Archive for the ‘சட்டத்தின் மேன்மை’ Category

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

திசெம்பர் 27, 2021

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

கொரோனா காலமும், காணோலி விசாரணையும், நீதிமன்றங்களும்: காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2021 கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியபோது முதலில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே, ஊரடங்கில் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நீதிமன்றங்கள் தொடங்கி பள்ளிகள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஏராளமாக இருந்தால், விரைந்து முடிக்க காணொளி காட்சி முறை கொண்டு வந்தாக வேண்டிய சூழல் இருந்தது[2].

கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை: கொரோனா தொற்று ஆரம்பித்த சமயத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடியாகவும் விசாரணை நடைபெறுகிறது, அதே நேரத்தில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது. அனைத்து வழக்கு விசாரணையும் இப்படியே நடந்து வருகிறது. சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது.

செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்: இந்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்[3]. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவே வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[4]. நிச்சயமாக, அந்த வீடியோ பார்த்தவர்கள், அந்த வக்கீலின், அட்வகேட்டின், வழக்கறிஞரின் நடவடிக்கை தலைகுனிய வைக்கும். மேலும், அந்த பெண் ஏன் அவ்வாறு அத்தகைய கேவலமான செயலுக்கு உட்படுத்தப் பட்டாள் என்றும் தெரியவில்லை. கருப்பு நிற அங்கி முதலியவற்றைப் பார்க்கும் போது, அப்பெண்ணும் ஒரு வழக்கறிஞரா, ஜூனியரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஒருவேளை, பெண்ணின் அடையாளம் தெரியக் கூடாது என்ற ரீதியில், அவை தெரிவிக்கப் படவில்லை போலும்.

தானாகவே, சொந்தமாகவே, கேட்காமலே (suo moto) வழக்காக எடுத்துக் கொண்டது: இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்[5]. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.டி. சந்தான கிருஷ்ணன் “மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் விர்ச்சுவல் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் போது அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக” அவரை சஸ்பெண்ட் செய்தது[6]. மிகவும் மன வருத்தம் அளிப்பதாக இருக்கிறது[7], இது போன்ற சம்பவங்களைக் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது எனத் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்[8]. சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்[9]. இதனை சூ மோட்டோ வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்[10].

வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது: நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது[11]. முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ், “இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம்” என்றும் “பதவியை ராஜினாமா செய்து விடலாமா?” என்று யோசித்ததாகவும் வேதனை தெரிவித்தார்[12]. நிச்சயமாக, அந்த நீதிபதி அந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பது தெரிகிறது. நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் காக்கக் கூடிய அத்தொழிலை செய்பவர்கள், இவ்வாறு ஈடுபட்டது, மிகக் கேவலமாகும். ஏற்கெனவே வக்கீல்களைப் பற்றி பலவிதமான செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் எப்படி வழக்கறிஞர்கள் ஆனார்கள் என்ற திகைப்பும் ஏற்படுகின்றன. அந்நிலையில், வீடியோவில் சிக்கிக் கொண்ட அந்த “பலான / செக்ஸ் வழக்கறிஞர்” அத்தொழிலுக்கு அவமானம் தான்.

நீதி, நேர்மை, நியாயம் காக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் இத்தகைய குற்றங்கள் ஏன் தொடர்ந்து நடந்து வருகின்றன, நீதி, நேர்மை, நியாயம்….போன்றவை ஏன் மதிக்கப் படுவதில்லை, மாறாக ஏளனப் படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக சினிமா, டிவி சீரியல்களில் இவை கிள்ளுக்கீறையாக மதிக்கப் படுகின்றன. நகைச்சுவை போர்வையில் ஆபாசப் படுத்தப் படுகின்றன. அதுபோலவே, அத்துறையைச் சேர்ந்தவர்களும் இழிவு படுத்தப் படுகின்றனர். சமீபகாலங்களில் நீதிபதிகளின் தீர்ப்புகளும், நீதிபதிகளும் விமர்சிக்கப் படுகின்றனர். நிச்சயமாக, நீதிபதி நியமனங்களில் அரசியல், ஜாதி, மதம் போன்ற காரணிகள் செயல்படுகின்றன. ஏனெனில், அவ்விதமாக நியமனங்கள் நடக்கின்றன. நீதிமன்றங்களிலும் கட்சிக்கு ஒரு சங்கம் செயல்பட்டு வருகின்றது. அதுபோல, ஜாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. பிறகு பாரபட்சம், ஒருதலைப்பட்சம், பாகுபாடு, வித்தியாசம், வேறுபாடு, அரசியல் அழுத்தம் போன்றவையும் இருக்கத்தான் செய்யும். அவற்றையும் மீறி தீர்ப்புகள் கொடுக்கப் படவேண்டும். ஆகவே, நிச்சயமாக அத்தொழிலில் இருப்பவர்கள் சுத்தமாகவும், நேர்மையாகவும், யோக்கியமானவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயம், அவசியம் மற்றும் அத்தியாவசியம் உள்ளது. அப்பொழுது தான், அவர்கள் சட்டமீறல்கள் செய்யாமலும், குற்றங்களில் ஈடுபடாமலும் இருக்க முடியும்.

© வேதபிரகாஷ்

27-12-2021


[1] ஏ.பிபி.லைஃப், நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் சஸ்பெண்ட்சிபிசிஐடி வழக்கு பதிவு!, By: ABP NADU | Updated : 22 Dec 2021 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/chennai/cb-cid-to-probe-lawyer-s-act-on-camera-31615

[3] NEWS18 TAMIL, மிகப்பெரிய அசிங்கம்.. ராஜினாமா செய்ய நினைத்தேன்உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை, First published: December 23, 2021, 22:40 IS; LAST UPDATED : DECEMBER 23, 2021, 22:40 IST.

https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[5] புதியத்தலைமுறை, வழக்கறிஞரின் ஒழுங்கீனத்தால் பதவியை ராஜினாமா செய்ய நினைத்தேன்நீதிபதி வேதனை, kaleelrahman, தமிழ்நாடு, Published :23,Dec 2021 03:38 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/125450/Attorneys-Disorder-Thought-to-resign-Judge-tormented

[7] இடிவி.பாரத், வழக்கறிஞரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினேன்நீதிபதி வேதனை, Published on: Dec 23, 2021, 2:56 PM IST.

[8]  https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/advocate-misbehave-on-video-conference-mhc-judge-has-upset/tamil-nadu20211223145626901

[9] தமிழ்.ஒன்.இந்தியா, கேமரா ஆனில் இருப்பது தெரியாமல்.. பெண்ணிடம் தவறாக நடந்த வக்கீல்.. வாழ்நாள் தடை போட்ட சென்னை ஐகோர்ட், By Vigneshkumar, Updated: Tuesday, December 21, 2021, 20:27 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-ordered-to-ban-a-lawyer-who-misbehaved-with-woman-during-a-video-trial-442879.html

[11] தினத்தந்தி, ஆன்லைன் விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர்..!, பதிவு : டிசம்பர் 23, 2021, 10:06 PM

[12] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/12/23220640/2978084/Lawyer-who-conducted-irregular-in-online-trial.vpf.vpf

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

அகழாய்வு பற்றி நிறைய வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்திய தொல்துறை கட்டிடங்கள், சிற்பங்கள், கோவில்கள் போன்றவை, தூரமான இடங்களில் தனியாக, பாதுகாப்பு இன்றி இருப்பது தெரிந்த விசயமே.
இவர் சென்று பார்க்கும் போது கூட அந்நிலையை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் தான், எப்பொழுதும் குழிகள் அருகிலேயே இருக்கின்றனர்.

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நடக்கின்ற வழக்குகள்தீர்ப்புகள், தொடரும் முறைகள்: தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பற்றி எழுத்தாளர் எஸ்.காமராஜ்[1], மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்[2]. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது[3]. இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு 10-08-2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான திராவிடன் கிளை அலுவலகம் சென்னையில் அமைக்கப்பட்டது: மத்திய அரசுத்தரப்பில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டது[4]. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது[5]. “சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளின், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த கேள்விக்கு, மொத்தமாக –

  • 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும்,
  • அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள்,
  • 25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை
  • 12,000 கல்வெட்டுக்கள் பெர்ஷியன் மற்றும் அராபிக் மொழிக்கானவை,
  • 9,400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை,
  • 7300 கல்வெட்டுக்கள் தெலுங்கு மொழிக்கானவை,
  • 225 கல்வெட்டுக்கள் மலையாள மொழிக்கானவை என பதிலளிக்கப்பட்டது.

இதிலிருந்தே, தமிழில் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்பது பொய்யாகிறது. 27,000 தமிழ் எனும் போது, 57,000 தமிழ் அல்லாதது என்றாகிறது. எனவே, இத்தகைய வாதம், வழக்கு, செய்திகள் எல்லாமே பொய் என்றாகிறது.

அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை?: அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அப்படியாயினும் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்[6]. தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[7]. அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[8]. அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர்[9]. நீதிபதிகள் இவ்வாறு கேட்டனரா அல்லது செய்திகள் அவ்வாறு வந்துள்ளனவா என்று தெரியவில்லை. இருப்பினும், இத்தகைய கேள்விகள் கேட்டுள்ளதும், விசித்திரமாக உள்ளது. ஏனெனில், நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்கும் முன்பே, அவற்றைப் பற்றி நன்றாகப் படித்து கொண்டு வந்து, வாதாடும், வக்கீல்களை குறுக்கு விசாரணை செய்யும் அளவுக்கு இருபார்கள், இருக்கிறாற்கள். மாறாக, இவ்வாறு, கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது, திகைப்பாக இருக்கிறது.

மைசூருவில் வைத்தது ஏன்?: அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது. நாடு முழுவதும் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. அந்த கல்வெட்டுகளை மைசூருவில் ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்கலாமே? 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கு என கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? அதை திராவிட மொழி கல்வெட்டுகள் என கூறுவது ஏன்?,” எனவும் கேள்வி எழுப்பினர்[10]. அதற்கு மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “இது அரசின் கொள்கை முடிவு’’ என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்” என்றனர்[11].

விளக்கம் அளிக்க உத்தரவுவிரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்: மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்[12]. இதுகுறித்து தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்றை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்[13].  “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது,” என்று நீதிபதிகள் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே அரசின் ஆவணங்கள் எல்லாம் வெளிப்படையாக உள்ளன. அவற்றையெல்லாம் கனம் நீதிபதிகள் படித்திருப்பார்கள். அந்நிலையில், இத்தகைய கேள்விகள் எழுப்பப் படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அரசியல் ஆதரவு நியமன நீதிபதிகள் அவ்வாறு சித்தாந்த ரீதியில் சார்புடையவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] WP(MD) 1174/2021; KAMARAJ MUTHALAKURICHI KAMARAJ.S VS THE UNION OF INDIA AND 4 OTHERS; M/S.ALAGUMANI.RRAMESHKUMAR. S 8486484817; M/S. VICTORIA GOWRI.L. ASGIMEMO OF APP FILED FOR R1 andAMP; R2 COUNTER AFFIDAVIT-USR-9534/21 FOR R 1 2 4 and AMP; 5 AGP TAKES NOTICE FOR R3, in the COURT NO. 1 before The Honourable Mr Justice N. KIRUBAKARAN and The Honourable Mr Justice M.DURAISWAMY

[2] தினத்தந்தி, 60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என கூறுவது ஏன்? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி, பதிவு: ஆகஸ்ட் 10,  2021 04:35 AM.

[3] https://www.dailythanthi.com/News/State/2021/08/10043535/Why-is-it-said-that-60000-Tamil-inscriptions-are-Dravidian.vpf

[4] புதியதலைமுறை, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? – நீதிபதிகள், தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 04:04 PM.

[5] https://www.puthiyathalaimurai.com/newsview/112414/What-is-the-need-to-appoint-an-inscription-scholor-for-Sanskrit-language-in-Tamil-Nadu—-Judges

[6] புதியதலைமுறை, அதிக கல்வெட்டுகள் உள்ள தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :10,Aug 2021 05:41 PM

[7] https://www.puthiyathalaimurai.com/newsview/112628/actor-Vijay-Antony-Next-is-Mazhai-Pidikatha-Manidhan-Directed-by-Vijay-Milton.html

[8] புதியதலைமுறை, தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழிக்கானவை என அடையாளப்படுத்துவது ஏன்? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 03:55 PM

[9] https://www.puthiyathalaimurai.com/newsview/112412/Why-identify-60-000-Tamil-inscriptions-as-Dravidian—-Judges

[10] பாலிமர்.செய்தி, தமிழ்க் கல்வெட்டுகளை ஏன் மைசூரில் வைத்திருக்க வேண்டும்? – நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி, August 09, 2021 06:02:59 PM.

[11] https://www.polimernews.com/dnews/152481

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!, By Rayar A Updated: Wednesday, August 11, 2021, 7:30 [IST]

[13] https://tamil.oneindia.com/news/chennai/why-is-the-tamil-language-with-so-many-inscriptions-not-important-tn-hc-to-centre-429576.html

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற வழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப் படும் வழக்குகள்: நீதிபதி எப்படி வழக்குகள் பற்றிய கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க முடியும்? (1)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற வழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப் படும் வழக்குகள்: நீதிபதி எப்படி வழக்குகள் பற்றிய கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க முடியும்? (1)

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நீதிமன்றங்களில் தீர்மானிக்கும் விவகாரங்கள் அல்ல: மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப் படுகின்ற, விசாரணைக்கு ஏற்று நடத்தப் படுகின்ற, அவற்றைப் பற்றி செய்திகளாக வரும் விவரங்கள் முதலியவற்றை வைத்துப் பார்த்து, படித்து, உன்னிப்பாக கவனிக்கும் போது, அகழாய்வு மற்றும் கல்வெட்டுகள் பற்றிய வழக்குகள் எல்லாம், தமிழ்-சமஸ்கிருதம், திராவிடன்-ஆரியன், தெற்கு-வடக்கு, தமிழ்-தமிழ் அல்லாதது என்று பிரிவினைவாதங்கள் அடிப்படையில் உள்ளதை கவனிக்க நேரிடுகிறது. ஏற்கெனவே கீழடி வழக்குகளில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட தன்னுடை வேலை விவகாரம், இடமாற்றம், அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது, தாமதம் செய்தது, போன்ற விவகாரங்களில் அரசியலை நுழைத்து, மற்றவர்கள் விளம்பரம் பெற்றது தெரிகிறது. ஏனெனில், ஒரு மத்திய அரசு அதிகாரி / ஊழியர் என்ற நிலையில், அவர் இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு கட்டுப் பட்டவராக இருந்தார் / இருக்கிறார். இப்பொழுது, அவர் விவகாரம் அமைதியாகி விட்டது. வெங்கடேசன், கம்யூனிஸ்ட் எம்.பி அவரை வைத்து, நன்றாகவே அரசியல் செய்திருப்பது தெரிந்தது. இப்பொழுது, தேவையே இல்லாமல், அடிப்படை விவரங்களைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், கல்வெட்டுகள் பற்றி வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு நடப்பது, வேடிக்கையாக உள்ளது.

ஜூலை 21 மற்றும் 22, 2018 (சனி, ஞாயிறு) திருவண்ணாமலையில் நடந்த கருத்தரங்கு:  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று திருவண்ணாமலையில் கருத்தரங்கு மற்றும் ‘ஆவணம்-29’ இதழ் வெளியிட்டு விழாவை நடத்தின. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது: “தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோருக்கும் நமது மாநிலத்தின் பெருமைகள் தெரியாது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்று கூறும்போது முதலில் யாரும் நம்பவில்லை. ஈரோடு மாவட்டம், கொடுமணல் பகுதியில் கிடைத்த கல்வெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள், எந்த காலத்தை சேர்ந்தது என்று அமெரிக்காவிற்கு ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்டது”. பீடா அனேலிடிகல் சோதனையைக் குறிப்பிடுகின்றார் என்றூ தெரிகிறது, ஆனால், மற்ற மாதிரிகளின் தேதிகள் என்னவாயிற்று என்று கேட்காதது வியப்பாக இருக்கிறது.

நீதிபதி கிருபாகரன்கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன (10-10-2020)[1]: நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் தொடர்ந்து பேசியதாவது: “அந்த ஆய்வில் இந்த எழுத்துகள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் 350 முதல் 375 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்று கண்டறியப்பட்டது[2]. அதன்பிறகு தான் தமிழ் மிகவும் தொன்மையான மொழி, செம்மொழி என்று கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பழமையான விஷயங்கள் புதைந்துகிடக்கின்றன. மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன[3]. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்துள்ளது[4]. மாவட்டத்தில் பழமையான கோவில்கள், கல்வெட்டுகள், சிலைகள் உள்ளன. அதனை பார்த்து அதன் வரலாற்றை தங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிலர் நமது மாநிலத்தை விட்டு,விட்டு வெளிமாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் சென்று பழமையான வரலாற்று சின்னங்களை பார்வையிட்டு வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில் போன்று பல்வேறு வரலாற்று சின்னங்கள் ஏராளமானவை உள்ளன. இவற்றினால் முந்தைய காலத்தில் கட்டிட கலை வியக்கவைக்கும் வகையில் உள்ளது”. இங்கு, இவர், “மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்துள்ளது,” என்று குறிப்பிடுவது, இவர் ஏற்கெனவே அத்தகைய எண்ணத்தை மனத்தில் உருவாக்கி வைத்து விட்டார் என்று தெரிகிறது. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி, இவ்வாறு கருத்தைத் தெரிவிக்கலாமா என்பது கேள்விக்குறியாகிறது.

அரசியல் ரீதியில் நடக்கும் அகழாய்வு பணிகள், ஆராய்ச்சிகள், ஆதாரங்கள் நிலைமாறும் நிலைகள்: இவ்வாறு அரசியல் செய்து வரும் நிலையில், கொரோனா காரணத்தால் ஊரடங்கு அமூலில் இருக்கும் போது, காமராஜ், ஆனந்தராஜ் என்று சிலர், மதுரை நீதிமன்றத்தில், வழக்குகள் தொடுப்பது[5], அவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது, நடத்துவது, அவற்றைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் போடுவது வாடிக்கையாகி விட்டது ஏதோ இவர்கள் சொல்லித் தான், அகழாய்வு மற்றும் வினினிஆன ரீதியில் ஆராய்ச்சி எல்லாம் நடக்கின்றன என்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்கி வருகின்றனர். உண்மையில், அரசியல்வாதிகள் தான் அங்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் சிலர் பொழுது போக்கவும் வந்து செல்கிறார்கள். இதனால், அங்கிருக்கும் அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் என்று எல்லாமே நிலைமாறிப் போகின்றன. வருபவர்கள், தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துச் செல்கின்றனர். அமைச்சர் முதல் எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் வருபவர்களும், ஏதோ நினைவுப் பொருளாக கொடுக்கப் படுகின்றன, அவர்களும் எடுத்துச் செல்கின்றன. பலமுறை மழை பெய்திருக்கிறது. இதனால், அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் எல்லாம் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

அக்டோபர் 10, 2020 – நீதிபதி கிருபாகரன் கீழடிக்கு வந்து பார்த்தார்[6]: அக்டோபர் 2020ல் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி கிருபாகரனே, கீழடிக்கு வந்து பார்த்தார், மற்றும் அங்குள்ள அகழாய்வு பணிகளை பார்வையிட்டார், களபணியாளரளுடன் உரையாடினார் என்று செய்திகள் உள்ளன. சிவகங்கையின் கலெக்டர் ஜே.ஜெயகாந்தன் உடனிருந்து, ஏழாம்கட்ட பணிகள் நடந்து வருவதைப் பற்றி விளக்கினார்[7]. அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் காண்பித்து, அங்கு கண்டுபிடித்த பொருட்கள் குறித்து நீதிபதி கிருபாகரனுக்கு விளக்கம் அளித்தார். இதைதொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய ஊர்களுக்கும் சென்று அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டதுடன், அங்கு கிடைத்த பொருட்களையும் பார்த்து, அதுகுறித்து கேட்டறிந்தார்[8]. ஒவ்வொரு அகழாய்வு எந்த மாதத்தில் தொடங்கி, எந்த மாதத்தில் நிறைவு பெறும், தொடர்ச்சியாக அகழாய்வு நடத்தாதது ஏன், அதற்கான அனுமதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார்[9]. அப்படி என்றால், நிச்சயமாக, நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய விசாரணையை அங்கு செய்துள்ளார் என்றாகியது. தேவை என்றால், அந்த அதிகாரிகளை நேரிடையாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணை செய்திருக்கலாம்.

10-10-2010 – நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார்: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறைகிணறையும், பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணியையும் நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு காட்சிப் படுத்தப் பட்டுள்ள அகழாய்வுப் பொருட்களைக் கண்டு, நீதிபதி மிக்க ஆர்வத்துடன்-ஆசையுடன் பார்த்து மகிழ்ந்தார். மதியம் நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார். அதற்கு அடுத்து சற்று நேரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனும் கீழடி, கொந்தகைக்கு வந்து அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டார். அவருக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவரை கலெக்டர் ஜெயகாந்தன் வரவேற்றார். குறிப்பிட்ட வழக்குகள் அம்பந்தப் பட்ட இடங்களுக்கு நீதிபதிகள் சென்று பார்ப்பது என்பது சாதாரண விசயமாகத் தெரியவில்லை. ஆனானப் பட்ட ராமஜென்பபூமி வழக்குகளில் கூட எந்த நீதிபதியும் சென்று பார்த்தார், விசாரித்தார், அங்கிருப்பவர்களிடம் பேசினார் என்றெல்லாம் செய்திகள் வரவில்லை. ஆனால், தமிழக அகழாய்வு விவகாரங்களில் அத்தகைய செய்திகள் வந்துள்ளன. இவையெல்லாம் ஆச்சரியமாகத் தான் உள்ளன.  மேலும் ஜூலை 21, 2018ல் பேசியுள்ளது கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] தினத்தந்தி, கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றனசென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு, பதிவு: ஜூலை 22,  2018 03:15 AM.

[2] https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/22025753/Keezhadi-excavator-details-are-hiddenMadras-High-Court.vpf

[3] தினகரன், கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்களை மறைக்க முற்படுகிறார்கள்: நீதிபதி கிருபாகரன் பேச்சு, 2018-07-21@ 13:09:57.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421871

[5] Madras High Court – S.Kamaraj @ Muthalankurichi … vs Union Of India on 21 December, 2020;                           BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT- DATED : 21.12.2020; CORAM;  THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN; AND THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI; W.P.(MD)No.21577 of 2019; S.Kamaraj @ Muthalankurichi Kamarj  … Petitioner  Vs. 1.Union of India and others.

The Writ Petition has been filed to direct the respondent No.3  to grant permission to the Respondent No.5 for carrying out further Archaeological Excavations and Scientific Research in Athichanallur, Keeladi, and Kodumanal Archaeological Sites and to direct the  respondent No.3 to grant permission to the Respondent No.5 for carrying out the Archaeological Excavations and Scientific Research in the Archaeological Sites along with the Tamiraparani River, and Sivakalai and Konthagai in accordance with law.

[6] The Hindu, High Court Judges visit Keeladi, STAFF REPORTERMADURAI, OCTOBER 10, 2020

21:19 IST; UPDATED: OCTOBER 11, 2020 04:39 IST.

[7] Madras High Court Judge Justice N. Kirubakaran on Saturday visited the archaeological site in Keeladi, near Madurai.

In his personal visit, the judge interacted with the officials of the Tamil Nadu State Department of Archaeology and Sivaganga Collector J. Jayakanthan on the progress made in the sixth phase of the archaeological excavations.

The judge was enamoured by the findings that were on display at the site. Spending close to an hour at the site, the judge also enquired the officials of the State Archaeological Department on the progress made on the excavations in other sites.

A Division Bench headed by Justice N. Kirubakaran is hearing a batch of public interest litigation petitions with regard to archaeological excavations being carried out across Tamil Nadu. The judge has sought a response on the excavations.

In the afternoon, Justice S. Vaidyanathan of the Madras High Court, in a personal visit, also interacted with the officials at the site.

https://www.thehindu.com/news/cities/Madurai/high-court-judges-visit-keeladi/article32822715.ece

[8] தினத்தந்தி, கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் பார்வையிட்டனர், பதிவு: அக்டோபர் 11,  2020 03:45 AM மாற்றம்: அக்டோபர் 11,  2020 07:47 AM.

[9] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/11074713/Below-is-the-location-of-the-excavation-Judges-of.vpf

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ஒக்ரோபர் 15, 2016

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ramar-herbal-petrol-bjp-support-aug-2016

ஆகஸ்ட் 2016ல் வெளியிட்ட அறிக்கை[1]: தனது மூலிகைப் பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும் என ராமர்பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, சிறிய அளவில் தொழிற்சாலை அமைத்து வெற்றிகரமாக டீசலுக்கு மாற்றாக மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆகஸ்ட் 14ம் தேதி மூலிகை பெட்ரோலை ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருவதாக ராமர்பிள்ளை தெரிவித்தார். தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால் அது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கே என்றும் ராமர் பிள்ளை தெரிவித்தார். தாம் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்சனை ஆக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு தான் அளித்த விலை என்பது தனது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது தான் என்று ராமர்பிள்ளை கூறினார். டிசம்பர் மாதத்திற்குள்ளாக பெட்ரோல் விலை ரூ.10-ஆக குறையும் வகையில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்[2].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-1

தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாக கூறியது (ஆகஸ்ட் 2016):  வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இவ்வாறு கூறியதை பலர் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இருக்கும் நிலையில் மோடி நேரிடையாக பார்வையிட்டு ஆதரவு அளித்தார் என்பது, எவ்வளவு பெரிய பொய் என்பது தெரிகிறது. கூட ராணுவ அமைச்சர் பாரிகரையும் சேர்த்தது, மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டது எல்லாம் கொடுமைதான்! நிச்சயமாக தனது செயல்களில் குற்றம் இருக்கிறது எனும்போது, உண்மையினை ஒப்புக் கொள்ளாமல், மேன்மேலும், இவ்வாறு, பொய்களை சொல்லி பேட்டி கொடுப்பது முதகிய செயல்கள் விளம்பரத்திற்காக மற்றும் தனது தொடர்புகளைக் காட்டிக் கொள்ள முயன்றதாகத் தான் தெரிந்தது.

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-2

1996-2000 ஆண்டுகளில் அரசியல் ஆதரவுடன் கம்பெனி ஆரம்பிக்கப் பட்டது: ராமர் பிள்ளை ஏமாற்று விற்பனை திட்டத்திற்கு பல பணாக்காரர்கள் மற்றும் அதிகாரம் கொண்ட நபர்களின் உதவி பின்னணியில் இருந்தது. 1999-2000 காலக்கட்டத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. 1996லேயே, சென்னை ஐ.ஐ.டியில் சோதனையின் போது, அது பெட்ரோல் அல்ல, ரசாயனங்கள் கலந்த கலவை, போலி என்று தெரிய வந்தது[3].  ஏப்ரல் 2000ல், சிபிஐ விசாரணை மேற்கொண்டபோது, தனுஷ்கோடி ஆதித்தனே [former Union Minister and Tamil Maanila Congress leader, Mr. Dhanushkodi Adityan] ரூ.15 லட்சம் கொடுத்ததாக தெரிய வந்தது[4]. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், முன்பு மத்திய அமைச்சராக இருந்தவர். அதுமட்டுமல்லாது, இவரது கண்டுபிடிப்பிற்கு, பதிவு எண்ணை வாங்கிக் கொடுக்கவும் [a patent application (2274/MAS/97) on October 14 1997 ] உதவியுள்ளார்[5]. மார்ச் 1999 அன்று சென்னை ஓட்டலில் பாராட்டு விழா ஏற்பாடு செய்தபோது, அப்பொழுதைய முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்[6]. போதாகுறைக்கு, “சுவதேசி” ரீதியில், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் ஆதரவும் இருந்தது[7].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-3

மே.2010ல் ராமர் பிள்ளைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன[8]: மோசடியில் கைதான ராமர் பிள்ளையை, லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் “ஓபன் மாகஸைன்” நிருபர் பேட்டி கண்டு, விவரங்களை வெளியிட்டார். இவரது கண்டுபிடிப்பை மெச்சி, தமிழக முதல்வர் கருணாநிதி, தொழிற்சாலை தொடங்கள் இலவசமாக இடம், ஆராய்ச்சி செய்ய நிதியுதவி எல்லாம் கொடுப்பதாக அறிவித்தார். 2000ல் இவரது மூலிகை பெட்ரோல் ஊற்றி ஓடிய வண்டிகள் பழுதடைந்தன, குறிப்பாக இஞ்சின்கள் பாழாகின. ஆனால், தான் கண்டுபிடித்ததை, மற்றவர்கள் அபகரிக்கவே இவ்வாறு செய்கிறார்கள் என்றார். 2008ல் ஐவான் கிரிஸ்டியன்சென் என்பவர் தன்னுடைய கண்டுபிடிப்பை பாராட்டினார் என்றார். ஆனால், “ஓபன் மாகஸைன்” அவரை தொடர்பு கொண்டபோது, தப்பாகி விட்டது, என்று ஒப்புக் கொண்டார், தனது வாழ்க்கையில் அவ்வாறு தவறாகி விட்டதற்காக வருத்தமும் தெரிவித்தார்[9].

toi-23-09-2010-herbal-fuel-inventor-back-with-a-new-claim

செப்டம்பர் 2010ல் மறுபடியும் அறிக்கை விட்ட ராமர் பிள்ளை[10]: ஒரு ஊடக சந்திப்பின் போது, மறுபடியும் ரூ.5/- க்கு பெட்ரோல் கிடைக்கும் என்று அறிவித்தார். “15 கிராம்ஆம்மோனியம் குளோரைட், 15 கிராம் மரத்தூள், 15 கிராம் யீஸ்ட் இவற்றை சேர்த்து வைத்தால், நுண்ணியுர்களால், பொங்கி வரும். இதனை 78 டிகிரிக்கு சூடேற்றி, பிறகு, அதனை வடிகட்டினால், வரும் திரவத்தை, ஒரு லிட்டர் நீரைச் சேர்த்து குளுக்கி வைத்தால், துகள்கள் கீழே சென்று, மேலே திரவம் நிற்கும். அதுதான் வேலார் ஹைட்ரோ கார்பன் எரிபொருள் ஆகும்”, என்று விளக்கினார்[11]. மார்ச் 2000ல் வெளி மார்க்கெட்டில் ரசாயன பொருட்களை வாங்கி, “மூலிகை பெட்ரோல்” என்று ஏமாற்றுகிறார் என்று கைது செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இவ்வாறு அறிக்கைகள் விட்டதும் வியப்புதான். பெட்ரோல் என்றாலே பாறையெண்ணை அதாவது, இயற்கையில்லேயே பூமிக்கடியில் உருவான எண்ணையாகும். ஆனால், அதனையே, நேரிடையாக உபயோகப்படுத்த முடியாது. அதனை பல அடுக்குகளில் சுத்தப்படுத்தி, பெட்ரோல் டீசல், என்று தயாரிக்கிறார்கள். அதற்கு பெரிய எண்ணை ஆலை தேவைப்படுகிறது. எனவே, சாதாரணமாக இப்படி கலந்து தயாரிக்கலாம் என்பதே விஞ்ஞான பூர்வமாக இல்லை என்பது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

15-10-2016

ramar-pillai-gets-3-years-ri-15-10-2016

[1] நியூஸ்.7.டிவி, இந்தியாவில் விரைவில் ரூ.10-க்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்” : ராமர்பிள்ளை நம்பிக்கை, August 02, 2016.

[2] http://ns7.tv/ta/herb-petrol-will-come-soon-says-ramar-pillai.html

[3]  In September 1996, during a validation experiment organised by the Department of Science and Technology (DST) at IIT, Chennai.

[4] The Hindu, Ramar Pillai had powerful patrons, By Mukund Padmanabhan, Tuesday, April 25, 2000. http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[5] Among other things, Mr. Adityan had arranged a house in Chennai’s Alwarthirunagar for Pillai and helped the now disgraced “scientist” register a patent application (2274/MAS/97) on October 14 1997 at the Patent Branch Office, Chennai.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[6] http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[7] In March 1999, at a function to celebrate the commercial launch of “Ramar Fuel” in a Chennai hotel, the guest of honour was no less than Chief Minister, Mr. M. Karunanidhi’s wife, Ms. Rajathiammal. As for Pillai’s powerful friendships within the RSS – some of whose members obviously regarded him as a swadeshi scientist – they are much too well-documented to bother elucidating.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[8] The Open Magazine, The Herbal Fuel Druid, 29 May 2010

http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[9]  In a 2008 letter, Christensen wrote: ‘Ramar has demonstrated several quick methods for producing bio-fuel. The fuel burned readily, and there is no doubt that plenty of fuel can be produced at low price. For this reason, his discovery is unique, and Ramar deserves some worldwide reputation, eg. By Nobel Prize.’ Contacted by Open, Christensen acknowledges the letter, but adds that he got carried away when he saw the experiments first hand. “We all make mistakes,” he says, “I think it was one of them. I’m afraid it is a blot on my scientific career.” http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[10] Times of India, Herbal fuel inventor’ back with a new claim, TNN | Sep 23, 2010, 12.25 AM IST

[11] He says his concoction when mixed with water and heated to 78 degrees Celsius turns into an inflammable bio-fuel that gives a smokeless blue flame. “The mixture is 15 gm ammonium chloride, 15 gm sawdust and 15 gm yeast. It is fermented and distilled. Then I mix it with a litre of water and shake it a bit. See how the water settles at the bottom. I call it Velar Bio Hydrocarbon Fuel,” he says.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Herbal-fuel-inventor-back-with-a-new-claim/articleshow/6609627.cms

 

சட்டங்களின் பெருக்கம், அதனால் உருவாகும் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள்!

ஜூன் 2, 2016

சட்டங்களின் பெருக்கம், அதனால் உருவாகும் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள்!

indian advocates Act and professional ethics 1961-தமிழ் திருத்தம்

வக்கீல் தொழிலுக்கு தடைவிதிக்கும் சரத்து[1]: மேற்சொன்ன செயல்களில் ஈடுபடும் வக்கீல்கள், ஐகோர்ட்டு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்ய நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடைவிதிக்கப்படும். இதன்பின்னர், நடவடிக்கைக்கு உள்ளான வக்கீல் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைப்பார்.  இவ்வாறு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-பி வழிவகை செய்கிறது. அதேபோல, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுகளில், மேற்சொன்ன குற்றச்செயல்களை வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல் தொழில் செய்ய சம்பந்தப்பட்ட வக்கீல்களுக்கு தடை விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம்[2].

indian advocates Act and professional ethics 1961-தமிழ்குற்றஞ்சாட்டி தண்டிக்கும் முன்பு விளக்கம் கேட்கவேண்டும்[3]: சார்பு நீதிமன்றங்கள், முன்சீப் அல்லது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் மேற்சொன்ன செயல்களில் வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த சம்பவம் குறித்து அறிக்கையை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அந்த வக்கீல் ஆஜராக தற்காலிக தடைவிதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிடவேண்டும்.  அதன்பின்னர், சம்பந்தப்பட்ட வக்கீலுக்கு, அவர் செய்த குற்றச்செயல் குறித்து அவருக்கு தெரிவித்து, அவரது விளக்கத்தை கேட்டு சம்மன் அனுப்பவேண்டும். நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக தடைவிதித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அவரது கருத்தை கேட்பது அவசியமாகும்.

Advocates dharna and burning committee report 2003திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் அமலுக்கு வந்தது: அதன்பின்னர், அந்த வக்கீல் செய்ய குற்றச்செயல்களில் தன்மைக்கு ஏற்ப, ஐகோர்ட்டு உட்பட மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராக நிரந்தர தடைவிதித்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடலாம். இந்த புதிய சட்டத்திருத்தம், அறிவிக்கை வெளியிட்ட நாள் முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன. இந்த அறிவிக்கை கடந்த 20-ந் தேதி தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த புதிய சட்டத்திருத்தம் கடந்த 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.  மேலும், இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு தன்னுடைய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது[4].

Chandru, Gandhi, Paul Kanakaraj, Wilson - Adocates Act, 1961திருத்தப்பட்ட ஆட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆதரவுஎதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் பரவலாகக் காணப்படுகிறது. இது குறித்து நீதித் துறையைச் சேர்ந்த சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு[5]:

கே.சந்துரு (உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி)[6]: வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34-ன்படி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் நடத்தை விதிகளை வகுக்கலாம் என்று உள்ளது. டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர், சாட்சிகளை பணம் கொடுத்து மாற்ற முற்படுகையில் தெஹெல்கா ஊடகம் அதை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 34-ல் போதுமான விதிகளை வகுக்கவில்லை. எனவே, இரண்டு மாத காலத்துக்குள் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என 2009-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதே, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அப்போது விதிகள் வகுக்கப்படவில்லை. இப்போது தான் விதிமுறைகளை வகுத்துள்ளனர். இந்த விதிமுறைகள் தற்போது தேவையான ஒன்றுதான்.

A policeman detains a bleeding lawyer-a clash between lawyers and police . AP Photoஆர்.காந்தி, (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்): அனைத்து நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களை தடை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டால், வழக்கறிஞர்களின் தன்னம்பிக்கை, தைரியம் போய்விடும். அவர்களால் ஒருவார்த்தைகூட எதிர்த்துப் பேச முடியாது. மேலும், கீழமை நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படும்போது பார் கவுன்சிலுக்கு வேலையே இல்லாமல் போய்விடும். பார்கவுன்சில்தான் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் இருக்கும்போது, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது வழக்கறிஞர்களை மிரட்டுவது போலாகும். சில நேரங்களில் சில வழக்குகளில் வழக்கறிஞர்கள் கடுமையாக வாதிட வேண்டியிருக்கும். அதற்காக, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், எல்லா நிலையிலும் வழக்கறிஞர்கள் பயப்பட வேண்டிய சூழல் உருவாகும். இது நல்லதுக்கல்ல. வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்துள்ள திருத்தங் கள் வழக்கறிஞர்களை அச்சுறுத்துவதாகவே உள்ளது.

Policemen chase the advocates after they set fire the police station inside the Madras High Court

பி.வில்சன் (முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்): வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் திருத்தம் செய்துள்ள விதிகளில் நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரி ஆகியோருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தினாலோ; நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளித்தாலோ உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியும் என்று உள்ளது. இந்த இரண்டு விதிமுறைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற விதிகள் அனைத்தும் தேவையான ஒன்றுதான்.

Policeman drag a motorbike to safety - advocates-police clash-AP Photoஆர்.சி.பால்கனகராஜ், (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்): வழக்கறிஞர் மீதான புகார் மீது உரிய நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு முடிந்தவரை சம்மன் தர வேண்டும். நேரில் ஆஜரான பிறகு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வேண்டும். அதன்பிறகு புகார் நிரூபிக்கப்பட்டால் அந்த வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாக தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடை விதிப்பதா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு நீதிபதி பணம் வாங்கிக் கொண்டுதான் உத்தரவு பிறப்பிக்கிறார் என்று ஆதாரத்துடன்தான் வழக்கறிஞர் புகார் தர வேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. நீதிபதி பணம் வாங்கினால் அதை புகைப்படம் எடுத்தா நாங்கள் அனுப்ப முடியும். அதுதொடர்பாக வழக்கறிஞர் புகார் கொடுத்தால் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரத்துடன்தான் தர வேண்டும். இல்லாவிட்டால் புகார் கொடுத்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்க்கிறோம். அதுபோல நீதிமன்ற வளாகத்திலே போராட்டம் செய்யக்கூடாது என்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

Policemen chase the advocates after they set fire the police station inside the Madras High Court. PTI Photo R Senthil Kumarகே.சக்திவேல், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்[7]: புதிய திருத்தங்கள் தேவையற்றது. அரசியலமைப்பு சட்டத்தில், போராடுவதற்கான உரிமை வழங்கப் பட்டுள்ளது. தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தில், அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்கள், பார் கவுன்சிலுக்கு உள்ள அதிகாரங்களை பறிப்பதாக உள்ளன. நீதித் துறையில் இருப்பவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகள் அனுப்பக் கூடாது என்பது, ஊழலுக்கு தான் வழிவகுக்கும்[8].

Justice compromised, politicised, soldஅதிக சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் என்றால் நீதித்துறை மோசமாக உள்ளது என்பதனைக் காட்டுகிறது: சட்டம் என்பது நீதி வல்லுனர்களால் அதிகமாக யோசித்து, தீர அலசிப் பார்த்து, சட்டமுன்னோடிகளைக் கருத்திற் கொண்டு, எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் வரையில் உருவாக்கப்பட்டுகிறது. இதனால், ஆரம்பகால சட்டங்கள் எல்லோருக்கும், எல்லா காலங்களிலும், எல்லா நிலைகளிலும் பொறுந்தியிருந்தது. ஆனால், நவீனகாலங்களில் வந்த சட்டங்கள், அவற்றைத் தயாரித்தர்களின் பாரபட்சம், பட்சதாபம், சுயநலம், ஓரவஞ்சனை, முதலிய மனச்சாதங்களுடன் உருவானதால், அவற்றில் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள், எப்படியும் விளக்கம் கொடுக்கலாம் போன்ற ரீதியில் சட்ட சரத்துகள், பிரிவுகள், உட்பிரிவுகள் முதலியவை அதிகமாக இருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும் குறிபிட்டு இருக்கும், தேவையென்றால், சில வார்த்தைக்களுக்கு அர்த்தம் இதுதான் என்ற வரையறையும் இருக்கும், என்ற நிலையும் வந்துவிட்டது. ஏனெனில், ஒரே செயல் ஒரு சட்டதின் கீழ் செய்தால் குற்றம், இன்னொரு சட்டத்தின் கீழ் செய்தால் குற்றமில்லை என்ற சாத்தியத்தையும் ஏற்படுத்தி விட்டனர். ஆனால், சட்டங்கள் அதிகமாகின்றன எனும்போது, நீதி பகுக்கப்படுகிறது, நீர்க்கப்படுகிறது, அநீதியாகிறது என்றாகிறது மேலும், புதிய சட்டம் அமூலுக்கு வரும்போது, அவை அந்தந்த தேதிகளிலிருந்து செல்லுபடியாகும் என்ற நிலையில், முந்தைய தேதிகளில் செய்த குற்றங்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். சட்டம், நீதித் துறைகளில் அதானால் தான் நியாயமானவர்கள் இருக்க வேண்டும், இல்லையென்றால், முரண்பாடுகளோடு தான் அத்துறைகள் இருக்கும். மக்களுக்கு சமநீதி கிடைக்காது.

 

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] மாலைமலர், வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, பதிவு: மே 28, 2016 04:33, மாற்றம்: மே 28, 2016 06:01

[2] http://www.maalaimalar.com/News/District/2016/05/28043325/1014768/The-Madras-High-Court-has-brought-in-stringent-disciplinary.vpf

[3] விகடன், ஒழுங்கீன வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை! உயர் நீதிமன்றம் அறிவிப்பு, Posted Date : 09:14 (28/05/2016).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/64636-tamil-nadu-courts-get-sweeping-power-to-advocates.art

[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8662831.ece

[6] தமிழ்.இந்து, வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா?ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு குரல்களும், Published: May 29, 2016 09:24 ISTUpdated: May 29, 2016 09:24 IST

[7] தினமலர், வக்கீல்கள் போராரட்டம், புதிய சட்டம், பதிவு செய்த நாள் : மே 27,2016,23:00 IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1530475

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

ஜூன் 2, 2016

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

indian advocates Act and professional ethics 1961

திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் நீதித்துறை சீரழிந்துள்ள நிலையைக் காட்டுகிறது: நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது[1]. அதாவது அத்தகைய பழக்க-வழக்கங்களை வக்கீல்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதற்கு முன்பாக, இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துவந்தது[2]. ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, சென்னை உயர்நீதிமன்றமோ, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமோ வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்[3]. சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது[4]:

The Adocates Act, 1961 - S-341961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டத்திருத்தம்: வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34(1) [Section 34(1) of the Advocates Act, 1961], அந்த சட்டத்தின் திருத்தம் கொண்டுவர ஐகோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அமைதியாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக வழக்கறிஞர் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கொண்டுவந்துள்ளது[5]. இதற்கேற்றபடி புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன[6]. வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-ஏ-வின் கீழ் [of the Advocates Act] குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கோ வக்கீல் செய்வதில் இருந்து நீக்கப்படுவார்கள்[7]. அதாவது கீழ்கண்ட குற்றங்களை செய்யும் வக்கீல்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்[8].

The Adocates Act, 1961 - S-14குற்றச்செயல் என்ன?[9]: இனி வக்கீல்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் காரியங்களில் எவையெல்லாம் குற்றம் என்று அடையாளம் காணப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது.

* நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிப்பவர். நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது என்று பொய் சொல்பவர்.

* நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்துபவர்கள். சேதப்படுத்தி அழிப்பவர்கள்.

* நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர்.

* நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர்.

* நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[10]. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள்.

* குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.

Judge injured during a clash with policemen, inside Madras High Court in Chennai. PTI Photo by R Senthil Kumarஇத்தகைய திருத்தப் பட்ட சட்டப் பிரிவுகளிலிருந்து அறியப்படுபவை: சட்டங்களை மீறிய வக்கீல்கள் இருந்துள்ளார்கள் இருக்கிறார்கள் என்பது, இந்த திருத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

  1. நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து வக்கீல்கள் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  2. நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது, சாதகமாக தீர்ப்பு வாங்கிக் கொடுக்கிறேன் என்று வக்கீல்கள் பொய் சொல்லியிருக்கின்றனர்.
  3. நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்தப்பட்டுள்ளன, சேதப்படுத்தப்பட்டு அழித்தவர்கள் உள்ளனர். அதாவது, போர்ஜரி / கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  4. நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர் இருந்திருக்கின்றனர். நீதிபதிகளில் கால்களை ஒடிப்பேன் என்றெல்லாம் பேசியிருந்தது……..முதலியவற்றை கவனத்தில் கொள்ளலாம்.
  5. நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர் இருக்கிறார்கள்.
  6. நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[11]. தமிழக நீதிமன்றங்களில், இவை சாதாரணமாக ஏற்பட்டுள்ளன.
  7. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள். இவையும் சகஜமாக இருக்கின்றன
  8. குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.
  9. நீதிமன்ற வளாகங்களில் கொலைகள் நடந்திருக்கின்றன.

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] நியூஸ்.7.டிவி, வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றமே தடைவிதிக்கும் புதிய சட்டதிருத்தம், May 27, 2016; http://ns7.tv/ta/court-bans-advocates-who-diobeys-court.html

[2] பிபிசி, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம், மே.27, 2016.

[3] http://www.bbc.com/tamil/india/2016/05/160527_actiononlawyers

[4] தினத்தந்தி, வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம் ஐகோர்ட்டு அறிவிப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, மே 28,2016, 4:45 AM IST, பதிவு செய்த நாள்: சனி, மே 28,2016, 12:46 AM IST.

http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு, By: Mathi, Published: Saturday, May 28, 2016, 10:33 [IST].

http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[6] According to the new rules, the court has power under 14-A of Advocates Act to debar advocates who indulge in activities such as trying to influence a judge or participates in a procession inside court campus or holds placards inside the court hall, among others. The notification further said the court shall have the power to initiate action against misconduct under Rule 14-A .

http://www.deccanherald.com/content/549028/rules-advocates-act-amended.html

[7] “In exercise of powers conferred by Section 34(1) of Advocates Act, the court makes the following amendments to the existing rules. The amendments shall come into force with effect from the date of publication,” the notification released by the Registrar General of the High Court, said.

[8] http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[10] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

[11] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் சட்ட மாணவர்கள் அடித்துக் கொண்ட தீர்ப்பில் சட்டத்தை மீறியவர்களுக்கு சிறை தண்டனை, தண்டம்!

ஜனவரி 30, 2016

அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் சட்ட மாணவர்கள் அடித்துக் கொண்ட தீர்ப்பில் சட்டத்தை மீறியவர்களுக்கு சிறை தண்டனை, தண்டம்!

சட்டக் கல்லூரி மோதல் வழக்கு தீர்ப்பு 2016

அடிதடியில் பெரும் பரபரப்பு, வழக்குகள் பதிவு: இதில், அய்யாத்துரை, பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் ஒரு அணியாகவும், சித்திரைசெல்வன், மணிமாறன் உள்பட பலரும் ஒரு அணியாகவும் பிரிந்து ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்[1]. இதில், பாரதிகண்ணன் என்ற மாணவனை, கல்லூரி வாசலில் வைத்து மாணவர்கள் சிலர் தாக்கிய வீடியோ காட்சி தொலைக்காட்சியில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து எஸ்பிளனேடு போலீசார் இரு வழக்குகளை பதிவு செய்தனர். அதாவது, மாணவன் அய்யாத்துரை கொடுத்த புகாரின் அடிப்படையில், சித்திரைச்செல்வன், மணிமாறன், ரவீந்திரன், குபேந்திரன் உள்பட 41 பேர் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர், விசாரணை நடத்திய போலீசார் 43 பேரை கைது செய்தனர்[2]. ஆனால், ஜாதி பிரச்சினை என்பதினால், அப்படியே கிடப்பில் போட்டு வைத்தனர். இதனால் உச்சநீதி மன்றம் அணுகப்பட்டது. கே. சரவணன் கருப்பசாமி மற்றும் இன்னொருவர் பெருமாள் என்பவர், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று 2000ல் வழக்குத் தொடர்ந்தார்[3]. ஆனால் தேவையில்லை என்று தள்ளுபடி செய்து விட்டது[4].

சட்டக் கல்லூரி மோதல் வழக்கு தீர்ப்பு 2016.2

பி.2 எஸ்பலனேட் [B2 Esplanade Police Station] போலீஸ் ஷ்டேசனில் கீழ்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன:

  1. அய்யாதுரைஎன்பவர்கொடுத்தபுகாரின்படி [Crime No. 1371/2008 of B2 Esplanade Police Station under Sections 147, 148, 341, 324, 307 & 506 (ii) IPC] சித்திரைச்செல்வன்மற்றும் 40 மாணவர்களுக்குஎதிராகவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. 23 பேர்கைதுசெய்யப்பட்டனர், சிலர்சரண்அடைந்தனர். பிறகுபெயிலில்விடப்பட்டனர்.
  1. இதேபோல, சித்திரைச்செல்வன்கொடுத்தபுகாரின்மீது [Crime No. 1372/2008against two students in B2 Esplanade Police Station under Sections 341, 324 and 506 (ii) IPC and the same was subsequently altered into Sections 341, 324, 307 and 506 (ii) IPC.]. இதில்இரண்டுபேர்கைதுசெய்யப்பட்டு, பிறகு 12-01-2009 அன்றுபெயிலில்விடப்பட்டனர்.
  1. 13-11-2008 அன்றுகல்லூரிமுதல்வரின்அறைக்குள்சென்றுபொருட்களைசேதப்படுத்தியதற்காக [Crime No.1374/2008 under Sections 147, 148 IPC and Section 3(1) of Tamilnadu Property (Prevention of Damage and Loss) Act, 1992] ஒருவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. இதில்கைதுசெய்யப்பட்ட 14 பேர் 23-11-2008 அன்றுநீதிமன்றஆணைப்படிவிடுவிகப்பட்டனர்.

சட்டக் கல்லூரி மோதல் வழக்கு -ஆம்ச்ட்ராங் கைது, விடுதலை

போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது: இதில் Crime No. 1371/2008 குற்றப்பத்திரிக்கை எட்டாவது மெட்ரோபோலிடின் மேஜிஸ்ட்ரேட் [VIIth Metropolitan Magistrate, George Town] முன்பாக 10-03-2011 அன்று தாக்கல் செய்யப்பட்டது. சில திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுடன் மறுபடியும் 19-05-2011 அன்று தாக்கல் செய்யப்பட, Case No.29/2011 எண்ணிட்ட கோப்பில் 09-09-2014 அன்று விசாரணை வைக்கப்பட்டது. மேலும், முன்னதாக 12-11-2008 அன்று,

(1) திரு. கே.கே. ஶ்ரீதேவ், கல்லூரி முதல்வர் [ Mr. K.K. Sridev, Principal of the Law College]

(2) திரு கே. நாராயணமூர்த்தி, உதவி போலீஸ் கமிஷனர் [Mr. K. Narayanamoorthy, Assistant Commissioner of Police of the Jurisdiction Range]

(3) திரு. எம். சேகர் பாபு, இன்ஸ்பெக்டர், பி.2 எஸ்பலனேட் [Mr.M. Sekar Babu, Inspector of Police of B2 Esplanade Police Station] முதலியோர், வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

அதே போல நான்கு உதவி-இன்ஸ்பெக்டர்களும் இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். நீதிபதி பி. சன்முகம் தலைமையில் நடந்த விசாரணை கமிஷன் அறிக்கைப்படி, இம்மூவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் துறை விசாரணை நிலுவையில் உள்ளது. முக்கியமாக குற்றஞ்சாட்டப்பட்ட கே. ஆம்ஸ்ட்ராங், வக்கீல் மற்றும் வேட்பாளராக இருந்த கைது செய்யப்படவில்லை. இது 08-02-2011 அன்று தான் தெரியவந்தது. 01-05-2011 அன்று கைது செய்யப்பட்டாலும், 04-05-2011 அன்று பெயிலில் விடப்பட்டார். இதே போல மற்றவர்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றன.

சட்டக் கல்லூரி மோதல் ஆம்ஸ்ட்ராங் கைது 2008

உச்சநீதி மன்றம், அக்டோபர் 2015ல், ஆறுமாதங்களில் முடிக்குமாறு ஆணையிட்டது: இந்த வழக்கு மற்றும் விசாரணை இழுத்தடிக்கப்படும் நிலை இருந்ததால், உச்சநீதி மன்றம், அக்டோபர் 2015ல், ஆறுமாதங்களில் முடிக்குமாறு ஆணையிட்டது[5]. நீதிபதி கோமதிநாயகம் இந்த வழக்கில் வக்கீல் ரஜினிகாந்த் முதல் குற்றவாளியாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அமைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவரும், சட்டக்கல்லூரி மாணவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தும் விதமாக தூண்டி விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.  அதேபோல சித்திரைசெல்வன் கொடுத்த புகாரின் பேரில், பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளும் சென்னை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள 17-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கோமதிநாயகம் நேற்று பிற்பகலில் தீர்ப்பு அளித்தார்[6].

சட்டக் கல்லூரி மோதல் ஆம்ஸ்ட்ராங் 2008

ஆம்ஸ்ட்ராங், ரஜினிகாந்த் விடுதலை: அந்த தீர்ப்பில் நீதிபதி [the XVII Additional Sessions judge Gomathi Nayagam ] கூறியிருப்பதாவது:- பாரதிகண்ணன் உள்ளிட்ட 3 பேரை தாக்கிய வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட ரஜினிகாந்த், ஆம்ஸ்ட்ராங் உள்பட 22 பேரை விடுதலை செய்கிறேன்[7]. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சித்திரைச் செல்வன் உள்பட 19 பேர் மீதான 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன[8]. இவர்களுக்கு, சட்டவிரோதமாக கூடிய குற்றத்துக்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்தியதற்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்[9]. இந்த சிறை தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும்.

நீதிமுறை அழுக்குகள்

அப்பீலுக்காக தண்டனை நிறுத்தி வைப்பு: அதேபோல சித்திரைசெல்வனை தாக்கிய வழக்கில், பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக இவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்[10]. இந்த தீர்ப்பை எதிர்த்து 21 பேரும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக இந்த தண்டனையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 21 பேரும் சொந்த ஜாமீன் உத்தரவாதம் வழங்கி வீடு திரும்பினார்கள்[11]. 41 மாணவர்களின் சார்பாக வாதாடிய எஸ். சத்தியசந்திரன் மற்றும் சி. விஜயகுமார் கூறியதாவது[12], “அத்தகைய வன்முறையை மாணவர்கள் செய்திருக்க முடியாது. வெளியாட்களின் மூலம் தான் நடந்தேறியுள்ளது. இதனால், நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம்”.

© வேதபிரகாஷ்

30-01-2016

[1] http://www.maalaimalar.com/2016/01/28165443/21-people-gets-three-year-jail.html

[2] மாலைமலர், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறைத்தண்டனை, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஜனவரி 28, 4:54 PM IST.

[3] Writ petition (Civil) no.400 of 2010 filed by K. Saravanan Karuppasamy & Anr vs. State of Tamilnadu & ors.

http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=41917

[4] http://www.livelaw.in/supreme-court-says-cbi-enquiry-chennai-law-college-case/

[5] The trial in the investigation was prolonged to such an extent that the Supreme Court in October 2015, directed the Madras High Court to complete the trial within six months.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Seven-Years-After-21-Lawless-Students-Get-3-year-Jail-Term/2016/01/29/article3250533.ece

[6] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: 21 பேருக்கு 3 ஆண்டு சிறை– 22 பேர் விடுவிப்பு, Posted by: Jayachitra, Updated: Thursday, January 28, 2016, 17:28 [IST].

[7] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=159672

[8] தினமணி, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: 21 பேருக்கு சிறைத் தண்டனை, By dn, சென்னை, First Published : 28 January 2016 04:25 PM IST.

[9] தினத்தந்தி, 2008-ம் ஆண்டு நடந்த மோதல் சம்பவம்: சட்டக்கல்லூரி மாணவர்கள் 21 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, மாற்றம் செய்த நாள்:வெள்ளி, ஜனவரி 29,2016, 2:15 AM IST; பதிவு செய்த நாள்:வெள்ளி, ஜனவரி 29,2016, 2:12 AM IST.

[10]http://www.dinamani.com/tamilnadu/2016/01/28/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/article3249403.ece

[11] http://www.dailythanthi.com/News/State/2016/01/29021231/Chennai-Law-College-Student-group-clash-in-2008-Court.vpf

[12] Advocates S Satyachandran and C Vijaykumar, who represented a group of 41 students, of whom the judge convicted17, said they would appeal in the high court.Speaking to reporters after the verdict, they said “outsiders” caused the clash and it was not possible for students to unleash such severe violence themselves. The authorities released the convicts on bail in the evening.

http://timesofindia.indiatimes.com/city/chennai/21-ex-law-college-students-get-3-years-jail-for-bloody-08-clash/articleshow/50765143.cms

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

மார்ச் 8, 2015

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi - Photo- R.M. Rajarathinam

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi – Photo- R.M. Rajarathinam

சோதனை, விசாரணை முதலியவற்றிற்குப் பிறகு ஐந்து அதிகாரிகள் கைது: அங்கிருந்த ஆவணங்கள், விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்யும் முறை, வசூலிக்கும் பணம் ஆகியவை குறித்து சிபிஐ குழுவினர்  சோதனை செய்தனர். விமான பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள 10 சுங்க இலாகா கவுண்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சுங்க அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று காலை 9 மணிவரை நீடித்தது. பின்னர் சுங்க அதிகாரிகளுக்கு சொந்தமான பைக், கார் போன்ற வாகனங்களில் பணம் எதுவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் சுங்க அதிகாரிகளை அழைத்து கொண்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க துறை அலுவலக வளாக குடியிருப்பில் உள்ளவர்களின் வீடுகளுக்கும் சென்று மதியம் வரை  சோதனை நடத்தினர்[1]. இந்த சோதனையில் முறைகேடாக பெறப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது[2]. அத்துடன் சுங்க இலாகா அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் அவர்களில் அதிகாரிகள் ஐந்து, பிரயாணி ஒன்று – நாகூர் மீரான்[3]:

  1. சிவசாமி – சூப்பிரென்டென்ட்டென்ட்
  2. ரவிகுமார் – சூப்பிரென்டென்ட்டென்ட்
  3. தினேஸ்பிரஜாபதி – இன்ஸ்பெக்டர்.
  4. சுரேஸ்குமார் – இன்ஸ்பெக்டர்.
  5. அவ்ஜித்சக்கரபர்த்தி – இன்ஸ்பெக்டர்.

சி.பி.ஐ. அதிகாரிகள். இச்சோதனையும் கைது நடவடிக்கையும் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4].

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

பணத்தை கையாலும் போது, கையாடல் செய்கிறானா, இல்லையா?: கௌடில்யர் சொன்னது போல, “நீரில் வாழும் மீன் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறதா இல்லையா என்பது போல, கருவூலத்தில் இருக்கும் பாதுகாவலன் பணத்தை கையாடல் செய்கிறானா இல்லையா என்று சொல்லமுடியாது”, என்ற ரீதியில் இன்று பணத்தை கையாலும் எல்லோருமே, ஆசையில் திளைத்துதான் இருக்கின்றனர், பணத்தை கையாலும் போது, கையாடல் செய்யத்தான் செய்கிறான். அதனால் தான், வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமாகக் கொடுக்கப் படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் போதவில்லை என்று அடிக்கடி ஸ்ட்ரைக் செய்து தான் வருகிறார்கள். அதேபோல, வரித்துறைகளில் உள்ளவர்களும் நேரிடையாகவோ, மறைமுகவோ பணத்துடன் செயல்படுவதால், அவர்களுக்கும் சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், வரிதளர்த்தல், வரிவிலக்கு, முறைகளில் வரியேப்ப்பு ஏற்படும். அது ஊழல் ஏற்பட, வளர, அதிகமாக வாய்ப்புகள் உண்டாக்கப் படுகின்றன.

advocates-வழக்கறிஞர்கள்-

advocates-வழக்கறிஞர்கள்-

உள்ளே-வெளியே நீயாயங்கள் – அநியாயங்கள்: எப்படி 100% தங்கக்கடத்தல்காரர்களை பிடிக்க முடியவில்லையோ, அதேபோல, எல்லா ஊழல்காரர்களும் பிடிக்கப்படுவதில்லை. மாட்டிக் கொள்பவர்கள் மட்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டவர்கள், மற்றவர்கள் புனிதர்கள் என்றாகாது. வரித்துறை அலுவலகங்களில், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் வேலைசெய்ய, பதவி / போஸ்டிங் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. இதனால், ஒழுங்காக, நியாயமாக இருக்கும் அதிகாரிகள் 30-40 வருடங்களாக, மாத சம்பளம் வாங்கிக் கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ஆனால், நேற்று வந்தவர்கள் வளமாக, வசதிகளோடு, மேலதிகாரிகளின் ஆதரவோடு இருந்து கொண்டிருப்பதை காணலாம்.  இத்தகைய நடுநிலைமயற்ற போக்கும் வேலைசெய்பவர்களின் மனநிலையை பாதிக்கிறது. யோக்கியமானவனாக இருப்பவன், ஏன் நானும் அதுமாதிரி செய்யக் கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அவன் நினைக்கும் போதே, ஊழல் ஏற்படுவதில்லை, நியாயமே செத்துவிடுகிறது. சட்டங்கள் வளைக்கப்பட்டு விடுகின்றன. நியாயமானவன், அநியாயம் செய்யும் போது சமூகம் தாங்கிக் கொள்ளமுடியாது. இப்பொழுது, சமுதாயம் இக்கட்டான சூழ்நிலைகளில் தான் சென்றுகொண்டிருக்கிறது.

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

நீதி, சட்டம் அமூல் படுத்துவர்கள் நியாயவான்களா, இல்லையா?: நீதித்துறையும் ஊழலில் தான் மலிந்து கிடக்கிறது. நீதிபதிகள் அரசியல், செல்வாக்கு போன்ற காரணிகளைக் கொண்டுதான் பதவிக்கு அமர்த்தப் படுகிறார்கள். இதனால், அவர்கள் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஏனெனில் திறமை, அனுபவம், முதிர்ச்சி முதலியன, தம்மைவிட அதிகமாக இருந்தாலும், நீதிபதி ஆகாத சீனியர் அட்வகேட்டுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். அதேபோலத்தான், சி.பி.ஐ கதையும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதனை காங்கிரஸின் கைப்பாவை என்று விமர்சிக்கப்பட்டது. இன்று ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால், பாரபட்சம் இல்லாமல் செயல்படுமா என்று தெரியாது. இப்பொழுது சித்தாந்தம் வேறு பேசப்படுகிறது, அது ஜாதி, மதம், மொழி என்ற பலவித காரணிகளுடன் சேர்ந்து நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நீதி-சட்டம் அதற்கேற்றாற்போலத்தான் மாறிக்கொண்டும், வளைந்து கொண்டும் இருக்கும். வரியேய்ப்பு என்றால், அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக் கூடாத அளவுக்கு, சட்டங்கள் இருக்க வேண்டும். தங்கத்தைக் கடத்தவே முடியாது என்ற அளவில் இருந்தால், எப்படி தங்கத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வரமுடியும். ஹென்னா பவுடரில், சாக்கிலெட்டில், மனித உறுப்புகளில், மிஷனரி பார்ட்ஸ் என்ற வகைகளில் கொண்டு வருகிறார்கள் என்றால், அதனைக் கண்டுபிடிக்கும் திறமை வேண்டும். வேலைசெய்பவர்களிடத்தில் அந்த அறிவு, ஞானம், நேர்மை போன்ற உணர்வுகள் உள்ளவர்களால் தான் அது முடியும். இப்பொழுதுள்ள சமூக-அமைப்புகளில் உள்ள நேர்மையற்றத் தன்மைகளை மாற்றினால் தான், இந்தியாவை மாற்ற முடியும்.

நீதிமுறை அழுக்குகள்ஐந்திய சமுதாயத்தை சுத்தப்படுத்த வேண்டும்: சுத்தம் வேண்டுமானால், அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். உடல்-மனம் இரண்டையும் சுத்தப் படுத்த வேண்டும் என்பதுப்போல, இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டுமானால், இந்தியர்களை சுத்தப் படுத்த வேண்டும், ஏனெனில், அவர்கள் பற்பலவிதமான அழுக்குகளோடு, நுற்றுக்கணக்கான ஆண்டுகளில் அசுத்தமாக இருந்துகொண்டிருக்கிறார்கள். முகமதியம், ஐரோப்பியம், கிருத்துவம், கம்யூனிஸம் என்ற சித்தாந்தளினால் ஏற்பட்ட கறைகளும், அழுக்குகளும் ஏராளம். சுதந்திரம் வந்தபிறகும் ஆங்கில ஆட்சிமுறையைப் பின்பற்றி வருவதால், அவர்களுடன் கூடிய அசுத்தங்களும் அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அவர்கள் ஏதோ ஆட்சிமுறையினைக் கொடுத்தார்கள் என்று பீழ்த்திக் கொண்டாலும், உள்ள ஆட்சிமுறையினைக் கெடுத்தார்கள் என்றாகியுள்ளது. அவர்கள் காலத்தில் ஆட்சியாளர்களுக்கு, இந்தியர்களுக்கு என்று இரட்டை நீதி-சட்டங்கள் இருந்தன. அதே முறைதான் இப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சட்டங்கள் ஒன்றாக இருப்பதினால், அவைகளில் ஓட்டைகள் போடப்படுகின்றன, வளைக்கப்படுகின்றன, முடியவில்லை என்றால், மாற்றப்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 08-03-2015

[1]  தினகரன், சுங்கவரி வசூலில் முறைகேடு: திருச்சி ஏர்போர்ட்டில் சி.பி. அதிரடி சோதனை, சனிக்கிழமை, 07-03-2015: 01:21:11.

[2] http://m.thehindu.com/news/cities/Tiruchirapalli/cbi-searches-customs-wing-at-tiruchi-airport/article6968065.ece/?secid=12614

[3] Further investigations revealed that five customs officials – two superintendents Sivaswamy and Ravikumar, three inspectors Dinesh Prajapati, Suresh Kumar, Avijit Chakraborthy had been accepting bribes and not levying requisite duty for dutiable goods being brought by passengers from various countries through the airport.

http://timesofindia.indiatimes.com/city/trichy/CBI-arrests-six-including-five-customs-officials-on-graft-charges/articleshow/46489295.cms

[4] தமிழ்.ஒன்.இந்தியா, சுங்கவரியில் முறைகேடு: திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ திடீர் ரெய்டு– 6 பேர் கைது, Posted by: Mathi, Updated: Saturday, March 7, 2015, 12:23 [IST]

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

ஜனவரி 26, 2014

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

வக்கீல் ஆக வேண்டும் என்ற வெறியோடு பட்டம் வாங்கியவர்கள்: அரசியல், பணக்காரர்கள், வியாபாரிகள், அதிகமாக சொத்துகள் வைத்துள்ளவர்கள் முதலியோருக்கு வக்கீல் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது. இதைத்தவிர மற்றவர்களுக்கும் எப்படியாவது பி.எல் பட்டம் வாங்கிவிட வேண்டும் என்ற வெறியும் உள்ளது. அந்நிலையில் “கரஸ்பான்டென்ஸ்” மற்றும் எல்எல்பி (LLB) செய்து பட்டங்களை வாங்கி பார் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள ஆசைக் கொண்டனர். ஒருநிலையில் எல்எல்பி (LLB) செல்லும் என்றிருந்தது. இதனால், வேகவேகமாக டிகிடரி பெற்றுக் கொண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நுழைவு தேர்வு இல்லாமலேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ளலாம் என்றிருந்தபோது, பலர் அப்படி நுழைந்தனர். பிறகு நுழைவு தேர்வு வைக்கப் பட்டது. எப்படியாவது குறிப்பிட்ட காலத்தை ஓட்டிவிட்டால், சீனியர் அட்வகேட் ஆகிவிடலாம், அரசுதரப்பு கவுன்சில் என்று கட்சி ஆதரவுடன் காலத்தை ஓட்டினால், ஒருவேளை நீதிபதி ஆகும் வாய்ப்புள்ளது என்று கனவோடு உள்ளே நுழைந்தவர்களும் உண்டு.

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

பிரபலங்கள் பி.எல் படித்து பட்டம் வாங்கிய விசித்திரமான முறை: சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் படிக்கும் போது, குறிப்பிட்ட காலகட்டத்தில், உதாரணத்திற்கு 1987-90 வருடங்களில் மாலை வகுப்புகளில் குறிப்பிட்ட பிரபலங்கள் காணப்படாமலேயே இருந்திருப்பர். ஆனால், பிறகு பி.எல் பட்டதோடு “1987-90 வருடங்களில் படித்ததாக” எங்கேயாவது பார்க்க நேர்ந்தால், என்ன இது அப்பொழுது நானும் தானே படித்தேன், இவரை ஒரு முறைக் கூட வகுப்பில், கல்லூரியில், ஏன் பரீட்சை எழுதும்போது கூட பார்த்ததில்லையே, பிறகு எப்படி பட்டம் வாங்கினார் என்று மனதிற்குள் நினைக்கத்தான் செய்வர். ஆனால், வெளியில் சொல்ல முடியாது அல்லது அவரிடத்தில் போய் கேட்கமுடியாது. இது உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது.

Advocates police clashes

Advocates police clashes

எல்எல்பிபடித்தவர்கள்தமிழகபார்கவுன்சிலில்பதிவுசெய்யதடைவிதிக்கவேண்டும்: எல்எல்பி (LLB) பதிவு செய்யத் தடை கோரும் மனுவுக்கு 8 பல்கலைக்கழகங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.   வழக்குரைஞர் வி. ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் இவ்வாறு உத்தரவிட்டார்[1]. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநில கல்லூரிகளில் எல்எல்பி பட்டம் பெற்ற பலரும் தமிழக பார்கவுன்சிலில் (Bar Council) பதிவுசெய்து வழக்குரைஞர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் நேரடியாக வகுப்புகளுக்குச் செல்லாமல் பட்டங்களை பெறுகின்றனர். அதாவது “கரஸ்பான்டென்ஸ்” மற்றும் எல்எல்பி (LLB) செய்து பட்டங்களை வாங்கி பார் கவுன்சிலில் பதிவு செய்து  கொண்டு வக்கீல் ஆகியுள்ளனர். இதைத் தவிர இவர்களில் பலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன[2].  தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் வக்கீல்கள் மீது 1424 வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீஸ் டி.ஜி.பி மதுரை ஐகோர்ட்டில்   அறிக்கை தாக்கல் செய்துள்ளார்[3]. இதே போன்று மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், சட்டப்படிப்பை மேற்கொள்ள கடந்த 2008–ம் ஆண்டு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கடைபிடிக்காமல் வெளிமாநில சட்டக்கல்லூரிகள் செயல்படுவதாகவும், எனவே, வயது வரம்பு நிர்ணய அடிப்படையில் சட்டப்படிப்புக்கு மாணவர்களை சேர்க்க வெளிமாநில கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தார்[4]. எனவே எல்எல்பி படித்தவர்கள் தமிழக பார்கவுன்சிலில் பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வக்கீல்கள் மீது 1424 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன[5]: 189 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில், தமிழகத்தில் வக்கீல்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற அனைத்து வழக்குகளின் விவரங்களளதில் அடங்கியிருந்தன.

  • சென்னையில் 276 வழக்குகளும்,
  • மதுரை மாவட்டத்தில் 100 வழக்குகளும்,
  • நெல்லை மாவட்டத்தில் 121 வழக்குகளும்,
  • கோவையில் 134 வழக்குகளும்,
  • தேனியில் 34 வழக்குகளும்,
  • திண்டுக்கல்லில் 18 வழக்குகளும்,
  • ராமநாதபுரத்தில் 29 வழக்குகளும்,
  • சிவகங்கையில் 6 வழக்குகளும்

வக்கீல்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மொத்தம் 1,424 வழக்குகள் வக்கீல்கள் மீது பதிவாகி உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

வழக்குநிலுவையில்உள்ளபோது, ஒருநபர்குழுஅமைத்துவிசாரிக்கபார்கவுன்சிலுக்குயார்அதிகாரம்வழங்கியது: இந்நிலையில், வியாழக்கிழமை 23-01-2014 இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்குரைஞர்கள் மீதான குற்றவழக்குகள் பட்டியலை தாக்கல் செயய டிஜிபிக்கு ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது.மேலும் இந்திய பார்கவுன்சில், எல்எல்பி கல்லூரிகள் இடம்பெற்றுள்ள கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில தலைமைச்செயலர்கள், அம்மாநிலங்களின் பார்கவுன்சில் தலைவர்கள் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதுஅப்போது, இந்திய பார்கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரம் குறித்து, விசாரிக்க ஒருநபர் குழுவை பார்கவுன்சில் அமைத்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.   எல்எல்பி பதிவு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் குழு விசாரித்து வருகிறது. இங்கும் வழக்கு விசாரிக்கப்படுகிறது. இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள போது, ஒருநபர் குழு அமைத்து விசாரிக்க பார்கவுன்சிலுக்கு யார் அதிகாரம் வழங்கியது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

முறையாகநடத்தப்படாதகல்விநிறுவனங்களுக்குஅங்கீகாரம்வழங்கியதால்இந்தபிரச்னைஎழுந்துள்ளது: முறையாக நடத்தப்படாத கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதால் இந்த பிரச்னை எழுந்துள்ளது என குறிப்பிட்ட நீதிபதி, ஒருநபர் குழு அமைத்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய பார்கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.   பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆந்திரம், கர்நாடகம், சத்தீஷ்கர், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் எல்எல்பி பாட வகுப்புகளை நடத்தும் 8 பல்கலைக்கழகங்களையும் வழக்கில் பிரதிவாதிகளாக சேர்த்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகள் 7ம், தனியார் சட்டக்கல்லூரி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன[6].

சட்டத்தை வளைத்து வக்கீல் ஆகும் முறை: எல்எல்பி நடத்தும் பட்டப் படிப்புகள் பார் கவுன்சிலில் பதிவு செய்யக் கொள்ளமுடியாது, நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தும் தகுதி பெறமுடியாது என்றேல்லாம் அப்பட்டப் படிப்பு படிக்கும்போதே, இவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ளதை பார்த்திருப்பர். இருப்பினும், விடாப்பிடியாக பட்டத்தை வாங்கிக் கொண்டு, பதிவு செய்ய விண்ணப்பிப்பர். விண்ணப்பம் மறுக்கும் போது, அதனை எதிர்த்து வழக்குப் போட்டுவர். பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதி என்றிருக்கும் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்து விடுவர். இதனால், பின்னால் வருகிறவர்கள், மற்றவர்கள் விடாமல் அதே முறையை பின்பற்றுவர். ஆட்சி மாறும் போது சொல்லவே வேண்டாம், இக்கூத்துகள் அதிகமாகவே நடக்கும். அந்நிலையில் தான் இப்படி கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள், மற்றவர்கள் எல்லோரும் நுழைய பார்ப்பர்.

வேதபிரகாஷ்

© 25-01-2014


[2] தினமணி, எல்எல்பிபதிவுவுக்குதடைகோரும்வழக்கு: 8 பல்கலைக்கழகங்கங்களுக்குஉயர்நீதிமன்றம்நோட்டீஸ், ஜனவரி 25, 2014.

[5] தினத்தந்தி, தமிழகம்முழுவதும்போலீஸ்நிலையங்களில்வக்கீல்கள்மீது 1,424 வழக்குகள்பதிவாகியுள்ளனபோலீஸ்டி.ஜி.பி. ஐகோர்ட்டில்அறிக்கைதாக்கல், ஜனவரி 25, 2014.

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

ஏப்ரல் 24, 2013

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

பெங்களூரு வெடிகுண்டு விசாரணையில் சந்தேகிக்கும்படியாக கைது செய்யப் பட்டுள்ளவர்கள் எல்லோரும் முந்தைய “அல்-உம்மா” என்ற தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார்  எடுத்துக் காட்டுகின்றனர்[1]. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் ஏன் மற்படியும் பழைய தொடர்புகளை வைத்திருக்கிறர்கள் என்றும் தெரியவில்லை. முன்பு போல திருநெல்வேலி-கோயம்புத்தூர்-பெங்களூரு இணைப்பும் தெரிகிறது[2]. இதனால், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலையெடுக்கின்றவா – வேறு உருவத்தில் செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் தலைதூக்கியுள்ளது[3]. தடை செய்யப்பட்ட சிமி, வஹதத்-இ-இஸ்லாமி ஹிந்த் (Wahadat-e-Islami Hind) என்ற பெயரில் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது[4]. சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது[5]. இது வெறும் சார்புடைய நிகழ்சியா உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்னர் தான் தெரியும்.

Eight fugitive Terrorists arrested - 2011
“குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்” என்ற தலைப்பில் எப்படி சட்டங்கள் புரட்டப்படுகின்றன என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்[6]. முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

நாத்திகம்என்ற போர்வையில்ஆண்டவனே இல்லையென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்துகாஃபிர்களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதிஎஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

இப்பொழுது, மறுபடியும் அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவது போலிருக்கிறது. முன்பு அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுதில்லை. தமிழக போலீஸ் இணைதளத்திலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன[7]. கீழ்கண்ட வாசகங்கள் தாம் வருகின்றன[8].

404 – File or directory not found.

The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable

அமெரிக்காவில், சந்தேகிக்கப் படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளிப்படையாக பிரசுரிக்கிறார்கள். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆனால், இங்கு அவர்களை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை இல்லை என்று முஸ்லீம்கள் போலீசாரையே குற்றஞ்சாட்டப்படும் போது, பழைய குற்றவாளிகள் என்று அவர்களின் புகைப்படங்கள் இருந்துவிட்டு போகலாமே?

இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்கள்: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பந்தமாக, கீழ்கண்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் செய்திகளில் வெளிவந்தவை, ஆனால், தனித்தனியாக புகைப்படங்கள் இல்லாமல், யார்-யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி உள்ளன. அவற்றிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன:

Kichan Buhari and Mohammed Sali arrested BB

கிச்சான் புகாரி (38)[9] – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான் – நெல்லை மேலப்பாளையம் – மேலப்பாளையத்தில், மாட்டுச் சந்தை நடத்தி வந்தவன், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவன் எட்டு கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன். புழல் ஜெயிலில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானான். அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் சிறுபான்மையின நல அறக் கட்டளை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தான்.  இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவி வந்தான்.

Kichan Buhari arrested Bangalore blast 2013

சதாம் உசேன்: கிச்சான் புகாரியின் உறவினர் சதாம் உசேன், கடந்த மாதம், போத்தனூர் திருமண மண்டபத்தில் நடந்த, ரகளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய பைக்கை, இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

பீர் முகைதீன் (39) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்,

பஷீர் அகமது (30) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – கட்டட தளவாட பொருட்கள் புரோக்கர், சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்

பீர் முகமது – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – இவர்கள் அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – பெங்களூரில் டீ தூள் விற்பவன்-

முகமது ஷாலி – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான். இவர், “சாரிட்டபிள் டிரஸ்ட் பார் மைனாரிட்டீஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். நாகர்கோவில் பகுதியில் சிலருடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகி எம்.ஆர்.காந்தி, 62, தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.

Mohammed Sali arrested BJP attack Nagerkoil

பஷீர் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் – திருநெல்வேலியில் ஒரு ரியல் எஸ்டேடில் ஆபீஸ் பையனாக வேலை செய்பவன்.

ரசூல்மைதீன் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

சலீம் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

முன்பே குறிப்பிட்டபடி, இவர்களின் பெயர்கள் கூட வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் உள்ளன. ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படும் விவரங்கள் தமிழ் நாளிதழ்களில் கொடுக்கப்படுவதில்லை. அல்லது குறைத்துப் போடுகிறார்கள்.

Bangalore blast - suspect arrested

© வேதபிரகாஷ்

24-04-2013


[4] Further, Tamil Nadu has also banned the All India Jihad Committee and Students Islamic Movement of India (SIMI). But SIMI, is regrouping under the banner of Wahadat-e-Islami Hind, Jayalalitha said.

[6] வேதபிரகாஷ், குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும், 1-6, மே.2010,

https://lawisanass.wordpress.com/2010/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-2/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-3/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-4/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-5/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-6/

[9] Kic­han Buhari, a prominent member of the All India Jehad Committee (AIJC) and a close associate of its founder – Ahmad Ali alias Palani Baba, People’s Democratic Party Chairman, Abdul Nasser Madani, and Kun­nangudi Hanifa of Tamil Muslim Munnetra Kazhagam (TMMK)