார்கள். ஊடகங்கள், சினிமாக்கள், கதைகள், ஜோக்குகள் முதலியவையெல்லாம் அந்த ரீதியிலேயே இருந்து வருகின்றன. போலீஸ் துறை, போலீஸ்காரர்கள் முதலியோரும் அத்தகைய எதிர்மறை விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறார்கள். போதாகுறைக்கு, அரசியல் தலையீடு, அவர்களின் தேர்ந்தெடுப்பு, இடம் மாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் அதிகமாகவே உள்ளன. குற்றவாளிகளின் தொடர்புகள், அரசியல் பிணைப்புகள், அதிகாரம்-பணம் கூட்டு முதலியனவும் அவர்களை திக்குமுக்காட வைக்கின்றன. அந்நிலையில் தான் அவர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்நிலையில், சிலர் வரம்புகளை மீறுகிறார்கள்.
பிப்ரவரி 3, 2013 அன்று மகளிர் விடுதியில் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த போலீஸார்: சென்னை விருகம்பாக்கம் அபிராமி நகரில் முதியோர்களை பராமரிக்கும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உள்ளே பெண்கள் தங்கும் விடுதியும் உள்ளது[1]. அதில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர்[2]. இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி இரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்வா, தலைமை காவலர் ராஜா, காவலர் குமரேசன், காவலர் குமரன் ஆகியோர் குடிபோதையில் பெண்கள் விடுதிக்குள் சென்றனர்[3]. பின்னர் நான்கு பேரும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரிக்க நாங்கள் வந்துள்ளோம் என்று கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்[4]. மேலும், விடுதியில் தங்கியிருந்த இரண்டு இளம்பெண்களை தனியாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, நிர்வாணப்படுத்தி சில்மிஷங்கள் செய்தனர்[5]. பின்னர் கொடூரமாக அவர்களை தாக்கியுள்ளனர்[6]. அந்த விடுதியில் துணை நடிகை ஒருவரும் தங்கி இருந்தார். அவரையும் மிரட்டி சில்மிஷம் செய்துள்ளனர். அப்போது, அந்த துணை நடிகை எனக்கு மாதவிலக்கு என்று கூறி உள்ளார்[7]. அப்போது, குடிபோதையில் இருந்த நான்கு பேரும் அவரை விடாமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்[8]. இதனால் பாதிக்கப்பட்ட துணை நடிகை அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
பிப்ரவரி 3, 2013ல் நடந்தது – பிப்ரவரி 4, 2013 அன்று புகார் கொடுக்கப்பட்டது: சென்னை, விருகம்பாக்கம் கம்பர் தெருவில் துணை நடிகைகளை தினசரி சம்பள அடிப்படையில், சினிமா படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும் ஏஜென்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜோஸ்வா, ஏட்டுகளாக பணியாற்றும் குமரேசன், குமரன் மற்றும் போலீஸ்காரர் ராஜா ஆகியோர் எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த துணை நடிகைகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். மாமூல் கேட்கிறார்கள். ஆசைக்கு இணங்காவிட்டால் விபசார வழக்கில் ஜெயிலில் தள்ளிவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,” இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், விடுதியில் தங்கியிருந்த கீதா, ஜெயலட்சுமி ஆகியோர், அண்ணா நகரில் உள்ள, இந்திரா பெண்கள் முன்மாதிரி கல்வியாளர் சங்கத்தில் முறையிட்டனர். அந்த சங்கம் சார்பில், கலைவாணி என்பவர், போலீஸ் கமிஷனர் மற்றும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முதல்கட்ட நடவடிக்கையில் இருவர் பணிநீக்கம்: இந்த புகார் மனு கமிஷனர் உள்பட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து அப்போது வடபழனியில் உதவி கமிஷனராக இருந்த சுப்புராஜன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையில், நான்கு பேரும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. விசாரணையில் புகார் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையென தெரியவந்தது. முதல்கட்டமாக ஏட்டு குமரேசன், போலீஸ்காரர் ராஜா ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்வா, ஏட்டு குமரன் ஆகியோர் மீது தொடர்ந்து விசாரணை நடந்துவந்தது[9]. தற்போது ஜோஸ்வா குரோம்பேட்டை போக்குவரத்து போலீசில் சப்-இன்ஸ்பெக்டராகவும், ஏட்டு குமரன் எம்.ஜி.நகர் போலீசில் குற்றப்பிரிவு ஏட்டாகவும் பணியாற்றி வந்தனர்[10].
நவம்பர்.2, 2016 புதன்கிழமை பதவி நீக்கம் ஆணை – நிரந்தர பணிநீக்கம்[11]: இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இவர்கள் மீதும் இலாகாப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருவரையும் நிரந்தர பணிநீக்கம் செய்து சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. (பொறுப்பு) டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார்[12]. இந்த சம்பவம் போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், இதனை படிப்பினையாகத்தான் அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். இதே நேரத்தில், மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்ட விசயத்திலும் நான்கு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “லஞ்ச எதிர்ப்பு விழுப்புணர்வு வாரம்” அக்டோபர் 31 முதல் நவம்பர் 5 2016 வரை கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. அந்நிலையில் இவை நடப்பது நல்லதே என்றும் நினைத்துக் கொள்ளலாம். ஊழல் என்பது லஞ்சம் வாங்குவதில் மட்டுமல்ல, எத்தகைய ஒழுக்கக்கேடு, சட்டமீறல், சமுதாய விரோத செயல் முதலியவற்றிலும் உள்ளது. மனத்தூய்மை இல்லையென்றால், அக்குணம் வராது. மனத்தூய்மை வேண்டுமானால், நல்ல சிந்தனைகள், நல்லெண்ணங்கள் முதலியவை உண்டாகும் வகையில் இருக்க வேண்டும். அது சமுதாயத்தில் எல்லோருக்குமே தேவைப்படுகிறது.
© வேதபிரகாஷ்
06-11-2016
[1] தினகரன், விடுதியில் துணை நடிகை மானபங்கம்; போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் டிஸ்மிஸ் : போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு, Date: 2016-11-04@ 00:51:19.
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=256452
[3] தமிழ்.வெப்துனியா, துணை நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : சப்–இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி நீக்கம், Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2016 (13:35 IST).
[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sex-torture-to-co-actress-chennai-police-terminated-116110400012_1.html
[5] தினமலர், பெண்கள் விடுதியில் சித்ரவதை: எஸ்.ஐ., உட்பட 2 பேர் ‘டிஸ்மிஸ்‘, பதிவு செய்த நாள்: நவம்பர் 04, 2016: 01.13.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1641368
[7] தமிழ்.இந்து, போதையில் மகளிர் விடுதியில் நுழைந்து பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட உதவி ஆய்வாளர், காவலர் பணிநீக்கம்: சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவு, Published: November 4, 2016 09:14 ISTUpdated: November 4, 2016 09:15 IST
[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9304143.ece?homepage=true&theme=true
[9] Times of India, Sexual assault in women’s hostel: Two cops sacked, TNN | Updated: Nov 4, 2016, 03.37 AM IST.
[10] http://timesofindia.indiatimes.com/city/chennai/Sexual-assault-in-womens-hostel-Two-cops-sacked/articleshow/55235199.cms
[11] தினத்தந்தி, சென்னையில் துணை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: சப்–இன்ஸ்பெக்டர், ஏட்டு பணிநீக்கம், பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 12:20 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:45 AM IST.
[12] http://www.dailythanthi.com/News/State/2016/11/04002032/SubInspector-head-constable-dismissal.vpf